09-03-2005, 01:06 PM
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா. தூதுவர் சந்திப்பு
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 18:14 ஈழம்] [கொழும்பு நிருபர்]
யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுகளை நடாத்த உள்ளார்.
இப்பேச்சுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதி நடைபெறக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சந்திப்பின் போது
மூன்றரை ஆண்டு கால யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமும் தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படாதது,
இதனால் தமிழ் மக்கள் விரக்தி நிலையில் முழு அளவில் நம்பிக்கையற்று இருப்பது,
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்து வருவது,
திருமலை புத்தர் சிலை, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் சிங்களப் பேரினவாத நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் ஒத்துழைப்பு அளித்து வருவது,
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழரின் வாழ்விடங்களில் இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ முகாம்களால் கடற்றொழில், நெற்செய்கை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டிருப்பது
உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கம் அளிக்கக் கூடும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலான வவுனியா, கிளிநொச்சிப் பிரகடனங்களும் ஐ.நா. சிறப்புத் தூதரிடம் கையளிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 18:14 ஈழம்] [கொழும்பு நிருபர்]
யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுகளை நடாத்த உள்ளார்.
இப்பேச்சுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதி நடைபெறக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சந்திப்பின் போது
மூன்றரை ஆண்டு கால யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமும் தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படாதது,
இதனால் தமிழ் மக்கள் விரக்தி நிலையில் முழு அளவில் நம்பிக்கையற்று இருப்பது,
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்து வருவது,
திருமலை புத்தர் சிலை, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் சிங்களப் பேரினவாத நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் ஒத்துழைப்பு அளித்து வருவது,
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழரின் வாழ்விடங்களில் இன்னமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ முகாம்களால் கடற்றொழில், நெற்செய்கை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டிருப்பது
உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.நா. சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கம் அளிக்கக் கூடும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலான வவுனியா, கிளிநொச்சிப் பிரகடனங்களும் ஐ.நா. சிறப்புத் தூதரிடம் கையளிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

