08-20-2005, 07:35 AM
Quote:ஆனால் சரியான முறையில் தமிழை பயிற்றுவித்தால் எத்தனை பேர் படிக்க ஆர்வத்துடன் வருவார்கள்.
தாங்கள் சொல்வதும் சரி தான். ஆனால் நாம் இப்போது ஒரு தமிழ் நிகழ்ச்சியில் போய் இன்று தமிழை வளர்க்கவில்லையே. யாழில் தானே பேசிக்கொண்டு இருக்கிறோம். யாழில் வருபவர்கள் எப்படியும் தமிழ் ஆர்வம் இல்லாமல் வரமாட்டார்கள் என்பதை தாங்கள் உணரவேண்டும். இதே போன்ற கருத்துக்களங்கள் வேறு மொழிகளிலும் இருக்கின்றன என்பதை தாங்களுக்கு தெரியாதது அல்ல..
<b>ஊமையால் பிழை திருத்தப்பட்ட முறை தவறானது என்று தான் நான் கூறினேன்.</b>
ஒரு தடவை நானும் இவ்வாறான ஒரு சிறியவருக்கு தனிமடல் அனுப்பினேன். அடுத்த தடவை நான் அவரது ஆக்கத்தை பார்த்தபோது அந்த பிழை திருத்தப்பட்டு இருந்தது. தனது பிழையை திருத்த உதவியமைக்கு நன்றி என்று ஒரு தனிமடலும் வந்து இருந்தது. இதையே நான் வெளிப்படையாக கூறி இருந்தால்.. அவர் தனது தவறை திருத்திக்கொண்டாலும்.. மனதளவில் புண்பட்டிருப்பார் என்று கருதியே நான் அவ்வாறு செய்தேன்.
<b>மொழியை சரியாக மட்டும் அல்ல... அதை முறையாகவும் பயன்படுத்த வேண்டும்</b>
Quote:அந்தப் பிள்ளை மலையாளத்தை கற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை எமது தமிழ்ப் பிள்ளைகள் காட்டுவதில்லை (சிலரைத் தவிர்த்து)என்ற உண்மையை நீங்கள் உணருவீர்களா?? மொழிப்பற்று என்பது ஒருவரிடம் தானாக உருவாக வேண்டுமே தவிர அதனைத் திணிக்க முடியாது
திணிக்க முடியாது என்பது சரியானது. ஒரு வயது வந்தவருக்கு நாங்கள் தமிழை திணிக்கமுடியாது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறியோர்களுக்கு தமிழ் ஆர்வம் தானாகவே வரும் என்று நான் எதிர்பார்ப்பது தவறு.
அவர்களுக்கு நாம் தமிழ் ஆர்வத்தை திணிக்க கூடாது. ஆனால் உரிய முறையில் தமிழ் ஆர்வத்தை ஊட்டவேண்டும்
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

