08-11-2005, 07:13 PM
<b>கடும்போக்கு முஸ்லிம் மதகுருமார் பிரிட்டனில் தடுத்து வைப்பு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39245000/jpg/_39245239_abu203.jpg' border='0' alt='user posted image'>
<i>அபு கட்டாடா</i>
ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த கடும்போக்கு மதகுருவான அபு கட்டாடா உட்பட 10 பேரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
இவர்கள் இங்கே தங்கியிருப்பது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரிட்டன் காரணம் கூறுகிறது.
நாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது பிரிட்டன் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கட்டாடா அவர்கள் முன்பும் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர், அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு அவர்கள் சித்திரவதைகளை எதிர் நோக்கலாம் என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அப்படியானவர்களின் சொந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இப்போது பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.
ஆனால் இதனை தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் சட்டத்தரணிகள் ஏற்க மறுக்கின்றனர்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39245000/jpg/_39245239_abu203.jpg' border='0' alt='user posted image'>
<i>அபு கட்டாடா</i>
ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த கடும்போக்கு மதகுருவான அபு கட்டாடா உட்பட 10 பேரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
இவர்கள் இங்கே தங்கியிருப்பது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரிட்டன் காரணம் கூறுகிறது.
நாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது பிரிட்டன் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கட்டாடா அவர்கள் முன்பும் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர், அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு அவர்கள் சித்திரவதைகளை எதிர் நோக்கலாம் என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அப்படியானவர்களின் சொந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இப்போது பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.
ஆனால் இதனை தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் சட்டத்தரணிகள் ஏற்க மறுக்கின்றனர்.

