10-30-2003, 01:59 PM
aathipan Wrote:இந்தப்படத்தை பார்த்தபின் வீட்டுக்கு வந்த நான் முதலில் குளித்தேன்.......
நான் ஏதோ சுடுகாட்டுக்கே போய்விட்டு வந்தது போல உணர்வு. அந்தளவு காட்சிகள் என்னைப் பாதித்து விட்டிருந்தது.
விக்ரம் விளக்குமாற்றால் அடிவாங்கும் காட்சி தத்ரூபமாக வந்துள்;ளது. எந்த கதாநாயகனும் இப்படியான காட்சிகளுக்கு ஒத்துககொள்வர்களா என்பது சந்தேகம் தான்.
சூரியா நல்ல நடிகன்; அனால் இப்படத்தில் அவர் அப்பாபையே தூக்கி சாப்பிட்டுவிடும் நவரச நடிப்பு. அவரை இயக்கிய பாலாவிற்;க்கு தான் எல்லாப்பாராட்டும் போச்சேரவேண்டும்.
இளையராஜாவின் இசை என்று உணரவே முடியவில்லை. மீண்டும் அதைக்கேட்க நான் இன்னொருதடவை தான் பார்க்கவேண்டும். யுவன் சங்கரைவைத்து இசையமைத்தாரோ என்னவோ. ஒரே ஒரு பாட்டு காதில் விழுந்த உணர்வு கொஞ்சம் இருக்;கிறது. ஆனால் படத்தின் வேகத்தில் அது கூட அடிவாங்கி காணாமல் போய்;விட்டது.
லைலாவபை;பாராட்டியே ஆகவேண்டும். அவர்தான் எங்களை சிரிக்க வைத்தார். கருணாஸ் கொடுத்ததை அழகாகசேய்;துள்ளார். கவர்ச்சி நடிகை ராசிகாவிடம் இவ்வளவு திறமையா. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு
குளியலுக்கு பின்னர் துாக்கம் வந்ததா? துக்கம் கவ்விக் கொண்டதா?.
சூரியா, தனது திறமையை காக்க காக்கவில் வெளிக்காட்டியுள்ளார்.
லைலா, கவர்ச்சி நடிகை ராசிகா மட்டுமல்ல திறமையான எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களும், வாய்ப்பும், இயக்குனரும் வாய்த்தால் நல்ல எதிர்காலம்தான்.............
நட்புடன்,
அஜீவன்

