08-20-2005, 07:38 AM
நாரதர் Wrote:ம்ம்ம்..குரிவியாரின் கருத்து விளங்கவில்லை,வெள்ளக்காறன் பிழை விடுறான் அப்ப நாங்களும் பிழை விடலாம் எண்ட மாதிரிக் கிடக்குது.அவன் பிழை விட்ட நாங்களும் பிழை விட வேணுமே..
இதில புதிய சொல்லாக்கம் ஒரு மொழி வளம் பெற தேவை தான்,ஆனால் அதுக்கெண்டு ஒரு இலக்கண வரைமுறை ஒவ்வொரு மொழியிலும் இருக்கு,அதைத்தான் ஊமை சொன்னவர். நாங்கள் மொழியைப் பாவிக்கும் முறை தான் அதன் வழக்காக வருகிறது.உதாரணத்திற்கு தமிழோசையில் சங்கர் அண்ணா அறிமுகம் செய்த பல சொற்கள் வழக்கில் வந்துள்ளன,அது போலவே ஈழத்திலும் வன்னியிலும் நடந்திருக்கு.
ஆகவே குருவியாரின் கருத்து ஏற்புடயதாக எனக்குப் படவில்லை..
நாரதா நீங்கள் செல்லுறமாதிரிச் செய்தா மொழிவளரும் உண்மைதான். ஆனா தமிழ் இனம் வளருமா. ஏன் கேக்கிறன் எண்டால், Radio வை மார்க்கோணி கண்டுபிடிச்சார் அவர் அதுக்கு ரேடியோ எண்டுதான் பேரும் வைச்சார். ஆங்கிலேயர் உட்பட ஐரோப்பியர் எல்லா மொழிக்காரரும் அதை ரேடியோ(உச்சரிப்பும் எழுத்துக்களும் மாறிவருகிறது) எண்டே அழைக்கின்றனர்.. ஆனா அதுக்கு தமிழர்கள்தான் வானொலி எண்டு பேர் வைத்திருக்கினம். கண்டுபிடிச்சவனே Radio எண்டு பேர் வைக்க நாங்கள் அதுக்கு வேரொரு பேர்வைச்சுத்தான் கூப்பிடுவன் என்பது சரியா?....
அப்பிடியானால் முதலில எது வடமொழி எது தமிழ் எண்டு விளக்கமும். புலிகள் செய்வது போல் தமிழ் மொழி விளக்கமும் புலம் பெயர் நாடுகளில் தேவை. அது சாத்தியமா?
::

