08-22-2005, 03:33 PM
vasisutha Wrote:<i>சரி விடையை சொல்லிவிடுகிறேன்..</i>
Quote:ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?
<b>விடை:</b>
[size=13]அவன் சொன்ன விஷயம்..
'நான் சிங்கத்தினால் சாப்பிடப்படப்போகிறேன்'.
அவன் சொல்வது உண்மையானால், அவன் மலையில் இருந்து
தள்ளி விடப்பட்டுக் கொல்லப்படுவான். அது நடந்தால்,
அவன் சொன்ன விஷயம் பொய்யாகிவிடும். அதனால் அரசருக்கு
அவனை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!
அடுத்த புதிர் சிறிது நேரத்தில்...
நீங்களும் புதிர்கள் போடலாமே?
ஆஅ நான் அதைதான் நினைச்சன் டைப் பண்ணுறதுக்குள்ள ஆன்சர் போட்டுடீங்கள் ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

