08-13-2005, 06:05 PM
நச்சுக் குப்பைகள்
பி.ஏ. கிருஷ்ணன்
1
ஒரு மகத்தான திரைப்படம் பார்த்து வந்த கையோடு இதை எழுதுகிறேன். பதேர் பாஞ்சாலி வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காகத் தில்லியில் சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் காட்டப்பட்டு வருகின்றன. பதேர் பாஞ்சாலி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுதான் அலர்ந்தது போன்று புதிதாக இருக்கிறது. உலகளாவிய உண்மைகளைப் பேசும் படைப்பின் விளிம்பைக்கூடக் காலம் சுரண்ட முடியாது என்பதற்கு இந்தப் படத்தைவிடச் சிறந்த உதாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறி மாறி வரும் பிம்பங்கள் அழகாகக் கதை சொல்லுகின்றன; கவிதையாகின்றன. மனிதகுலத்தின் அபூர்வங்களையும் அவலங்களையும் - அன்றாடம் நடப்பவை - நேராக மனம்வரை கொண்டுவருகின்றன. இங்கு இயக்குநர் எவரெஸ்டுகள் என்று பட்டம் பெற்று அலைபவர்கள் அடிக்கோடிட்டும் கூச்சலிட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியும் கூற முடியாதவற்றை ஒரு கணமே தோன்றி மறையும் சட்டத்தில் (frame) ரேயால் கூற முடிகிறது.
இந்த ஐம்பது ஆண்டுகளில் திரைப்படங்கள் வெகுதூரம் பயணித்துவிட்டன. வங்காளத் திரையுலகுகூட ரேயை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தொழில்நுட்பம் மட்டுமே படத்தை விலைபோக வைத்துவிடும் என்னும் நம்பிக்கை உறுதிப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கள்ளக் காசுகள் நல்ல காசுகளைச் சந்தையிலிருந்து வெகு எளிதாக விரட்டிவிடும் என்பதற்கு இன்றைய திரைப்படங்கள் உதாரணம்.
மற்றொரு மிகப் பெரிய உதாரணம், தினமும் நம் வரவேற்பு அறைகளில் ஓலமிடும் தொலைக்காட்சித் தொடர்கள். ஆனால் இங்கு நல்ல காசுகள் இருந்ததாகவே எனக்கு நினைவில் இல்லை.
பி.ஏ. கிருஷ்ணன்
1
ஒரு மகத்தான திரைப்படம் பார்த்து வந்த கையோடு இதை எழுதுகிறேன். பதேர் பாஞ்சாலி வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காகத் தில்லியில் சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் காட்டப்பட்டு வருகின்றன. பதேர் பாஞ்சாலி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுதான் அலர்ந்தது போன்று புதிதாக இருக்கிறது. உலகளாவிய உண்மைகளைப் பேசும் படைப்பின் விளிம்பைக்கூடக் காலம் சுரண்ட முடியாது என்பதற்கு இந்தப் படத்தைவிடச் சிறந்த உதாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறி மாறி வரும் பிம்பங்கள் அழகாகக் கதை சொல்லுகின்றன; கவிதையாகின்றன. மனிதகுலத்தின் அபூர்வங்களையும் அவலங்களையும் - அன்றாடம் நடப்பவை - நேராக மனம்வரை கொண்டுவருகின்றன. இங்கு இயக்குநர் எவரெஸ்டுகள் என்று பட்டம் பெற்று அலைபவர்கள் அடிக்கோடிட்டும் கூச்சலிட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியும் கூற முடியாதவற்றை ஒரு கணமே தோன்றி மறையும் சட்டத்தில் (frame) ரேயால் கூற முடிகிறது.
இந்த ஐம்பது ஆண்டுகளில் திரைப்படங்கள் வெகுதூரம் பயணித்துவிட்டன. வங்காளத் திரையுலகுகூட ரேயை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தொழில்நுட்பம் மட்டுமே படத்தை விலைபோக வைத்துவிடும் என்னும் நம்பிக்கை உறுதிப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கள்ளக் காசுகள் நல்ல காசுகளைச் சந்தையிலிருந்து வெகு எளிதாக விரட்டிவிடும் என்பதற்கு இன்றைய திரைப்படங்கள் உதாரணம்.
மற்றொரு மிகப் பெரிய உதாரணம், தினமும் நம் வரவேற்பு அறைகளில் ஓலமிடும் தொலைக்காட்சித் தொடர்கள். ஆனால் இங்கு நல்ல காசுகள் இருந்ததாகவே எனக்கு நினைவில் இல்லை.
<b> . .</b>

