08-12-2005, 09:03 PM
நாடுகடத்தல் தொடர்பில் புதிய சட்டம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறது
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050809105735mohammed203i-pa.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒமர் பக்ரி முகமட் பிரிட்டன் திரும்பத் தடை</b>
நாடுகடத்தப்படுவோர் பற்றிய வழக்குகளில் பிரிட்டனின் தேசிய பாதுகாப்பையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் புதிய சட்டம் ஒன்றைப் பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை 10 வெளிநாட்டவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
நாடு கடத்தப்படுவோர் அந்தந்த நாடுகளால் சித்திரவதை செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற, பிரிட்டிஷ் அரசு பல வெளிநாடுகளுடன் பேசி வருகிறது.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரிட்டன், அனைத்துலக அடிப்படை மனித உரிமைச் சட்டங்களை மீறும் நிலைக்கு வருகிறது என்று சித்திரவதைகள் குறித்த ஐ.நா பிரதிநிதி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்துலகச் சட்டங்களின் படி ஒருவர் சித்திரவதை செய்யப்படக் கூடிய நாட்டுக்கு அவரை ஒரு நாடு கடத்தக் கூடாது.
இதற்கிடையே லெபனானுக்குச் சென்றுள்ள வன்மைவாத முஸ்லிம் மத போதகர் ஒமர் பக்ரி முகமட் அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பிவர பிரிட்டன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் கடந்த 20 வருடமாகத் தங்கியிருந்த பக்ரிக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர வதிவிட உரிமையையும் ரத்துச் செய்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது
BBC தமிழ்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050809105735mohammed203i-pa.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒமர் பக்ரி முகமட் பிரிட்டன் திரும்பத் தடை</b>
நாடுகடத்தப்படுவோர் பற்றிய வழக்குகளில் பிரிட்டனின் தேசிய பாதுகாப்பையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் புதிய சட்டம் ஒன்றைப் பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை 10 வெளிநாட்டவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
நாடு கடத்தப்படுவோர் அந்தந்த நாடுகளால் சித்திரவதை செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற, பிரிட்டிஷ் அரசு பல வெளிநாடுகளுடன் பேசி வருகிறது.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரிட்டன், அனைத்துலக அடிப்படை மனித உரிமைச் சட்டங்களை மீறும் நிலைக்கு வருகிறது என்று சித்திரவதைகள் குறித்த ஐ.நா பிரதிநிதி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்துலகச் சட்டங்களின் படி ஒருவர் சித்திரவதை செய்யப்படக் கூடிய நாட்டுக்கு அவரை ஒரு நாடு கடத்தக் கூடாது.
இதற்கிடையே லெபனானுக்குச் சென்றுள்ள வன்மைவாத முஸ்லிம் மத போதகர் ஒமர் பக்ரி முகமட் அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பிவர பிரிட்டன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் கடந்த 20 வருடமாகத் தங்கியிருந்த பக்ரிக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர வதிவிட உரிமையையும் ரத்துச் செய்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

