08-20-2005, 04:46 AM
ஏன் ஊமை இங்கு மிகைப்படுத்தியதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் மேலுள்ள ஆர்வத்தால் பொதுவாக மற்றவர்களும் பிழை விடாதிருப்பதற்காக ஊமை அப்படி ஒரு தலையங்கத்தை பாவித்திருக்கலாமல்லவா?? உண்மையில் எவருக்கும் எவர் மீதும் தனிப்பட்ட கோபதாபமில்லை. தமிழை முடிந்தவரை சரியாக எழுதப் பாருங்கள். எம் தாய் மொழியை நாமே தவறாகப் பயன்படுத்தலாமா?? களத்தில் பலருக்கு ஒழுங்காகத் தமிழில் எழுத வேண்டுமென்ற அக்கறை இல்லாதிருப்பது உண்மைதான். தெரியாமல் தவறு செய்பவர்களை நான் குறை சொல்லவில்லை. நாம் வாழும் நாடுகளில் உள்ள பிரன்ஞ் ஜேர்மன் மொழி பேசும் மக்களை கவனித்துப் பாருங்கள் நாம் அவர்களுடன் கதைக்கும் போது அவர்கள் மொழியை தவறாக உச்சரித்தால் உடனே பிழையைச் சுட்டிக்காட்டி திருத்துவார்கள். வெளிநாட்டுக்காரன் தானே எப்படியாவது உச்சரித்துவிட்டு போகட்டும் என்று விடமாட்டார்கள். அவர்களைப் போல் நாம் எத்தனை பேர் நம் மொழியை நேசிக்கின்றோம்.
!!!முடிந்தவரை தவறுகளை தவிர்ப்போமே!!!!
!!!முடிந்தவரை தவறுகளை தவிர்ப்போமே!!!!

