08-17-2005, 10:26 AM
என்னோட அம்மாவின் மாமாவி;டம் பெரிய தோட்டங்கள் வயல் ஆடுமாடுகள் இருந்ததாம். அவர் சில நேரங்களில் மாடு வாங்க வேறு ஊர்களுக்குச்செல்வது உண்டாம். பெரும்பாலும் வரும்போது கால்நடையாகத்தான் மாடுகளை அழைத்து வருவாராம்.
ஒரு தடவை அவர் சாவச்சேரியில் ஒருவரிடம்; நல்ல இன மாடுகளை வாங்கச் சென்றிருந்தாராம். எல்லாம் பேசி முடித்து இரவுச்சாப்பாட்டை முடித்துத்தான் வெளிக்கிட முடிந்ததாம். அன்று அமாவாசை நல்ல இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும்தானாம். அந்தக்காலத்தில் மின்சாரத் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. அதற்குப்பதிலாக அரிக்கன் விளக்குகள் தான் ஒன்றிரண்டை சனநடமாட்டம் உள்ள இடங்களில் காணமுடியுமாம். நடக்க ஆரம்பித்தால் விடிவதற்குள் நல்லூரைத்தாண்டி விடலாம் என எண்ணி எதையும் பொருட்படுத்தாது நடக்க ஆரம்பித்தாராம்.
குடிமனைகளைத்தாண்டி அடர்ந்த பனைமரங்களுடாக நடந்துகொண்டிருந்தாராம். எங்கும் கும் இருட்டு ஆந்தகைள் அலறுவதும் காய்ந்த பனைமர ஓலைகளின் ஓசையும் அவ்வப்போது நரிகளின் ஊளையிடும் சத்தத்தைத்தவிர எந்த அரவமும் இல்லையாம். அச்சமாக இருந்தாலும் தேவாரத்தை உச்சரித்த படி நடந்தாராம்.
தூரத்தில் தெருவோரத்தில் யாரோ சுருட்டுப்பிடிப்பது தெரிந்ததாம். அப்படா ஒருவாறு அடுத்த கிராமத்துக்குள் வந்துவிட்டோம் இனி விரைவாக போய்விடலாம் என மனநிம்மதி அடைந்ததாம் அவருக்கு. சுருட்டுப்பிடிப்பவரைப்பார்த்தவுடன் தானும் ஒரு சுருட்டைப்பிடிக்கலாம் என எண்ணி இடுப்பி;ல் இருந்த ஒரு சுருட்டை எடுத்து தெருவோரத்தில் அமர்திருந்த பெரியவரிடம் சுருட்டை ஒருக்கா தா பத்தவைக்க எனக்கேட்டு இருக்கிறார். ஆனால் அந்த உருவம் எதும் பேச வில்லையாம். இரண்டுதடவை கேட்டும் எந்தப்பதிலும் இல்லையாம். அதுமட்டுமில்லாது அந்த உருவம் அசையவும் இல்லையாம். மாமா விற்கு அப்போதுதான் உறைத்ததாம் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என. அது குறையாக எரிந்த சடலம் நெஞ்சுக்கட்டை சரியாக வைக்காததால் அது ஏழுந்துவிட்டதாம். பாதி எரிந்த விறகோ அல்லது ஏதோ ஒன்றுதான் மாமாவை சுருட்டு என எண்ணவைத்ததாம். மாமா பயத்தை அடக்கி அருகில் இருந்த எரிமேடையில் பாதி எரிந்து அணைந்துபோன ஒரு விறகை எடுத்து சுருட்டுப்பற்ற வைத்துவிட்டு திரும்பிப்பாராது மாடுகளுடன் நடக்க ஆரம்பித்துவிட்டாராம். சிறிது நேரத்திற்குப்பின் தூரத்தில் மணிச்சத்தம் கேட்டதாம் அது நல்லுர்ர் கோவில் மணியோசை. ஐந்து மணி ஆகிவிட்டது கோவிலை நெருங்கிவிட்டோம் என மனநிம்மதி அடைந்ததாம். அதன் பின் நல்லூர் சென்று ஐயரிடம் நடந்ததை சொன்னாராம் மாமா. ஐயர் விபுூதி புூசக் கொடுத்து இனி இரவில் சுடுகாட்டுவளி செல்லவேண்டாம் என புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாராம்.
ஒரு தடவை அவர் சாவச்சேரியில் ஒருவரிடம்; நல்ல இன மாடுகளை வாங்கச் சென்றிருந்தாராம். எல்லாம் பேசி முடித்து இரவுச்சாப்பாட்டை முடித்துத்தான் வெளிக்கிட முடிந்ததாம். அன்று அமாவாசை நல்ல இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும்தானாம். அந்தக்காலத்தில் மின்சாரத் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. அதற்குப்பதிலாக அரிக்கன் விளக்குகள் தான் ஒன்றிரண்டை சனநடமாட்டம் உள்ள இடங்களில் காணமுடியுமாம். நடக்க ஆரம்பித்தால் விடிவதற்குள் நல்லூரைத்தாண்டி விடலாம் என எண்ணி எதையும் பொருட்படுத்தாது நடக்க ஆரம்பித்தாராம்.
குடிமனைகளைத்தாண்டி அடர்ந்த பனைமரங்களுடாக நடந்துகொண்டிருந்தாராம். எங்கும் கும் இருட்டு ஆந்தகைள் அலறுவதும் காய்ந்த பனைமர ஓலைகளின் ஓசையும் அவ்வப்போது நரிகளின் ஊளையிடும் சத்தத்தைத்தவிர எந்த அரவமும் இல்லையாம். அச்சமாக இருந்தாலும் தேவாரத்தை உச்சரித்த படி நடந்தாராம்.
தூரத்தில் தெருவோரத்தில் யாரோ சுருட்டுப்பிடிப்பது தெரிந்ததாம். அப்படா ஒருவாறு அடுத்த கிராமத்துக்குள் வந்துவிட்டோம் இனி விரைவாக போய்விடலாம் என மனநிம்மதி அடைந்ததாம் அவருக்கு. சுருட்டுப்பிடிப்பவரைப்பார்த்தவுடன் தானும் ஒரு சுருட்டைப்பிடிக்கலாம் என எண்ணி இடுப்பி;ல் இருந்த ஒரு சுருட்டை எடுத்து தெருவோரத்தில் அமர்திருந்த பெரியவரிடம் சுருட்டை ஒருக்கா தா பத்தவைக்க எனக்கேட்டு இருக்கிறார். ஆனால் அந்த உருவம் எதும் பேச வில்லையாம். இரண்டுதடவை கேட்டும் எந்தப்பதிலும் இல்லையாம். அதுமட்டுமில்லாது அந்த உருவம் அசையவும் இல்லையாம். மாமா விற்கு அப்போதுதான் உறைத்ததாம் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என. அது குறையாக எரிந்த சடலம் நெஞ்சுக்கட்டை சரியாக வைக்காததால் அது ஏழுந்துவிட்டதாம். பாதி எரிந்த விறகோ அல்லது ஏதோ ஒன்றுதான் மாமாவை சுருட்டு என எண்ணவைத்ததாம். மாமா பயத்தை அடக்கி அருகில் இருந்த எரிமேடையில் பாதி எரிந்து அணைந்துபோன ஒரு விறகை எடுத்து சுருட்டுப்பற்ற வைத்துவிட்டு திரும்பிப்பாராது மாடுகளுடன் நடக்க ஆரம்பித்துவிட்டாராம். சிறிது நேரத்திற்குப்பின் தூரத்தில் மணிச்சத்தம் கேட்டதாம் அது நல்லுர்ர் கோவில் மணியோசை. ஐந்து மணி ஆகிவிட்டது கோவிலை நெருங்கிவிட்டோம் என மனநிம்மதி அடைந்ததாம். அதன் பின் நல்லூர் சென்று ஐயரிடம் நடந்ததை சொன்னாராம் மாமா. ஐயர் விபுூதி புூசக் கொடுத்து இனி இரவில் சுடுகாட்டுவளி செல்லவேண்டாம் என புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாராம்.

