08-16-2005, 08:44 AM
<b>பேய் கதை சொல்லுங்கோ. . . . .பிளீஸ் . . . </b>
<b>இந்த நூற்றாண்டில் பேய் இருக்கா இல்iலையா எண்டு வாதாட வரவில்லை வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு அதைப் பற்றிச் சிந்திப்பதற்கே நேரமிருக்காது எந்நேரமும் பகல்போல வெளிச்சம் இயந்திரம் போல வாழ்க்கை எங்கை இதுகளைப் பற்றி யோசிப்பது. . . . பேய்பற்றி நினைப்பு வருவதற்கு புறச்சூழல் முக்கியம் குமிருட்டு . காற்றுக்கு அசையும் மரங்களின் சத்தம் நாய்களின் ஊளை (சந்திரமுகி பாத்தீங்க தானே) இவைகளை கேட்கும் போது எங்களை அறியாமலே பாட்டி சொன்ன பழைய பேய்கதைகள் ஞாபகத்துக்கு வரும் இதுபோண்ற உணர்வு எமக்கு ஊரில்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது சின்ன வயசில் தாத்தா பாட்டியிடம் விரும்பிக் கேக்கும் கதையெண்டால் அது பேய்கதைதான் பகலில் ஆர்வமாகக் கேட்போம் 6மணியானால் வீட்டுப் படியை விட்டுக்கூட வெளியிலை இறங்க மாட்டோம் . . .
சரி அதுகளை விடுங்கோ. . .இங்கை இப்பிடியாக நீங்கள் அனுபவித்த அல்லது உங்கள் ஊரில் நடந்த பேய்கதைகள் இருந்தால் எமக்கும் சொல்லுங்கோவன் (கனநாள் பேய்க்கதைகளைக் கேட்டு பிறகு யாழ் களத்திலை பேய் கதையிருக்கு எண்டு யாராவது வராமல் விட்டால் அதுக்கு நான் பொறுப்பல்ல). . . . .</b>
ஒருமுறை நண்பர்களுடன் மானிப்பாய் வெஸ்லித் தியேட்டரில் இரவப் படம் பார்த்து விட்டு அவர்களுடன் இருந்து அரட்டையடித்து விட்டு 11.30மணியளவில் வீட்டுக்கு வந்தேன் வாறவழியில் சைக்கிள் காத்துப் போய் விட்டுது நண்பன் வீட்டில் சைக்கிலை வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன் மெயின் றோட்டிலிருந்து எங்கடை வீட்டுக்கு ஒழுங்கைப் பாதைதான் றோட்டில் ஒரு சனம்சாதியில்லை ஒழுங்கைக்குள் இறங்கிவிட்டேன் என்ரை கஷ்ட காலம் ஒழுங்கை லைட் ஒண்டும் எரியவில்லை குமிருட்டு அப்ப திடீரென ஒரு நினைப்பு நான் போற வழியில் 4நாளுக்கு முன்னம்தான் ஒரு செத்தவீடு நடந்தது ஏன்தான் இப்ப இந்த நினைப்பு வந்து தொலைச்சுதோ தெரியவில்லை ஒரு துணிவை வரவழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன் ஒரு வீட்டிலும் வெளிச்சம் இல்லை செத்த வீடு நடந்த வீட்டை நெருங்கி விட்டேன் அந்த வீட்டில் மாத்திரம் சிறு வெளிச்சம் தெரிந்தது அந்தப் பக்கம் பார்க்காமல் வேகமாக நடந்தேன் அப்போ தூரத்தில் ஒரு சிவப்பு ஓளி மெல்ல மெல்ல முன்னுக்கு வாற மாதிரி இருந்திச்சு யாரோ சுருட்டுப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள் போலிருந்தது பாதையில் எனக்கு நேரே வாற மாதிரி இருந்தபடியால் நான் மறுபக்கத்திற்குப் போனேன் அந்த உருவமும் மறுபக்கம் மாறி எனக்கு நேரே வந்தது கிட்ட நெருங்கி விட்டேன் யாராவது கள்வராக இருக்குமோ என நினைத்து அந்த உருவத்தை கையால் அடித்தேன் எதுவும் படவில்லை உருவத்தையும் காணவில்லை திரும்பிப் பார்த்தேன் அந்த உருவம் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தது இப்போ அந்த உருவத்தை ஓரளவு அடையாளம் காணமுடிந்தது கட்டையாள் . வழுக்கையா தலை . சேட் இல்லை சாறம் மாத்திரம் அங்கையிருந்து பிடிச்சன் ஓட்டம் (ஏனெண்டால் அந்த உருவஅமைப்புத்தான் 4நாளைக்கு முன்னம் செத்த மனுசன்) எப்பிடி வீட்டு மதிலை ஜம் பண்ணினோ தெரியாது அம்மாவை எழுப்பி விசயத்தை சொன்னன் அம்மா கை .கால் கழுவிட்டு வரச் சொன்னா திருநீறு புூசி விட்டா ஒருமாதிரி படுத்திட்டன் ஆனா 2நாட்கள் நல்ல காச்சல் அம்மா இந்தக் கதையை பக்கத்தி வீட்டுக்காரருடன் கதைத்த போது அவர்களிலும் ஓரிருவர் அந்த உருவத்தைப் பாத்திருக்கிறார்களாம் அவலச் சா செத்தவர்களின் ஆவி போக மனமில்லாமல் சுத்திக் கொண்டு திரியுமாம் இதை நம்புவதா இல்லையா என தெரியவில்லை ஆனாலும் எனக்கு இப்பவும் இரவுநேரத்தில் அந்த வீட்டடியால் போகும் போது இந்த பழைய ஞாபகம் வந்துதான் போகிறது. . . . . . . . . .எப்பிடி கதை . . . .
இது மாதிரி உங்கள் சொந்தங்கள் அனுபவித்த கதைகள் இருந்தால் எழுதுங்கோ [/b]
<b>இந்த நூற்றாண்டில் பேய் இருக்கா இல்iலையா எண்டு வாதாட வரவில்லை வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு அதைப் பற்றிச் சிந்திப்பதற்கே நேரமிருக்காது எந்நேரமும் பகல்போல வெளிச்சம் இயந்திரம் போல வாழ்க்கை எங்கை இதுகளைப் பற்றி யோசிப்பது. . . . பேய்பற்றி நினைப்பு வருவதற்கு புறச்சூழல் முக்கியம் குமிருட்டு . காற்றுக்கு அசையும் மரங்களின் சத்தம் நாய்களின் ஊளை (சந்திரமுகி பாத்தீங்க தானே) இவைகளை கேட்கும் போது எங்களை அறியாமலே பாட்டி சொன்ன பழைய பேய்கதைகள் ஞாபகத்துக்கு வரும் இதுபோண்ற உணர்வு எமக்கு ஊரில்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது சின்ன வயசில் தாத்தா பாட்டியிடம் விரும்பிக் கேக்கும் கதையெண்டால் அது பேய்கதைதான் பகலில் ஆர்வமாகக் கேட்போம் 6மணியானால் வீட்டுப் படியை விட்டுக்கூட வெளியிலை இறங்க மாட்டோம் . . .
சரி அதுகளை விடுங்கோ. . .இங்கை இப்பிடியாக நீங்கள் அனுபவித்த அல்லது உங்கள் ஊரில் நடந்த பேய்கதைகள் இருந்தால் எமக்கும் சொல்லுங்கோவன் (கனநாள் பேய்க்கதைகளைக் கேட்டு பிறகு யாழ் களத்திலை பேய் கதையிருக்கு எண்டு யாராவது வராமல் விட்டால் அதுக்கு நான் பொறுப்பல்ல). . . . .</b>
ஒருமுறை நண்பர்களுடன் மானிப்பாய் வெஸ்லித் தியேட்டரில் இரவப் படம் பார்த்து விட்டு அவர்களுடன் இருந்து அரட்டையடித்து விட்டு 11.30மணியளவில் வீட்டுக்கு வந்தேன் வாறவழியில் சைக்கிள் காத்துப் போய் விட்டுது நண்பன் வீட்டில் சைக்கிலை வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன் மெயின் றோட்டிலிருந்து எங்கடை வீட்டுக்கு ஒழுங்கைப் பாதைதான் றோட்டில் ஒரு சனம்சாதியில்லை ஒழுங்கைக்குள் இறங்கிவிட்டேன் என்ரை கஷ்ட காலம் ஒழுங்கை லைட் ஒண்டும் எரியவில்லை குமிருட்டு அப்ப திடீரென ஒரு நினைப்பு நான் போற வழியில் 4நாளுக்கு முன்னம்தான் ஒரு செத்தவீடு நடந்தது ஏன்தான் இப்ப இந்த நினைப்பு வந்து தொலைச்சுதோ தெரியவில்லை ஒரு துணிவை வரவழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன் ஒரு வீட்டிலும் வெளிச்சம் இல்லை செத்த வீடு நடந்த வீட்டை நெருங்கி விட்டேன் அந்த வீட்டில் மாத்திரம் சிறு வெளிச்சம் தெரிந்தது அந்தப் பக்கம் பார்க்காமல் வேகமாக நடந்தேன் அப்போ தூரத்தில் ஒரு சிவப்பு ஓளி மெல்ல மெல்ல முன்னுக்கு வாற மாதிரி இருந்திச்சு யாரோ சுருட்டுப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள் போலிருந்தது பாதையில் எனக்கு நேரே வாற மாதிரி இருந்தபடியால் நான் மறுபக்கத்திற்குப் போனேன் அந்த உருவமும் மறுபக்கம் மாறி எனக்கு நேரே வந்தது கிட்ட நெருங்கி விட்டேன் யாராவது கள்வராக இருக்குமோ என நினைத்து அந்த உருவத்தை கையால் அடித்தேன் எதுவும் படவில்லை உருவத்தையும் காணவில்லை திரும்பிப் பார்த்தேன் அந்த உருவம் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தது இப்போ அந்த உருவத்தை ஓரளவு அடையாளம் காணமுடிந்தது கட்டையாள் . வழுக்கையா தலை . சேட் இல்லை சாறம் மாத்திரம் அங்கையிருந்து பிடிச்சன் ஓட்டம் (ஏனெண்டால் அந்த உருவஅமைப்புத்தான் 4நாளைக்கு முன்னம் செத்த மனுசன்) எப்பிடி வீட்டு மதிலை ஜம் பண்ணினோ தெரியாது அம்மாவை எழுப்பி விசயத்தை சொன்னன் அம்மா கை .கால் கழுவிட்டு வரச் சொன்னா திருநீறு புூசி விட்டா ஒருமாதிரி படுத்திட்டன் ஆனா 2நாட்கள் நல்ல காச்சல் அம்மா இந்தக் கதையை பக்கத்தி வீட்டுக்காரருடன் கதைத்த போது அவர்களிலும் ஓரிருவர் அந்த உருவத்தைப் பாத்திருக்கிறார்களாம் அவலச் சா செத்தவர்களின் ஆவி போக மனமில்லாமல் சுத்திக் கொண்டு திரியுமாம் இதை நம்புவதா இல்லையா என தெரியவில்லை ஆனாலும் எனக்கு இப்பவும் இரவுநேரத்தில் அந்த வீட்டடியால் போகும் போது இந்த பழைய ஞாபகம் வந்துதான் போகிறது. . . . . . . . . .எப்பிடி கதை . . . .
இது மாதிரி உங்கள் சொந்தங்கள் அனுபவித்த கதைகள் இருந்தால் எழுதுங்கோ [/b]
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

