08-21-2005, 10:17 AM
Danklas Wrote:ரிஷியிடம் உளவுப்படை இருக்கோ இல்லையோ என்பது முக்கிய விடயம் அல்ல.. ரிஷி அமெரிக்கவின் உளவாளி எண்டாலும் பறவாயில்லை.. ஆனால் தமிழர்களுக்கு தமிழில் உலக நாடுகளில் நடைபெறும் அரசியல் அந்தரங்களை தெரிவிக்கும் ஒரே ஒரு ஊடகம் ரிஷி என்பது மறுக்க முடியாத உண்மை.. அதைவிட எனது கூற்றுப்படி ஆங்கில, பிரஞ்ச், மொழிகளில் வரும் புலனாய்வு கட்டுரைகளையோ அல்லது யாரினது (பிற நாட்டு இராணுவ ஆய்வாளர்களது உதவியுடன் இதை செய்லாம்..)
டண் னின் கருத்தோட ஒன்றித்தான் எனது கருத்தும் இருக்கிறது. ரிசி புலனாய்வு என்று கிளம்பியபிறகுதான் அனேகமானவர்கள். தமிழர் புலனாய்வின் மீதும் அதன் மீது அக்கறை கொள்ளத்தொடங்கினார்கள். தாரகி அவர்கள் கூட அரசியல் இராணுவ ஆராச்சியோடு தன்னை நிலைப்படுத்தியதால் அவர் அதையும் தாண்டிப் புலனாய்வுப் பகுதிக்குள் பெரும்பாலும் உள்நுளைய வில்லை. எது உண்மை பொய் என்பதை விட தமிழர்களின் சார்பில் வெளிநாடுகளின் புலனாய்வு நகர்வுகளில் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்படித்தியதின் பங்கு ரிசியையும் சாரும். நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கவேணும் என்று உணர்வை அவரது கருத்துக்கள் தோற்றுவிப்பதை அவரின் கட்டுரைகள் செய்வதால் அது வரவேற்கத்தக்க வொன்றும் கூட.
அதைவிட முக்கியமானது அவர் எப்போதும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கூறியதில்லை தமிழ்த்தேசியத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவரும் இல்லை. வெளிநாடுகளின் அரசியல் புலனாய்வுகளை அவர் உள்ளுடன் கலந்து தான் தருகிறார் உண்மைதான், மருந்து சாப்பிடவே தேன் தேடும் தமிழர்களுக்கு திகிலூட்டாமல் வளங்கினால் சரியாக போய்ச்சேராது என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை.
அவர் ஒரு பத்திரிகையாளன் தனது கருத்துக்களை திறம்பட வெளிக்கொண்டு வருகிறார். தன்னை வளர்த்துக்கொள்ள அவர் செய்வது சேவையுடன் கூடிய வியாபாரம். அவரின் முயற்சியை வரவேற்கலாம் நல்லதை எடுத்து கெட்டதை விட்டிடலாம்..
::


