Yarl Forum
துரோகங்கள் தொடருமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: துரோகங்கள் தொடருமா? (/showthread.php?tid=3652)

Pages: 1 2 3


துரோகங்கள் தொடருமா? - sathiri - 08-15-2005

எமது விடுதலை போராட்டத்தில் எப்படி எமக்காய் தமதுயிரை அர்ப்பணித்த எமது மாவீரரையும் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் எமது வரலாறு உள்ளவரை எப்படி எம்மால் மறக்க முடியாதோ அப்படியே எமது இனத்தையும் எமது போராட்டத்தையும் காட்டி கொடுத்தவர்களையும் அவர்களது துரோகங்களையும் மறக்க முடியாது

எமதுவிடுதலை போராட்ட வரலாறு ஆரம்பத்தில் அரசியல் மற்றும் அகிம்சை வடிவில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே எமதினத்திற் கெதிராக எம்மினத்திலிருந்தே காட்டி கொடுப்புகளும் துரோகங்களும் தொடங்கி விட்டிருந்தன. அன்று அரசியல் மற்றும் அகிம்சை ரீதியாக போராடிய பலரும் பின்னர் காலப்போக்கில் தங்கள் கொள்கைகள் கோசங்களை கைவிட்டு எதிரிகளிடம் விலை போயும் எதிரிகளின் கை பொம்மைகளாகவும் மாறி போய்விட உண்மையாக போராடிய சிலர் பெரிதாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கலந்து கரைந்து போனார்கள் என்பது வரலாறு.

எனவே எமது ஆயுத போராட்ட காலம் தொடங்கியதற்கு முன்னர் யார் எமதினத்தின் துரோகி என்று ஆராய்ந்தால் குளப்பமே அதிகம் மிஞ்சும் எனவே எமதினத்தின் ஆயுத போராட்டம் தொடங்கிய 1970 களில்இருந்து பார்ப்போம்.

<span style='font-size:25pt;line-height:100%'>அல்பிரட் துரையப்பா</span>ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அன்றைய ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களின் முதல் இலக்காக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. இவர் அன்றைய கால கட்டத்தில் யாழ் நகர( மேயராக) பிதாவாக இருந்தவர்.அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்.இவரை தமிழீழத்தின் முதல் தற்கொடை போராளியான திரு பொன். சிவகுமாரன் மற்றும் மானிப்பாய் நவாலியை சேர்ந்த இன்னபம் ஆகியோரும் இவருக்கு குறி வைத்திருந்தனர்.ஆனால் 1975 ம் ஆண்டு ஆடி மதம் 27ம் திகதி பொன்னாலை வரதராச பெருமாள் கோவிலுக்கு வண்ங்க வந்தபோது ஒருஇளைஞன் அவரை அணுகி அய்யா நேரம் என்ன என கேட்கிறார்தனக்:கு சேரம் சரியில்லை என தெரியாத துரையப்பா நேரம் பாக்க தனது கைமணிக்கூட்டை பார்த்தபோது தமிழினத்தின் தன்மான குண்டுகள் அவரை வழியனுப்பி வைக்கிறது
<span style='font-size:30pt;line-height:100%'>தொடரும்</span>


- sathiri - 08-15-2005

இத்தொடரில் யாருக்காவது ஏதாவது சங்கடங்களோ அல்லது மாற்று கருத்துகளோ இருப்பின் அவை அனைத்திற்கும் நானே பொறுப்பாளிஎன்கிற முறையில் தனி மடலிலோ அல்லது sathiri@hotmail.comதொடர்பு கொள்ளலாம்


- வன்னியன் - 08-16-2005

ஐயோ சாத்திரி இவ்வளவு நாளும் நான்தான் துரோகம் செய்யிறதிலை பெரியஆள் என்று இறுமாப்போடை இருந்தன். பட,;
அது வேஸ்ற்றாபோச்சு. நீங்கள் சொல்லுற விசயத்தை பார்த்தால்
நான் கிணத்து தவளைபோலை இருக்கு. நீங்கள் சொல்லுங்கோ சொல்லுங்கோ . இவையளெல்லை இருந்து நான் நிறைய கற்க வேண்டியிருக்கு அப்ப வெரி இன்ரெஸ்டிங் மேற்றர் எல்லாம் வெளியே வரும் என்கிறீங்க. உந்த சோதுதான் ஏதவாது பெயரிலை வந்து எதிர்ப்பான்.அவருக்கு ஆனந்ட சங்ரி பற்றி எழுதினால் கோவம் வரும். பிறகு உம்மை ஊரிலை மலசலகூடத்திலை எழுதுறது அல்லது மனநோயாளி என்று ஏதாவது தன்னுடைய இணையத்திலை எழுதும். அவருக்கு இப்ப பைத்தியம் முத்திவிட்டதாக ஆட்கள் பேசுகினம். அதைப்பற்றி கவலைப்படாமல் எழுதும். நம்முடைய உறவுகள் உமக்கு தோள் கொடுக்குமு . நம்பிக்கையுடன் தொடருங்கள் உங்கள் தொடரை

அன்புடன் கப்புடாவன்னியன்.
இது ஒரு மனநோயாளி எனக்களித்த பெயர்.


- adsharan - 08-16-2005

sathiri நீங்கள் சொல்லுங்கோ சொல்லுங்கோ


- hari - 08-16-2005

சாத்திரி தொடருங்கள்..!


- Thala - 08-16-2005

sathiri Wrote:இத்தொடரில் யாருக்காவது ஏதாவது சங்கடங்களோ அல்லது மாற்று கருத்துகளோ இருப்பின் அவை அனைத்திற்கும் நானே பொறுப்பாளிஎன்கிற முறையில் தனி மடலிலோ அல்லது sathiri@hotmail.comதொடர்பு கொள்ளலாம்

நல்ல விடயம்தான் தொடருங்கள் சாத்திரி..


- malaravan - 08-16-2005

தமிழனின் வரலாறுகள் இணையத்தளம் மூலம் உலகெலாம் பரவி அவர்களின் போராட்ட உண்மை உலகெலாம் தெரியவேண்டும். எழுதுங்கள். உண்மையை
www.tamilkural.com


- sOliyAn - 08-17-2005

Quote:அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்
அதுமட்டுமல்ல.. அநுர பண்டாரநாயக்காவுக்கு விதம் விதமான சுகபோகங்களை காட்டியவர் என்றும் கேள்வி.


- sinnakuddy - 08-17-2005

ஓமோம் நல்ல அழகான ஈழத்து திரைபட குத்துவிளக்கு கதாநாயகி லீலா நாரநாயணனை அநுரா வுக்கு கூட்டி கொடுத்து மாமா வேலை பார்த்தவர் துரையப்பா.......


- Rasikai - 08-17-2005

சாத்திரி தொடருங்கள் எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்


- Vasampu - 08-17-2005

Rasikai wrote :
சாத்திரி தொடருங்கள் எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்


ரசிகை !

சோ கெல்ப் பண்ணும் என்றால் பிறகு ஏன் சாத்திரியைக் கேட்கிறீங்க???????


- tamilini - 08-17-2005

நன்றி சாத்திரி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 08-17-2005

நல்ல முயற்சி சாத்திரியாரே தொடருங்கள்

துரோகிகளை பற்றி எழுதுறதால தற்போதைய துரோகிகளுக்கு கசக்கும் அதால குளப்ப முயற்சிக்கலாம்

ஆனாலும் தொடர்ந்து எழுதுங்க எனது ஆதரவு கட்டாயம் உண்டு சாத்திரியாரே


- MUGATHTHAR - 08-17-2005

சாத்திரி நல்ல தலைப்பு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் இந்த டண்ணும் எங்கடைஊர் தானே (மானிப்பாய்) ஆளைப்பற்றி கூடின தகவல் உம்மிடம் இருக்குமென நினைக்கிறன
Quote:;எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்

இப்ப அவரைப்பற்றி தெரிஞ்சு என்னசெய்யப் போறியள் பிறகு இந்த தலைப்பு அவருக்கு மதிப்புக் குடுக்கிறதாய்ப் போயிடும் இவ்வளவே போதும்


- Jenany - 08-17-2005

நன்றி சாத்திரி...தொடருங்கள்... எங்களுக்கு தெரியாத விசயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்வம்....


- Rasikai - 08-17-2005

Vasampu Wrote:Rasikai wrote :
சாத்திரி தொடருங்கள் எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்


ரசிகை !

சோ கெல்ப் பண்ணும் என்றால் பிறகு ஏன் சாத்திரியைக் கேட்கிறீங்க???????

நான் சொல்ல வந்தது எனக்கு அந்த வரலறு தெரியாது ஆதாலால் சாத்திரி தொடர்ந்து எழுதுவதால் என்னால் எனக்கு தெரியாத விடயங்களை பற்றி அறியலாம். என்று தான் சோ எனக்கு கெல்ப் பண்ணும் என்று சொன்னன் :roll: :roll:


- Rasikai - 08-17-2005

MUGATHTHAR Wrote:சாத்திரி நல்ல தலைப்பு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் இந்த டண்ணும் எங்கடைஊர் தானே (மானிப்பாய்) ஆளைப்பற்றி கூடின தகவல் உம்மிடம் இருக்குமென நினைக்கிறன
Quote:;எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்
இப்ப அவரைப்பற்றி தெரிஞ்சு என்னசெய்யப் போறியள் பிறகு இந்த தலைப்பு அவருக்கு மதிப்புக் குடுக்கிறதாய்ப் போயிடும் இவ்வளவே போதும்

ஐயோ முகத்தார் நான் துரையப்பா பற்றி சொல்லச்சொல்லவில்லை. அவரை தொடர்ந்து அந்த தலைபில் விடயத்தை எழுத சொன்னன்.


- vasisutha - 08-17-2005

சாத்திரி ஐயா தொடர்ந்து வாசிக்க ஆவலாக
உள்ளேன். தொடருங்கள்...


- shiyam - 08-17-2005

:twisted: :twisted:


- sathiri - 08-17-2005

<span style='font-size:30pt;line-height:100%'>பெற்றேல்நிலைய நடராசா</span>
இவர் உரும்பிராய் சந்தியில் பெற்றேல் நிலையம் வைத்திருந்தவர் இவர் அதனால் பெற்றேல் செற் நடராசா எண்டால் எல்லாருக்கும் தெரியும் இவரும் சிறீமா பண்டாரநாயக்காவின் விசுவாசிதான் இவருக்கும் அன்றைய குற்ற புலநாய்வு பிரிவு பொறுப்பாளர் பஸ்தியாம் பிள்ளையும் நல்ல நண்பர்கள் பொன் சிவகுமாரன் மற்றும் அன்றைய தீவிர போக்குடைய பல தமிழ் இளைஞர்கள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கும் தனது நண்பனான பஸ் தியாம் பிள்ளைக்கும் உடனுக்குடன் வழங்கிவிடுவார் அத்துடன் சிவகுமாரின் முழு அசைவுகளையும் காட்டி கொடுத்தவர் இவர்தான் 1976ம் ஆண்டு ஆடி மாதம்3ந் திகதி அவரது எரி பொருள் நிரப்பும் நியைத்திற்கு முன்னால் அவர் நிண்டு கொண்டிருந்தபோது ஒரு கைக்குண்டொண்று அவரை நோக்கி வந்து விழுந்தது குறி தப்பவில்லை . ஒரு துரோகியின் மரணத்தில் உரும்பிராய் மக்கள் அனைவருமே ஆனந்தத்தில் கூத்தாடினார்கள்.

உறவுகளே இத்தொடர்களில் வருபவர்கள் பற்றி உங்களிற்கும் தெரிந்திருக்கலாம் தகவல்கள் உண்மையின் அடிப்படையில் அத்தகவல்களை இங்கு நீங்களும் இணைத்து விடலாம் ஏனென்றால் இன்றைய இளம் சமுதாயத்திற்கு இவர்களை பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?? [img]தொடரும் அடுத்தது பஸ்தியாம் பிள்ளை