08-25-2005, 01:28 PM
sathiri Wrote:1986ம் ஆண்டு மாசி மாதம் ஒரு காலை ஆகாயத்தில் வட்டமிட்டன ஒரேயடியாக அத்தனை விமானங்களை அப்பகுதி மக்கள் பார்ப்பது அதுதான் முதல் தடைவை எல்லோரும் வீதியில் நின்று விடுப்பு பாத்தனர். அவை குண்டு வீச போகின்றது என்று யாருக்கும் தெரியாது. தமிழீழ பகுதியில் முதல் முதல் சிறீலங்கா விமானங்கள் அன்றுதான் குண்டை வீசின அவை தாவடி சுதுமலை பகுதிகளில் வீழ்ந்து வெடித்தபோதுதான் மக்களிற்கு விபரீதம் விளங்கியது.
சரி சாத்திரியார் அது ஒரு காலைப்பொழுதல்ல மாலைப்பொழுது அத்தோடு மாசியல்ல காரனத்தை பின் சொல்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன உங்களுக்கும் அப்ப ம-பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதில் வந்த விமானங்கள் அவ்ரோ ரகத்தைச் சேர்ந்தவைகள் இல்லை இத்தாலிய தயாரிப்பான சியாமா செற்றி ரகத்தைச் சேர்ந்தவைகளும் 2 உலங்கு வானூர்த்திகளும். அப்பொழுது நாங்கள் பாடசாலையால் வந்து சாப்பிட்டுவிட்டு வயல் வெளியில் பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறேம். விமானங்கள் வந்து தாவடி மானிப்பாய் பகுதிகளை வட்டமிட நாங்கள் பட்டத்தை அருகில் இருந்த மரவள்ளியில் கட்டிவிட்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு விமானம் தலைகீழாக கீழ் நோக்கிச் சென்றது. அதன் பின் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின் தொடராக ஒன்றன்பின் ஒன்றாக பாரிய வெடிச்சத்தங்கள். அதோடு உலங்கு வானூர்த்தியில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன் பின் விமானங்கள் எமது பகுதிக்கு மேலாக பலாலி தளம் நோக்கிப் பறந்து சென்றன. எமக்கு அடுத்த நாள் வெளியாகிய உதயன் பத்திரிகையே விடயத்தை விளக்கியது. அதில் தாவடி Expo Videos அதுதான் இப்பத்தேய புலவர் வீடியோவும் குறிவைக்கப்பட்டது.

