![]() |
|
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்? (/showthread.php?tid=3366) |
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்? - cannon - 09-11-2005 இலங்கை அரச புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் லண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியள்ளது. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக உளவு வேலைகளில் ஈடுபட்டு சிறுகாலம் தென் இலங்கையில் கடமையாற்றிய புலனாய்வு உறுப்பினர் இருவருமே தற்போது லண்டனுக்கு வருகை தந்துள்ளனர். புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஏறாவுரைச் சேர்ந்த அரபாத் என்ற புலனாய்வு பிரிவு உறுப்பினரே லண்டனில் குறைடன,; ரூட்டிங், ஈஸ்ட்காம், கரோ பகுதிகளில் தமிழ் இளைஞர்களுடன் நடமாடி வருகிறார். ஏறாவூர் படுகொலையுடன் தொடர்புடைய இவர் சதாமுசைன் கிராமத்தை தனது பூர்விகமாக கொண்டவர். ஏறாவுக்ர் படுகொலையின் போது பாஸ்கரன் என்ற பொறியலாளரை தனது சொந்த கையால் கொலை செய்து இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் பதவி உயர்வு பெற்றவர். ஜேர்மனி நாட்டில் சிறுகாலம் தமிழ் மக்களை கண்காணித்து வந்த இவர் ஜேர்மனி நாட்டில் இருந்து தற்போது லண்டனுக்கு வருகைதந்துள்ளதாக இவர் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டிகின்றனர். .........நிதர்சனத்திலிருந்து.......... - AJeevan - 09-11-2005 கனொன் அவர்களே தகவலுக்கு நன்றி. <b>நிதர்சனத்தில் இருந்து நீங்கள் இச் செய்தியை பெற்றிருக்கிறீர்கள். எனவே அந்த நிதர்சனத்தின் இணைப்பை தயவு செய்து இணையுங்கள்.</b> காரணம் உங்களது செய்தியில் எனக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் ஐரோப்பிய நாடொன்றில் பல இணைய தளங்கள் தவறான தகவல்களை பொய்யான பெயர்களில் தந்து வந்தனர். இதனால் அப்பாவியான பலர் பிரச்சனைக்குள்ளாவது கருத்தில் கொள்ளப்பட்டு செய்திகளை பரப்பியவர்களும் தகவல்களை இணைத்தவர்களும் கைது செய்யப்பட்டுக் காவலில் இருக்கின்றனர். விசாரணைகள் தொடர்வதால் அது பற்றிய தகவல்களை தர முடியாமல் இருக்கிறேன். இப்படியானவர்கள் நிச்சயம் ஒருநாள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. <b> யாழ் கள நண்பர்களே விழிப்பாய் இருங்கள்.</b> Quote:எனவே கனொன் அவர்களே , நன்றி.................. - cannon - 09-11-2005 முதலில் நான் இந்த செய்தியை இங்கு இணைத்ததற்குக் காரணம் இங்கு(லண்டனில்) பல மர்ம செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக வதந்திகள் உலாவுகின்றன? இவற்றின் உண்மை தன்மைகளை, இங்குள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக பிரித்தறியமுடியாதுள்ளது! இச்செய்தி இவ்விணையத்தில் வருவதற்கு முன்னமே இதே போன்ற செய்திகள் பலர் வாய்வழி வரக் கேட்டுள்ளேன்!! ..... ...... * இங்குள்ள இரு தமிழ் ஊத்தைகளின் கும்பல் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதாம், ஒரிரு மர்ம மனிதர்கள் ஒரு கும்பலை அணுகி அவர்களுக்கு பயங்கர ஆயுதங்களை வாங்கித்தருவதாக கூறியதாம்!!! அக்கும்பலோ, அவர்கள் லண்டன் பொலிசாராக இருப்பார்களென்று மறுத்து விட்டதாம்!!!!!!! யார் இந்த கும்பலை அணுகிய மர்ம மனிதர்கள்????? ஏன் இவர்களுக்கு ஆயுதம் வாங்கி கொடுக்க முற்பட்டார்கள்???? ....* கரோ பகுதியிலுள்ள ஒரு சுப்பமாக்கற், ஒரு பெற்றோல் நிலையத்தில் சில முஸ்லீம் இளையர்கள் வேலைக்கு வந்துள்ளார்களாம்??? அவர்கள் அங்கு செல்லும் எம்மவர்களை அனுகி நீங்கள் இலங்கையா? இங்கு எங்கிருக்கிறீர்கள்? ... இப்படி பலவகையான கேள்விகளை கேட்டு நட்பு கொண்டாட முற்படுகிறார்களாம்??? .... எனது நண்பரொருவர் அக்குறிப்பிட்ட பெற்றோல் நிலையத்துக்கு சென்றிருந்தாராம்! அக்கேள்விகளைக் கேட்ட அம்முஸ்லீம் இளையனிடம் தம்பி நீங்கள் இலங்கையில் எவ்விடமென்று கேடிருக்கிறார்!! நான் கிழக்கைச் சேர்ந்தவன் என்று பதில் வந்ததாம்!! என் நண்பரோ கிழக்கில் எவ்விடமென்று கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையனோ மட்டக்களப்பு என்றிருக்கிறான்!! என் நண்பரும் நானும் மட்டக்களப்புத்தான்! நீர் மட்டக்களப்பில் எவ்விடமென்று மேலும் கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையன் முளித்துக் கொண்டு பதில் கூறாமல் தடுமாறிக்கொண்டிருந்தானாம்!!! ஒன்றில் அம்முஸ்லீம் இளையன் இங்கு யாரோ கிழக்கு மட்டக்களப்பைச் சேர்ந்தவன் எனும் பெயரில் இங்கிருக்கவேணும்? இல்லையேல் ஒரு இங்குலாவும் மர்மத்தலைகளில் ஒருவனாக இருக்க வேண்டும்??? இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!! - Vasampu - 09-11-2005 கனொன் ஊகங்களாக வரும் செய்திகளை உண்மைத்தன்மைகளை அறியாமல் அவற்றை பரப்புவதும் உமக்கு கைவந்த கலைதான். தயவுசெய்து அதற்ககக யாழ் களத்தை பாவிக்க வேண்டாம் உமக்கு வேண்டுமென்றால் வதந்திகளைப் பரப்புவது பொழுது போக்காக இருக்கலாம். உமது பொழுது போக்கு இங்கு வேண்டாமே. - விது - 09-11-2005 கனொன் அவர்களிடம் நீங்கள் கேட்ட இணைப்பு http://www.nitharsanam.com/?art=11650 எதற்கும் நாங்கள் கொஞ்சம் உசாரா இருப்பது நல்லம்தானே.. - Anandasangaree - 09-11-2005 இலங்கை அரச புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் லண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக உளவு வேலைகளில் ஈடுபட்டு சிறுகாலம் தென் இலங்கையில் கடமையாற்றிய புலனாய்வு உறுப்பினர் இருவருமே தற்போது லண்டனுக்கு வருகை தந்துள்ளனர். புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஏறாவுூரைச் சேர்ந்த அரபாத் ( இவர் விடுதலை புலிகள் இயக்கத்தில்; இருந்தவர் ); என்ற புலனாய்வு பிரிவு உறுப்பினரே லண்டனில் குறைடன,; ரூட்டிங், ஈஸ்ட்காம், கரோ பகுதிகளில் தமிழ் இளைஞர்களுடன் நடமாடி வருகிறார். வந்தாறுமுலை கிழக்கு பல்கலைகழக படுகொலையுடன் நேரடியாக தொடர்புடைய இவர் ஏறாவுர் சதாமுசைன் கிராமத்தை தனது புூர்விகமாக கொண்டவர். வந்தாறுமுலை கிழக்கு பல்கலைகழக படுகொலையுடன் சம்பந்தப்பட்ட அரபாத் பாஸ்கரன் என்ற பொறியலாளராக கல்வி கற்று வந்த போக்கரி உரிமையாளரை தனது சொந்த கையால் கொலை செய்து ( ஏற்கனவே பாஸ்கரன் குடும்பத்தில் 5 போர் இலங்கை படையால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது காரணம் அவரது சகோதரம் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்தற்காக ) இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் பதவி உயர்வு பெற்றவர். ஜேர்மனி நாட்டில் சிறுகாலம் தமிழ் மக்களை கண்காணித்து வந்த இவர் ஜேர்மனி நாட்டில் இருந்து தற்போது லண்டனுக்கு வருகைதந்துள்ளதாக இவர் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டிகின்றனர். - AJeevan - 09-11-2005 நன்றி விது. - cannon - 09-11-2005 கடந்த சிலதினங்களாக "புதினம், சங்கதி, உதயன், தினக்குரல், ...." செய்தியிலிருந்து ............ * மகிந்த ராஜபக்ஸவை, சந்திரிக்கா சு.க விலிருந்து வெளியேற்றவுள்ளார்! * மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை சு.க வினர் புறக்கணிப்பு! * ........... இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளன!!! இச்செய்திகள் எல்லாமே ஊகங்கள், வந்திகளின் அடிப்படையில் வரும் செய்திகளே! இல்லை! இதை நாங்கள் ஏற்கமுடியாது! இதன் உண்மை நிலையை அறிந்துதான் செய்தி போடப்பட வேண்டுமென்றால் பத்திரிகைகளுமில்லை!! செய்தி இணையங்களுமில்லை!!! இன்னொறு உதாரணத்திற்கு கதிர்காமர் கொலை மர்மம் தொடர்பாக யாழ்களத்தினிலேயே பல செய்திகள் வந்தபடியிருந்தது! யாழ்களமட்டுமன்றி பல இணையங்கள், பத்திரிகைகள் இன்றும் தொடர்ந்து அவற்றை பிரசுரிக்கின்றன. இவற்றில் பல ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளே!!...... .... இவைகளை சில உதாரணங்களுக்கு இங்கு கூறினேன்! சில வதந்திகள் ஏதோ ஒரு உண்மையைக் கொண்டுதான் புகைய ஆரம்பிக்கும்!! சில வதந்திகளில் உண்மைகள் இல்லையெனில் காலப்போக்கில் வதந்தி இல்லாமல் போய்விடும்!! இங்கு சில வ..சம்பு அரைகுறையுமற்ற மேதாவிகளாக தம்மைக்காண்பிப்பவர்கள் விளக்கங்களே அறவே தெரியாமல் ஏதோ வீரவசனங்களை அள்ளீ எறிகிறார்கள்!!! நான் இனி இந்த அரகுறை வ...சம்புகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன்!!! நேரமும் மிச்சம்!!!! குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!! - Danklas - 09-11-2005 ஏன் வசம்பு இது களம் தானே? இங்கே இப்படியான செய்திகளை விவாதிப்பதால் யாருக்கு நஸ்ரம்?? சும்மா அரட்டை அடிக்கிறதிலும் பார்க்க யஸ்ட் இப்படியான ஊகங்களை விவாதித்தால் சில வேளை இந்த நபர்களை பற்றி அதனோடு தொடர்புள்ள இளைஞர்கள் அறிந்து கொள்வார்கள் அல்லது அது பற்றி உசாரக இருப்பார்கள் தானே.. உண்மையிலேயெ புலத்தில் உள்ள தமிழர்களுடையே குழப்பத்தை உண்டுபண்ண இப்ப அல்ல அப்ப இருந்தே இலங்கை, இந்திய புலனாய்வாளர்கள், தமிழ் எச்சிலுகளை புலத்துக்கு அனுப்பிகிறார்கள், இன்று சங்க**, போனறவர்கள் எதற்காக கனடா, சுவிஸ் லண்டன் எண்டு அலைகிறார்கள்?? அவர்களுக்கு தேவை புலத்திலே உள்ள தமிழ் இளைஞர்களிடையே குழு மோதல்களை உண்டுபன்னி புலத்திலே ஈழத்திற்கு இருக்கிற ஆதரவை முடக்க வேண்டும் என்பதற்காக.. இது போன்ற சில முன் கூட்டி செய்திகளை அறிந்து கொண்டால் அதில் மாட்டுப்பட இருக்கும் இளைஞர்களை உசார் அடையச்சொல்லலாம் தானே?? ஏதோ உம்மடை கதையப்பார்த்தால் முதல்ல அப்படி எதாவது அசம்பாவிதம் லண்டனில நடந்தாப்பிறகு யாழில விவாதிப்பம் அதுவரை மூட வேண்டியதை மூடிக்கொண்டு இருப்பம் எண்ட மாதிரி இருக்கு.. :evil:இது வதந்தியோ உண்மையோ என்பது முக்கியமல்ல.. இப்படியான வதந்திகளை பரப்பியாவது லண்டனில் இருக்கும் இளைஞர்களூக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க செய்யலாம் தானே?? லண்டனில இடம்பெற்ற தீவிரவாதத்தாக்குதலுக்கு முன்பு புலனாய்வுதுறையும், பொலிஸும் அசமந்த போக்கு காட்டியதால் தான் இன்று அவர்கள் உலக நாடுகளுக்கு முன்பு கூனீ குறுகி நிற்கிறார்கள்.. ஏன் இப்படி அசமந்த போக்கு காட்டினார்கள் தெரியுமா?? இந்த பெரிய பாதுகாப்பு நாட்டில் எவன் எம்மை தாக்குவான் என்ற இறுமாப்புத்தான் காரணம்... ![]() உங்களுக்கு ஒன்று தெரியுமா?? முந்தி லண்டனில தீவிரவாத அல்லது அத்தோடு தொடர்பட்ட இனையத்தளங்களில வந்த செய்திகளை கண்டு அவற்றை சீரியசாக எடுக்காமல் விட்டு அவற்றை (இனையத்தளங்களை) தடை பண்ணியதற்கு பிறகு தான் லண்டனில தாக்குதல் நடந்தது, பட் அமெரிக்கா, இஸ்ரேல் புலனாய்வுத்துறையினர், இனையத்தில் வரும் அத்தனை விடயங்களையும் தற்பொழுது உண்ணிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் ஏன் தெரியுமா??பட்ட அனுபவத்தில் தெளிவடைந்துவிட்டார்கள்...
- Vasampu - 09-12-2005 டண் உமது பதிலுக்கு நன்றிகள் முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா???? பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா?? வதந்திகளை பரப்பியாவது இலண்டனிலுள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம் தானே என எழுதியுள்ளீர். இது எவ்வளவு ஆபத்தானது இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில்லாமல். இப்படி அடிக்கடி வதந்திகளை பரப்பி வந்தால் பின்பு உண்மையில் பிரைச்சினை இருந்தாலும் இதுவும் வதந்தி தான் என்றே நினைப்பார்கள். இதுவரை புலத்தில் எமது மக்களுக்கு எற்பட்ட பிரைச்சினைகள் யாவும் தாமே தமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டதால் வந்தவையே தவிர மற்றவர்களால் ஏற்பட்டவையல்ல. களத்தில் வெறும் அரட்டையை விட பிரயோசனமான விடயங்கள் விவாதிக்கப்படுவதை நானும் வரவேற்கின்றேன். ஆனால் சில அரைவேக்காடுகளின் சுயநலச் செயல்களாக தொடர்ந்தும் வதந்திகளைப் பரப்புவதைத்தான் நான் விமர்சித்தேன். இவர்களால் இந்த இணையத்தளத்தில் இப்படியான பரபரப்பு வதந்திகளையும் தனிநபர் தாக்குதல்களையும் தவிர என்ன பிரயோசனமான கருத்துக்கள் எழுத முடிந்தது. என்னை நான் மேதாவியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. இப்போது தமிழிலுள்ள இணையத்தளங்களின் நம்பகத்தன்மையை நான் நன்கு உணர்ந்துதான் இருக்கின்றேன். அதனால்த்தான் யாழ் இணையத்தளமும் பத்தோடு பதினொன்றாவதை நான் விரும்பவில்லை. சமீபத்தில் இலண்டனில் நடைபெற்ற தாக்குதலையும் குறிப்பிட்டீர். அதற்கு யார் காரணம். பயங்கரவாதம் தோன்றுவதற்கு யார் வழி சமைத்தார்களோ அவர்கள் அதன் பலனை அனுபவிக்கின்றார்கள். இலண்டன் பொலிஸாரின் பயம் இயலாமை அவமானத்தினால்த்தான் ஒரு அப்பாவி இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். எந்த ஒரு நாடும் பிரைச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்துகொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் காணாமல் எவ்வளவுதான் பாதுகாப்புகளை பலப் படுத்தினாலும் பயங்கரவாதத்தை ஒளித்துவிட முடியாது. இது கண் முன்னே நடக்கும் உண்மை. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும். புரியாத அரைவேக்காடுகளின் பதிலும் எனக்குத் தேவையில்லை. :?: :?:
- spyder12uk - 09-12-2005 <img src='http://img380.imageshack.us/img380/9832/para27bl.th.jpg' border='0' alt='user posted image'> - Danklas - 09-12-2005 ஸ்பைடர் யூகே இதை இங்கே போடாதேங்க,, முதல்லா எல்லாம் நடக்கட்டும் அப்புறம் கொண்டுவந்து போடுங்க,, பிறகு இதை ஏன் இங்க போடுறீங்க, இது புனிதமான களம், மற்றைய களம் மாதிரி நிச்சயமாக உறுத்திபடுத்தப்பட்ட செய்தியை போட்டால் தான் அது பற்றி விமர்சனம் செய்ய நாங்க ரெடி எண்டும் அதற்கு வேற விளக்கம் கொடுத்துக்கொண்டும் நிற்பார்கள் சக உறுப்பினர்கள் தேவையா, இது.. இதுபற்றி கதைச்சு சேவ்டியா இருக்கிற நம்மளுக்கு என்ன பிரச்சினை? பாதிக்கப்படப்போவது எவனோ ஒரு தமிழன் தானே?? போகட்டும்,, விடுங்க,,, (களம் எண்டால் என்னெண்டு சிலபேருக்கு பாடம் எடுத்தால் நல்லது, உறுத்திபடுத்தி செய்திகளை வெளியிடுவது களம் அல்ல,, சில உறுதிப்படுத்தாத செய்திகளை கருத்துக்கள் மூலம் ஆரயுதல் தான் களம்)
- Thala - 09-12-2005 இங்கு தரப்படும் செய்திகளில்.. உண்மை நிலை பற்றியும் தெரியாட்டாலும்.. சில சம்பவங்கள் நடப்பது உண்மைதான்.. சில வாரங்களின் முன் கிழக்கு லண்டனில் Eastham பகுதி தமிழ்க்கடை ஒன்றில நான் எனது நண்பர்கள் சகிதம் சாமான் வாங்கிக் கொண்டிருந்தோம் அங்கு வந்த இரு இளைஞர் கடை உரிமையாளரிடம் தொலை பேசி அட்டை கேக்க ... கடையின் கல்லாவில் நின்றவர் எங்க கதைப்பதற்காக.. என்று கேக்க அவர்கள்.. இலங்கை என்று சொல்லேல்ல மட்டக்களப்பு என்றனர்... ஆனால் அவர்கள் பேசிய தமிழ் இலங்கை முஸ்ஸிம் கள் பேசுவது போன்றோ இல்லை மட்டு தமிழ் போலல்லாமல்... இந்தியத்தமிழ் என்று விளங்கியது.... இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனில் ஒருத்தன் ஏன் பொய் சொல்லுறீங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா???? என்று கேக்க அதுக்கு அவர்கள் முளிக்க... எனது இன்னுமொரு நண்பன் என்ன ஈழத்தவன் பேரில அரசியல் தஞ்சம் கேட்டிருக்கிறீங்களா எண்று கேட்க அவர்கள் சங்கடத்தில நெளிய நாங்கள் அந்த இடத்தை விட்டு வந்தாச்சு.... இப்பிடிப் பல பேர் எதோ காரணங்களுக்காக ஈழத்தவர் பேர்களில் ஈழத்தவர் பகுதிகளில் நடமாடுகிறார்கள்.. - Danklas - 09-12-2005 Vasampu Wrote:டண் உமது பதிலுக்கு நன்றிகள்<b>முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா???? </b> பொதுவாக மனிதனுக்கு கோவம் வரும்பொழுது அவனுக்கு பக்கத்தில நிண்டுகொண்டு ஒரு கத்தியை கொடுங்க அவண்ட கையில,, ஆத்திரத்தில என்ன ஏது செய்கிறோம் எண்டு தெரியாமல் வெட்டினவங்களும் இருக்கிறாங்க,, உள்ளதுக்கேயே லண்டன்ல இளம் பராயத்தினர் ஒவ்வொரு குழுக்களாக திரிகின்றனர், பொதுவாக கால்பந்து, கிரிக்கட் போன்றவற்றால் சிலவேளை தகராறு என்று வரும் போது விக்கட், கொட்டனுகளால் சண்டை செய்துவிட்டு போய்விடுவார்கள்.. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையை குளைக்க சில பிரானிகள் புகுந்து ஒரு பிஸ்ரலை கையில கொடுத்து அவனன போடுடா மாமு எண்டு குடுத்தால், இளம் வயசு, இளம் ரத்தம், அத்தோடு குறூப் எண்டு வரும்பொழுது இதுதான் சிறந்த வழி எண்டு தென்படும்,,என்ன நடக்கும் அங்க?? <b>பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா??</b> ஒரு நாட்டின் புலனாய்வு துறை என்பது சிறந்து அறிவாற்றல் திறமையை கொண்டு உருவாக்கப்படுவது, இப்படியானவர்கள் புலத்திலே தங்களின் செயற்பாடுகளை எல்லாம் ஆதரமாக விட்டுத்தான் செயற்படுவார்களா?? அண்மையில் லண்டனில ஒரு தமிழ் இளைஞனை 4 தமிழ் இளைஞர்கள் மிகக்கொடுரமாக நடு ரோட்டில் வைத்து கோடாரியினால் வெட்டி கொண்டார்கள் அறிந்திருப்பீர்கள்.. அச்சம்பவத்தை நீங்கள் தனி மனிதர் பிரச்சினை எண்டு எடுத்துக்கொண்டாலும், இதை ஏன் ஒரு சதி என்று என்னக்கூடாது,, ஒரு மனிதன் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும்பொழுது அவனுக்கு ஆதரவாக எந்த கெட்ட விடயங்களை சொன்னாலும் அது நல்லதாகத்தான் தென்படும்,,, :roll: <b>வதந்திகளை பரப்பியாவது இலண்டனிலுள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம் தானே என எழுதியுள்ளீர். இது எவ்வளவு ஆபத்தானது இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில்லாமல்..</b> இதன் விளைவு எப்படி இருக்குமெண்டு நீங்கள் நினைக்கின்றீர்கள்?? இப்படியான விடயங்களை தெரிந்துவைத்திருந்தால் என்னைபொறுத்தவரையில் நல்லது.. இது வதந்தியாக இருந்தாலும், இத்தோடு சம்பந்தப்பட்டவர்களூக்கு அது ஒரு செய்தி,, இது பற்றி அறியாமல் இருந்துவிட்டு பின்பு நிகழ இருக்கும் பின்விளைவுகளை எப்படிப்பட்ட ஆபத்துக்களாக அவர்கள் சந்திப்பார்கள்?? அண்மையில் கொல்லப்பட்ட அந்த இளைஞனை கொலை செய்தவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தீர்ப்பு வழங்கியது,, இவற்றுக்கும் அவர்கள் ஒவ்வொருவரின் வய்து 25, 30 தாண்டவில்லை.. அந்த கொலையை செய்ய தூண்டிய 4 பேருக்கும் இடையில் ஒருவன் புகுந்திருப்பான் என்று ஏன் ஒரு பக்கம் சிந்திக்ககூடாது???
- Anandasangaree - 09-12-2005 hock: hock:
- ஜெயதேவன் - 09-17-2005 Quote:முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா???? சோச்சோ :!: சோச்சோ :!: . புல்லரிக்குதடாப்பா :!: :!: ஓஓஓஓ........ உந்த சுயபுத்தியிலைதான் ..... இங்கே கொஞ்சம் வாள்/கத்தி/துவக்குகளோடு திரியுதுகளாம் :!: :!: திரும்பும் இடமெல்லாம் ஏமாத்துக்காரர்களும்/மொட்டை அடிக்கிற கூட்டங்களும்/ என்னை மாதிரி குடும்பி கட்டும் கூட்டங்களும் அள்ளு கொள்ளையாகத் திரியுது! உந்த சுயபுத்தி கூடினதுகளைக் குறி வைத்துத்தான் :!: :!: நாளுக்கு நாள் ஆயிரம் எங்கடைகள் ஏமாருதுகள், உந்த சுயபுத்தி கூடித்தான் :!: :!: ......"பூனையாம் கண்ணை மூடுக் கொண்டு பாலைக் குடிச்சுதாம், உலகம் இருண்டு போச்சு யாரும் பார்க்க மாட்டினம் எண்டு நினைச்சுதாம்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி ஒண்டு இரண்டுக்கு ......... ம்கூம்...... பாவம் Quote:பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா?? தேசியத்தின் பலமே, புலம்தானென சிங்களவனென்ன! வடக்கத்தையானே கத்தும்போது!!!!! உங்கே நீங்கள் எப்படியும் இருங்கோ எண்டுட்டு பாத்துக் கொண்டிருக்கப் போறாங்கள் :?: :?: :?: :?: ...... "நாலு சோத்துக்குள்ளே ஒரு பெரிய பூசனிக்காயை ஒழிக்க வெளிக்கிட்ட" கதையாகவல்லோ இது கிடக்குது :!: :!: :!: :!: Quote:இப்போது தமிழிலுள்ள இணையத்தளங்களின் நம்பகத்தன்மையை நான் நன்கு உணர்ந்துதான் இருக்கின்றேன். ஓஓஓஓஒ......... அறிவுக் கொழுந்து :!: வழியுது ...... :x <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மொத்தத்தில் "விடிய விடிய ராமர் கதையாம், விடிந்தால் பின் ராமர் சீதைக்கு என்ன முறையெண்டானாம்" மாதிரியல்லோ கிடக்குது :!: :!: :!:
- Vasampu - 09-17-2005 ஓம் ஓம ஆற்றையும் பெயரைப் பாவித்து பிளந்து கட்டிற உமக்கு உது பொருந்தும் தான். பல இலட்சம் தமிழர்கள் வாழும் இடத்தில் இரு உளவாளிகளால் பிரைச்சினை ஏற்படுத்த முடியுமென்றால் தவறு எங்கே ஏற்படுகின்றது. புலனாய்வுத்துறை என்பது பல புத்திசாலிகளை வைத்து உருவாக்கப்படுகின்றதாமே????. ஆனால் அவர்கள் செய்யப்போவதை சில இணையத்தளங்களுக்கும் சில புலநாய்வாளர்களுக்கும் கசிய விட்டுவிட்டா செய்வார்கள்!!!! ஓம் ஓம் சுயபுத்தியுள்ளவர்களென்றால் ஏன் உங்களைப் போன்றவர்களின் வதந்திகளை நம்புகின்றார்கள் ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுவோரின் உலகம் இது. |