09-12-2005, 04:27 AM
மயில்
அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சுகம் கொஞ்ச அமுத கீதம்
கருங்கயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத்தூன்றி அங்கம் புளகித்
தாடுகின்றாய் அழகிய மயிலே!
உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
ஆடுகின்றாய் அலகில் நுனியில்
வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல் உன் தனிச் சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!
ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆன உன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது என்நினைவு என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
நிசம் அது ! நிசம்! நிசம்! நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள் இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில நடப்பதை
எட்டிப் பார்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை இப்பெண்களுக்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டு வை மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதந்காக!
புவிக்கொன் றுரைப்பேன் புருஷர் கூட்டம்
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!
அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சுகம் கொஞ்ச அமுத கீதம்
கருங்கயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத்தூன்றி அங்கம் புளகித்
தாடுகின்றாய் அழகிய மயிலே!
உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
ஆடுகின்றாய் அலகில் நுனியில்
வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல் உன் தனிச் சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!
ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆன உன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது என்நினைவு என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
நிசம் அது ! நிசம்! நிசம்! நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள் இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில நடப்பதை
எட்டிப் பார்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை இப்பெண்களுக்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டு வை மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதந்காக!
புவிக்கொன் றுரைப்பேன் புருஷர் கூட்டம்
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

