08-29-2005, 03:48 AM
ஜேர்மனியில் கணவன் கத்திக்குத்து மனைவி படுகாயம் மூல்கைம் நகரத்தில் சம்பவம்.
சென்றகிழமை மூல்கைம் நகரிலே வசித்துவரும் ஒரு தமிழ் குடும்பத்திலே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
இவர்களும் மூல்கைம் நகரிலே ஒரு பெயர் போன குடும்பம் தான். இவர்கள் ஜேர்மனிக்கு வந்து இற்றைக்கு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25 வருட காலங்களிலே கணவன் ஒரு நாள் கூட வேலைக்கு போனது கிடையாதாம். மனைவி ஒரு அங்கவீனர் ஆனாலும் அந்த பெண்மணி நிறுவனம் ஒன்றிலே சட்டப்படி பதிந்து வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்ற படியால் சமூக நலத்துறையினர் தனியாக ஒரு பெரிய வீட்டையும் அத்தோடு மாதாந்த உதவியாக பனத்தையும் இவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்துள்ளனர். கணவனுக்கு கசீனோ எனப்படும் விளயாட்டு பழக்கம் இருக்கிறது அவர் காலையில் எழுந்தால் விளையாடச் சென்றுவிடுவார். அவருக்கு மாதாந்தம் கசீனோ விளையாட்டிற்காக பெருந்தொகைப்பணத்தினை மனைவியே கொடுத்துவந்தார். இப்பொழுது இவர் பதிந்து வேலை செய்கிறபடியால் சமூக நலத்துறையினர் அவர் வேலைசெய்யும் பணத்தை சமூகநல உதவிப்பணத்தில் இருந்து எடுத்துவிட்டு மிகுதியையே இவர்களுக்கு கொடுக்கத்தொடங்கியது.
இதனால் முன்னர் மாதிரி மனைவியால் அந்த விளையாட்டுப் பிள்ளைக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சீற்றங்கொண்ட அந்த சிங்கம் ம-பில் நாள் தோறும் மனைவியை தாக்கத்தொடங்கியது. இதனை சகித்துக்கொள்ள முடியாத பிள்ளைகள் காவல்த்துறைக்கு தகவல் கொடுக்கவே காவல்த்துறையும் சிங்கத்தை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி 6 மாதகாலம் வீட்டு பிரவேச தடை உத்தரவினை பெற்றுக்கொடுத்தனர். இதனால் சிங்கம் கடுங்கோபம் கொண்டது மனைவியை எப்படியாவது கொலை செய்தே தீருவேன் என அயல் தமிழருக்கு சூளுரைத்தது. 3 மாதங்கள் கடந்த நிலையில் சில தமிழ் புண்ணியவாளர்களின் அரிய செயலால் சிங்கம் மீண்டும் மனைவியோடு சேர்த்துவைக்கப்பட்டது. சம்பவதினம் அதிகாலை 3.00 மணிக்கு படுக்கையில் வைத்து சிங்கம் மனைவியின் கழுதை குறிவைத்தது. சடுதியாய் மனைவி திடுக்கிட்டு எழுந்த படியால் கழுத்தில் குத்தப்பட்ட குத்து அப்படியே தோலை கிழித்துக்கொண்டு சென்றது மனைவி கட்டிலில் இருந்து நிலத்தில் விழ சிங்கம் மனைவியின் முதுகிலே 7 தடவைகள் கத்தியால் குத்திவிட்டு வீட்டுக்கு வெளியிலே சென்று இருந்துவிட்டார். அவரின் மூத்த மகன் விடயம் அறிந்து காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே காவல் துறையினர் வந்து அவரை கைது செய்ய முற்படுகையில் யாரோ வந்து என் மனைவியை கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறார்கள் என கூறியுள்ளார். காவத்துறையினர் அவருக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி கோமா நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தி ஜேர்மனியில் பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் வெளிவந்த பின்புதான் இதனை நான் யாழ் களத்தில் இணைக்கிறேன்.
சென்றகிழமை மூல்கைம் நகரிலே வசித்துவரும் ஒரு தமிழ் குடும்பத்திலே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
இவர்களும் மூல்கைம் நகரிலே ஒரு பெயர் போன குடும்பம் தான். இவர்கள் ஜேர்மனிக்கு வந்து இற்றைக்கு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25 வருட காலங்களிலே கணவன் ஒரு நாள் கூட வேலைக்கு போனது கிடையாதாம். மனைவி ஒரு அங்கவீனர் ஆனாலும் அந்த பெண்மணி நிறுவனம் ஒன்றிலே சட்டப்படி பதிந்து வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்ற படியால் சமூக நலத்துறையினர் தனியாக ஒரு பெரிய வீட்டையும் அத்தோடு மாதாந்த உதவியாக பனத்தையும் இவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்துள்ளனர். கணவனுக்கு கசீனோ எனப்படும் விளயாட்டு பழக்கம் இருக்கிறது அவர் காலையில் எழுந்தால் விளையாடச் சென்றுவிடுவார். அவருக்கு மாதாந்தம் கசீனோ விளையாட்டிற்காக பெருந்தொகைப்பணத்தினை மனைவியே கொடுத்துவந்தார். இப்பொழுது இவர் பதிந்து வேலை செய்கிறபடியால் சமூக நலத்துறையினர் அவர் வேலைசெய்யும் பணத்தை சமூகநல உதவிப்பணத்தில் இருந்து எடுத்துவிட்டு மிகுதியையே இவர்களுக்கு கொடுக்கத்தொடங்கியது.
இதனால் முன்னர் மாதிரி மனைவியால் அந்த விளையாட்டுப் பிள்ளைக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சீற்றங்கொண்ட அந்த சிங்கம் ம-பில் நாள் தோறும் மனைவியை தாக்கத்தொடங்கியது. இதனை சகித்துக்கொள்ள முடியாத பிள்ளைகள் காவல்த்துறைக்கு தகவல் கொடுக்கவே காவல்த்துறையும் சிங்கத்தை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி 6 மாதகாலம் வீட்டு பிரவேச தடை உத்தரவினை பெற்றுக்கொடுத்தனர். இதனால் சிங்கம் கடுங்கோபம் கொண்டது மனைவியை எப்படியாவது கொலை செய்தே தீருவேன் என அயல் தமிழருக்கு சூளுரைத்தது. 3 மாதங்கள் கடந்த நிலையில் சில தமிழ் புண்ணியவாளர்களின் அரிய செயலால் சிங்கம் மீண்டும் மனைவியோடு சேர்த்துவைக்கப்பட்டது. சம்பவதினம் அதிகாலை 3.00 மணிக்கு படுக்கையில் வைத்து சிங்கம் மனைவியின் கழுதை குறிவைத்தது. சடுதியாய் மனைவி திடுக்கிட்டு எழுந்த படியால் கழுத்தில் குத்தப்பட்ட குத்து அப்படியே தோலை கிழித்துக்கொண்டு சென்றது மனைவி கட்டிலில் இருந்து நிலத்தில் விழ சிங்கம் மனைவியின் முதுகிலே 7 தடவைகள் கத்தியால் குத்திவிட்டு வீட்டுக்கு வெளியிலே சென்று இருந்துவிட்டார். அவரின் மூத்த மகன் விடயம் அறிந்து காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே காவல் துறையினர் வந்து அவரை கைது செய்ய முற்படுகையில் யாரோ வந்து என் மனைவியை கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறார்கள் என கூறியுள்ளார். காவத்துறையினர் அவருக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி கோமா நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தி ஜேர்மனியில் பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் வெளிவந்த பின்புதான் இதனை நான் யாழ் களத்தில் இணைக்கிறேன்.

