10-29-2003, 01:50 PM
kuruvikal Wrote:[size=15]1.புலம்பெயர் குறும்படங்கள் தொட்டில் குழந்தைகள்...அவற்றை இப்பவே விமர்சனத்தால் சாடுவதோ அல்லது அபரிமிதமாகக் காட்டுவதோ குழந்தையே வேண்டாம் கருக்கலைப்பே போதும் என்ற நிலையைத்தான் தோற்றுவிக்கும்...!
2.புலம்பெயர் குறும்படங்கள் இன்னும் சமூகத்தின் பரந்த வீச்சை எட்டவில்லை...குறிப்பாக இந்திய சினிமாவைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கனடா மாணவர்களின் இசை நிகழ்ச்சி மேடை வரை செல்வாக்குச் செய்கிறது...ஆனால் குறும்படங்கள் அந்த அளவில் இல்லை அவை வளரும் மொட்டுக்கள்.....முளையிலேயே கிள்ள வேண்டுமா...மலர்ந்து நான்கு திக்கும் மணம் பரப்ப அனுமதிக்க வேண்டாமோ...?!
3.குறும்படங்கள் ஆபாசம் சமூகச் சீரழிவுக்காட்சிகள் என்று தாங்கி வர அதற்குள் இடமளிக்க எமது புலம்பெயர் கலைஞர்கள் தயாராக இல்லை...அப்படி தாங்கி வந்தாலும் அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே போய்ச்சேரும்...அதாவது குறும்படங்களால் சமூகச் சீரழிவு என்றவகையிலான விழிப்பூட்டல் அவசியமற்றதாக உள்ளது....!காரணம் குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே....!
4.புலம் பெயர் குறும்படங்கள் கண்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல அழகிகளை அல்லது அழகர்களை நம்பி வருவதில்லை சமூகத்தின் நலனில் செல்வாக்குச் செலுத்திடும் உண்மையான கதை,கலைஞனை நம்பியே வருகின்றன.
5.குறும்படங்கள் பற்றிய அதிக விளம்பரமின்மையால் அவற்றைப்பற்றி அறியமுடியாதிருக்கின்றது...அது மட்டுமல்லாமல் அவற்றிற்கென்று தனியான இணையப்பக்கங்கள் இயக்குவதே எமக்குத் தெரியவில்லை.....!பிறகெப்படி குறும்படங்கள் பற்றி அறிவது....! விமர்சிப்பது....!குறும்படங்கள் பற்றி கொழும்பில் வீரகேசரியில் தினக்குரலில் காணலாம் ஆனால் அது ஒரு மூலைகுள் சின்னதாக இருக்க நடுப்பக்கத்தில் சினிமா உட்கார்ந்து கண்ணைக்கவரும் வண்ணம் காட்டும்...இதற்கிடையில் அவற்றைப்பற்றி வாசிப்பது எப்படி....?!
6.குறும்படக்கள் பற்றிய விமர்சனங்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை இன்மை.....உதாரணம் யாழ்களம்....பாய்ஸ் எத்தனை பக்க விமர்சனத்தைத் தாங்கியுள்ளது...ஆனால் அஜீவனின் எச்சில் போர்வை....?! பிறகெப்படி விமர்சனம் எழுத மனம் வரும்....நாமெழுதி யார் பாக்கிறது...இப்படியான சிந்தனைக்கே வழிசமைக்கிறது...!
இப்படியும் இப்படிப்பலவும்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இப்படியான கருத்துகள் வந்ததில் அகமகிழ்ந்து நிற்கிறேன். எழுத்து வல்லமை உள்ளவர்கள் எழுதும் போது அதன் அழகே தனி, குருவிகள்.
குறும்படங்களையும் சாடுங்கள்,அதேபோல் தேவையானதை பாராட்டுங்கள்,குற்றங்களை கூறுங்கள்.
அதுவே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
சிறுதுளி பெரு வெள்ளம். நான்கு பேரால் தொடங்கப்பட்ட போராட்டம் , முழு உலகையே கவர்ந்து நிற்கிறதே.......................
எங்கும் ஆரம்பிப்பதுதான் சிரமம்.உங்களைப் போன்றவர்கள் நாமெழுதி யார் பார்ப்பது என்று எழுதுவதற்கே சிரமப்படும் போது எமக்கும் நாம் செய்து யார் பார்ப்பது என்ற நிலை ஏற்படுகிறதே?
நாங்கள் ஒரு சினிமாவை உருவாக்குவதில் பிரச்சனையில்லை.அதைப் பார்க்க வைப்பதில்தான் பிரச்சனை வருகிறது என்று தோன்றுகிறது................
"குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே...."
என்ற கருத்தை தகர்க்க எழுத்தாளர்களால் முடியும்.
பேனாவால் பேச முடியாதை யாராலும் பேச முடியாது.சில பேனாக்கள் எழுதவே மறுக்கின்றனவே.................. இவை தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ள மட்டுமே எழுதுகின்றனவா?.....................
நட்புடன்,
அஜீவன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: