09-11-2005, 09:36 PM
இலங்கை அரச புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் லண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக உளவு வேலைகளில் ஈடுபட்டு சிறுகாலம் தென் இலங்கையில் கடமையாற்றிய புலனாய்வு உறுப்பினர் இருவருமே தற்போது லண்டனுக்கு வருகை தந்துள்ளனர். புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஏறாவுூரைச் சேர்ந்த அரபாத் ( இவர் விடுதலை புலிகள் இயக்கத்தில்; இருந்தவர் ); என்ற புலனாய்வு பிரிவு உறுப்பினரே லண்டனில் குறைடன,; ரூட்டிங், ஈஸ்ட்காம், கரோ பகுதிகளில் தமிழ் இளைஞர்களுடன் நடமாடி வருகிறார். வந்தாறுமுலை கிழக்கு பல்கலைகழக படுகொலையுடன் நேரடியாக தொடர்புடைய இவர் ஏறாவுர் சதாமுசைன் கிராமத்தை தனது புூர்விகமாக கொண்டவர். வந்தாறுமுலை கிழக்கு பல்கலைகழக படுகொலையுடன் சம்பந்தப்பட்ட அரபாத் பாஸ்கரன் என்ற பொறியலாளராக கல்வி கற்று வந்த போக்கரி உரிமையாளரை தனது சொந்த கையால் கொலை செய்து ( ஏற்கனவே பாஸ்கரன் குடும்பத்தில் 5 போர் இலங்கை படையால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது காரணம் அவரது சகோதரம் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்தற்காக ) இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் பதவி உயர்வு பெற்றவர். ஜேர்மனி நாட்டில் சிறுகாலம் தமிழ் மக்களை கண்காணித்து வந்த இவர் ஜேர்மனி நாட்டில் இருந்து தற்போது லண்டனுக்கு வருகைதந்துள்ளதாக இவர் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டிகின்றனர்.

