Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி(க்கதைகள்)
#1
மிக அழகாக குயில் ஒன்று பாடிக் கொண்டிருந்தது. அவ்வழியே மேலே பறந்து சென்ற பருந்து, இந்த கானத்தைக் கேட்டு 'சரேல்' என்று டைவ் அடித்தது, மரக்கிளைக்கு. குயிலை தன் கால்களில் பற்றிக்கொண்டு மலை உச்சிக்குச் சென்று, நகங்களையும் அலகையும் தீட்டிக்கொண்டு சாப்பிடத் தயாராகியது.

அப்போது குயில், ''பருந்தாரே! நான் ஒரு சிறிய பறவை. என்னைச் சாப்பிடுவதால் உம் பசி ஆறப்போவதில்லை. உங்கள் வலிமைக்கும், பறக்கும் திறமைக்கும் மிகப் பெரிய பறவைகளை..., ஏன் ஒரு முயல் குட்டி, மான் குட்டியையே கவர்ந்துகொண்டு வந்து சாப்பிட முடியும். சிறு பறவை, என்னை விட்டுவிடும்'' என்றது.

பருந்து யோசித்தது. ''நீ சொல்வது சரிதான்! ஆனால், உன் பேச்சைக் கேட்டுவிட்டு கைவசம் இருக்கும் சிறிய உணவை கைவிட நான் தயாராக இல்லை'' என்றது.

''என் பாட்டு நன்றாக இல்லையா?'' என்றது குயில்.

''உன் பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது பசிவேளை'' என்ற பருந்து அந்தக் குயிலைச் சாப்பிட்டது.

நீதி : காட்டு நியாயத்தில் செவிக்குணவு முக்கியமல்ல.

நன்றி: அம்பலம்
[i][b]
!
Reply


Messages In This Thread
நீதி(க்கதைகள்) - by சாமி - 11-04-2003, 09:16 PM
பாவனை - by சாமி - 11-11-2003, 09:26 PM
மனமாற்றம் - by சாமி - 11-11-2003, 09:28 PM
[No subject] - by veera - 11-26-2003, 01:00 PM
[No subject] - by Thiyaham - 09-09-2004, 04:28 AM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:05 PM
பத்திரம் - by சாமி - 10-06-2004, 11:14 PM
[No subject] - by tamilini - 10-06-2004, 11:20 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:20 PM
வாபஸ் - by சாமி - 10-23-2004, 11:34 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)