08-19-2005, 11:26 AM
மன்னிக்கவேண்டும்........ நான் யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கவில்லை. அந்த நண்பர் நிச்சயமாக தனது பெயரை மாற்றவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை உண்மை நிலையினைத் தெரிந்து கொண்டால் சரி. நான் ஒன்றை மட்டும் கூறுவேன் தெனிந்திய திரைப்படத்தால் தான் நம் தமிழ்மொழி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது என்று மட்டும் சொல்வதற்கில்லை. நமது தமிழர்கள் தாங்கள் பிற மொழியில் பேசினால் தான் ஏனையோர் எம்மை படித்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள் என்று மதிப்பார்கள் என நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் ஒரு மொழியறிவு உள்ளவர் ஒரு பூரண அறிவு படைத்தவர் என்று கூற முடியாது. நண்பர் ஒருவர் கூறியமாதிரி பிரியம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகவே இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் நான் ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இணைய அரட்டைப்பக்கத்திற்குச் சென்றேன். அங்கு அவர் தனது சட்டங்கள் , கட்டுப்பாடுகளை எழுதிவிட்டு முடிவில் ப்ரியமுடன் என்று தனது பெயரை எழுதியிருந்தார். உண்மையிலே அவர் ஒரு வயது கூடியவர். அத்தோடு தமிழை நன்கு படித்தவர். அவரே இப்படி தமிழை திசை மாற்றும் போது நாம் சிறிசுகளிடம் குறைப்பட்டு என்ன செய்வது. அந்த இணைய அரட்டையரங்கத்திற்கு பெரும்பாலும் சிறுவர்களும், சிறுமிகளுமே பெருமளவில் செல்வதுண்டு. எனவே இங்கு பிறந்து இப்பொழுது தான் தமிழைக் கற்றுவரும் சிறார்கள் அவற்றைப்பார்த்து அதுவும் தமிழ் என்று அதனையும் அப்படியே கற்றுவிட சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனை நான் பலமுறை இப்படி படம் மூலம் அந்த இணைய உரிமையாளருக்குச் மின்னஞ்சல் ஊடாக தகவல் தெரிவித்தும் அதில் மாற்றம் ஏதும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
உண்மையில் வெளிநாடுகளிலே வாழுகின்ற பெரும்பகுதி தமிழர்களிடம் இப்படியான தங்கிலீசு பரவிய வண்ணமே இருக்கிறது. இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் இங்கு சிறிய பிள்ளைகள் வெளிநாட்டு மொழிகளே அதிகம் படிப்பதால் அவர்களின் உச்சரிப்புத் தன்மை வெளிநாட்டுப் பாசைகளுக்கு எற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் நிச்சயமாக இலங்கையில் இருந்து தான் வந்திருப்பார்கள் அவர்களும் இப்போது அப்படி கொன்னை தட்டியே தமிழ் பேசுவது எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.
உண்மையில் இலங்கையிலும் கூட இன்று வன்னி ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தமிழ் பேசுவது போன்று நான் முன் எப்போதும் அங்கு அப்படிப் பார்க்கவேயில்லை. சில சில திசைச் சொற்கள் அவ்வப்போது பாவிக்கப்பட்டாலும் அங்கு தான் தமிழ் கட்டிக் காப்பாற்றப்படுகிறது. உதாரணத்திற்குப் பாருங்கள் ஒரு வெளிநாட்டவன் தனக்குரிய பாசையிலே தான் பேசுகிறான். உதாரணத்திற்கு ஜேர்மன்காரர்களை எடுத்துகொண்டால் அவர்கள் எந்த வெளிநாட்டவர் என்றாலும் அவர்களுடன் தமது பாசையில் தான் பேசுவார்கள். வெளிநாட்டவர்களுக்கு எமது பாசை தெரியுமோ தெரியாதோ என்று கவலைப்படமாட்டார்கள். ஜேர்மன் மொழியிலும் திசைச்சொற்கள் தாராளமாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் மொழியிலே தான் கதைப்பார்கள்.
ஆனால் தமிழருக்கோ சாபக்கேடு மாதிரி.. தாராளமாக தமிழ் மொழி இருக்கும் போது அதனைப்பேசாது. வெளிநாட்டு மொழியை கொன்னை தட்டி கொன்னை தட்டி தமிழருடன் பேச முற்படுவது எமக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இது முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இணைய அரட்டைப்பக்கத்திற்குச் சென்றேன். அங்கு அவர் தனது சட்டங்கள் , கட்டுப்பாடுகளை எழுதிவிட்டு முடிவில் ப்ரியமுடன் என்று தனது பெயரை எழுதியிருந்தார். உண்மையிலே அவர் ஒரு வயது கூடியவர். அத்தோடு தமிழை நன்கு படித்தவர். அவரே இப்படி தமிழை திசை மாற்றும் போது நாம் சிறிசுகளிடம் குறைப்பட்டு என்ன செய்வது. அந்த இணைய அரட்டையரங்கத்திற்கு பெரும்பாலும் சிறுவர்களும், சிறுமிகளுமே பெருமளவில் செல்வதுண்டு. எனவே இங்கு பிறந்து இப்பொழுது தான் தமிழைக் கற்றுவரும் சிறார்கள் அவற்றைப்பார்த்து அதுவும் தமிழ் என்று அதனையும் அப்படியே கற்றுவிட சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனை நான் பலமுறை இப்படி படம் மூலம் அந்த இணைய உரிமையாளருக்குச் மின்னஞ்சல் ஊடாக தகவல் தெரிவித்தும் அதில் மாற்றம் ஏதும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
உண்மையில் வெளிநாடுகளிலே வாழுகின்ற பெரும்பகுதி தமிழர்களிடம் இப்படியான தங்கிலீசு பரவிய வண்ணமே இருக்கிறது. இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் இங்கு சிறிய பிள்ளைகள் வெளிநாட்டு மொழிகளே அதிகம் படிப்பதால் அவர்களின் உச்சரிப்புத் தன்மை வெளிநாட்டுப் பாசைகளுக்கு எற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் நிச்சயமாக இலங்கையில் இருந்து தான் வந்திருப்பார்கள் அவர்களும் இப்போது அப்படி கொன்னை தட்டியே தமிழ் பேசுவது எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.
உண்மையில் இலங்கையிலும் கூட இன்று வன்னி ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தமிழ் பேசுவது போன்று நான் முன் எப்போதும் அங்கு அப்படிப் பார்க்கவேயில்லை. சில சில திசைச் சொற்கள் அவ்வப்போது பாவிக்கப்பட்டாலும் அங்கு தான் தமிழ் கட்டிக் காப்பாற்றப்படுகிறது. உதாரணத்திற்குப் பாருங்கள் ஒரு வெளிநாட்டவன் தனக்குரிய பாசையிலே தான் பேசுகிறான். உதாரணத்திற்கு ஜேர்மன்காரர்களை எடுத்துகொண்டால் அவர்கள் எந்த வெளிநாட்டவர் என்றாலும் அவர்களுடன் தமது பாசையில் தான் பேசுவார்கள். வெளிநாட்டவர்களுக்கு எமது பாசை தெரியுமோ தெரியாதோ என்று கவலைப்படமாட்டார்கள். ஜேர்மன் மொழியிலும் திசைச்சொற்கள் தாராளமாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் மொழியிலே தான் கதைப்பார்கள்.
ஆனால் தமிழருக்கோ சாபக்கேடு மாதிரி.. தாராளமாக தமிழ் மொழி இருக்கும் போது அதனைப்பேசாது. வெளிநாட்டு மொழியை கொன்னை தட்டி கொன்னை தட்டி தமிழருடன் பேச முற்படுவது எமக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இது முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

