08-03-2005, 02:31 PM
Mathan Wrote:-------------------------------------------------Mathuran Wrote:திருமாவள்வன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவலினை வெளியிடும் சாக்கில் திரப்படத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வால்டர் தேவாரம் என்பவரை போல திருமாவளவன் தோற்றமளிக்கின்றார் என தேவையற்ற வகையில் செய்தி உருவாக்கப் பட்டுள்ளது. இவ் இணயப் பத்திரிகை தமிழர்களை இளிவுபடுத்தும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரன் இந்த செய்தியையும் அதில் வால்டர் தேவாரம் போலிருக்கிறார் என்பதை வைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்ல முடியலையே?
நண்பர் மதன் அவர்களே மேலோட்டமாக பார்த்தால் இச் செய்தியின் சூட்ச்மத்தினை யாரும் சரிவர புரிந்துகொள்ளமாட்டார்கள். திருமாவளவன் ஏற்று நடிக்கும் பாத்திரமோ மேலாண்மை போக்குடயவர்களால் சிரழித்து ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைசிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமர மக்களின் விடுதலைக்காக போராடும் தலைவன் என்னும் பாத்திரம். அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையை களைந்து அவர்களின் சுயமரியாதைக்காக போராடும் ஒரு வீரனை. பாமரமக்களை கொன்று குவித்ததாக மனித உரிமை வாதிகளால் கருதப்படும் ஒரு மேலண்மை வாதியை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் வீரனோடு ஒப்பிட்டு விசமத்தனமாக இச்செய்தி பின்னப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். இதுபோன்ற பலசெய்திகள் இச்செய்தி ஊடகத்தினால் புகுத்த்தப்படுவதனை தமிழ் மக்கள் ஏனோ கண்டிக்க முன்வருவதில்லை.
மேலாண்மை வாதத்தினை ஆதரித்தும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்கும் இதுபோன்ற ஊடகங்களை தமிழர்கள் புறம்தள்ள வேண்டும் என்பதே என்போன்ற இளைஞ்ஞர்களின் அவா.

