Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நச்சுக் குப்பைகள்
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சமீபத்தில் ஒரு தொடரைக் காண நேர்ந்தது. ஒரு பெரிய மனிதர் தன் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் தவிக்கவிட்டு, மற்றொரு பெண்ணோடு மும்பை சென்றுவிடுகிறார் (தமிழ்த் தொடர்களின் ஆறாம் விதி இதுவாக இருக்கலாம்: தொடரில் வருகிற எல்லா ஆண்களுக்கும் குறைந்தது இரண்டு பெண்களுடனாவது தொடர்பு இருக்க வேண்டும்). திரும்பச் சென்னை வரும்போது அவர் பெற்ற குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் பல இடங்களில் அவர் சந்திக்கிறார். அவரது மகன் அவரிடமே ஓட்டுநராக இருக்கிறான். ஆனால் அடையாளம் தெரியவில்லை! மனைவியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருவரும் ஒருவரோடு ஒருவர் உரசிப் போகும் தருணங்கள் - திகில் தருணங்கள் - வருகின்றன. ஆனால் தொடர் எடுப்பவர் இன்னும் காசு பார்க்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டதால் இருவரும் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. மனைவி கணவர் படத்தை ஒரு பெட்டியில் ஒளித்து வைத்து, சமயம் கிடைக்கும்போதெல்லாம் (தொடரை இழுக்க வேறு வழியில்லாதபோதெல்லாம்) பார்த்துப் பார்த்து அழுகிறாள். ஆனால் குழந்தைகளிடம் காட்டமாட்டாள். இந்தப் பெரிய மனிதருக்கு மூளை அதிகம் இல்லை. ஆனால் பெற்ற குழந்தைகளின் பெயர்களையும் சாயல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மூளை அதிகம் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் குறைந்தபட்ச சலுகையைக்கூடத் தொடரை எழுதியவர் இவருக்குத் தரத் தயாராக இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எழுதியவர் இன்னொன்றை விட்டிட்டாரே.. அதாவது பழைய நினைவுகளை மறப்பது. பல நாடகங்களில் இப்படிக்கதையைப்போட்டு அறுத்தார்களே சில வேளை இரண்டுக்கு மேற்பட்ட நாடகங்களில் ஒரே நேரத்தில் பழைய நினைவுகளை இழந்த பாத்திரம் நடித்துக்கொண்டிருக்கும். இந்த சின்னத்திரை என்பது பெண்களை மட்டும் அல்ல சின்னப்பிள்ளைகள் ஆண்கள் என்று எல்லாரையும் தான் கட்டி வைத்திருக்கிறது. அண்மையில் மெட்டி ஒலி என்ற மெகா சீரியலின் கடைசி நிகழ்வை முழுமையாக(அந்த நிகழ்ச்சி 1 நாள் முழுதாக நடைபெற்றிருக்க வேண்டும்) பார்க்க விடவில்லை என்பதால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாராம்.
:? இது எங்க போய் எப்படி முடியப்போதோ தெரியவில்லை.
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 08-13-2005, 06:05 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:08 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:31 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:39 PM
[No subject] - by kirubans - 08-13-2005, 06:42 PM
[No subject] - by tamilini - 08-13-2005, 07:05 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:00 PM
[No subject] - by stalin - 08-14-2005, 08:57 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 09:52 AM
[No subject] - by tamilini - 08-14-2005, 02:53 PM
[No subject] - by Mathan - 08-14-2005, 06:19 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 07:32 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 07:57 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 08:01 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 08:05 PM
[No subject] - by shobana - 08-15-2005, 09:27 AM
[No subject] - by Mathan - 08-15-2005, 09:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)