11-03-2003, 05:47 AM
<span style='color:#ff00da'><b>ஏமாந்த என் காதல்</b>
என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது
பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது
மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது
அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது
இல்லை
மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது
கண்களில் கண்ணீர்
.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது
மகிழ்ந்தேன்.....
என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......</span>
அன்புடன்
ஆதி

