09-03-2005, 03:26 PM
யுத்தநிறுத்த கண்காணிப்பிற்கு ஐ.நா. அமைதிப்படைக்கு சந்திரிகா அழைப்பு
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 20:08 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை இந்நாட்டிற்கு அனுப்புமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டபோதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐ.நா. செயலாளருடன் சந்திரிகா தொடர்பு கொண்டபோது அவர் ஆபிரிக்கா நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த உரையாடலின் போது யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ள சந்திரிகா, யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு தான் விடுத்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அதனால் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையைக் கொண்டு யுத்தநிறுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை சரியாக கொண்டுநடத்த முடியும் என்றும் ஐ.நா. செயலாளருக்கு சந்திரிகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட புதிய வெளியுறவு அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேசியுள்ளார்.
சந்திரிகாவின் இந்த அவசர கோரிக்கை குறித்து தான் கவனம் செலுத்துவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் ஆராய்வதற்காக தான் ஐ.நா. பிரதிநிதியொருவரை சிறிலங்காவுக்கு அனுப்புவதாக அவர் சந்திரிகாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில தினங்களில் தான் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அமெரிக்கா வரும்போது இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் விரிவாக ஆராய்வதாக சந்திரிகா கூறியுள்ளார்
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 20:08 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை இந்நாட்டிற்கு அனுப்புமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டபோதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐ.நா. செயலாளருடன் சந்திரிகா தொடர்பு கொண்டபோது அவர் ஆபிரிக்கா நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த உரையாடலின் போது யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ள சந்திரிகா, யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு தான் விடுத்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அதனால் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையைக் கொண்டு யுத்தநிறுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை சரியாக கொண்டுநடத்த முடியும் என்றும் ஐ.நா. செயலாளருக்கு சந்திரிகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட புதிய வெளியுறவு அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேசியுள்ளார்.
சந்திரிகாவின் இந்த அவசர கோரிக்கை குறித்து தான் கவனம் செலுத்துவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் ஆராய்வதற்காக தான் ஐ.நா. பிரதிநிதியொருவரை சிறிலங்காவுக்கு அனுப்புவதாக அவர் சந்திரிகாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில தினங்களில் தான் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அமெரிக்கா வரும்போது இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் விரிவாக ஆராய்வதாக சந்திரிகா கூறியுள்ளார்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

