08-18-2005, 09:55 PM
<b>ஆசிய மாணவர்களைத் தாக்கிய வெள்ளைக்கார இளைஞருக்கு சிறை</b>
லண்டன்,
இனக்குரோத வெள்ளையர் குழுவைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு லண்டன் மாவட்ட நீதிமன்றமொன்று 16 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.
நீதிபதி தனது தீர்ப்பின் போது "ஓநாய்கள் தேடி ஓடக் கூடிய மிருகத்தை கண்டு பிடித்து விரட்டுவதற்கு ஒப்பான ஓர் சம்பவம் இதுவாகும்' எனக் குறிப்பிட்டார்.
மேற்படி இனவாதக் குழு மூன்று ஆசிய மாணவர்களை வழிமறித்து நையப்புடைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மூன்று மாணவர்களில் இருவர் சுயநினைவிழந்துள்ளனர். இதையடுத்து இக்குழு கைது செய்யப்பட்டது.
இம்மூன்று மாணவர்களில் ஒருவர் அஸ்கர் அலி என்பவரின் புதல்வராவார். இவர் 1980 களின் ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து வந்தவராவார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட் ஜேம்ஸ் பீற்றர் என்ற இளைஞருக்கு 18 வயதாகும். இவரின் குழுவில் 100 இளைஞர்கள் வரை இருக்கிறார்கள். இக்குழுவினர் தம் பாடசாலைக்கருகில் விளையாடும் 11, 14 வயது சிறுவர்களை துரத்திப் பிடித்து தாக்குவது வழக்கமாகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்குழுவினர் சம்பவ தினத்தன்று 11 வயதான இரு மாணவர்களை நையப் புடைத்து தரைமீது தள்ளி உதைத்தார்கள். இவ்விருவரையும் காப்பாற்ற முற்பட்ட 14 வயதுடைய சிறுவனொருவரையும் இக் குழுவினர் இழுத்தெடுத்து, தடியால் அடித்தும், கீழே தள்ளி மிதித்தும், உதைத்தும் தாக்கியுள்ளனர். இவரும் சுயநினைவிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் குழுவினர் தாக்குதல் நடத்தும் போது இனத்துவேச கோசங்களை எழுப்பியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜேம்ஸ் பீற்றர்ஸுக்கு 16 மாத கால சிறைத் தண்டனை விதித்த நீதிவான், ""இனக்குரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது'' என தமது தீர்ப்பில் தெரிவித்தார்
Veerakesari
லண்டன்,
இனக்குரோத வெள்ளையர் குழுவைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு லண்டன் மாவட்ட நீதிமன்றமொன்று 16 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.
நீதிபதி தனது தீர்ப்பின் போது "ஓநாய்கள் தேடி ஓடக் கூடிய மிருகத்தை கண்டு பிடித்து விரட்டுவதற்கு ஒப்பான ஓர் சம்பவம் இதுவாகும்' எனக் குறிப்பிட்டார்.
மேற்படி இனவாதக் குழு மூன்று ஆசிய மாணவர்களை வழிமறித்து நையப்புடைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மூன்று மாணவர்களில் இருவர் சுயநினைவிழந்துள்ளனர். இதையடுத்து இக்குழு கைது செய்யப்பட்டது.
இம்மூன்று மாணவர்களில் ஒருவர் அஸ்கர் அலி என்பவரின் புதல்வராவார். இவர் 1980 களின் ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து வந்தவராவார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட் ஜேம்ஸ் பீற்றர் என்ற இளைஞருக்கு 18 வயதாகும். இவரின் குழுவில் 100 இளைஞர்கள் வரை இருக்கிறார்கள். இக்குழுவினர் தம் பாடசாலைக்கருகில் விளையாடும் 11, 14 வயது சிறுவர்களை துரத்திப் பிடித்து தாக்குவது வழக்கமாகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்குழுவினர் சம்பவ தினத்தன்று 11 வயதான இரு மாணவர்களை நையப் புடைத்து தரைமீது தள்ளி உதைத்தார்கள். இவ்விருவரையும் காப்பாற்ற முற்பட்ட 14 வயதுடைய சிறுவனொருவரையும் இக் குழுவினர் இழுத்தெடுத்து, தடியால் அடித்தும், கீழே தள்ளி மிதித்தும், உதைத்தும் தாக்கியுள்ளனர். இவரும் சுயநினைவிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் குழுவினர் தாக்குதல் நடத்தும் போது இனத்துவேச கோசங்களை எழுப்பியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜேம்ஸ் பீற்றர்ஸுக்கு 16 மாத கால சிறைத் தண்டனை விதித்த நீதிவான், ""இனக்குரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது'' என தமது தீர்ப்பில் தெரிவித்தார்
Veerakesari

