![]() |
|
ஏமாந்த என் காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஏமாந்த என் காதல் (/showthread.php?tid=7879) |
ஏமாந்த என் காதல் - aathipan - 11-03-2003 <span style='color:#ff00da'><b>ஏமாந்த என் காதல்</b> என்றோ எழுதியகவிதை பழையபாடப் புத்தக்த்தில் முத்தாய் சிரித்தது அன்றைய நினைவை அழைத்து வந்தது பதினாறு வயதில் பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது மனதைத்தொட்டவளை வர்ணித்து இரவில் எழுதியது இன்று சிரிக்கிறது இதயம் கனக்கிறது அது ஏமாற்றத்தின் எதிரொலிதான் அழி;ந்துவிட்ட நினைவுகளை மீட்டுவந்துவிட்டது இல்லை மறைத்துவைத்த நினைவுகளை வெளிச்;சம் போட்டுவிட்டது கண்களில் கண்ணீர் .........ஆனாலும் கவிதையின் நயம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது மகிழ்ந்தேன்..... என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த அந்தக் காதலை எண்ணி.......</span> அன்புடன் ஆதி - nalayiny - 11-03-2003 காதல் வெல்கிறதோ தோக்கிறதோ ஆனாலும் கவிஞர்கள் உருவாகிறார்கள். எங்கே உங்கள் கவிதைகளும் களத்தை அலங்கரிக்கட்டும். - Paranee - 11-03-2003 வாருங்கள் தோல்வியில் ஓர் காவியம் படைத்தவரே ! தாருங்கள் இன்னமும் இதயம் நனைய காத்திருக்கின்றேன் உங்கள் கவிமழைக்காக - sOliyAn - 11-03-2003 தொடருங்கள் ஆதி.. கவிதையைமட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 11-03-2003 காதல் என்றால் கவிதை வரும்.... கவிதை வந்தால் காதல் வருமா....??!!!.....ம்ம்ம்.... :roll: 8) - shanmuhi - 11-03-2003 காதலித்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. - shanthy - 11-08-2003 என்றோ எழுதப்பட்ட வரிகள் இன்று அருமையான கவிதையாகியுள்ளது. வாழ்த்துக்கள். - இளைஞன் - 11-12-2003 ஆதிபன் ஆனந்தமாய் இருங்கள், அதொன்றும் பருவக் கோளாறில்லை! அப்படி ஆகாவிட்டால், அதுதான் கேளாறு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|