Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுட்ட கவிதை
:roll:
[b][size=18]
Reply
என்ன முழிக்கிறியள்..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நிலுவை

நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.

உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?

கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்து
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.

- ஆழியாள்
பிரசுரம் - "உரத்துப் பேச" (கவிதைத் தொகுப்பு - ஆழியாள்)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
எனதருமை நண்பனே!
நீ என்னோடு நெருக்கமாகப் பழகுவதைப் போலவே
எனது பரம விரோதியுடனும் பழகவேண்டும்.
அவனைப் பழிவாங்குவதற்கு இதனைவிட
வேறு கொடூரமான வழியேதுமில்லை!
அறுவை மன்னா!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

(சுட்டதுதான். எழுதியது யார் என்று தெரியவில்லை)
--
--
Reply
உன்னில் உறைந்து போனேன்...
ஊசிக் குளிர்
வந்தென்னை
உரசித் தாக்க
உறை நிலைப் படலமாய்
நீ எந்தன்
நெஞ்சில்..

வாழ்வு
வறுமையின்
கரு முகிலாய்
உன் திருவுருவம்
மனத்திரையில்
தோன்றும் வேளை@
வெண்ணிலவாய் மாறும்
இடுப்புடைய
இடர்வந்து
நொகுமெந்தன்
மெய்யில்
என் நிழல் பார்க்க
எனக்கேது நேரம்…
இன்னும்
எனக்குள்
உன் வாசனை...
நீயும் நானும்
வெயில் சாய
வீதியில் நடந்தோம்.
கவிதையில்
பகிடி பண்ண
காற்றோடு உன் சிரிப்புதிர
எச்சி முறிகள்
என் முகத்திற்கு
சொந்தமாகும.;
குளிர் காற்றும்
கொழுத்தும் வெயிலும்
கவி சொல்லும்
கனத்த மழையும்
நம் மகிழ்விற்காய்
வசப்படுத்தினோம்
வெள்ளம் வர முன்
வள்ளம் கரை சேரும்;.
வீடு வந்ததும்
உன் தெருவுக்கு
ஓடி வருவேன்.
காற்றில்
கடிப்புதற
சாதாளையோடு
சுங்கான் மீன் கிடந்து
சுள்ளென்று குத்த@
உன் புன்னகையை
ஒரு கணம் நினைத்தால்
விண்ணென்ற நோவெல்லாம்
விரல்களிருந்து
விடுதலையாகும்
அன்றொரு நாள்….
பின்னிரவும்
பேசாமல்
புலர்ந்துபோனது.
உன் வரவிற்காக@
என் உயிர்த்தீ
உருக்குலைந்து
காத்துக்கிடந்தது.
தொடும் தூரம்
நின்ற நீ
இன்று
நெடும் தூரம்
சென்று விட்டாய்
நீ நினைத்தாலே
உன் வேலிச்சிறகு
விரிந்து கொடுக்க
காதல் உட்புகுந்து
உள் சதைவரை பாயும்
நானோ
ஒரு மழையின்
வருகைக்காக@
வெண் பனித் தூறலில்
காத்துக்கிடக்கிறேன்
ஆயினும்
உன் உதடு தந்த
ஈரத்தை
எப்படி உலர வைக்கமுடியும்.



- நாவாந்துறைடானியல்ஜீவா -
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
போரிடும் வீரனை
அழையாது போகிறான்
ஊனமான வீரன் - கங்குமட்டையை ஊன்றிக்கொண்டு.
------


எத்தியோப்பிய பஞ்சத்தைக்
கற்பித்துக்கொண்டிருந்தேன்
பின்வாங்கில் மயங்கி வீழ்ந்தான் - அகதி மாணவன்.
------


எட்டாத இலையைப் பார்த்து
வெட்டப்பட்ட வாழையிலை சிரித்தது
பார்சலோடு களம் போகிறேன் என்று.
-------

கப்டன் மலரவன் என்ற மாவீரனின் கவிதைகள் இவை. முன்பு எப்போது படித்தது. குறித்து வைத்திருந்தேன். நினைவுகள் மீட்டபோது கிடைத்தது. இவரது தாயார்கூட மலரன்னை என்ற பெயரில் எழுதுகின்றவர்.
--
--
Reply
நிலவின் புலம்பல்..!
பாடல், கவிதைகளில் - என்னைப்
பாடாய் படுத்தும் பாவலர்களே!
உங்களுக்குக்
கற்பனை வறண்டு போனால்
கன்னத்தில் எழுதுகோல் வைத்து
அண்ணாந்து பார்க்கின்றீர்..!

சின்ன வெள்ளிப் பந்தாய் நான்
சிரித்தபடி மிதந்து செல்வது
பொறுப்பதில்லை உங்களுக்கு..!

கன்னியரோ..,கழுதைகளோ..
என்னவாயிருந்தாலும்,
‘வெண்ணிலவே!’ என்று நீங்கள்
விளித்து எழுதத் தொடங்கினாலே
வெலவெலத்துப் போகின்றேன்.!

‘ஆஹா.. ஆரம்பிச்சுட்டாங்க’ என
அலறியபடியே நான்
உலக உருண்டையின் நிழலில்
ஒளிந்து கொள்ள ஓடுகிறேன்..!

அப்போதும் சளைக்காமல்
‘பிறை நெற்றி, பிறைச் சிரிப்பு,
பிறைப் புருவம்’ என்றெல்லாம்
துரத்தித் துரத்திப் பிதற்றுகின்றீர்!

முற்றாக மறைந்தும் பார்த்தேன்..,
‘அமாவாசைக் கூந்தல்’ என்று
அளந்து விடுகின்றீர்..! ஹையோ..!!

நிறுத்திக் கொள்வீர் இதோடு என
நினைத்துக் கொண்டு
வெளியில் வந்தால்
‘வளர்பிறையே வா!’ என்று
வாலாட்டத் தொடங்குகிறீர்..!

வான்கலத்தில் வந்து என்
மேல்கால்பதிப்பவர்களை விடவும்,
உங்கள் வார்த்தைகளைக் கண்டுதான்
அலறுகிறேன்.., பதறுகிறேன்..!

அவ்வபோது மேகத்துக்குள்
அவசரமாய் பதுங்குகிறேன்!

மெதுவாக எட்டிப்பார்த்தால்
‘கருங்கூந்தல் சூழ்ந்த அவள்
முகம்போல முகில் கிழிக்கும்
முழுமதியே!’ என்று மீண்டும்
முருங்கைமரம் ஏறுகின்றீர்..!

வேறெதையும் விடவும்- மொழி
பேதமின்றி எல்லோரும்
என்னை மட்டும் பாடி, எழுதி
துவைத்துத் தொங்க விடுகின்றீர்..!

உங்களால்தான் மாதந்தோறும்
ஓடி ஓடிக் களைத்துப் போனேன்!
அங்கங்கே திட்டுத் திட்டாய்
அழகு உடல் கறுத்து போனேன்!!

எனக்காகப் பரிந்து பேசும்
இவனுடைய காதலிக்கு
இளைமைக்கால என்னைப் போல
களங்கமில்லா தெளிந்த முகமாம்!!

அவளுடைய அழகை நான்
பொழுதெல்லாம் பார்க்க வேண்டும்!
என்னைவிட்டு வேறுபக்கம்
எழுதுகோலைத் திருப்புங்கள்!!

நன்றி
- பனசை நடராஜன், சிங்கப்பூர். -
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
<span style='font-size:21pt;line-height:100%'>காதலிக்கிறேன்...!!!
புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!</span>

இந்த கவிதை யாழ் கள நண்பர் நிதர்சன் எழுதியது
Reply
ஆஆஅ நிதர்சன் நல்லாய் தான் காதலிக்கிறியள்.. வாழ்த்துக்கள்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்ன களத்தில் கொஞ்ச நாளா அ, ஆ எழுதி பழகுறீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
எங்கையோ கதைச்சுப்பழகி.. இங்க வந்திடிச்சு.. இனிக்குறைச்சிக்கிறம். :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அவருமா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
tamilini Wrote:எங்கையோ கதைச்சுப்பழகி.. இங்க வந்திடிச்சு.. இனிக்குறைச்சிக்கிறம். :mrgreen: :mrgreen:

எங்க? இல்ல பரவாயில்ல கதைங்க. உங்க இயல்பை ஏன் மாத்துவான்
Reply
Mathan Wrote:என்ன களத்தில் கொஞ்ச நாளா அ, ஆ எழுதி பழகுறீங்க?


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
Mathan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>காதலிக்கிறேன்...!!!
புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!</span>

இந்த கவிதை யாழ் கள நண்பர் நிதர்சன் எழுதியது

மிகவும் அழகான கவி நிதர்சன் அண்ணா...வாழ்த்துக்கள்..என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில கவிகளில் இதுவும் ஒன்று..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
<span style='font-size:25pt;line-height:100%'>சொல்லி விடு...!!!

<img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/vijayq.jpg' border='0' alt='user posted image'>

கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதற்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறுமொழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும் செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது போதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்பனையில் கவியெழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை...... </span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<span style='font-size:20pt;line-height:100%'>பெண்ணின் தவிப்பை சொல்வது போல் நிறைய கவிதைகள் களத்தில் வந்துள்ளது. அதனால் ஆண் தவிப்பை சொல்லும் இந்த கவிதையை இணைந்துள்ளேன். கவிதைக்கும் வரிகளுக்கும் உணர்வுக்கும் சொந்தகாரர் நான் அல்ல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதனை வெளிப்படுத்தியவர் யாழ கள நண்பர் நிதர்சன். ரசித்து அதனை உங்களுக்கு தந்தது மட்டுமே நான் 8)

நிதர்சன் உணர்வுகளை நன்றாக வெளிபடுத்தியிருக்கின்றார். ம் ஆணின் தவிப்பும் நன்றாகதான் இருக்கின்றது. :wink:

நம்மட பசங்களும் பிச்சு உதர்றாங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>பெண்ணின் தவிப்பை சொல்வது போல் நிறைய கவிதைகள் களத்தில் வந்துள்ளது. அதனால் ஆண் தவிப்பை சொல்லும் இந்த கவிதையை இணைந்துள்ளேன். கவிதைக்கும் வரிகளுக்கும் உணர்வுக்கும் சொந்தகாரர் நான் அல்ல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதனை வெளிப்படுத்தியவர் யாழ கள நண்பர் நிதர்சன். ரசித்து அதனை உங்களுக்கு தந்தது மட்டுமே நான் 8)

நிதர்சன் உணர்வுகளை நன்றாக வெளிபடுத்தியிருக்கின்றார். ம் ஆணின் தவிப்பும் நன்றாகதான் இருக்கின்றது. :wink:

நிதர்சன் உடன் களம் வரவும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
</span>


மதன் அண்ணாவின் போக்கே பிழையாக போகுது என்று எங்கேயோ வாசித்த ஞாபகம். அதுதான் நினைத்தேன் மதன் அண்ணா எழுதி இருக்கிறார் என்று. ஆனால் அது நிதர்சன் அண்ணா எழுதினார் என்று போட்டிருக்கு. ம்ம் நன்றிகள் நிதர்சன் அண்ணா. இங்கு போட்டதுக்கு நன்றி மதன் அண்ணா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
என்ன சொல்லிவிடுவை களத்தில சொல்லிவிட நிதர்சனிற்கு என்ன தயக்கம்..?? நல்லாய் இருக்கு சொல்லிவிடு. ரசித்ததோடு மட்டும் நின்றுவிடாது ரசித்ததை நம்முடன் பகிர்ந்த மதனிற்கும் நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இணைக்கும் போது ஏற்பட்ட தவறுகளை சுட்டிகாட்டியவர்களுக்கு நன்றி.

நிதர்சன் உங்களிடம் சொல்லாமல் களத்தில் இணைதமைக்கு மன்னிக்கவும். கள உறுப்பினர்கள் ஊக்கிவித்தால் நிதர்சனின் கவிதையய இனிமேல் நாம் நேரடியாக களத்தில் காணலாம். என்ன நிதர்சன் இணைப்பீர்கள் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)