09-12-2005, 10:37 AM
[img<img src='http://img358.imageshack.us/img358/7294/s37ah.jpg' border='0' alt='user posted image'>]
<span style='font-size:25pt;line-height:100%'>நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!</span>
சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!
திரைப்படம் பற்றிய விபரம்.
நட்ட ஈடு - சிங்களத் திரைப்படம்.
திரையில் ஓடும் நேரம் 112 நிமிடங்கள்.
தயாரிப்பு . சமன்மாலி கேவமான
இயக்கம் - பெனற் ரத்நாயக்கா
நடிகர்கள் - ஜோ அபேவிக்கிரம - சங்கீதா வீரரத்ன - ஜாக்சன் அன்ரனி - ரவீந்திரா ரந்தெனிய - மகேந்திரா பெரோ.
நான்கு சர்வதேச விருதுகள் - சரசவிய திரைப்பட விருது 2002 ல் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த படப்பிடிப்பு, ஒப்பனை உள்ளிட்ட ஆறு விருதுகள் பெற்றது.
முகவுரை
சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் திரைப்பட முயற்சிகள் சிறப்பாக வளரும் இச்சூழலில் இத்தகைய திரைப்படங்களையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
முன்னோட்டம்
இதை ஒரு முழுமையான திரைப்படம் என்று கூற முடியாது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எவ்வாறான திரைப்படங்களுக்கு பரிசு வழங்குவார்கள் என்பது குறித்து நன்கு அவதானிக்கப்பட்டு, அதற்கமைவாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதை ஆரம்பத்திலேயே நத்தை போல நகரும் கதை விளக்கிவிடுகிறது. ஆனாலும் அமைதியாகவும் ஆழமாகவும் எதையோ சொல்ல வருகிறார்கள் என்பதை படம் புரிய வைக்கிறது.
மூலக்கதை
எண்பது வயதான ஜோ அபேவிக்கிரமவின் மனைவி இறந்துவிடுகிறாள். அவளுடைய சடலத்தை அடக்கம் செய்த பின்பு இருவரும் யாருக்குமே சொல்லாமல் 50 வருடங்களாக மறைத்து வைத்த இரகசியத்தை போலீசாரிடம் சொல்லி தண்டனை கேட்கிறார் அந்த வயோதிபர்.
1948 இலங்கை சுதந்திரமடைந்த தினத்தன்று ஏழைச் சிங்களவனான தனது வாழ்வின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்பதை அவன் விளக்குகிறான். சுதந்திரம் கிடைத்த இரவில் அவனுடைய பிள்ளைக்கு கடும் சுகயீனம் ஏற்படுகிறது. ஆனால் சுதந்திர தின போதையில் மகிழ்ந்து வெள்ளைக்காரியோடு கட்டிலில் புரளும் சிறீங்கா வைத்தியன் குழந்தையைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று மறுத்துவிடுகிறான். குழந்தை இறந்து போய்விடுகிறது.
யாருமே இல்லாத ஏழையான அவன் தன் மனைவியோடு சேர்ந்து கொட்டும் மழையில் குழந்தையின் சடத்தை அடக்கம் செய்கிறான். அப்போது அவனுக்கு விலை மதிக்க முடியாத வைரக்கல் ஒன்று நிலத்தில் இருந்து கிடைக்கிறது. அந்த வைரக்கல் அவனுடைய வாழ்வில் பல ஆபத்துக்களை உருவாக்குகிறது.
பண முதலைகளும், அதிகார வர்க்கமும் அவனிடமிருந்து அதை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட முயல்கின்றன. முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றாவது அதைப் பறிக்க முயற்சி எடுக்கின்றன. இந்த நிலையில் அவன் மனைவியோடும் வைரக்கல்லோடும் உரைவிட்டே தப்பிச் செல்கிறான். கூலிக் கொலைஞர்கள் அவர்களை விரட்டுகிறார்கள்.
நதிகளில், மலைச்சாரல்களில் எல்லாம் அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். கடைசியில் அவர்களை பிடித்து சித்திரவதை செய்கிறார்கள். அவனை தலை கீழாகக் கட்டித் தொங்க விட்டுவிட்டு, மனைவியை மூவரும் மாறி மாறிக் கற்பழித்துவிட்டு ஆற்றில் குதித்து நீராடுகிறார்கள். அந்த நேரம் தப்பித்த குடியானவன் அந்த மூவரையும் கொன்று புதைக்கிறான். வைரக்கல்லை ஆற்றில் து}க்கி வீசுகிறான். கொலை கற்பழிப்பு ஆகிய இரு விடயங்களையும் யாருக்கும் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்து இருவரும் கிடைத்த வாழ்வை தொடர்கின்றனர். பின் மனைவி இறந்த பின்னர் அவன் உண்மையை போலீசில் கூறுகிறான். இதுதான் மூலக்கதை.
கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.
01. குழந்தையை இழந்ததற்கு கிடைத்த நட்டஈடு அவர்களுடைய மிகுதி வாழ்வு என்பது நேரடியான தகவல்.
கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.
01. இலங்கையில் பெறப்பட்ட சுதந்திரம் ஏழை மக்களை சென்றடையவில்லை. அது வெள்ளைக்காரரோடு படுத்தெழும்பிய ஒரு கூட்டத்தின் கைகளுக்கு போயுள்ளது.
02. சிங்களவராக இருந்தாலும் ஏழைகளுக்கும், உண்மை மிக்கவர்களுக்கும் அந்த நாட்டின் சட்ட, சமுதாய வாழ்வில் இடமில்லை. உண்மையாக உழைத்து சிறந்த வாழ்வு வாழமுடியாத அந்த நாட்டில் தப்பித்தவறி அதிர்ஸ்டம் கிடைத்தால் அதிகாரம் அந்த உடமைகளையும் காவு கொண்டுவிடும்.
இதர விடயங்கள்.
நடிப்பு - கதாநாயகி சங்கீதா வீரரத்ன, ஜோ அபேவிக்கிரம, ஜாக்சன் அன்ரனி ஆகியோர் கொடுத்த பாத்திரங்களை செம்மையாக செய்துள்ளனர். திரைப்படத்தில் வரும் எந்தவொரு பாத்திரமும் நடிப்பதற்குக் கடினமானதல்ல.
படப்பிடிப்பு - சாதாரண தொழில் நுட்பங்களுடன் நடிப்பையும், இயற்கைக் காட்சிகளையும் முன்னிலைப்படுத்தி எடுக்ககப்பட்டுள்ளது. கதைக்கு ஏற்ப தொழில் நுட்பமும் தரம் குன்றி இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே தொழில் நுட்பம் உள்ளது. மேலும் பல வருட வளர்ச்சி பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.
படத்தின் செலவு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. வர்ண ஒழுங்கு, கதையை சுவைபடக் கூறும் நறுக்குமுறை இவைகளில் பல பின்னடைவுகள் தெரிகின்றன. சில வேளைகளில் தணிக்கை இருந்திருக்க இடமுண்டு.
சிங்கள வர்த்தக சினிமா ஏன் வளர்ச்சியடைய முடியாமல் போனது என்பதற்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் படம் தொடர்ந்து பார்க்கத் து}ண்டுகிறது.
ஒரு நாட்டை 50 வருடங்களாகக் கையில் வைத்திருக்கும் இனம் திரைத்துறையில் மேலும் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்க முடியும். ஏனோ அதை அங்குள்ளவர்களால் செய்ய முடியாமல் போயிருக்கிறது. இப்படியெல்லாம் பல கேள்விகளையும் இப்படம் எழுப்புகிறது.
அடுத்து சிங்கள வர்த்தக சினிமாக்களின் தரத்தையும் போக்கையும் அடையாளம் காண வண்சொட் திரைப்படம் பற்றிய பார்வை. இதுபோல பல மொழிகளில் பரிசுபெற்ற திரைப்படங்களின் பார்வைகள் தொடர்ந்து வரும்.
அலைகள் பல மொழி திரைப்படங்களின் பார்வைப்பிரிவு. 16.08.05
http://www.alaikal.com/net/index.php?optio...id=22&Itemid=41
[/img]
<span style='font-size:25pt;line-height:100%'>நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!</span>
சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!
திரைப்படம் பற்றிய விபரம்.
நட்ட ஈடு - சிங்களத் திரைப்படம்.
திரையில் ஓடும் நேரம் 112 நிமிடங்கள்.
தயாரிப்பு . சமன்மாலி கேவமான
இயக்கம் - பெனற் ரத்நாயக்கா
நடிகர்கள் - ஜோ அபேவிக்கிரம - சங்கீதா வீரரத்ன - ஜாக்சன் அன்ரனி - ரவீந்திரா ரந்தெனிய - மகேந்திரா பெரோ.
நான்கு சர்வதேச விருதுகள் - சரசவிய திரைப்பட விருது 2002 ல் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த படப்பிடிப்பு, ஒப்பனை உள்ளிட்ட ஆறு விருதுகள் பெற்றது.
முகவுரை
சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் திரைப்பட முயற்சிகள் சிறப்பாக வளரும் இச்சூழலில் இத்தகைய திரைப்படங்களையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
முன்னோட்டம்
இதை ஒரு முழுமையான திரைப்படம் என்று கூற முடியாது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எவ்வாறான திரைப்படங்களுக்கு பரிசு வழங்குவார்கள் என்பது குறித்து நன்கு அவதானிக்கப்பட்டு, அதற்கமைவாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதை ஆரம்பத்திலேயே நத்தை போல நகரும் கதை விளக்கிவிடுகிறது. ஆனாலும் அமைதியாகவும் ஆழமாகவும் எதையோ சொல்ல வருகிறார்கள் என்பதை படம் புரிய வைக்கிறது.
மூலக்கதை
எண்பது வயதான ஜோ அபேவிக்கிரமவின் மனைவி இறந்துவிடுகிறாள். அவளுடைய சடலத்தை அடக்கம் செய்த பின்பு இருவரும் யாருக்குமே சொல்லாமல் 50 வருடங்களாக மறைத்து வைத்த இரகசியத்தை போலீசாரிடம் சொல்லி தண்டனை கேட்கிறார் அந்த வயோதிபர்.
1948 இலங்கை சுதந்திரமடைந்த தினத்தன்று ஏழைச் சிங்களவனான தனது வாழ்வின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்பதை அவன் விளக்குகிறான். சுதந்திரம் கிடைத்த இரவில் அவனுடைய பிள்ளைக்கு கடும் சுகயீனம் ஏற்படுகிறது. ஆனால் சுதந்திர தின போதையில் மகிழ்ந்து வெள்ளைக்காரியோடு கட்டிலில் புரளும் சிறீங்கா வைத்தியன் குழந்தையைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று மறுத்துவிடுகிறான். குழந்தை இறந்து போய்விடுகிறது.
யாருமே இல்லாத ஏழையான அவன் தன் மனைவியோடு சேர்ந்து கொட்டும் மழையில் குழந்தையின் சடத்தை அடக்கம் செய்கிறான். அப்போது அவனுக்கு விலை மதிக்க முடியாத வைரக்கல் ஒன்று நிலத்தில் இருந்து கிடைக்கிறது. அந்த வைரக்கல் அவனுடைய வாழ்வில் பல ஆபத்துக்களை உருவாக்குகிறது.
பண முதலைகளும், அதிகார வர்க்கமும் அவனிடமிருந்து அதை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட முயல்கின்றன. முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றாவது அதைப் பறிக்க முயற்சி எடுக்கின்றன. இந்த நிலையில் அவன் மனைவியோடும் வைரக்கல்லோடும் உரைவிட்டே தப்பிச் செல்கிறான். கூலிக் கொலைஞர்கள் அவர்களை விரட்டுகிறார்கள்.
நதிகளில், மலைச்சாரல்களில் எல்லாம் அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். கடைசியில் அவர்களை பிடித்து சித்திரவதை செய்கிறார்கள். அவனை தலை கீழாகக் கட்டித் தொங்க விட்டுவிட்டு, மனைவியை மூவரும் மாறி மாறிக் கற்பழித்துவிட்டு ஆற்றில் குதித்து நீராடுகிறார்கள். அந்த நேரம் தப்பித்த குடியானவன் அந்த மூவரையும் கொன்று புதைக்கிறான். வைரக்கல்லை ஆற்றில் து}க்கி வீசுகிறான். கொலை கற்பழிப்பு ஆகிய இரு விடயங்களையும் யாருக்கும் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்து இருவரும் கிடைத்த வாழ்வை தொடர்கின்றனர். பின் மனைவி இறந்த பின்னர் அவன் உண்மையை போலீசில் கூறுகிறான். இதுதான் மூலக்கதை.
கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.
01. குழந்தையை இழந்ததற்கு கிடைத்த நட்டஈடு அவர்களுடைய மிகுதி வாழ்வு என்பது நேரடியான தகவல்.
கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.
01. இலங்கையில் பெறப்பட்ட சுதந்திரம் ஏழை மக்களை சென்றடையவில்லை. அது வெள்ளைக்காரரோடு படுத்தெழும்பிய ஒரு கூட்டத்தின் கைகளுக்கு போயுள்ளது.
02. சிங்களவராக இருந்தாலும் ஏழைகளுக்கும், உண்மை மிக்கவர்களுக்கும் அந்த நாட்டின் சட்ட, சமுதாய வாழ்வில் இடமில்லை. உண்மையாக உழைத்து சிறந்த வாழ்வு வாழமுடியாத அந்த நாட்டில் தப்பித்தவறி அதிர்ஸ்டம் கிடைத்தால் அதிகாரம் அந்த உடமைகளையும் காவு கொண்டுவிடும்.
இதர விடயங்கள்.
நடிப்பு - கதாநாயகி சங்கீதா வீரரத்ன, ஜோ அபேவிக்கிரம, ஜாக்சன் அன்ரனி ஆகியோர் கொடுத்த பாத்திரங்களை செம்மையாக செய்துள்ளனர். திரைப்படத்தில் வரும் எந்தவொரு பாத்திரமும் நடிப்பதற்குக் கடினமானதல்ல.
படப்பிடிப்பு - சாதாரண தொழில் நுட்பங்களுடன் நடிப்பையும், இயற்கைக் காட்சிகளையும் முன்னிலைப்படுத்தி எடுக்ககப்பட்டுள்ளது. கதைக்கு ஏற்ப தொழில் நுட்பமும் தரம் குன்றி இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே தொழில் நுட்பம் உள்ளது. மேலும் பல வருட வளர்ச்சி பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.
படத்தின் செலவு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. வர்ண ஒழுங்கு, கதையை சுவைபடக் கூறும் நறுக்குமுறை இவைகளில் பல பின்னடைவுகள் தெரிகின்றன. சில வேளைகளில் தணிக்கை இருந்திருக்க இடமுண்டு.
சிங்கள வர்த்தக சினிமா ஏன் வளர்ச்சியடைய முடியாமல் போனது என்பதற்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் படம் தொடர்ந்து பார்க்கத் து}ண்டுகிறது.
ஒரு நாட்டை 50 வருடங்களாகக் கையில் வைத்திருக்கும் இனம் திரைத்துறையில் மேலும் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்க முடியும். ஏனோ அதை அங்குள்ளவர்களால் செய்ய முடியாமல் போயிருக்கிறது. இப்படியெல்லாம் பல கேள்விகளையும் இப்படம் எழுப்புகிறது.
அடுத்து சிங்கள வர்த்தக சினிமாக்களின் தரத்தையும் போக்கையும் அடையாளம் காண வண்சொட் திரைப்படம் பற்றிய பார்வை. இதுபோல பல மொழிகளில் பரிசுபெற்ற திரைப்படங்களின் பார்வைகள் தொடர்ந்து வரும்.
அலைகள் பல மொழி திரைப்படங்களின் பார்வைப்பிரிவு. 16.08.05
http://www.alaikal.com/net/index.php?optio...id=22&Itemid=41
[/img]
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>

