08-16-2005, 12:22 PM
முகத்தார் பேய்கதை என்று சொன்னதும் எனக்கு அம்மம்மா சொன்ன ஒரு பேய்கதை நினைவுக்கு வருகிறது.
அப்போழுது எல்லாம் யாழ்ப்பாணத்தில் கார் அதிகம் இல்லை. மாட்டு வண்டியில் போய்வந்த காலம்.
எமது குடும்பத்தினருக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோலுக்கு ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் பொங்கிப்படைக்கும் வழக்கம் இருந்தது. அதற்கு அவர்கள் இரவு மாட்டுவண்டியில் பயணம்செய்து காலையில் கோவிலுக்குப்போய்ச்சேருவார்களாம். அன்றும் பொங்குவதற்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வண்டியில் அம்மம்மா ஐயா பெரியம்மா மாமா அம்மா ஆகியோர் கிழம்பி இருக்கிறார்கள். மாட்டுவண்டி ஆடியாடி மெதுவாக போய்க்கொண்டிருந்ததாம். நல்லூர் கோவில் எல்லாம் தாண்டி அவர்கள் சென்;றுகொண்டிருக்கும் போது தூரத்தில் கல்யாண ஊர்வலம் செல்வதுபோல வெளிச்சமாக தென்பட்டதாம். மேளதாளங்ள் எல்லாம் கேட்டதாம். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் மாடுகள் நடக்க மறுத்துவிட்டனவாம். வண்டிக்காரன் மாட்டை தட்டிப்பார்த்தும் மாடு அசையவில்லை. வாலைமுறுக்கிப்பார்த்தும் மாடு நகரவில்லை. வண்டிக்காரனுக்கு காரணம் விளங்கிவிட்டது. ஐயா அவனிடம் என்ன காரணம் எனக்கேட்டு இருக்கிறார். அவனும் ஐயாவிற்கு மட்டும் காரணத்தை சொல்லி இருக்கிறான். மற்றவர்கள் அந்த நேரம் வண்டியில் தூங்கிவிட்டார்களாம். உடனே ஐயா வண்டியில் இருந்து இறங்கி தேவாரம் இரண்டை உரக்கப்படித்து வேட்டியில் எப்போதும் வைத்திருக்கும் வீபுூதிப்பொட்டலத்தைப் பிரித்து மாடுகளின் நெற்றியில் அள்ளிப்புூசி இருக்கிறார். அதன்பின் சத்தங்கள் அடங்கிவிட்டனவாம். மாடுகள் மெதுவாக நடக்க ஆரம்பித்தனவாம்.
காலை கோவிலில் ஐயரிடம் நடந்ததை சொல்லும் போதுதான் அம்மம்மாவிற்கே விடயம் தெரிந்ததாம். உடனே ஐயர் மாடுகளுக்கு குங்குமம் இட்டு சிறு புூசைசெய்தாராம். இரவு வரை தங்காது நேரத்துடன் வீட்டுக்குப்போய்ச்சேருங்கள். எல்லாம் அந்த செம்மணிச்சுடலைப்பேய்களின் அட்டகாசம்தான் என்றாராம். வண்டிக்காரணுக்கும் ஐயாவிற்கும் அப்போதுதான் புரிந்ததாம் நல்லூர் தாண்டி சிறிதுதூரத்தில்தான் அந்த கல்யாண ஊர்வலம் வந்ததும் அந்த இடத்தில் உண்மையில் சுடலை இருப்பதும்.
அப்போழுது எல்லாம் யாழ்ப்பாணத்தில் கார் அதிகம் இல்லை. மாட்டு வண்டியில் போய்வந்த காலம்.
எமது குடும்பத்தினருக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோலுக்கு ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் பொங்கிப்படைக்கும் வழக்கம் இருந்தது. அதற்கு அவர்கள் இரவு மாட்டுவண்டியில் பயணம்செய்து காலையில் கோவிலுக்குப்போய்ச்சேருவார்களாம். அன்றும் பொங்குவதற்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வண்டியில் அம்மம்மா ஐயா பெரியம்மா மாமா அம்மா ஆகியோர் கிழம்பி இருக்கிறார்கள். மாட்டுவண்டி ஆடியாடி மெதுவாக போய்க்கொண்டிருந்ததாம். நல்லூர் கோவில் எல்லாம் தாண்டி அவர்கள் சென்;றுகொண்டிருக்கும் போது தூரத்தில் கல்யாண ஊர்வலம் செல்வதுபோல வெளிச்சமாக தென்பட்டதாம். மேளதாளங்ள் எல்லாம் கேட்டதாம். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் மாடுகள் நடக்க மறுத்துவிட்டனவாம். வண்டிக்காரன் மாட்டை தட்டிப்பார்த்தும் மாடு அசையவில்லை. வாலைமுறுக்கிப்பார்த்தும் மாடு நகரவில்லை. வண்டிக்காரனுக்கு காரணம் விளங்கிவிட்டது. ஐயா அவனிடம் என்ன காரணம் எனக்கேட்டு இருக்கிறார். அவனும் ஐயாவிற்கு மட்டும் காரணத்தை சொல்லி இருக்கிறான். மற்றவர்கள் அந்த நேரம் வண்டியில் தூங்கிவிட்டார்களாம். உடனே ஐயா வண்டியில் இருந்து இறங்கி தேவாரம் இரண்டை உரக்கப்படித்து வேட்டியில் எப்போதும் வைத்திருக்கும் வீபுூதிப்பொட்டலத்தைப் பிரித்து மாடுகளின் நெற்றியில் அள்ளிப்புூசி இருக்கிறார். அதன்பின் சத்தங்கள் அடங்கிவிட்டனவாம். மாடுகள் மெதுவாக நடக்க ஆரம்பித்தனவாம்.
காலை கோவிலில் ஐயரிடம் நடந்ததை சொல்லும் போதுதான் அம்மம்மாவிற்கே விடயம் தெரிந்ததாம். உடனே ஐயர் மாடுகளுக்கு குங்குமம் இட்டு சிறு புூசைசெய்தாராம். இரவு வரை தங்காது நேரத்துடன் வீட்டுக்குப்போய்ச்சேருங்கள். எல்லாம் அந்த செம்மணிச்சுடலைப்பேய்களின் அட்டகாசம்தான் என்றாராம். வண்டிக்காரணுக்கும் ஐயாவிற்கும் அப்போதுதான் புரிந்ததாம் நல்லூர் தாண்டி சிறிதுதூரத்தில்தான் அந்த கல்யாண ஊர்வலம் வந்ததும் அந்த இடத்தில் உண்மையில் சுடலை இருப்பதும்.

