09-05-2005, 09:20 AM
Danklas Wrote:இதோடா ஜூட் பங்கருக்க இருந்து வெளியே வந்திட்டாரு.. எங்க, இப்படியான அல்வா சாப்பிடும் சமாச்சாரம் வரும் எண்டு காத்துக்கொண்டு இருந்தீர்களா?? நேரம் பார்த்து வாரீங்க?? ஏன் மற்றய விடயங்களை படம் போட்டு விளக்க உங்களுக்கு நேரம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா?? ரொம்ப தெளிவா இருக்கிறியள்... :evil: :evil:
டன் யூட் சொல்வதிலும் சிறிது நியாயம் இருக்கத்தான் செய்கிறது...! (பல தரப்பினரும் வரும் பொதுக்களத்தில்...இப்படியான வயதுவந்தோருக்கான படங்கள் இணைத்ததில் உங்களைப் போல எங்களுக்கும் உடன்பாடில்லை...!) புலத்திலும் கொழும்பு போன்ற இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் - ஆண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை ஒரு பெண் விதிவிலக்காக நடந்து கொண்டால் கொடுக்கிறீனம் தானே...! இதே முதன்மையை ஆண்களுக்கும் கொடுத்தால் ஆபாசப்படம் ஏன் தயாரிக்க வேண்டி வருகுது...! அப்படிச் செய்தால் பெண்களும் நன்னடத்தையோடு இருக்க விளைவர்...! ஆனால் ஆண்கள் எல்லாம் செய்ய பெண்கள் மட்டும் ஒதுங்கி இருந்து வேடிக்க பார்க்க வேண்டும் என்பது நியாயமல்ல..! அப்படியான நிலையில் பெண்கள் இன்று இல்லை...! இவற்றைத் தவிர்க்க வேண்டின் ஆணும் பெண்ணும் சமனாக அறிவுறுத்தப்பட வேண்டும்...அல்லது தண்டிக்கப்பட வேண்டும்..!
அமெரிக்காவில் நச்சூசி கொடுத்து குற்றவாளியைக் கொல்ல முடியும் என்றால்...ஈழத்தில் கடும் குற்றவாளியை போஸ்ரில் கட்டுறது எதுவும் தப்பில்லை...! ஆனால் தமிழீழ காவல்துறை நீதித்துறையின் உருவாக்கத்தின் பின் இத்தண்டனை வழங்கல் தவிர்க்கப்பட்டு வருகிறது. காலத்தின் தேவைக்கும் சமூக நன்னடத்தை வேண்டியும் சிலதை செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது..! எவருக்கும் எடுத்தவுடன் தண்டனை வழங்கப்பட்டதில்லை...பல எச்சரிக்கைகள்...திருந்த சந்தர்ப்பம்..அடி உதை எல்லாம் கொடுத்தும் பயனில்லை என்றால் மட்டுமே போஸ்ரில் ஏற்றுறது...! அதனால் நல்ல பலன்களும் கிடைத்தன தானே..! வடக்குகிழக்கில் ஒரு காலத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது..! பயமின்றி இரவில் கூட உலாவ முடிந்தது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

