09-11-2005, 01:27 AM
சில விடயங்கள் நெருப்பில்லாமல் புகையாது. ஊடகங்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற எழுதுவதுபோல் நாம் எழுதக் கூடாது. எந்த விடயத்தையும் ஆதாரமில்லாமல் நாம் மனம் போனபடி எழுதிவிட்டு தவறுக்கு மனம் வருந்துவதால் பாதpக்கப்பட்டவருக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் தான் கவனமாகக் கையாள வேண்டும். உண்மைகளோ பொய்யோ நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. பேராசிரியருக்காக வக்காலத்து வாங்கினால் சிறுமியை விபச்சாரியாக்குவதாகின்றது. இதனால் யாழில் விபச்சாரம் நடக்கின்றது என்று நாமே ஒத்துக் கொள்கின்றோம். சிறுமிக்க்காக வக்காலத்து வாங்கினால் பெரியமனிசன் என்ற போர்வையில் தப்புக்கள் நடப்பதாக நாமே ஏற்றுக் கொள்கின்றோம். யாழில் என்ன எய்ட்ஸ் நோயில்லையா. நாமே நம்மைப்பற்றி பீற்றிக் கொள்வதில் பலனில்லை. சமுதாயச் சீர்கேடுகளையும் நாம் ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும் அநியாயமாக ஓரு பேராசிரியரின் பெயர் கெடுவதற்கோ அல்லது ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதற்கோ நாம் ஏன் காரணமாயிருக்க வேண்டும். உண்மைகள் ஆதாரத்துடன் வெளி வரும்வரை பொறுத்திருப்போம்.
:!: :?:
:!: :?:

