11-02-2003, 02:03 PM
இதற்கு என்ன அர்த்தம் ?
நன்றி . தினக்குரல்
இந்தியத் தலைவர்களுடன் அவசர பேச்சுக்கு ஜனாதிபதி புதுடில்லிக்கு செல்கிறார்
இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான யோசனைகளை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சூழ்நிலையில் அது தொடர்பிலும், தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் இந்தியத் தலைவர்களுடன் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, குமாரதுங்க அடுத்த வார பிற்பகுதியில் புதுடில்லி செல்லவிருக்கிறார்.
புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா, இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரஜேர்; மிர்;ரா ஆகியோருடன் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருக்கிறது.
ஜனாதிபதியுடன், அவரது, சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் லடீ;மன் கதிர்காமர் மற்றும் அதிகாரிகள் பலரும் செல்லவிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள, இடைக்கால நிர்வாகசபை சம்பந்தமான யோசனைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, இது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டையும் அறிவாரென ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை இலங்கை, இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படி க்கை தொடர்பிலான ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியா செல்ல ஏற்பாடாகியிருக்கிறது.
இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளருடன் ஒஸ்ரின் பெர்னாண்டோ பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேசமயம் இந்த உடன்படிக்கை நகலையும் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாரென தெரிவிக்கப்படுகிறது.
நன்றி . தினக்குரல்
இந்தியத் தலைவர்களுடன் அவசர பேச்சுக்கு ஜனாதிபதி புதுடில்லிக்கு செல்கிறார்
இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான யோசனைகளை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சூழ்நிலையில் அது தொடர்பிலும், தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் இந்தியத் தலைவர்களுடன் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, குமாரதுங்க அடுத்த வார பிற்பகுதியில் புதுடில்லி செல்லவிருக்கிறார்.
புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா, இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரஜேர்; மிர்;ரா ஆகியோருடன் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருக்கிறது.
ஜனாதிபதியுடன், அவரது, சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் லடீ;மன் கதிர்காமர் மற்றும் அதிகாரிகள் பலரும் செல்லவிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள, இடைக்கால நிர்வாகசபை சம்பந்தமான யோசனைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, இது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டையும் அறிவாரென ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை இலங்கை, இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படி க்கை தொடர்பிலான ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியா செல்ல ஏற்பாடாகியிருக்கிறது.
இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளருடன் ஒஸ்ரின் பெர்னாண்டோ பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேசமயம் இந்த உடன்படிக்கை நகலையும் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாரென தெரிவிக்கப்படுகிறது.
[b] ?

