08-18-2005, 09:21 PM
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் செயற்பட முடியாது
TRO எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் அறப் பணிகளைச் செய்ய பிரிட்டனில் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிதி சேகரித்து வந்தது.
ஆனால், டி ஆர் ஓ அமைப்பு இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக அண்மையில் செய்திகள் வந்தன.
இது குறித்து இலண்டனில் உள்ள இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் ஊடகத்துறை அதிகாரி சாரா ஜேன் டிக்பியைக் கேட்ட போது இந்தச் செய்தி உண்மைதான் என்று கூறினார்.
கடந்த 2000 மாவது ஆண்டு, இந்த டி ஆர் ஒ அமைப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதாக இலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும்,இதனைத் தொடர்ந்து இந்தச் செய்திகள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய நாங்கள் முறைப்படியான விசாரணை ஒன்றினைத் தொடங்கினோம் என்றும்,
இந்த விசாரணை கடந்த ஆகஸ்டு பத்தாம் தேதி முடிவிற்கு வந்தது என்றும்,
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த டிஆர்ஒ பிரிட்டன் அமைப்பிற்கு ஒரு இடைக்கால மேலாளர் ஒருவரை நியமித்ததாக்வும், இவர் பிரிட்டிஷ் அறக்கட்டளை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும், டி ஆர் ஓ அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லாதவர் என்றும், இதன் நிர்வாகத்தை அந்த மேலாளர் எடுத்துக் கொண்டு அவரே அதை நடத்தினார் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்த டி ஆர் ஒ அமைப்பிற்கு எந்தவித சொத்துக்களும் இல்லை, பணம் எதுவும் இல்லை இதன் செயல்பாடு நின்று விட்டது அறப் பணிகள் எதுவும் செய்யவில்லை என சில வாரங்களுக்கு முன் இந்த இடைக்கால மேலாளர் எங்களுக்கு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தும், எங்களுடைய இறுதி விசாரணை அறிக்கை வரும் வரையிலும் எங்களுடைய அறக்கட்டளைப் பதிவுப் பட்டியலில் இருந்து டி ஆர் ஒ அமைப்பு எடுக்கப்பட்டுவிட்டது என்றும் சாரா ஜேன் டிக்பி கூறியுள்ளார்.
தங்களுடைய பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டால் டி ஆர் ஓ அறக்கட்டளை இனிமேல் செயல்படாது. இந்த அமைப்பிடம் எவ்விதப் பணமும் இல்லை அதற்கு எந்தவிதச் சொத்துக்களும் இல்லை. நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் இந்த அமைப்பு TRO (UK) பெயரில் யாரும் ஈடுபடக் கூடாது, TRO (UK) என்ற பெயரில் எதுவும் செய்யவும் கூடாது. இந்த அமைப்பிற்கு அனுமதி கிடையாது. ஆனால், இடைக்கால மேலாளர் இதே போன்ற அறப் பணிகளைச் செய்ய புதிய ஆட்களைக் கொண்டு தமிழர் ஆதரவுக் கட்டளை, Tamil Support Foundation (TSF) என்ற பெயரில் மற்றொரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த TSF என்ற அமைப்பு 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி ஆர் ஓ போன்றதொரு அறக்கட்டளை அமைப்புதான் இதுவும் என்றார் சாரா ஜேன் டிக்பி
இது பற்றி மேலும் கூறிய சாரா ஜேன் டிக்பி எங்களுடைய விசாரணையின் இறுதி அறிக்கை வரும் வரையில் டி ஆர் ஓ குறித்து இந்த விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து என்னால் இப்பொழுது எதுவும் கூற இயலாது. வெளியில் இருந்து ஒரு மேலாளரை, அதிகாரியை நாங்கள் டி ஆர் ஓ அமைப்பை நிர்வாகம் செய்ய நியமித்தோம். அதுவே மிகத் தீவிரமான நடவடிக்கை என்று கூறலாம். வெளியில் இருந்து ஒருவரை அழைத்து அறக்கட்டளையை நிர்வாகம் செய்யச் சொல்வது நங்கள் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம். டி ஆர் ஓ அறக்கட்டளையின் நிதியைப் பாதுகாக்கவே அவர் நியமிக்கப்பட்டார். உதவி தேவைப்படும் மக்களுக்கு, அறப் பணிகளுக்கு சேகரிக்கப்பட்ட நிதி சென்றடைவதை உறுதி செய்யவோ அல்லது மற்றொரு அறக்கட்டளையான தமிழர் ஆதரவு கட்டளை TSF அமைப்பிற்கு நிதியை மாற்றாவோ இதற்கு என்ன நடவடிக்கை சிறந்தது என்பதை இந்த அதிகாரி முடிவு செய்வார் என்றார் இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் சார்பில் பேசவல்லவரான சாரா ஜேன் டிக்பி.
டிஆர் ஒ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மறுக்கும் அந்த அமைப்பின் இயக்குனர்களின் ஒருவரான என்.எஸ். மீர்த்தி அவர்கள், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஆங்கில அதிகாரிகள் மற்றும் டி ஆர் ஒ வின் அதிகாரிகள் அடங்கிய தமிழர் ஆதரவு கட்டளை என்னும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பிரிட்டனின் அறக்கட்டளைகள் ஆணையம், டி ஆர் ஓவின் நிதியை புதிய அமைப்புக்கு மாற்றியுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் விசாரணை முடிவுகள் வரும் வரை டி ஆர் ஓ என்னும் அமைப்பு செயற்பட முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
BBC தமிழ்
TRO எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் அறப் பணிகளைச் செய்ய பிரிட்டனில் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிதி சேகரித்து வந்தது.
ஆனால், டி ஆர் ஓ அமைப்பு இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக அண்மையில் செய்திகள் வந்தன.
இது குறித்து இலண்டனில் உள்ள இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் ஊடகத்துறை அதிகாரி சாரா ஜேன் டிக்பியைக் கேட்ட போது இந்தச் செய்தி உண்மைதான் என்று கூறினார்.
கடந்த 2000 மாவது ஆண்டு, இந்த டி ஆர் ஒ அமைப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதாக இலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும்,இதனைத் தொடர்ந்து இந்தச் செய்திகள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய நாங்கள் முறைப்படியான விசாரணை ஒன்றினைத் தொடங்கினோம் என்றும்,
இந்த விசாரணை கடந்த ஆகஸ்டு பத்தாம் தேதி முடிவிற்கு வந்தது என்றும்,
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த டிஆர்ஒ பிரிட்டன் அமைப்பிற்கு ஒரு இடைக்கால மேலாளர் ஒருவரை நியமித்ததாக்வும், இவர் பிரிட்டிஷ் அறக்கட்டளை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும், டி ஆர் ஓ அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லாதவர் என்றும், இதன் நிர்வாகத்தை அந்த மேலாளர் எடுத்துக் கொண்டு அவரே அதை நடத்தினார் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்த டி ஆர் ஒ அமைப்பிற்கு எந்தவித சொத்துக்களும் இல்லை, பணம் எதுவும் இல்லை இதன் செயல்பாடு நின்று விட்டது அறப் பணிகள் எதுவும் செய்யவில்லை என சில வாரங்களுக்கு முன் இந்த இடைக்கால மேலாளர் எங்களுக்கு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தும், எங்களுடைய இறுதி விசாரணை அறிக்கை வரும் வரையிலும் எங்களுடைய அறக்கட்டளைப் பதிவுப் பட்டியலில் இருந்து டி ஆர் ஒ அமைப்பு எடுக்கப்பட்டுவிட்டது என்றும் சாரா ஜேன் டிக்பி கூறியுள்ளார்.
தங்களுடைய பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டால் டி ஆர் ஓ அறக்கட்டளை இனிமேல் செயல்படாது. இந்த அமைப்பிடம் எவ்விதப் பணமும் இல்லை அதற்கு எந்தவிதச் சொத்துக்களும் இல்லை. நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் இந்த அமைப்பு TRO (UK) பெயரில் யாரும் ஈடுபடக் கூடாது, TRO (UK) என்ற பெயரில் எதுவும் செய்யவும் கூடாது. இந்த அமைப்பிற்கு அனுமதி கிடையாது. ஆனால், இடைக்கால மேலாளர் இதே போன்ற அறப் பணிகளைச் செய்ய புதிய ஆட்களைக் கொண்டு தமிழர் ஆதரவுக் கட்டளை, Tamil Support Foundation (TSF) என்ற பெயரில் மற்றொரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த TSF என்ற அமைப்பு 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி ஆர் ஓ போன்றதொரு அறக்கட்டளை அமைப்புதான் இதுவும் என்றார் சாரா ஜேன் டிக்பி
இது பற்றி மேலும் கூறிய சாரா ஜேன் டிக்பி எங்களுடைய விசாரணையின் இறுதி அறிக்கை வரும் வரையில் டி ஆர் ஓ குறித்து இந்த விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து என்னால் இப்பொழுது எதுவும் கூற இயலாது. வெளியில் இருந்து ஒரு மேலாளரை, அதிகாரியை நாங்கள் டி ஆர் ஓ அமைப்பை நிர்வாகம் செய்ய நியமித்தோம். அதுவே மிகத் தீவிரமான நடவடிக்கை என்று கூறலாம். வெளியில் இருந்து ஒருவரை அழைத்து அறக்கட்டளையை நிர்வாகம் செய்யச் சொல்வது நங்கள் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம். டி ஆர் ஓ அறக்கட்டளையின் நிதியைப் பாதுகாக்கவே அவர் நியமிக்கப்பட்டார். உதவி தேவைப்படும் மக்களுக்கு, அறப் பணிகளுக்கு சேகரிக்கப்பட்ட நிதி சென்றடைவதை உறுதி செய்யவோ அல்லது மற்றொரு அறக்கட்டளையான தமிழர் ஆதரவு கட்டளை TSF அமைப்பிற்கு நிதியை மாற்றாவோ இதற்கு என்ன நடவடிக்கை சிறந்தது என்பதை இந்த அதிகாரி முடிவு செய்வார் என்றார் இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் சார்பில் பேசவல்லவரான சாரா ஜேன் டிக்பி.
டிஆர் ஒ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மறுக்கும் அந்த அமைப்பின் இயக்குனர்களின் ஒருவரான என்.எஸ். மீர்த்தி அவர்கள், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஆங்கில அதிகாரிகள் மற்றும் டி ஆர் ஒ வின் அதிகாரிகள் அடங்கிய தமிழர் ஆதரவு கட்டளை என்னும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பிரிட்டனின் அறக்கட்டளைகள் ஆணையம், டி ஆர் ஓவின் நிதியை புதிய அமைப்புக்கு மாற்றியுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் விசாரணை முடிவுகள் வரும் வரை டி ஆர் ஓ என்னும் அமைப்பு செயற்பட முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

