08-13-2005, 06:08 PM
2
சில மாதங்களுக்கு முன்னால் நான் 'Five Immutable Laws of a Tamil Serial' என்று தமிழ்த் தொடரின் அசைக்க முடியாத ஐந்து விதிகளை நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றின் தமிழாக்கம் கீழ்வருமாறு.
முதல் விதி: தொடர் சம்பந்தப்பட்டவர்களின் மொத்த நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) ஒரு மனிதக் குரங்கினுடையதைவிடக் குறைவாகவோ அதற்குச் சமமாகவோ இருக்கும்.
இரண்டாம் விதி: தொடரில் வரும் பாத்திரங்கள் இந்த மூன்று வகைகளிலேயே அமைவர்: மட்டி, மடையன், முட்டாள். ஆனால் முழு முட்டாள் என்னும் பட்டத்திற்குத் தகுதி பெற்றவர் தொடரில் வரும் போலீஸ் அதிகாரியாக இருப்பார்.
மூன்றாம் விதி: கற்பழிப்பவன் அல்லது கல்யாண வளையத்திற்கு அப்பால் ஒரு பெண்ணோடு தொடர்புவைத்துக்கொள்பவன் எப்போதும் ஒரு பொலிகாளையின் தன்மையைப் பெற்று இருப்பான். பெண்ணுக்கு எந்த வயதாக இருந்தாலும் ஒரு முறை புணர்வதே கருத்தரிப்பதற்குப் போதுமானது.
நான்காம் விதி: தொடரின் நாயகன்-நாயகி வாழ்க்கைப் பாதையில் வருகிற தற்செயல்களின் எண்ணிக்கை அவர்கள் முதல் இரவுப் படுக்கையில் தூவப்பட்ட ரோஜா இதழ்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவோ அவற்றிற்குச் சமமாகவோ இருக்கும்.
ஐந்தாம் விதி: கடவுள்தான் ஒரு தொடரை முடிவிற்குக் கொண்டுவருவார் - அவருடைய பொறுமை முழுவதுமாகச் சோதிக்கப்பட்ட பின்.
இந்த விதிகளை மீறிய தொடர்களை நான் இன்றுவரை பார்க்கவில்லை.
இந்தத் தொடர்களைப் பார்த்துப் பரவசம் அடைபவர்களைப் பற்றிய விதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. ஆங்கிலத்தில் cretinism என்று ஒரு பதம் உண்டு. தொடர்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் இந்தத் தன்மையினால் பீடிக்கப்படுகிறார்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு.
தமிழில் வரும் எல்லாத் தொடர்களுக்கும் இந்த மறுபெயர் பொருந்தும் - கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது எப்படி? எல்லாத் தொடர்களிலும் கொக்குகள் மிக மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கின்றன. மற்றொன்று, எல்லாத் தொடர்களிலும் திட்டக் கமிஷன்கள் தீவிரமாக இயங்குகின்றன. இந்த நிலைமைக்குத் திட்டங்கள் தள்ளப்படும் என்று ஜவகர்லால் நேருவிற்கு முன்பே தெரிந்திருந்தால் இந்தியா திட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கலாம். வலதுசாரிகளின் கெட்ட காலம், நேரு காலத்தில் மெகாத் தொடர்கள் எடுக்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்னால் நான் 'Five Immutable Laws of a Tamil Serial' என்று தமிழ்த் தொடரின் அசைக்க முடியாத ஐந்து விதிகளை நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றின் தமிழாக்கம் கீழ்வருமாறு.
முதல் விதி: தொடர் சம்பந்தப்பட்டவர்களின் மொத்த நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) ஒரு மனிதக் குரங்கினுடையதைவிடக் குறைவாகவோ அதற்குச் சமமாகவோ இருக்கும்.
இரண்டாம் விதி: தொடரில் வரும் பாத்திரங்கள் இந்த மூன்று வகைகளிலேயே அமைவர்: மட்டி, மடையன், முட்டாள். ஆனால் முழு முட்டாள் என்னும் பட்டத்திற்குத் தகுதி பெற்றவர் தொடரில் வரும் போலீஸ் அதிகாரியாக இருப்பார்.
மூன்றாம் விதி: கற்பழிப்பவன் அல்லது கல்யாண வளையத்திற்கு அப்பால் ஒரு பெண்ணோடு தொடர்புவைத்துக்கொள்பவன் எப்போதும் ஒரு பொலிகாளையின் தன்மையைப் பெற்று இருப்பான். பெண்ணுக்கு எந்த வயதாக இருந்தாலும் ஒரு முறை புணர்வதே கருத்தரிப்பதற்குப் போதுமானது.
நான்காம் விதி: தொடரின் நாயகன்-நாயகி வாழ்க்கைப் பாதையில் வருகிற தற்செயல்களின் எண்ணிக்கை அவர்கள் முதல் இரவுப் படுக்கையில் தூவப்பட்ட ரோஜா இதழ்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவோ அவற்றிற்குச் சமமாகவோ இருக்கும்.
ஐந்தாம் விதி: கடவுள்தான் ஒரு தொடரை முடிவிற்குக் கொண்டுவருவார் - அவருடைய பொறுமை முழுவதுமாகச் சோதிக்கப்பட்ட பின்.
இந்த விதிகளை மீறிய தொடர்களை நான் இன்றுவரை பார்க்கவில்லை.
இந்தத் தொடர்களைப் பார்த்துப் பரவசம் அடைபவர்களைப் பற்றிய விதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. ஆங்கிலத்தில் cretinism என்று ஒரு பதம் உண்டு. தொடர்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் இந்தத் தன்மையினால் பீடிக்கப்படுகிறார்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு.
தமிழில் வரும் எல்லாத் தொடர்களுக்கும் இந்த மறுபெயர் பொருந்தும் - கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது எப்படி? எல்லாத் தொடர்களிலும் கொக்குகள் மிக மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கின்றன. மற்றொன்று, எல்லாத் தொடர்களிலும் திட்டக் கமிஷன்கள் தீவிரமாக இயங்குகின்றன. இந்த நிலைமைக்குத் திட்டங்கள் தள்ளப்படும் என்று ஜவகர்லால் நேருவிற்கு முன்பே தெரிந்திருந்தால் இந்தியா திட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கலாம். வலதுசாரிகளின் கெட்ட காலம், நேரு காலத்தில் மெகாத் தொடர்கள் எடுக்கப்படவில்லை.
<b> . .</b>

