08-16-2005, 02:30 PM
<b>அபு ஹோட்டடாவை பிரிட்டன் ஜோர்தானுக்கு நாடு கடத்தும் இவர் ஜோர்தானிலும் தண்டனை விதிக்கப்பட்டார்</b>
பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பழைமை வாத இஸ்லாமிய மதகுரு அபு ஹோட்டடா அங்கிருந்து ஜோர்தானுக்கு அடுத்தவாரம் நாடு கடத்தப்படவுள்ளார் என ஜோர்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினரில் ஹோட்டடாவுமொருவர்இ
மதகுரு அபுஹோட்டடாவும் மற்றுமிருவரும் ஏற்கனவே பெல்மார்ஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது எவ்வித குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. உள்துறை அமைச்சின் பணிப்புரைக்கிணங்க இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஜோர்தானில் இடம் பெற்று வந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் ஹோட்டடா அங்கு தேடப்பட்டு வந்தவர். அவர் 1993 ஆம் ஆண்டு ஜோர்தானை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டன் அபயமாளித்தது.;
அதே வேளை தொடர் குண்டுத் தாக்குதல்களுக்காக ஜோர்தானிய நீதிமன்றம் இவர் இல்லாமலே இவருக்கு ஆயுள் காலச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜோர்தானிய இரண்டாயிரம் வருட கொண்டாட்டத்தின் போது அமெரிக்க இ இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. அபு ஹோட்டடாவும் ஏனையோரும் லண்டன் லூட்டான்இ லிஸிஸ்டர்ஷெயார்இ மேற்கு பிட்லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
veerakesari
பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பழைமை வாத இஸ்லாமிய மதகுரு அபு ஹோட்டடா அங்கிருந்து ஜோர்தானுக்கு அடுத்தவாரம் நாடு கடத்தப்படவுள்ளார் என ஜோர்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினரில் ஹோட்டடாவுமொருவர்இ
மதகுரு அபுஹோட்டடாவும் மற்றுமிருவரும் ஏற்கனவே பெல்மார்ஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது எவ்வித குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. உள்துறை அமைச்சின் பணிப்புரைக்கிணங்க இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஜோர்தானில் இடம் பெற்று வந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் ஹோட்டடா அங்கு தேடப்பட்டு வந்தவர். அவர் 1993 ஆம் ஆண்டு ஜோர்தானை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டன் அபயமாளித்தது.;
அதே வேளை தொடர் குண்டுத் தாக்குதல்களுக்காக ஜோர்தானிய நீதிமன்றம் இவர் இல்லாமலே இவருக்கு ஆயுள் காலச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜோர்தானிய இரண்டாயிரம் வருட கொண்டாட்டத்தின் போது அமெரிக்க இ இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. அபு ஹோட்டடாவும் ஏனையோரும் லண்டன் லூட்டான்இ லிஸிஸ்டர்ஷெயார்இ மேற்கு பிட்லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
veerakesari

