11-02-2003, 03:39 AM
விடுதலைப் புலிகள், தமது யோசனை வரைபைக் கையளித்திருப்பதை, ஒரு முக்கியமான திருப்புமுனை என வர்ணித்துள்ள, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை அமைப்பதற்கு அரசுக்கு இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டச்சிக்கல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சிறீலங்காவின் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழ்மக்களின் போராட்டத்திற்கு காரணமாக இந்த அரசியல் அமைப்பே இருந்தது எனவும், தமிழ்மக்களுக்கும் சிறீலங்கா அரசியலமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், அது அவர்களின் பிரச்சினை எனத் தெரிவித்தார். ஆக்கபுூர்வமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான யோசனையைத் தாம் முன்வைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை நடைமுறைப்படுத்த தெற்கில் எழும் முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கவேண்டியது அரசே எனத் தெரிவித்ததுடன், இது விடயம் எங்களது கைகளில் இல்லை எனத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் யோசனை வரைபு தொடர்பாக, சிறீலங்கா அரசு வெளியிட்ட செய்தியில், தமது யோசனைக்கும் விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள யோசனைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும், எனினும் பேச்சுவார்த்தை ஊடாக, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வழியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக, தெற்கில், சிங்களப் பேரினவாதிகள், தொடர்ச்சியாக போராட்;டங்களை நடத்திவரும் நிலையில், இடைக்கால நிர்வாகசபையை அமைக்க, சிறீலங்கா அரசு, சட்டச்சிக்கல்களையும், அரசியல் hPதியான எதிர்ப்புக்களையும் சந்திக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது எனத் தெரிவிக்கும், அவதானிகள், இறுதித் தீர்வொன்றைக் காணும் தைரியம், சிறீலங்கா அரசுக்கு உண்டா?
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை அமைப்பதற்கு அரசுக்கு இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டச்சிக்கல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சிறீலங்காவின் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழ்மக்களின் போராட்டத்திற்கு காரணமாக இந்த அரசியல் அமைப்பே இருந்தது எனவும், தமிழ்மக்களுக்கும் சிறீலங்கா அரசியலமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், அது அவர்களின் பிரச்சினை எனத் தெரிவித்தார். ஆக்கபுூர்வமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான யோசனையைத் தாம் முன்வைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை நடைமுறைப்படுத்த தெற்கில் எழும் முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கவேண்டியது அரசே எனத் தெரிவித்ததுடன், இது விடயம் எங்களது கைகளில் இல்லை எனத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் யோசனை வரைபு தொடர்பாக, சிறீலங்கா அரசு வெளியிட்ட செய்தியில், தமது யோசனைக்கும் விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள யோசனைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும், எனினும் பேச்சுவார்த்தை ஊடாக, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வழியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக, தெற்கில், சிங்களப் பேரினவாதிகள், தொடர்ச்சியாக போராட்;டங்களை நடத்திவரும் நிலையில், இடைக்கால நிர்வாகசபையை அமைக்க, சிறீலங்கா அரசு, சட்டச்சிக்கல்களையும், அரசியல் hPதியான எதிர்ப்புக்களையும் சந்திக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது எனத் தெரிவிக்கும், அவதானிகள், இறுதித் தீர்வொன்றைக் காணும் தைரியம், சிறீலங்கா அரசுக்கு உண்டா?

