Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#41
<b>ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய பிராமணிய ஊடகங்களின் திட்டமிட்ட நச்சுப் பிரசாரம்</b>

நியாயப்படுத்தப்பட முடிýயாத நிலைப்பாடுகளும் உண்மைத் தன்மை மீதான இருட்டடிýப்புகளும்

தமிழ் நாட்டுப் பிராமணித்துவம் என்று கூýறும் பொழுது நாம் மதப்பெரியார்களையும், இலக்கியத் துறையில் பற்றுறுதியுள்ள பெரியார்களையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக பிராமணித்துவ ஊடகத்துறையினரையும், பிராமணித்துவ அரசியல் புத்தி ஜீவிகளையும் தான் கூýறுகின்றோம்.

தமிழ் நாட்டிýல் நாலு வீதத்துக்கு குறைவான சனத்தொகையினர்தான் பிராமணித்துவத்தை சேர்ந்தவர்கள். அகில இந்திய ரீதியில் இவர்களுடைய சனத் தொகை 15மூ ஆனால், தமிழ் நாட்டிýல் பிராமண இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறை, உத்தியோகத்துறை, ஊடகத்துறை முதலிய துறைகளில் மிகவும் முன்னேற்றமடைந்த காரணத்தினால் இவர்களை முன்னேற்றமடைந்தவர்களென்று அரசாங்கம் கணித்து விட்டது.

இந்த அடிýப்படையில் தமிழ் நாட்டிýலுள்ள ஊடகங்களில் 95மூக்கு மேற்பட்டவைகளெல்லாம் பிராமணித்துவ ஆதிக்கத்தின் கீழ் தான் இயங்குகின்றன. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, எல்லாம் இவர்களால் இயக்கப்படுகின்றன. சஞ்சிகைகளான புறன்லைன், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், கலைக்கதிர், குமுதம் இவைகளெல்லாம் பிராமண வகுப்பினரால் நடாத்தப்படுகின்றன.

ஆகவே மேலே குறிக்கப்பட்ட பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இலங்கைத் தமிழர் விடயத்தில் சிங்கள கடும் போக்காளர்களிலும் பார்க்க பத்திரிகைகளுடைய நடுநிலைமையை மீறி மிகவும் மோசமான நச்சுத்தன்மையை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் கக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தப் பத்திரிகைகள் பத்திரிகா தர்மத்துக்கு அப்பாற் சென்று எடுக்கும் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடிýயுமா என்று இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழ்மக்கள் மட்டுமல்ல, சர்வதேச தமிழ் மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

<b>கொழும்பு தமிழ் புத்திஜீவிகள், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு நிலை கொண்ட இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகத்தான் தமிழ் நாட்டு ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான கசப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று நம்புகிறார்கள். வேறுசில தமிழ் புத்திஜீவிகள் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்புதான் இந்த நச்சுத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறதென்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டுவித நிலைப்பாடுகளும் உண்மைக்கு புறம்பானவை.</b>

1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்தார். இதன் பிரதிபலிப்பாக ஐக்கிய நாட்டுச் சபையில் பண்டுருட்டிý இராமச்சந்திரனை அனுப்பி இலங்கைக்கெதிராக குரல் கொடுக்கும்படிý ஒழுங்குகள் செய்தார். அமெரிக்காவில் ராமச்சந்திரனை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார். அமிர்தலிங்கத்தை அழைத்து அமெரிக்க ஐரோப்பியநாடுகளுக்கு சென்று தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் இனப்படுகொலை, பாரபட்சம், இனச் சுத்திகரிப்பு, மனித உரிமைகளை மீறியவை பற்றி பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார்.

1983 ஆவணி 15 ஆம் திகதி புதுடிýல்லியில் நடந்த சுதந்திர விழா நிகழ்வில் அமிர்தலிங்கத்துக்கு முன்வரிசையில் இடமும் இலங்கைத் தூதுவருக்கு கடைசி வரிசையில் இடமும் கொடுக்கப்பட்டிýருந்தது. இவற்றையெல்லாம் நன்கு அவதானித்த தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத்துறையினரும் அன்றைய பிராமண வகுப்பைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமனும், இந்திரா காந்தியினுடைய விNர்ட சர்வதேச விவகார புத்திமதியாளரான ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு எதிராக இந்திராகாந்தி நடவடிýக்கை எடுக்கப்போகிறாரென்று பீதியடைந்து, அவ்விதம் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிýக்கை எடுத்தால் மூýன்றாவது உலக யுத்தம் ஏற்படுமென்று வாதாடிýனார்.

1983 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமன் திருச்சினாபள்ளியில் பகிரங்கமாக ஒரு பொதுக் கூýட்டத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராகக் கடும் நடவடிýக்கை எடுத்தால் 3 ஆவது உலகயுத்தம் மூýழும் என்று கூýறியிருந்தது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், 1971 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இந்திராகாந்தி கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கை எடுக்கும்பொழுது மூýன்றாவது உலக யுத்தம் மூýழவில்லை. தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத் துறையினர் இந்திராகாந்தியின் படையெடுப்பை நன்கு வரவேற்றார்கள். ஆனால், மிகச் சிறிய தீவான இலங்கை விடயத்தில் இந்திராகாந்தியின் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டிýனர். இது பிராமணர்களுடைய சுயநலத்தை நன்கு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே பிராமணித்துவ ஊடகத்துறையினர் தமிழருக்கு விரோதமான கொள்கை 1983, 1984 ஆண்டிýலே அனுர்;டிýக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு ஆடிý மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அன்றைய தினம் ராஜீவ் காந்திக்கு இராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு சிங்கள கடற்படை சிப்பாய் ராஜீவ் காந்தியை அடிýத்து கொலைசெய்ய எத்தனித்தார். சட்டத்தில் கொலை செய்ததற்கும், கொலை செய்ய எத்தனித்ததற்கும் வித்தியாசம் அதிகமில்லை. இந்த நிகழ்வு பற்றி பிராமணித்துவ ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால், 1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொலை நடந்தது. 13 வருடங்கள் சென்ற பின்பும் பிராமணித்துவ ஊடகத்துறையினர் சகல தேர்தல்களிலும் இதையே சுட்டிýக்காட்டுகின்றனர். இவ்விதமாகன பாரபட்சமான நிலைப்பாட்டை எவ்விதம் நியாயப்படுத்த முடிýயும்.

1984 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தமிழ் நாட்டிýலுள்ள பிராமணித்துவ புத்திஜீவிகள் இலங்கை அரசியல் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்ததால் சகல பிராமணித்துவ புத்தி ஜீவிகளும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிýகள் தானே என்று நகைப்புடன் கூýறினார்கள். நாம் அதற்கு மறுதலித்து இமயமலை தோன்ற முதல், இந்து சமுத்திரம் தோன்றமுதல், கங்கை நதி உண்டாக முதல் பிராமணித்துவம் நான்கு வேதங்களாகிய நிக் தேவம், சாம வேதம், யதுர் வேதம், அதர்ம வேதம் உலகத்துக்கு தெரியமுதல் ஈழமுரியா என்ற கண்டத்தில் தமிழர் 55 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்களென்று ரர்;ய புவியில் ஆராச்சியாளருடைய நிலைப்பாடு என்று வாதாடிýனோம். இந்த வாதத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடிýயவில்லை.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படிý விடுதலைப் புலிகளுடைய தளபதிகள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கு சிறு ஆயுதங்களை வைத்திருக்கலாமென்று ஒரு சரத்திருக்கின்றது. அந்த சரத்தின்படிýதான் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் சிறு ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இந்த விதிமுறைகளை அறியாத இலங்கை கடற்படையினர் 17 விடுதலைப் புலிகளை கைது செய்த காரணத்தினால் பலாலியில் இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை ராஜீவ் காந்திக்கு தெரியப்படுத்தப்பட, அவர் அரசியல் குழந்தையான படிýயினால் அவர் கைது செய்யப்பட்டவர்களை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படிý உத்தரவிட்டார். இதனுடைய பிரதிபலிப்பாகத்தான் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும்மிடையில் யுத்தம் ஏற்பட்டு இன்றுவரை இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமிடையில் மிக மோசமான கசப்புணர்வு இருக்கின்றது.

ஆகவே, தமிழ் நாட்டு பிராமணத்துவ ஊடகங்கள் யுத்தத்துக்கு உண்மையான காரணங்களை இருட்டடிýப்புச் செய்தும், சமாதானத்தை நிலை நிறுத்தச் சென்ற இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகள் கொல்லுகின்றார்கள் என்று உண்மைக்கு முரண்பாடான கதையை கூýறிவிட்டார்கள்.

<b>ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் இந்திய இராணுவத்தினர் வட கிழக்கில் செய்த மிக மோசமான அட்டூýழியங்களை என்ன காரணத்துக்காக பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்த தென்ற கேள்வி எழுகின்றது. இன்றுவரை தமிழ் நாட்டுப் பொதுமக்கள் இந்திய இராணுவத்தால் செய்யப்பட்ட நாகரிகமற்ற கொடூýரங்களை இன்றும் அறியவில்லை. அவர்கள் நிலை கொண்ட காலம் இரண்டரை வருடம். இந்த இரண்டரை வருடகாலத்தில் 750 க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டார்கள் யாழ். குடாநாட்டிýல் மட்டும் எத்தனையோ கோடிý பெறுமதியான தங்க நகைகள் பகற் கொள்ளை அடிýக்கப்பட்டன. இதனால், அநேக உயர் இந்திய இராணுவ அதிகாரிகள் கொள்ளையடிýத்த தங்கநகைகள் சென்னை சுங்க அதிகாரிகளால் பிடிýபட்டன. ஆறாயிரத்து எழுநூறுக்குமேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்துக் கோவில்களுக்குள் சப்பாத்துக்களுடன் இந்திய இராணுவத்தினர் ஆதி மூýலம் வரை சென்று விடுதலைப் புலிகளைத் தேடிýனர். ஒரு சீக்கிய கோயிலை அவமதித்ததென்ற குற்றத்திற்காக பிரதம மந்திரியாகிய இந்திராகாந்தியை சீக்கியர்கள் பட்டப்பகலில் கொன்றார்கள். ஆனால், இலங்கையின் வட கிழக்கில் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இந்திய இராணுவத்தினர் அவமதித்தனர். இந்த பாரிய குற்றத்துக்கு அரசியல் ரீதியாகவும் இராணு ரீதியாகவும் யார் பொறுப்பேற்க வேண்டுமென்று கேள்வி எழுகின்றது.</b>

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய இராணுவத்தை தலைமை தாங்கியவர் கர்;திய வகுப்பை சேர்ந்தவரல்லர். ஆனால் தமிழ் நாட்டு பிராமண வகுப்பை சேர்ந்தவர் தான். அவர் பெயர் ஜெனரல் சுந்தர் ஜி. இதிலும் விட மோசமான விடயம் யாதெனில் 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடுப்பகுதியில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குள் சட்ட விரோதமாக புகுந்து விடுதலைப் புலிகள் அங்கே இருப்பார்கள் என்று எண்ணி நோயாளர், பெண் தாதிமார்கள், வைத்தியர்கள் என எல்லோரையும் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடிýய குற்றத்துக்கு ராஜீவ் காந்தியும் ஜெனரல் சுந்தர் ஜீயும் தார்மீகப் பொறுப்பெடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அரியலூர் இரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று அன்றைய போக்குவரத்து மந்திரியான லால் பகதூர் சாஸ்திரி தன்பதவியை ராஜினாமாச் செய்தார். இப்படிýயான மிக மோசமான விடயங்கள் எல்லாவற்றையும் தமிழ் நாட்டு தமிழ் மக்கள் அறியப்படலாகாதென்ற உள்நோக்கத்துடன் இந்த துன்பகரமான விவகாரங்களையெல்லாம் பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்பு செய்து விட்டன.

1995 ஆம் ஆண்டு இலங்கையின் சிங்களப் படையின் ஆக்கிரமிப்புக்காரணமாக ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் நடையாக வன்னிக்குச் சென்று மரங்களுக்குக் கீழ் வாழ்ந்தனர். இதை அறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பூற்றஸ் பூற்றஸ் காலி இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டவேண்டுமென்று சர்வதேச சமுதாயத்தை உருக்கமாக வேண்டிýனார். இந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உருக்கமான வேண்டுதலையும் மனித நேயமென்றால் என்ன என்ற அர்த்தம் தெரியாத பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்தன. விடுதலைப் புலிகளையும், அவர்களை ஆதரிக்கின்ற தமிழ் மக்களையும் பூண்டோடு அழிக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நிலைப்பாடு என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது. விடுதலைப் புலிகள் இந்திய மக்களுடன் பூமிசாஸ்திரம், சரித்திரம், மொழி, இனம், மதம், கலாசாரம் என்ற ஆறு விதமான துறைகளில் பின்னிப் போயிருக்கின்றார்கள். அப்படிýயான உறவுகளை ஊடறுத்தும் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் அழிக்க வேண்டுமென்று பிராமணித்துவ ஊடகங்கள் செயற்படுகின்றன.

விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை வெளிக்காட்டாமல் சிங்கள இராணுவம் அடைந்த வெற்றிகளை பெரிதுபடுத்துவது இவர்களின் மரபு. கருணா விடயத்தில் இவர்களுடைய நிலைப்பாடு உலகத்துக்கு நன்கு தெரிந்து விட்டது, விடுதலைப் புலிகள் நீதியான, நேர்மையான அரசியல் தீர்வுக்குகந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதை நன்கு பரிசீலிக்காமல் அவை இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற பொய்ச் சாட்டைச் சொல்லி நிராகரிப்பது அவர்களது வழக்கம்.

விடுதலைப் புலிகளின் அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டால் அதனுடைய தாக்கம் தமிழ் நாட்டிýல் நன்குவேர் ஊன்றிவிடும் என்றும் தமிழ் நாட்டிýல் விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்பவர்களான வை.கோபாலசாமியும், பழநெடுமாறனும் விடுதலைப் புலிகளுடைய அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டவுடன் அதனுடைய தாக்கங்கள் தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்கள் மத்தியில் கூýறி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பாக அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிý அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் பிராமணித்துவத்துக்கு அது ஒரு விரும்பத்தகாத அரசியல் நிலைப்பாடுகளாகவே தோன்றக்கூýடும். இதை ஜீரணிக்க முடிýயாத காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிýல் பிராமணித்துவ ஊடகத்துறையினர் செயல்படுகின்றார்கள்.

நன்றி: தினக்குரல் (27.04.2004)
Reply
#42
அன்பகம், இந்த கட்டுரையை ஏற்கனவே அஜீவன் போட்டிருந்தார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#43
பின்தான் பார்த்தேன் இருந்தபோதும் (வெ வ்வேறு இடங்களில் ஒரே செய்தி இருந்தாலும்)தேவையான இடங்களில் தேவையான செய்திகள் சேர்பதில் அப்பகுதி வலுவடையும் வாசகரோ தேவையானவர்களுக்கோ பிரியோசனமாகலாம்.... நன்றி
Reply
#44
கடற்கோளுக்குப் பின்னரான நிவாரணப் பணிகளில் இந்தியா காணும் இராஜதந்திர மேம்பாடு

சைமன் டெனியர்
பிராந்திய வல்லரசுக்குரிய பொறுப்புகளைஏற்று அயல்நாடுகளுக்குஅவசர உதவி தரவா என்று கேட்ட புஷ்ஷுக்கு

ஹநன்றி' வேண்டாம்' என்று சொன்ன மன்மோகன் சிங கடற்கோள் தாக்கிய சில மணித்தியாலயங்களுக்குள்ளாகவே இந்தியா முன்னென்றும் இல்லாத வகையிலான மிகப் பெரிய நிவாரண நடவடிக்கைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டது- படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனது கரையோரங்களுடன் மாத்திரம் இந்தியா இந்த நிவாரண நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.

தனது கிழக்குக் கரையோரமாக நிவாரணப் பணிகளை ஆரம்பித்த அதேவேளைஇ இந்தியா ஹெலிகொப்டர்கள்இ விமானங்கள் சகிதம் 10 போர்க் கப்பல்களில் நிவாரண விநியோகங்களை ஏற்றிக் கொண்டு இலங்கைஇ இந்தோனேசியாஇ மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் உதவிக்கு விரைந்தது. உலகில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை அனர்த்தம் என்று வர்ணிக்கப்படும் கடந்த மாதத்தைய கடற்கோளினால் இந்தியாவின் இந்த மூன்று அயல்நாடுகளும் பேரிடருக்குள்ளாகியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பு நாடு ஆகுவதற்கு ஆதரவைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்தியா கடற்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள அநாதரவான நிலையில் உள்ள நாடு என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்கு மறுத்திருக்கிறது.

இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசு என்று உலகுக்குக் காண்பிக்க முயற்சி செய்து கொண்டுள்ளது. ஏனைய நாடுகள் உதவி கோரும் பட்சத்தில் விரைந்து செல்லும் ஆற்றலுடைய நம்பகத்தன்மையான சக்திமிக்க நாடு என்று தன்னை இந்தியா காட்டியிருக்கிறது என்று பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் உதய் பாஸ்கர் கூறியிருக்கிறார். ஹஅயல்' நாடுகளுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கு கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பியதன் மூலம் தான் ஒரு பிராந்திய வல்லரசு என்பதையும் நம்பகமான சக்திமிகு நாடு என்பதையும் நிரூபிக்கும் குறிக்கோளை இந்தியா அடைந்திருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த பண்புடன் ஹஉதவிக்கு வரவா என்று கேட்டதற்கு நன்றி. ஆனால்இ உதவி வேண்டாம்' என்று கூறி விட்டார். அமெரிக்க உதவி இந்தியாவுக்குத் தேவையில்லை. அதேபோன்றே வேறு நாடுகளின் அரசாங்கங்களும் உதவிதர முன்வந்தபோது அதே பதிலையே இந்தியா கண்ணியத்துடன் அளித்தது.

நிவாரண உதவியாகவும்இ பணமாகவும் இலங்கைக்கு இந்தியா 2கோடி 30 இலட்சம் டொலர்களை வழங்கியது. மாலைதீவுக்கும் உதவியிருக்கிறது. கடற்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிடும்போது தனவந்த நாடாகத் தென்படும் தாய்லாந்துக்கும் இந்தியா 5 இலட்சம் டொலர்கள் வழங்கியிருக்கிறது.

படுபயங்கரமான இந்தப் பேரனர்த்தத்தில் மனிதாபிமான உதவிகள் கோரப்பட்டபோது உடனடியாக விரைந்தமைக்காக பாஸ்கர் போன்ற இந்திய அவதானிகள் தங்களின் அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

உதவி கோரப்பட்டபோது துரிதமாகவே இந்தியா செயற்பட்டதற்கு முக்கியமான காரணம் இலங்கை போன்ற அயல்நாடுகளுடன் மிகவும் உறுதியான நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டுமென்ற அக்கறை என்று உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட அந்த நாட்டின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பிராந்தியத்தில் இந்தியாவுடன் போட்டியில் இறங்கியிருக்கும் நாடுகள் விரைந்தோடிச் செல்வதற்கு முன்னதாக இந்தியா சென்று உதவியமை அதன் அக்கறையை மேலும் வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

ஹகுறிப்பிடத்தக்க அளவில் பாகிஸ்தான்இ இந்த விவகாரங்களுக்குள் பிரவேசிப்பதை உண்மையில் நாம் விரும்பவில்லை' என்று இந்திய சிரேஷ்ட அதிகாரியொருவர் சொன்னார்.

இந்தியக் கடற்படை உபகரணங்கள்இ மருந்துவகைகள்இ உணவு வகைகள் மற்றும் கூடாரங்களை கப்பல்களில் ஏற்றி அயல் நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. படையணியும் ரோந்துப் படகுகளும் ஆஸ்பத்திரிக் கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன. அதேவேளைஇ விமானப்படை கள் ஆஸ்பத்திரிகள் இராணுவ மருத்துவக் குழுக்கள் மற்றும் கடற்படைச் சுழியோடிகளையும் அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தியா அதன் கிழக்குக் கரையோரத்திலும் பாரிய நிவாரணப் பணிகளில் இறங்கியிருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து உதவிகளைக் கோருவது இந்தியாவுக்குப் பெருமை தரும் விடயமல்ல.

இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் டிசம்பர் 26 இல் ஏற்பட்ட கடற்கோளினால் இந்தியாவில் சுமார் 14500 பேர் பலியாகியிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வெளியான உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு இந்தியா வெளிக்காட்டிய பிரதிபலிப்பு மிகுந்த எச்சரிக்கையுடனானதாக இருந்ததாக சில உதவிப் பணியாளர்களும் இராஜதந்திரிகளும் கூறுகிறார்கள்.

கேந்திர-இராணுவ முக்கியத்துவமுடைய நிக்கோபார் தீவுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. உயிர் தப்பியிருப்பவர்களுக்கும் உதவிகள் மிகவும் தாமதித்தே சென்றடைகின்றன. அந்தத் தீவுகளின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கு போதியளவில் அனுமதிக்கப்படுவதாக இல்லையென்று வெளிநாட்டு மற்றும் இந்திய உதவிப் பணியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியக் கரையோரத்தில் இருந்து 1200 கிலோமீற்றர்கள் தொலைவில் மியான்மாருக்கு நெருக்கமாக இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான நிவாரணப் பணிகளை இந்திய இராணுவம் முன்னெடுத்திருக்கிறது. ஆனால்இ பெரும் எண்ணிக்கையில் ஹெலிகொப்டர்கள் செல்வதாக இல்லை. சில சிவிலியன் நிபுணர்களே அங்கு செல்லக் கூடியதாகவும் இருக்கிறது.

கடற்கோள் தாக்கிய ஒரு சில நாட்களுக்குள்ளாக அமெரிக்கா இந்தியா அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிவாரணப் பணி ஒருங்கிணைப்புக் கூட்டணியை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அமைத்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பிராந்தியத்துக்குள்ளும்இ அமெரிக்காவுடனும் நெருக்கமாக ஒத்துழைப்பதை நோக்கிய நகர்வாக அமைகிறது என்று வெளிவிவகார நிபுணர் சி.ராஜாமோகன் கூறுகிறார்.

ஒரு கூட்டு பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் பெரிய வல்லரசு ஒன்றுடன் இந்தியா சேர்ந்து பணியாற்றுவது இதுவே முதற்தடவையாகும். கூடுதலான அளவுக்கு பிராந்தியப் பொறுப்பொன்றை ஏற்பதற்கு இந்தியா முன்வருவதை நாம் காண்கிறோம். மற்றவர்களை வெளியில் வைத்துக்கொண்டு இதைச் செய்வதற்கு இந்தியா முயற்சிக்கவுமில்லை என்றும் ராஜா மேகன் கூறினார்.

- ராய்ட்டர் புதுடில்லி
நன்றி: தினக்குரல்
Reply
#45
இந்திய அரசின் இலங்கை வெளிவிவகாரக் கொள்கை
மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்
-அ. பரராஜசிங்கம் (அவுஸ்திரேலியா)-


பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கைத் தீவின் தேசிய இனங்களுக்கிடையே உள்ள முரண்பாட்டில் அக்கறை காட்டுவதும் அது எவ்வாறு தீர்க்கவேண்டும் என்பதில் தொடர்ந்து கவனமாயிருப்பதும் இயல்பே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ää தமிழர் ஒரு போதும் வெளிநாட்டு நலன்களுக்கு எதிராக இயங்கமாட்டார்கள் என்று கூறியபோது இந்திய அரசின் நலனையே பிரதானமாகக் கருத்தில் கொண்டு இக்கருத்தை வெளியிட்டார் என்பதையும் நாம் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இக்கட்டுரை பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கையைப் பொறுத்த வரை தனது வெளிவிவகாரக் கொள்கையை மீள்பரிசீலிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

வெளிவிவகாரக் கொள்கைகள் காலத்துக்குக் காலம் மீள்பரிசீலிக்கப்படுவது என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. இப்படி தொடர்ந்து பரிசீலிக்கப்படுவதன் மூலமாகவே தேசத்தின் நலன்களை எல்லாச் சமயங்களிலும் பேணப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் தேசநலன்களைப் பாதுகாத்த வெளிவிவகாரக் கொள்கைää காலத்தின் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அமுல் படுத்தப்பட்டால் அது தேச நலன்களுக்கு எதிரான விளைவுகளைக்கூடக் கொண்டுவரலாம்.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளும் இவ்வாறான மறுபரிசீலனைகளுக்குள் பல சமயங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. ஆனால் அவை யதார்த்த நிலைப்பாட்டை பிரதிபலிக்காத சமயங்களில் தோல்வியடைந்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.

அப்படிப்பட்ட வெளிவிவகாரக் கொள்கைத் தோல்வியை ராஜீவ் காந்தி இந்திய இராணுவத்தை இலங்கைத் தீவினில் இறக்கியபோது சந்திக்க நேர்ந்தது.

இந்த துர்ப்பாக்கியமான தவறான கொள்கையின் நேரடி விளைவாக 8000க்கு மேற்ட்ட ஈழத்தமிழர்களின் உயிர்களும் 1ää000க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரின் உயிர்களும் பலியாகின.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராகப் பணிபுரிந்த மறைந்த டிக்சிற் இத் தோல்விக்கான காரணங்களைப் பற்றிய தனது கணிப்புகளை Assignment Colombo என்ற புத்தகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு வெளியுட்டுள்ளார்.

இந்தியாவின் இராணுவ பிரவேசிப்பு ஒரு தோல்வி என்பதை ஒப்புக்கொண்ட டிக்சிற் தனது கருத்துக்களுக்கான காரணங்களை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்:

- ஜே.ஆர். ஜயவர்தனாவின் மனதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற தனது பிழையான எதிர்பார்ப்பு

- தமிழரின் 'நியாயத்தன்மை குறைவு"

- தமிழரையும் புலிகளையும் பிரிக்கலாம் என்ற கருத்தில் உள்ளடங்கிய தவறுதலான கணிப்பு

- இலங்கை அரசின் மிகக்குறுகிய தங்களை மாத்திரமே மையப்படுத்தி இயங்கும் தன்மை -Xenophic mindset

ஆனால் ஒட்டுமொத்தமாக கூறப்போனால்ää டிக்சிற் இத்தோல்வியின் அடிப்படைக் காரணத்தை அடையாளம் காணவில்லை என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் இதே விடயத்தைப் பற்றி Indias Sri Lanka Fiasco என்ற புத்தகத்தை எழுதிய காடியன் என்பவர் அடிப்படைக் காரணத்தை ஓரளவு அடையாளம் கண்டுள்ளார். இவரின் கண்ணோட்டத்தின் படி புலிகளை சேர்த்துக்கொண்டு போகாத இந்திய-இலங்கை ஒப்பந்தமே இத்தோல்விக்குக் காரணம். மேலும் இந்தியாவின் இந்த ஒருதலைப்பட்சமான (சிங்கள அரசின் சார்பில்) ஈடுபாட்டின் மூலம் இந்தியா இலங்கை அலுவலில் தனது செல்வாக்கைக் கணிசமான அளவிற்கு இழந்து விட்டது என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

சங்கரன் கிருஸ்ணா என்ற பேராசிரியர் (இவர் ஹவாய் பல்கலைக்கழகத்தினக அரசியற்துறைப் பகுதியின் தலைவர்) Indias Role in Sri Lankas Conflict என்ற நூலில் 1990களில் இருந்து இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கையின் 'ஒற்றுமையும் பிரதேச ஒருமைப்பட்டையும்" நிலைநிறுத்துவது என்ற அடிப்படையில்தான் இயங்கி வந்துள்ளது மாத்திரமல்ல அதை வெளிப்படையாகவும் கூறிவந்துள்ளார்கள் என்றதை எடுத்துக்காட்டியுள்ளார்.

இதேவேளையில் அடிக்கடி தமிழரின் அபிலாசைகளைப் பூர்த்தி பண்ணக்கூடிய தீர்வை விரும்புவதாகவும் இந்திய அரசு கூறிவந்துள்ளது. ஆனால் அந்த அபிலாசைகள் என்ன என்பதைப்பற்றி விவரிப்பதாகவோ ஆராய்வதாகவோ இல்லை.

எனவே இந்திய அரசின் இந்நிலைப்பாடு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு வெறும் வாய்ப்பேச்சளவில் மதிப்புக் கொடுக்கும் ஒரு செய்கை என்றே கருதவேண்டும்.

என்ன கூறினாலும் இவ்வுணர்வுகளைப் பாவித்துத்தான் இந்திய அரசு தனது வெளிவிவகாரக் கொள்கையை வகுத்து இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் தமிழர் பிரச்சினையில் தமக்கும் கரிசனை இருப்பதாக கூறி ஜே.ஆர். ஜயவர்தனாவினை அடக்க முயன்றது. இது ஒரு சரித்திரபூர்வமான உண்மை.

ஜே.ஆர். ஜயவர்தனாவின் தலைமையின் கீழ் இலங்கை அரசு சீனா பாகிஸ்தான் மேற்குலகு ஆகியற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிராந்திய வல்லரசான இந்தியாவை புறக்கணிக்கும் வண்ணம் நடந்த விதமே இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்தது.

1980களில் இருந்தே ஜே.ஆர். ஜயவர்தன பல காரியங்களில் இந்திய அரசை புறக்கணிக்கும் பாணியில் மாத்திரமல்ல இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலைப்பாட்டை மதிக்காதும் நடந்து கொண்டார்.

இதற்கு உதாரணமாக பின்வரும் அலுவல்களில் இலங்கை அரசு இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நடந்த விதங்களை சங்கரன் கிருஸ்ணா தனது புத்தகத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்:

- சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு

- இந்து சமுத்திரத்தை ஒரு சமாதன பிரதேசமாகப் பிரகடனம் செய்தல்

- Voice of America விற்கு ஒலிபரப்பு உரிமைகளை வழங்குவது

- திருகோணமலை துறைமுகத்தின் பாவிப்பு

இப்படிப் பார்க்கையில்ää இந்திய அரசு தமிழ் விடுதலைக் குழுக்களுக்கு ஆயதப்பயிற்சி கொடுத்தது தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல ஆனால் தனது இராஜதந்திர அழுத்தங்களுக்கு உதவியாக இராணுவ அழுத்தங்களையும் இலங்கை அரசு மீது கொண்டுவரவே என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இந்திய அரசின் இக்கொள்கை கொழும்பை புதுடில்லியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஆனால் ராஜீவ் காந்தி இதைப் பாவித்து தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகள் ஆக்க முயற்சித்த போது தான் இக்கொள்கை பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

தமிழ்த் தேசியத்தின் யதார்த்த நிலைப்பாட்டையோää பலத்தையோ அறியாமல்ää ஒரு சிலரின் வழிகாட்டலில் ராஜீவ் காந்தி இந்த பிரவேசத்தை மேற்கொண்டு தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான விடுதலைப்புலிகளை அழிக்க முயன்றதே இந்தப் பெரும் தோல்விக்குக் காரணம்.

நடேசன் சத்தியேந்திரா என்ற ஈழத்தமிழர் The Tamil National Question and the Indo Sri Lanka Peace Accord என்ற நூலில் இந்த தோல்வியின் காரணம்ää 'தமிழ் தேசியத்தினை ஏற்கமுடியாத ஒரு நிலைப்பாடே" என்று கூறியுள்ளார்.

சுமந்திரா போஸ் என்ற எழுத்தாளர் States, Nations, Sovereignty, Sri Lanka, India and the Tamil Eelam Movement என்ற நூலில் தமிழ் தேசியத்தின் அரசியல் சக்தியையும் அத்தேசியத்திற்கு தமிழ் மக்களிடையே உள்ள ஆதரவையும் இந்திய அரசு புரியவில்லை என்று கூறிää இந்திய ஆக்கிரமிப்பிற்குள் ஈழத்தமிழர் பட்ட கசப்பான அநுபவங்கள் இலங்கை அரசின் பயங்கரவாதத்தால் உருவாகிய தமிழ்த்தேசியத்தை மேலும் வலுப்பெறப்பண்ணிவிட்டது என்று முடிக்கின்றார்.

தமிழ் தேசியத்தை கருத்தில் கொள்ளாமல் இலங்கையின் 'ஒற்றுமையும் பிரதேச ஒருமைப்பாட்டையும்" வலியுறுத்திவரும் இந்திய அரசின் தற்போதைய கொள்கைக்கும் இலங்கைத்தீவில் சிங்கள அரசின் சார்பில் பிரவேசித்ததிற்குக் காரணமாக இருந்த கொள்கைக்கும் பெரும் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைத் தீவில் இந்தக் காலகட்டங்களில் நடந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தமது வெளிவிவகாரக் கொள்கைகளை மறுபரிசீலிக்க வேண்டும்.

அப்படிச் செய்கையில் தமிழ்த் தேசியம் இன்று ஒரு பெரும் சக்தியாக வளர்ந்துள்ளதை உள்வாங்குவதுடன் தற்போது தமிழர்கள் இலங்கை அரசுக்குச் சமனான இராணுவ பலத்துடன் இருக்கிறார்ககள் தமிழ்ப் பிரதேசத்தின் கணிசமான பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் அப்பிரதேசத்தை ஆளும் வல்லமையும் உள்ளவர்கள் என்ற உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்று இலங்கைத்தீவில் இரண்டு அரசியல் சக்திகள் இயங்குகின்றன. அதாவது தெற்கில் கொழும்பு வடக்கில் கிளிநொச்சி.

இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கையானது எவ்வாறு இவ்விரு சக்திகளுக்கும் இடையில் எற்படும் தீர்வு இவ்விரு சக்திகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே சமயத்தில் இந்திய நலன்களையும் பேணத்தக்கதாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எற்கனவே அறிவித்துவிட்டார்.
நன்றி:தமிழ்நாதம்
Reply
#46
[b] பலவீனமான இந்தியாவின் இராஜதந்திரம்.

உலகில் தற்போது அதிகம் மலினப்படுத்தப்பட்டும் அதிகம் துஸ்பிரயோகம் செய்கின்ற ஒரு சொல் எது என்றால் அது மனிதாபிமானம் தான். அதிலும் குறிப்பாக சுனாமி அரசியலின் மிகவும் அருவருப்பான ஒரு அம்சமே இந்த சு10து மனிதாபிமானம். 1987 ஒப்பரேசன் பூமாலையென்று உதவிப் பொருட்களைப் போட்டபோதும் அதே மனிதாபிமான உதவியென்று சொல்லித்தான் நியாயப்படுத்தியது இந்தியா. இப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள பேரரசுகள் மனிதாபிமானம் என்ற பெயரில் இலங்கைத் தீவில் தமது துருப்புகளை இறக்கியது. எனவே மனிதாபிமானம் என்ற போர்வைக்குள் நிகழும் துருப்புகளை நகர்த்தும் அரசியலை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. இந்தியப் பிராந்தியத்தின் வெளியிலுள்ள நாடுகளின் பிரசன்னம் என்பது இந்தியாவிற்கு விருப்பம் இல்லாத ஒன்று என்பது சம்மந்தப்பட்ட நாடுகளுக்குத் தெரியும்.

இது விடயத்தில் எரிச்சல் அடைந்திருக்கும் இந்தியா மேலும் எரிச்சல் அடையக்கூடாது என்று விரும்பி இருந்தாலும் கோபி அனானின் வன்னி விஜயத்தை ஊக்குவிக்காமல் விட்டிருக்கலாம்.

அதாவது கோபி அனான் வன்னிக்கு வந்திருந்தால் அது புலிகளையும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் ஜக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து விட்டதாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கும்.

இப்படி ஜக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டால் அதனால் இந்தியா மேலும் சீண்டப்படலாம் என்று ஜக்கிய நாடுகள் சபையின் பின்னாலிருந்து இயங்கும் நாடுகள் சிந்தித்துக் கோபி அனானின் விஜயத்தைத் தவிர்க்க அவர்கள் விரும்பியிருக்கலாம்.
:roll: :x

நன்றி ஈழநாதம் நிலாந்தன்.
நிதர்சனத்தில் இருந்து
Reply
#47
[b]இலங்கைத் தீவகத்தில் அந்நியப் படைகள்: இனியேனும் மாறுமா இந்திய வெளியுறவுக் கொள்கை?

-சேரமான்-
கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையால் இலங்கைத் தீவகத்தில் உள்ள தமிழீழத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் உறவுகளை இழந்திருக்கிறோம். அதே எண்ணிக்கையில் இருக்கிறது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும்! போரினால் தமிழர்கள் எதிர்கொண்ட இடப்பெயர்வைக் காட்டிலும் இப்போது மிகுதியாக இருக்கிறது. லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஏதிலியர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னெடுப்புகளாலும் புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளின் உயரிய நிதி மற்றும் வாழ்வாதார பொருள்கள் அளிப்பினாலும் மீள்குடியேற்றப் பணிகள் விரைந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சிறீலங்கா அரசின் எவ்வித ஒத்துழைப்பும் இன்றி. இந்த சவால்களை தமிழீழத் தமிழர்கள்ää தமிழீழ நிர்வாகத்தை நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் எதிர்கொண்டு இருக்கும் அசாதாரணமான சூழலில் அச்;சமூட்டும் வகையில் அந்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

சர்வதேச நாடுகளிடமிருந்து மீட்புப் பணிகளுக்காக என கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை சிறீலங்காவின் துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளன அல்லது வந்திறங்கக் கூடுமாம்.

அமெரிக்காவின் ய10.எஸ்.எஸ்.ரிமோர் என்ற யுத்த கப்பல் இந்த வார இறுதியில் சிறீலங்காவை வந்தடையும். 1987 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல் 186 மீற்றர் நீளமானது விமானங்கள் தரையிறங்கக்கூடிய இரண்டு இறங்கு தளங்கள் உள்ளன. இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இந்த கப்பலில் 20 உலங்குவானூர்த்திகள் மற்றும் கனரக வாகனங்கள் எடுத்துவரப்படும். இரண்டு 20 எம்.எம்வி. ரக சுடுகலன்கள் மற்றும் 25 எம்.எம் பீரங்கிகள் இரண்டு 50 கலிபர் தானியங்கி சுடுகலன்கள் ஆறு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு என்பன இதில் பொருத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள பிளக் ஹொக் வகை உலங்குவானூர்திகள் சிறீலங்காவின் கட்டுநாயக்க விமானப் பகுதியில் சோதனை முறையில் பறந்தன.

சிறீலங்காவின் மீட்பு பணிகளுக்கு 1500 அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யும் என்கிறார் அமெரிக்க முன்னாள் அமைச்;சர் காலின் பவெல்.

இந்தியாவின் 32 கடற்படை கலன்கள் இலங்கைத் தீவக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தன் 400 படையினருடன் கப்பல் ஒன்றையும் இலங்கைத் தீவுக்கு அனுப்பியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தின் ஏழை நாடாக கருதப்படும் வங்கதேசம் தனது பங்கிற்கு கப்பல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

பிரான்சு உலங்குவானூர்திகளையும் ஜெர்மனி ஒரு விமானம் தாங்கி கப்பல் மற்றும் 14 சி-130 ரகவிமானங்களை அனுப்பியுள்ளது.

ரசியாவின் மூன்று ஐ.-76 ரக போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜப்பானிய கப்பல் ஒன்று என்பன இந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்.

இவையெல்லாம் மீட்புப் பணிகளுக்குத்தான் என்று சத்தியம் அடித்துச்; சொல்கின்றன இந்த நாடுகளும் இவர்களை வரவழைத்த சிறீலங்காவும்.

அண்ணன் எப்ப சாவான். திண்ணை எப்ப கிடைக்கும் என்கிற வகையில் இவர்கள் இலவுகாத்த கிளிபோல்தான் இருந்திருக்கிறார்கள் என்பதையே இந்த பாரிய படைகுவிப்பு காட்டுகிறது. அதை பின்னர் பார்ப்போம்.

இந்த பாரிய படைகுவிப்புக்கு சிறீலங்கா அரசு அழைப்புவிடுக்க காரணம் என்ன? காரணம் இல்லாமலா சிங்கள அரசு வரவழைத்திருக்கும்.

ஆழிப்பேரலையினால் சிறீலங்காவில் சிங்கள மக்கள் 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதே எண்ணிக்கையில் சிறீலங்காவின் இராணுவத்தினரும் உயிரிழந்துவிட்டனர் என்று சிங்கள ஊடகங்களே சுட்டிக்காட்டுகின்றன.

சிங்களää தமிழ் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாகவும் மறைமுகமாகவும் சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து தெரிவித்துள்ள தகவல்கள் இவை:

கடல் கொந்தளிப்பு காரணமாக சிறிலங்கா கடற்படையின் 6 கடற்படைத் தளங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனைத் தவிர தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10ற்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா கடற்படையின் காலிää மாத்தறைää தங்காலைää திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்;சகம் அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவித்தலின் படி 23-2வது படைப் பிரிவு தலைமையகம் (கல்குடா) நாகர்கோவில் பருத்தித்துறை மணல்காடு மாங்கேணி காயாங்கேணி கிண்ணியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிங்கள இராணுவ முகாம்கள் கடலில் அடித்துச்; செல்லப்பட்டு தரை மட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23-2 வது படைப் பிரிவில் கட்டளை அதிகாரி டபிள்ய10.எம்.எஸ்.குணரத்ன உட்பட 32 இராணுவ வீரர்கள் ஒட்டுமொத்தமாகவே உயிரிழந்துள்ளனர்.

சிறீலங்காவின் காலேத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையின் பராக்கிரமபாகு யுத்த கப்பல் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த கப்பல்தான் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று சிங்களக் கடற்படைக் கப்பல்களும் வேறு கலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் வட-கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதுகுறித்த விபரங்களை படைத்தரப்பு வெளியிடுவதை முற்றாகத் தவிர்த்துள்ளது.

யாழ் பகுதியில் சிங்கள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காங்கேசன்துறைää காரைநகர்த் தளங்கள் பாரிய சேதம் அடைந்திருப்பதாகவும் பல கலங்கள் கடல் நீரினால் அடித்துச்; செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி அவர்களின் 51-1ம் 51-4ம் 51-5ம் பிரிகேட்டுகளிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டன.

நாகர்கோவில்ää மணல்காடுää பருத்தித்துறைää தொண்டமனாறுää வல்வெட்டித்துறைää காங்கேசன்துறைää மாதகல் உட்பட 8 இராணுவ முகாம்கள் யாழ் குடாநாட்டில் முற்றாக கடலில் அடித்துச்; செல்லப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டின் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டிருந்த 44 கிலோ மீட்டர் நீளமான காவல்வேலியும் அதனுடன் இணைந்த மினிமுகாம்கள்ää காவலரண்கள்ää காவல்நிலைகள் என்பனவும் பேரலையால் முற்றாக அடித்துச்; செல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

மட்டு-அம்பாறை பகுதியில் கல்குடாää களுவத்தைää கல்லடிää மாங்கேணி இராணுவ முகாம்களும் அறுகம்பைää பானமை உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நான்கு விசேட அதிரடிப்படை முகாம்களும் தரைமட்டமாகியுள்ளன.

அத்தோடு கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த காவலரண்கள்ää கண்காணிப்பு முகாம்கள் என்பன கடல்நீரால் அடித்துச்; செல்லப்பட்டுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட படையினர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியின.

சிறீலங்காவின் நம்பிக்கைக்குரியதாக கருதி வரும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது திருகோணமலை துறைமுகம்தான். இது தான் தமிழீழத்தின் தலைநகரமாக பிரகடனத்தப்பட்டுள்ள நகரம். ஆழிப்பேரலைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக திருகோணமலையை மீட்கும் விதமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதைச்; சுற்றி புதிய முகாம்கள் அமைத்து உள்ளதாக செய்திகள் வெளியானது. இச்;செய்தி குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விசாரணையும் நடத்தி அப்படி ஏதும் இல்லை என்று கூறினர்.

ஆனாலும் சிங்களத் தரப்பு அச்;சத்திலே இருந்த சூழ்நிலையில் அவர்களுக்குப் பேரிடியாக ஆழிப்பேரலை வந்தது.

ஆழிப்பேரலையின் நேரடி பெருஞ்சீற்றத்துக்குள்ளானது திருகோணமலை துறைமுகமே என்கிறது சில தகவல்கள்.

இங்கிருந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் கடலோடு கரைந்துபோய்விட்டது. இதனால் கதிகலங்கிப் போன சிறீலங்கா அதிபர் சந்திரிகா அம்மையார் முதலில் இந்தியாவிடம் உடனடியாக ஒரு போர்க்கப்பலை அளிக்குமாறு கையேந்தி நின்றார்.

உடனே இந்திய அரசும் பெரும் எண்ணிக்கையிலான நிவாரணப் பொருட்களுடன் சிறீலங்காவுக்கு போர்க்கப்பல்களையும் அனுப்பிவைத்தது.

திருகோணமலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விட்டுச்; சென்ற எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை இந்தியா பெரும் எண்ணிக்கையில் நீண்டகால குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக்கொண்டு திருகோணமலையில் ஏற்கனவே கால்பதித்து இருந்தது.

தன்னை வலுப்படுத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிக்கொண்டு மீட்புää நிவாரண நடவடிக்கையை இந்தியா மேலும் துரிதப்படுத்தியது.

சிறீலங்கா அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு அதன் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உறுதி செய்து வந்தது.

உடனடித் இராணுவத் தேவைகளை இந்திய அரசிடமிருந்து பூர்த்தி செய்துகொண்ட சிறீலங்கா அரசு எதிர்கால பயன்களுக்கான திட்டமிடல்களை உருவாக்கவும் தவறவில்லை.

அதன் விளைவுதான் அமெரிக்காவை வரவழைத்தது.

எந்த ஒரு யுத்த களத்திலும் போரிடும் இருதரப்பினரும் படைச்; சமநிலையில் இருக்கும்போதுதான் யுத்த நிறுத்தம் நீடிக்கும்.

எந்தத் தரப்பாவது படைநிலையை அதிகரித்தால் யுத்த நிறுத்தம் கேள்விக்குறியாகிவிடும். இதுதான் யதார்த்தம்.

இதனால் இந்தியா-சிறீலங்கா இராணுவ ஒப்பந்தம் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்து சமுத்திரப் பகுதியில் டியாகோ கார்சியா தீவில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து 1500 கிமீ தொலைவில் 1970-ன் தொடக்கத்திலிருந்து தன்னை கால் பதித்தது அமெரிக்கா. (இந்து சமுத்திரத்தில் உள்ள இந்தத் தீவு ஆழிப்பேரலையில் தப்பியிருக்கிறது. இங்கு இருக்கும் அமெரிக்காவின் அதிநவீன கருவிகளுக்கு ஆழிப்பேரலை தெரியாமல் இருந்ததா? அதை அருகாமையில் உள்ள மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு ஏன் தெரிவிக்காமல் இருந்தது? சாகட்டும் பார்க்கலாம் என்பதுதானே நோக்கம்).

இந்தியாவில் ஒற்றையாட்சியும் வலுவான அரசியல் தலைவர்களும் இருந்த காலத்தில் கூட சிறீலங்கா அரசுää இந்திய அரசுக்கு எதிராக பாகிசுதானுடனும் அமெரிக்காவுடனும் நட்பு பாராட்டியே வந்தது.

இதன் விளைவாகத்தான் 1980களின் தொடக்கத்திலிருந்தே சிறீலங்காவில் அமெரிக்கா கால் பதிக்கத் திட்டமிட்டது. வாய்ஸ்ப் ஆப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி ஒலிபரப்பு சேவைக்கான தளத்தை சிறீலங்கா அரசு அமைக்க முடிவுசெய்த நேரத்தில்தான் தமிழீழ விடுதலைப் போர் வெடித்தது. இதனால் அமெரிக்காவும் அமைதி காத்து வந்தது. இருந்தபோதும் சில வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருக்கக் கூடும் என்று அப்போது தமிழீழத்தில் பயணம் மேற்கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் அந்நாளைய இந்திய பிரதமர் இந்திராவிடம் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். இந்திரா அம்மையாரும் இதை நாம் அனுமதிக்க முடியாது என்று கூறி இந்திய நாடாளுமன்றத்திலேயே இப்படியான செயலை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார்.

இந்திரா அம்மையார் மறைவுக்குப் பிறகு ராசீவ் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் நெகிழ்ச்;சித் தன்மை உருவானது. தமிழீழ விடுதலைப் போரும் அப்போது ஒரு முக்கிய திருப்புமுனையில் இருந்தது. இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீட்சித் போன்ற கொள்கை வகுப்பாளர்கள் ராசீவை கொம்புசீவி விட்டனர்.

அப்போது உருவாக்கப்பட்ட ராசீவ்-செயவர்த்தனா ஒப்பந்தமானது தமிழீழத் தமிழர் போராட்டத்தை மய்யமாகக் கொண்டதாக இருந்தாலும் அதில் இந்தியா தனது சுயவிருப்பத்தை பதிவு செய்து சிறீலங்காவை ஏற்க வைத்திருந்தது என்பதே உண்மை.

அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் இன்றைய சூழலுக்கு மிக சரியாகவே பொருந்துகின்றன.

அதில் ஒன்றுதான்

திருகோணமலை மற்றும் சிறீலங்காவின் இதர துறைமுகங்கள் இந்தியாவின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் எந்த ஒரு நாட்டின் இராணுவ வசதிக்காகவும் அளிக்கப்பட மாட்டாது என்பது.

தனது வழமையான அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கான நிபந்தனையை இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் இணைத்திருந்தது.

அத்துடன் சிறீலங்கா அரசானது அமெரிக்காவின் வானொலி சேவைக்கான தளத்தை அனுமதிப்பது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது கூட அதில் இடம்பெற்றது. ஆனால் காலமும் சூழ்நிலைகளும் திசைமாற சிங்களவர்கள் மீண்டும் அமெரிக்காவுடன் கை கோர்க்கத் தயங்கவேயில்லை.

இரணுவில என்ற இடத்தில் 400 ஹெக்டேர் பரப்பளவில் இந்த வானொலி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இரணுவில மக்களின் கடும் எதிர்ப்புää போராட்டங்கள் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டது சிறீலங்கா அரசு. துப்பாக்கிச்; சூட்டையும் கூட சிறீலங்கா அரசு நடத்தியது. போராடியவர்கள் தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள்தான். ஆனாலும் சிறீலங்கா அரசு அமெரிக்காவுக்கு நண்பனாக இருப்பதையே விரும்பியது. அதனால் அமெரிக்காவின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலி தளம் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.

இந்தியாவிலும் இந்திரா அம்மையார் போல வலிமையான தலைவர்கள் யாரும் அதற்குப் பிறகு வரவில்லை. நிலையான ஆட்சி என்பதும் அமையவில்லை. நிரந்தமரமற்ற எப்போது வேண்டுமானாலும் கவிழக் கூடிய ஆட்சிகளே இந்தியாவில் நீடித்து வருகின்றன.

இதனால்தான் பெரும் எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தை அழைக்க சிறீலங்காவுக்குத் துணிவு வந்தது. அமெரிக்காவும் வந்து துருப்புகளைக் குவித்தது.

அந்த இரண்டு அரசுகளும் எண்ணியதுபோல் தான் இங்கே இந்திய அரசு என்று அழைக்கப்படுவது வாய்திறக்க இயலாமல் இருக்கிறது.

தென்னாசியாவின் வல்லரசு என்ற இந்திய நிலைக்கு மட்டுமான பேராபத்து இது அல்ல. இந்த அமெரிக்க படைகுவிப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகப்போவது தமிழர்கள் தான்.

தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களும்தான்.

ஆழிப்பேரலைக்கு முன்பாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்ää தனது மாவீரர் நாள் உரையில் சிறீலங்கா அரசின் தற்போதைய இழுத்தடிப்பு நடவடிக்கைகளால் தமிழர்கள் மீண்டும் விடுதலைப் போரைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்;சரித்திருந்தார். இதில் ஆடித்தான் போய் இருந்தது சந்திரிகா தரப்பு.

ஆழிப்பேரலை வந்த உடன் சிறீலங்கா அதிபர் சந்திரிகா வெளியிட்ட அறிக்கையில் அப்பாடா புலிகளால் வந்த போராபத்து இப்போதைக்கு இல்லை என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்திருந்தார்.

இனி எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடங்க போகும் அமைதிப்பேச்;சுகளில் சிங்களப் பிரதிநிதிகள் மேசைகளில் அமர்ந்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருப்பது அமெரிக்க படையினருக்குப் பின்னால் என்பதை நினைவுபடுத்தி தமிழர்களின் கோரிக்கைகளை நீர்த்துபோக வைக்கலாம் என்பதே சிங்கள அரசின் எண்ணம்.

இதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் தமிழர் பகுதிகளான யாழ் மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை குவித்திருக்கிறது சிங்கள அரசு.

இந்த பகுதிகளில் முகாமிடும் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது சக்திவாய்ந்த உளவு செயற்கைக் கோள்களை.
The National Geo-spatial Intelligence Agency என்ற NGA அமைப்பு இந்த சாதனத்தை அளித்துள்ளது.

மீட்பு பணிகளுக்குச் செல்லும் அமெரிக்க இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இந்த செயற்கைக்கோள் முக்கியமாக கண்டுபிடித்து கொடுப்பது எதைத் தெரியுமா?

'இராணுவ நிலைகளையும் ரகசியமாக பதுக்கி வைக்கப்படிருக்கும் ஆயுத கிடங்குகளையுமாம்".

மீட்புப் பணிக்குச் செல்லும் சாக்கில் இந்த உளவு சாதனங்களை அமெரிக்கா கொண்டு செல்வதும் வழமையாம்.

ஆழிப்பேரலைக்குப் பின் டிசம்பர் 30ஆம் தேதியன்று NBC செய்தி நிறுவனத்தின் புலனாய்வு செய்தியாளர் ராபர் விண்ட்ரெம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நிலைகளையும் ரகசிய ஆயுதங்களையும் அறிந்து தரும் இந்த சாதனம் மீட்பு பணி மேற்கொள்ளும் நாடுகளில் முதன்மையான போக்குவரத்து கட்டமைப்பையும் பதிவு செய்துகொள்ளுமாம்.

அடித்துச் செல்லப்பட்ட சாலைகளையும் மின் நிலைகளையும் கூட துல்லியமாக பதிவு செய்யுமாம் இந்தக் கருவி.

ஆழிப்பேரலை பாதிப்பு செய்திகள் வெளியான நிலையில் Nபுயு அமைப்பு இந்த சாதனங்களை அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

ஆக தமிழீழத்தில் சிறீலங்கா அரசு என்ன செய்ய நினைத்ததோ அதை இப்போது அவர்களது பங்காளியாக அமெரிக்கா செய்யப் போகிறது.

அமெரிக்காவின் வருகையை இடதுசாரிகள் என்றழைக்கப்படுகிற பேரினவாத கட்சியான ஜேவிபி வரவேற்றுள்ளது. அதேநேரத்தில் இசுலாமியர்கள் பெரும் அச்;சத்தில் அங்கு உள்ளனர்.

முசுலிம் காங்கிரசு தலைவர் ஹக்கீம் அரபு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

இதே நேரத்தில் சிறீலங்கா ஊடகங்கள் வெளியிடுகிற இன்னொரு செய்தியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்கா இராணுவம் உடனடியாக வெளியேறாவிட்டால் தென் இலங்கையில் சிங்கள-முசுலிம் இளைஞர்கள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் இணைந்து செயல்படக் கூடும் என்பதே அது.

இலங்கைத் தீவகத்தில் தமிழ்-சிங்கள-இசுலாமிய மூவின மக்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை தெளிவாகவே புரிந்துகொண்டு இருக்கின்றனர்- ஆட்சியாளர்களைத் தவிர.

தமிழீழத்தில் மட்டுமல்ல. இந்தியாவின் தென்பகுதி தமிழ்நாட்டிலும் அதன் கரம் நீளாமலா போகும்?

கூட்டு கடல் ரோந்து கூட்டு பாதுகாப்பு என்று தமிழர்களின் கடல்பகுதியில் அமெரிக்க இராணுவம் இறங்கிவிட்டால் பிறகு என்ன? இந்தியாவிற்குள்ளும் அமெரிக்கா வந்ததுபோல்தான்.

ஆழிப்பேரலையில் மொத்த கடல்வளத்தையும் இழந்துபோய்விட்ட தமிழன் சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகிக் கொண்டிருந்த தமிழ்நாட்டுத் தமிழன் இனி அமெரிக்க இராணுவச் சூட்டுக்கு அநியாயமாக பலியாகிடும் காலம் மிக அண்மையில்தான் போல.

ஒவ்வொரு நாட்டினது வெளியுறவுக் கொள்கை என்பது அப்படியே நிரந்தரமாக வைத்துக்கொண்டிருப்பது அல்ல.

சூழல்களுக்கேற்ப மாற்றப்படவேண்டியவையே.

அரசியல் சாசனங்களிலேயே எத்துணையோ திருத்தங்களை மேற்கொண்டுவிட்ட இந்திய அரசு இலங்கைத் தீவகம் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசிய அவசர சூழல் இது.

இந்திய விடுதலைக் காலத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய சூழல்களில் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது நாடு சிறீலங்கா.

1950களில் சிறீலங்காவின் பிரதமராக இருந்த சர்.ஜான் கொத்தலாவல ஆட்சிகாலமாகட்டும் சரி

1960களில் இந்திய-சீன யுத்த காலத்திலிருந்த சிறீலங்கா அரசாகட்டும் சரி

1970களில் வங்கதேசத்திற்கான இந்திய-பாகிசுதானிய யுத்த காலமாகட்டும் சரி

இந்தியாவிற்கு துரோகமிழைத்த வரலாற்றையே சிறீலங்கா தொடர்ந்து செய்திருக்கிறது.

அதேநேரத்தில் தமிழீழத் தமிழர்கள் இந்தியாவை நேசமிகு நாடாகவே பார்த்து வந்துள்ள வரலாறு மறக்கப்பட முடியாதது.

இந்திய-சீன யுத்த காலத்தில் சிறீலங்கா அரசின் நிலையைக் கண்டித்து இந்தியாவுக்காக சீனாவுடன் போரிட தொண்டர் படையை அனுப்புவோம் என்று பிரகடனம் செய்தவர் தந்தை செல்வா.

இந்திரா அம்மையாரும் மறைந்த முதல்வர் எம்ஜிஆரும் தங்கள் காலத்தில் தமிழீழத் தமிழர்களுக்காக செய்த பேருதவிகள் மறக்க முடியாதவை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்ää அண்மைய அமைதிப் பேச்சுகளில் தந்தையர் நாடாகிய இந்தியா உயரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கொள்கை வகுப்பாளர்களின் பிழையான நடவடிக்கையால் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் மறந்துவிட்டு-

இந்தியாவின் எதிர்கால நலனுக்காக-

தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழர்களின் நலனுக்காக
முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் இந்திய மய்ய அரசு மேற்கொண்ட இலங்கைத் தீவகம் தொடர்பான வெளியுறவுக் கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை.

இப்போது இந்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதை வலியுறுத்த வேண்டியது வரலாற்றுக் கடமை.

இந்திராவின் வாரிசுகளாக மத்தியில் ஆட்சி அமைத்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமும் அல்ல- தமிழீழ விடுதலைப் போருக்கான ஆதரவு களத்தை உருவாக்கியதில் பங்காற்றி இன்று மய்ய அரசின் கூட்டாளிகளாக இருக்கும் திமுக மதிமுக பாமக போன்ற கட்சிகளுக்கும் இதுஒரு பெரிய விடயமும் அல்ல!!

நன்றி:தமிழ்நாதம்
Reply
#48
ரிஷியின் புலனாய்வு அரசியல் இந்துசமுத்திரத்துக்குள் Enter the Dragon [1]

ரிஷியின் புலனாய்வு அரசியல் இந்துசமுத்திரத்துக்குள் Enter the Dragon [2]

ரிஷியின் புலனாய்வு அரசியல் இந்துசமுத்திரத்துக்குள் Enter the Dragon [3]

ரிஷியின் புலனாய்வு அரசியல் இந்துசமுத்திரத்துக்குள் Enter the Dragon [4]

* நன்றி: ரிஷி (Teamalphacanada) & தமிழ்நாதம்.
Reply
#49
'றோவும்" தமிழரின் உரிமைப்போரும் -நீலன்


அண்டத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒருசில நவீன புலனாய்வு அமைப்புகளினுள் 'றோ"வும் (Research and Analyse Wing -RAW) ஒன்றாகத் திகழ்கின்றது.

தெற்காசியப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்காக இந்திய அரசு 1968 இல் 'றோ" அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு இந்தியப்பிரதமரின் நேரடிப்பொறுப்பின் கீழ் புதுடில்லியில் லோதி வீதியிலுள்ள 13 மாடிக்கட்டடத்தை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது.

இந்திய அரசு ஆரம்ப காலங்களில் 'றோ" விற்கென இரண்டு கோடி (இந்தியப் பணம்) நிதியை பாதீட்டில் ஒதுக்கியது. இன்று ஜயாயிரம் கோடி ரூபாய்களாக பாதீட்டுத்தொகை விரிவடைந்துஇ ஒரு பலமான நவீன உளவறியும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.

தெற்காசியாவைப் பொறுத்தவரையில். சீனா அமெரிக்கா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஸ்தரிப்பு அல்லது பிராந்திய ஆதிக்க முனைப்புக்கள்இ இந்தியாவின் கேந்திரஇ பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கும் விஸ்தரிப்பதற்கும் பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது.

இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்பும் அயலுறவுக் கொள்கையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. இவைகள் இரண்டும் இணை கோடுகளாக செல்லக்கூடியதாக இருக்கின்றதனால் இவ் விடயங்களில் 'றோ" முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது.

'றோ" சீனாஇ அமெரிக்கா பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்தும்இ இந்திய நலனுக்கு ஏற்ப அயல் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி ஆட்டம் காணச்செய்தும் வருகின்றது.

அயல் நாடுகளிலுள்ள இனச்சிக்கலின் ஊடாக அரசியல்இ இராணுவ பொருளாதாரத் தளங்களில் சேதாரங்களை உண்டுபண்ணியும்இ சனநாயகத்திற்கான போராட்டங்கள் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் பின்கதவுக் காரியங்களை 'றோ' செய்தும் வருகின்றது.

இந்திய பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை (கிழக்கு பாகிஸ்தான்) பிரித்தெடுப்பதற்கு வங்களாதேச விடுதலை வீரர்களாக முக்தி பாகினிக்கு பயிற்சியும்இ ஆயுதமும் வழங்கியது. 'றோ" வினது உளவுச்சேவைச் சரித்திரத்திலேயே பாகிஸ்தானை வெற்றி கொண்ட மறைமுக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

பாகிஸ்தான் ஒரு தனியானஇ பலமான தேச அரசுப் பண்பை கொண்டிருந்தது. அது 'றோ"வின் புலனாய்வுத் தந்திரோபாயப் பண்பினால் பாகிஸ்தான் வங்களாதேசம் என இரு நாடுகளாக 1971 இல் பிரிந்தன.

இந்த புலனாய்வு செயற்பாடுகளுக்குப் பின்னரும் இவ்விரு நாடுகளில் இத்தகைய மறைமுக வேலைகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவி விடவில்லை. அது தனக்குச் சார்பான உளவு வட்டத்துக்குள் நுழைவதற்காக வங்காள தேசத்திலுள்ள மதச் சார்பற்றவர்களுக்கும் இந்து சிறுபான்மையினருக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி இருகின்றது.

'றோ" கழுகுக்கண் கொண்டு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிலுள்ள சின்ட்இ புன்சாப் பிரிவினரிடையேயுள்ள பல்வேறு இனக்குழுக்கள் கருத்து முரண்பாடுடையவர்கள் மத்தியில் விரிவான உளவு வலையமைப்பை அமைத்துள்ளது.

இதனைவிடவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க திறமையான இந்து உறுப்பினர்களை ஆர்.எல்.எஸ் மூலம் ஆள் திரட்டல்களைச் செய்து அவர்களுக்கு உளவுப் பயிற்சிகளை வழங்கிக் களத்தில் இறக்கியுள்ளது.

உலகில் வல்லரசுகளின் பல்போட்டியில் சமநிலையேற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படும் உளவுச் செயல்கள் உளவு வரலாற்று ஏடுகளில் தனித்துவம் வாய்ந்ததாகும்.

இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளின் கைகள் இலங்கைக்குள் உள்நுழைய தொடங்கியதும் இந்தியா இலங்கையை தனது செல்வாக்கினுள் கொண்டுவருவதற்காக ஏனைய வல்லரசுகளைப்போல் தமிழர் தேசிய இனச்சிக்கலை கையாளத்தொடங்கியது.

இந்தத் தந்திரோபாயப் பண்பு அடிப்படைக் கொள்கையின் அத்திவாரத்தில் இருந்து கொண்டு 'றோ" தமிழ் இளைஞர்களின் தீவிரவேட்கை உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது. அது உயர்பாதுகாப்பு நிலையங்களான புதுடில்லியிலுள்ள சக்ராட்டாவிலும் மையங்களை உருவாக்கி 'ஜந்து" தமிழ் குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியது.

தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் நெருக்கடியை நல்லிணக்கப் போக்குடன் மாத்திரம் அணுகவேண்டிய நியாயம் அல்லது தேவை இருந்தபோதும் 'றோ" இந்திய நலன்களுக்கான உணர்வுகளுடன் அந்த நெருக்கடியை அணுகத்தலைப்பட்டது. இதுவே எல்லாக் குழப்பத்துக்கும் அடிப்படையாக அமைந்தது.

தமிழரின் இனச் சிக்கலை சரிவரப் புரிந்துகொள்ளாமல் தொலை நோக்குப் பார்வையெல்லாம் இல்லாம் 'றோ" உயர் குழாமினரின் விருந்து உபசார மேசையில் கதைக்கப்படும் விடயங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துத் திட்டங்களை வகுத்து வருகின்றது.

இந்தக் குறுகிய வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஒருவகைப் பண்பு மாற்றமாகத்தான் 'றோ" புலிகள் இயக்கத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன் நோக்கிய வீறு நடையைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னாலான சகலதையும் செய்தது. ஆனாலும் புலிகள் பலம்பெற்றனர்.

தமிழரின் படையான புலிப்படை பலமாகியபோதே சிங்கள ஆளும் உயர்பீடம் நிலை குலைந்துபோய் இந்திய அரசின் காலடியில் சென்றுவிழுந்தது. புலிகளின் பலத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய வழி வகுத்தது.

இந்த யதார்த்த அரசியல் களநிலைவரங்களை பகுத்துணரும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளின் தொடர்ச்சியான போராட்ட வரலாற்று நீட்சி காரணமாக உள்ள தமிழரின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள பின்நிற்பது அல்லது தயங்குவதே கவலையானது.

தமிழர் ஒவ்வொரு வீடுகளிலும் காந்தி நேரு சுபாஸ் சந்திரபோய் போன்றவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திராகாந்தி இறந்ததும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனது தாயை இழந்தது போலவே சோகத்தினுள் மூழ்கியிருந்தார்கள். இப்படியான தமிழர்களின் நல்லிணக்க உறவு போக்குகளை புரிந்துகொள்ளாது தமிழர்களுக்கு 'றோ" உயர் பீடமும் இந்தியக்கொள்கை வகுக்கும் உயர்பீடமும் இந்திய அரச உயர்பீடமும் துன்பதுயரங்களை கொடுத்து.

சிங்கள தேசத்தை மாறி மாறி ஆட்சிசெய்யும் ஆளும் தரப்பினர் எல்லோரும் இந்திய நலனுக்கு விரோதமான அரசியல் இராணுவ பொருளாதார கொள்கைகளையே கடைப் பிடித்துவந்துள்ளனர். வருகின்றனர். அதாவது நீல நிறக் கட்சிக்காரங்கள் பச்சைநிறக் கட்சிக்காரங்கள்இ சிவப்பு நிறக் கட்சிக்காரங்கள் என அனைத்தும் இந்தியாவிற்கு சார்பான போக்குகளைக்கொண்டிருக்கவில்லை என்பதை எந்தொரு ஆய்வுகளையும் செய்யாமலே வெளிப்படையாக 'றோ" உயர் பீடத்தினர் தெரிந்துகொள்ளக்கூடிய விடயம்.

87இல் ஜே.ஆர். ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளை இங்கு பார்ப்பதனால் உண்மையொன்று 'றோ'வுக்கு முன்னால் விரிந்து விட்டுச்சென்றுள்ளது.

அதாவது இதுவரை காலமும் புலிகளும்இ சிங்களப் படையினரும் சண்டை பிடித்த போது இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. இப்போது புலிகளையும்இ இந்தியாவையும் மோத விட்டு சிங்கள தேசம் மத்தியஸ்தம் வகிப்பதாகவும்இ சிங்களவர் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் சிங்களவரைப் பாதுகாத்து இந்தியர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளேன் என்று சொன்னார். அதற்கு அப்பால் ஜே.ஆர். முன்னால் இந்திய எதிர்ப்புணர்வு மிக்க சிங்களக் கடற்படை தாக்கப்பட்டு உயிர்தப்பிய நிகழ்வு நடந்தது.

இப்படியாக சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்புணர:வு ஆழமாகப் புரையோடி இருக்கும் சிங்கள தேசத்தின் இறைமையின் பாதுகாப்பிற்காக 'றோ" உதவ முன் நிற்பது தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் இறைமையின் பாதுகாப்பை அசட்டை செய்வது தமிழருக்கு கவலை தரும் நிகழ்வாகும்.

'றோ" தமிழரின் உரிமைப் போரை குறைத்து மதிப்பிடும் மனங்பாங்கையுள்ள முகவர் வட்டத்தினரால் வழங்கப்படும் தகவல்களையும் தமிழரின் உரிமை பற்றி சிங்கள உயர் குழாம் வட்டத்தினரால் திணிக்கப்படும் தகவல்களையும் மிள்பரிசீலனை செய்து தமிழர் தொடர்பான கொள்கை மீளுருவாக்கம் செய்யப்படும்போதே இந்திய அரசு நடுநிலை வகிக்க முடியும்.

'றோ'வின் வான் பறப்பியல் ஆய்வு மையம் (Aviation Research Center -ARC) சுறு சுறுப்பாக இயங்குகின்றது. கப்பல்களை கண் காணிக்க 'றோ" அமைப்பின் 2ஆவது பிரிவினர் ஓரிசாவில் டொனியர் (Donier) கடல் கண்காணிப்பு விமானத்தை உபயோகிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இணைப்பு நிலையமொன்றை நிறுவி இணையம் (Internet) மின்னஞ்சல் (E-mail) செய்மதி வழித் தொலைபேசி (Inmarsat) வழித் தகவல்களை கண்காணித்தும் வருகின்றது.

இதுபோன்ற நவீனத்துவ வசதிகளைத் தாங்கிய பலம்மிக்க 'றோ" இந்தியாவினுள் உளவுவேலை செய்யப்படும் எந்தொரு சதுரங்க ஆட்ட நகர்தலையும் முறியடித்து வந்த போதிலும் சிங்கள தேசத்தில் ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் 'றோ"வினால் வெற்றிபெறமுடியவில்லை.

சிங்கள தேசம் இந்தியாவோடு இணைந்து நடித்த நாடகத்தின் திரை உயர்த்திஇ தனது உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் சிங்கள இறைமைக்குஇ குந்தகம் விளைவிக்கும் எந்தொரு தமிழர் சார்புநிலை அரசியல் பணிகளை இந்தியா செய்யாது என்கிற அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நடுநிலை வகிக்கும் கண்ணோட்டத்தோடு தமிழரின் உரிமைப்போரை அணுகும் அரசியல்பண்போடு தங்களை அர்ப்பணிக்கவேண்டும். அதனை விடுத்து சிங்கள உயர் குழாமோடு ஒட்டி உறவாடித் தகவல்களைப் பெறும் நிரூபமாஇ நாராயணன் முனி போன்ற 'றோ" உயர்மட்டத்தினரின் ஆலோசனை கேட்கும் பட்சத்தில் இந்திய அரசை மீண்டும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே முடியும்.

மத்திய கிழக்கு நாடுகளினுள் இஸ்ரேல் தேசம் பலமாக இருப்பதனாலே அமெரிக்கா நலனுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படைக்கொள்கையில் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்து அத்தேசத்தை பலமாக்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பாடத்தை இந்திய வகுப்பாளர்கள் கற்றுக்கொண்டிருந்தபோதிலும் தமிழர் தாயகம் விடயத்தில் 'றோ"வினது தவறான அணுகு முறைப்போக்கை மாற்றியமைக்காது இருப்பது அறிவுபூர்வமான அரசியல் பண்பிலிருந்து விலகி நிற்பதாக அமைகின்றது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தாக்கம் தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சோகமான சூழலில் சிங்களதேசமும்இ ஆதிக்க சக்திகளும் பூகம்ப அரசிலையப் பயன்படுத்தி தங்களது இராணுவ நலன்களையே முதன்மையாக வேணி வருகின்றது.

சிங்கள தேசம் இந்தியாவினது இறைமையைப் பற்றி சிறிதும் சிந்திக்காது இந்திய நலனுக்கு பாதகமான நிலைப்பாட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் இன்றைய பூகம்ப அரசியல் சூழலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழரின் உரிமைப் போரை பலவீனப்படுத்தும் மறைமுக பணிகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவிவிட வேண்டிய நிலை ஒன்று உதயமாகியுள்ளது.

தமிழர் உரிமைப் போராட்டம் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்றுவிட்ட அரசியற் சூழ்நிலையிலும்இ தமிழர் எந்தொரு தீர்வை எட்டாத போதிலும் தமிழர்படை பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தை பலவீனமாகும். 'றோ"வின் உளவுச் செயற்பாடுகளால் தென்னிந்திய பிராந்திய பாதுகாப்பிற்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை. அது தர்மமாகவும் இருக்கப்போவதும் இல்லை.

ஆகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொண்டும் தமிழரின் உரிமைப்போரின் நியாயத்தை புரிந்துகொண்டும்இ தமிழரின் துன்ப துயரங்களை மனிதாபிமானமாக அணுகியும் செயலாற்றக்கூடிய கொள்கைக்கு அத்திவாரம் இடவேண்டும். இதுவே தமிழர் தாயக விடயத்தில் இந்தியாவை நடுநிலைப்படுத்தும்.

ஈழநாதம்.
Reply
#50
அன்பகம் நன்றி இன்னொரு தலைப்பில் இது இருக்கிறது.... முன்னரே வாசித்து விட்டேன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#51
[quote=anpagam]இந்த [b]oh our india
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :|
Reply
#52
anpagam Wrote:[quote=anpagam]இந்த [b]oh our india
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :|


ஓ அப்படியா தொடருங்கள் நான் இதனை கவனிக்க வில்லை.. மன்னிக்கவும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#53
சுனாமி - அரசியல் பேரலை

இலங்கையின் ஒன்றன்பின் ஒன்றாகத் தாக்கிய சுனாமிப் பேரலைகள் மிகவும் பெரியன. அதேபோன்றே இலங்கையை தற்பொழுது தாக்கும் சுனாமி அரசியலும் மிகப்பெரியதாகவே உள்ளது. ஆனால சுனாமி அரசியலின் வளைவுகளை தற்பொழுது மதிப்பீடு செய்தல் என்பது சாத்தியமானதாகவில்லை தற்பொழுது ஆரம்பித்துள்ள இச்சுனாமி அரசியலின் விளைவானது எத்தனை காலத்துக்குப் பாதிப்புக்களை விளைவிக்கும் அன்றி இச்சுனாமி அரசியலே இலங்கையின் ஏன் இப்பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் ஒன்றாகிவிடுமா என்பதை தற்பொழுது அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது.

சுனாமி அரசியலானது உள்நாட்டு அரசியலில் இருந்து சர்வதேச அரசியல் வரையில் வியாபித்ததாகவும் தாக்கம் விளைவிப்பதாகவும் உள்ளது அதாவது சிறிலங்காவில் கட்சி சார்ந்து நிவாரணப்பொருட்கள் வழங்குதல் தமிழர் தாயகப்பகுதி நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் புறந்தள்ளப் படுதலில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆயுதப்படைகள் கடற்படைக்கலங்கள் விமானப்படை உலங்குவானுர்திகள் என்பன இலங்கையில் தரையிறங்கியதன் மூலம் இப்பிராந்தியத்தின் இராணுவச்சமநிலையில் புதியசமன்பாடு தேடப்படவேண்டியதானவரையில் நிலைமையைத் தோற்றிவித்துள்ளன.

தற்பொழுது இலங்கைக்குத் துருப்புக்களை அனுப்பியுள்ள சகல நாடுகளும் மனிதாபிமானப் பணிக்கே துருப்புக்களை அனுப்பிவைத்திருப்பதாகவும் அவை தமது பணிமுடிந்ததும் மீளப்பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவுப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால்... எந்தவொரு நாடும் தம்மால் மேற்கொள்ளப்படும் நிவாரணப்பணிகள் குறித்த வரையறைகள் எல்லைகள் மற்றும் படையணிகள் வெளியேறுவதற்கான காலஎல்லை என்பன பற்றி எதையுமே கூறவில்லை.

இதேவேளை இலங்கை தொடர்பாக இச்சுனாமி அரசியல் அணுகுமுறையில் அமெரிக்கா போன்ற சிலநாடுகளின் நிலைப்பாடு பார்வை என்பனவற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டு;ள்ளன. அதேவேளை இந்தியா போன்ற நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடத்தக்கதென்னவெனில் தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை அதாவது இராஜதந்திர அணுகுமுறையில் மாற்றம் செய்தவை சில முன்னேற்றங்களை கண்டுகொண்டுள்ளன. மாற்றம் செய்யாத நாடுகள் சிலநெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ள வேண்டியதாகியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க அரசு விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் நிவாரணப்பணிகள் குறித்து அக்கறைகொண்டுள்ளதாகக் காட்டிக்கொண்டுள்ளது போன்று இந்தியஅரசுகாட்டிக்கொள்ளவும் இல்லை. அது குறித்து அக்கறை வெளிப்படுத்தியதாகவும் இல்லை. இது ஒரு வகையில் இந்திய அரசு இராஜதந்திரரீதியிலான பின்னடைவை சந்தித்துள்ளதோ என்றே எண்ணவைக்கிறது

சுனாமிப் பேரலைகளினால் இலங்கையும் மாலைதீவும் தாக்கப்பட்ட போதும் இந்தியா விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது நிவாரணப் பொருட்கள்ää மீட்புப் பணியாளர்கள் சுகாதார சேவையினர் ஆகியோரை அனுப்பிவைத்திருந்தது தமது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தைக் கவனத்திற் கொண்டதைவிடத் தென்னாசியப் பிராந்திய நாடுகளில் அதி தீவிர அக்கறை கொண்டது ஏனெனில் இப்பிராந்தியத்தில் தனது மேலாண்மையையும் ஏனைய நாடுகளின் பிரவேசத்திற்கு அவசியமில்லை என்பதை வெளிப்படுத்துவதுமே நோக்கமாகும்.

ஆனால் சுனாமியால் விளைந்த பேரனர்த்தம் பெரிதாகவும் மேற்குநாடுகள் இதில் காட்டிய அக்கறையும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மேற்கு நாடுகளின் நிவாரணங்களையும் படையணிகளையும் வரவேற்கத்தயாராக இருந்தமையும் இந்தியாவின் விருப்பு வெறுப்புக்களையும் மீறி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

அதாவது இந்தியா அதிகளவு மீட்புப் பணியாளர்களையும்ää உதவிகளையும் வழங்கிய போதும் தற்போதைய சு10ள்நிலையில் அதாவது சுனாமி அரசியலில் இந்திய இராஜதந்திரம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பதே யதார்த்தமானதாய் உள்ளது. அதாவது அமெரிக்க உள்ளிட்ட அதன் சார்பு நாடுகளின் பிரவேசத்தை இந்தியா தடுத்து நிறுத்தவோ அன்றி மட்டுப்படுத்தவோ முடியாத நிலையே உருவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய அரசியலைக் கையாள்வது என்பது தனியாக சிறிலங்கா அரசாங்கத்தை கையாள்வது என்பதாகமாட்டாது. இலங்கைத் தீவில் உள்ள இருவேறு சக்திகளை கையாள்வது தவிர்க முடியாததாகும். இதுவே யதார்த்தமும் கூட இது சுனாமி அரசியலுக்கும் பொருத்தப்பாடான தொன்றே.

ஆனால் இந்திய அரசாங்கம் இதனைப் புரிந்துகொண்டதாக இருக்கவில்லை. இலங்கைத்தீவில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் இரு சக்திகளில் ஒன்றை இந்தியா தொடர்ந்தும் புறக்கணித்தே வந்துள்ளது. இத்தனைக்கும் சுனாமி அலைகளின் தாக்கம் இவ்விரு சக்திகளின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த தென்பதும் மனிதாபிமான நிவாரணப்பணி என்பது இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியவையாகவும் இருந்தன.

ஆனால் இந்தியா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கான நிவாரணப் பணி குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியிருந்த போதும்- இந்தியத் தூதுவர் நிருபாமாராவ் புலிகள் தம்மிடம் எதனையும் கோரவில்லையெனக் கூறத்தட்டிக் கழித்திருந்தார். அதுமட்டுமின்றி அரசிடம் மட்டுமே நிவாரணப் பொருட்கள் உதவிகள் வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

இதேவேளை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் குறிப்பிடத் தக்கதானதொரு மாற்றம் தென்படவே செய்தது. அதாவது இந்தியா போன்று அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடாக இருந்தபோதும் அமெரிக்கா முன்னைய நிலைப்பாட்டில் இருந்து தனது அணுகு முறையில் சிறு சிறுமாற்றத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் தென்படும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் இம்மாற்றம் வெளிப்படத்தொடங்கியது. இது அமெரிக்க ஊடகங்களினால் சுனாமி பேரலையின் பின்னரான அவதானிப்பின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றமா? அன்றி அமெரிக்க அரசின் பார்வையில் ஏற்பட்ட மாற்றமா? என்பதை எம்மால் தற்பொழுது உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் அமெரிக்காவின் சி.என்.என். போன்ற தொலைக் காட்சிகள் அமெரிக்காவின் தேசியக் கொள்கையை சர்வதேசம் தொடர்பான பார்வையை வெளிப்படுத்துபவை எனப் பொதுவாகவே கருதப்படுவதுண்டு. இத்தொலைக்காட்சியானது சுனாமி பேரலை அழிவுகள் குறித்து முதன்மைப்படுத்தியதோடு தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டதோடுää அவை விடுதலைப்புலிகளினதும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடு குறித்து பாராட்டும் தெரிவித்திருந்தது. அது மட்டுமல்ல தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடக உதவிகள் வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதேசமயம் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைப் பார்வையிட்ட வோஷிங்டன் ரைம்ஸ் பத்திரிக்கையில் ஏ.பி செய்தியாளர் எழுதிய கட்டுரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமக்கென ஒரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் அது திறம்படச் செயற்படக் கூடியதாகவுள்ள தென்பதையும் வெளிக்காட்டியிருந்தார்.

அவர் விடுதலைப் புலிகளது மீட்புப் பணி நடவடிக்கைகள் அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல் இவ்வாறானதொரு சிரமம் மிக்கதான பணியை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனி நாட்டுக்கொள்கைக்கு முன்னோடியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உள்ளதென்பதை நீரூபித்துள்ளது எனத் தனது கட்டுரையில் தெரிவிக்கின்றார்.

இதேவேளை சிக்காக்கோ ரிபுயன் சஞ்சிகையின் வெளிநாட்டுச் செய்தியாளர் கிம் பாக்கர் விடுதலைப்புலிகள் குறித்த பார்வை மாறியுள்ளதாகத் தெரிவிக்கின்றார். இரண்டு தசாப்த காலயுத்தத்தின் மூலம் சிறப்பானதொரு இராணுவத்துக்குரிய திறமையை பெற்றிருப்பதை சுனாமி அலை பாதிப்புக்குள்ளானவர்களை மீட்கும் பணியிலும் நிவாரண உதவிகளை வழங்குவதிலும் இருந்து தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது எனத் தெரிவிக்கின்றார். இதேவேளை நியஸ்வீக் சஞ்சிகையோ யார் விரும்பியோ விரும்பாமற் போனாலோ விடுதலைப்புலிகள் இயக்கம் நிராகரிக்க முடியாத சக்தி என்பதையும் சிறிலங்கா அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சர்வதேச நாடுகள் புலிகளுடன் உறவு கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது எனத் தெரிவிப்பதோடு அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்துவது போன்றதான சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

இதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபிஅனானை செல்லவிடாது சிறிலங்கா அரசங்கம் தடுத்தமை குறித்து திருப்தி கொள்ளாததோடு சுனாமி பேரலையின் தாக்கத்தின் பின்னர் ஒரு சுமூக நிலையினை அடையக்கூடிய சந்தர்ப்பத்தினை சிறிலங்கா அரசு வீணடித்து வருவதுபோல் தெரிகிறது எனவும் அரசு மீது குறை கூறியுள்ளது.

இந்தவகையில் அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சில கேள்விகளை எழவைக்கின்றது. இதில் முதலில் எழும் கேள்வியானது இவை நிலைமைகளை நேரில் அவதானித்ததன் அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலுமான மாற்றமா? அன்றி அமெரிக்காவின் நிலைப்பாட்டில் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய ரீதியிலான மாற்றமா? என்பதேயாகும்.

ஊடகங்களில் அதாவது சுனாமிப்பேரலைகளின் அழிவையும் தமிழர் தாயகத்திற்கு சிறிலங்கா அரசின் நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்ற மனிதநேய உணர்வின் அடிப்படையிலானது எனின் அது முழுமைக்கும் பொருத்தப்பாடான தொன்றாகத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் துன்பதுயரங்கள் சுனாமிப்பேரலைகளினால் மட்டும் ஏற்பட்டவையல்ல. சுமார் 20 வருடங்களுக்கு மேலாகவே தமிழ்மக்கள் இத்தகைய துன்பதுயரங்களைச் சுனாமியினால் அல்லாது விடினும் யுத்தத்தினால் அனுபவித்தவர்களாகவே உள்ளனர்.

இத்தகைய நிலையில் சுனாமியால் ஏற்பட்ட அழிவினால் மட்டும் ஏற்பட்ட மாற்றமாக இருக்க முடியுமா? இதனால் அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது தனியாக அவற்றின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட என்ற முடிவிற்கு வருதல் பொருத்தப்பாடனதாக இருக்கமாட்டாது. அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் சிறிதளவிலேனும் ஏற்பட்டுள்ள மாற்றமமாகவே கொள்ளத்தக்கது.

இது நியஸ் வீக் சஞ்சிகையின் கட்டுரையிலும் சற்றுவெளிப்படுவதாகவே உள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிலையத்தின் பிரதிநிதிகள் தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளதை சுனாமி நிவாரணப் பணிகளைக் கையாளும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறும் இச்சஞ்சிகை இதனை நாம் அவதானத்துடன் செய்கிறோம் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் சட்டக்கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் நாம் இதனைச்செய்கிறோம். அவர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்பதும்ää நாம் இங்கிருப்பது மனிதாபிமான நோக்கத்திற்காகவே என்பதை அவர்கள் தவறாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறியதாகத் தெரிவிக்கின்றது.

இது அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமெனில் இம்மாற்றம் எதற்காக? என்ற கேள்வியும் எழுகின்றது. அதாவது இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது காலை வலுவாக ஊன்றிக்கொள்ள சுனாமிப் பேரலைகளை பயன் படுத்திக்கொள்ள முற்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றது.

அமெரிக்காவைப் பொறுத்து சிறிலங்காவுடன் நெருக்கமான உறவு உண்டு இந்தியா உடனடியாகப் பெரும் உதவி புரிந்தபோதும் அமெரிக்காவிற்கு ஜனாதிபதி சந்திரிக்கா அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கைக்குத் துருப்புக்களை அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறானால் புலிகள் தொடர்பான கடந்தகால நிலைப்பாட்டில் அமெரிக்கா மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவைதான் என்ன? அங்குதான் இந்திய இராசதந்திரத்திலிருந்து அமெரிக்க இராசதந்திரம் வேறுபடுவது தெரிகிறது. அதாவது விடுதலைப் புலிகள் ஒரு வலுவான சக்தியாகவும் ஒரு சிறந்த கூட்டமைப்பைக் கொண்டதாகவும் இருக்கையில் அவ்வமைப்பை ஓரம் தள்ளுவதன் மூலம் தமது பிரசன்னத்திற்கு இலங்கைத்தீவின் ஒரு பகுதியிலிருந்து ஆட்சேபம் வருவதை அமெரிக்கா தவிர்த்துக்கொள்ள விரும்பியிருக்கக்கூடும். வேறுவிதமாகக் கூறுவதானால் அமெரிக்கப் படையினர் வருவதினால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் அவநம்பிக்கை போக்கப்பட வேண்டும் என அமெரிக்கா கருதியிருக்கக் கூடும்.

அமெரிக்கா கூறிக்கொள்வது போன்று அமெரிக்க இராணுவம் இங்கு நிலை கொள்ளப் போவதில்லை எனக்கொண்டாலும் கூட அமெரிக்கா இலங்கையிலுள்ள வலுவான சக்தியுடைய சிறுபாண்மையினம் ஒன்றுடன் முரண்படாது இருப்பது தனது எதிர்கால நடவடிக்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்குமென கருதியிருக்க முடியும். இதேவேளை அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரிää அன்றி வேறெந்த உலகநாடுகளாக இருப்பினும் சரி சுனாபிப் பேரலைகளினால் ஏற்பட்டுள்ள வாய்ப்பைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன என்பதை எவருமே நிராகரித்து விடமுடியாது. அதேபேன்று இந்நாடுகளில் சில இப்போட்டியில் வெற்றி பெற்றும் சிலபின்னடைவுகளை சந்திப்பதற்கான வாய்ப்;புக்களும் உண்டு. ஆனால் ஒன்று இச்சுனாமி அரசியலில் வெற்றி பெறப்போகிறவர்கள் இப்பிராந்தியத்தில் இராணுவச் சமநிலையிலும் தாக்கத்தை விளைவிப்பவர்களாக நிச்சயம் இருப்பார்கள். ஆகயினால் இச்சுனாமி அரசியலுக்கென புதிய நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக் கொள்ளுதல் அனைவருக்கும் அவசியமானதாகவே இருக்கும். மாறாக நிலையான அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகள் கொண்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல எத்தகைய விவகாரத்திலும் வெற்றி பெறப்போவதில்லை.

நன்றி ஈழநாதம் & பதிவு
Reply
#54
இந்துவுக்கு மட்டும் இதுஎதுவும் தெரியாது
; ;
Reply
#55
இந்தியாவின் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடையே முரண்பாடு வலுக்கிறது.

(வெள்ளிக்கிழமை 28 சனவரி 2005 நடேசன்)
இந்தியாவின் தென்கிழக்காசிய மற்றும் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக இந்தியத் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஏற்பட்ட இயற்கையழிவும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கையில் தரையிறங்கியமையும் இந்த முரண்பாட்டை மேலும் வலுவடையச் செய்துள்ளதாகத் தெரியவருவதுடன் இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தெற்காசியவியல்துறைப் பேராசிரியர் சகாதேவன் ஊடகம் ஒன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்கா இலங்கையில் தரையிறங்குவது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கையரசு கலந்தாலோசிக்காமை பாரிய சர்ச்சையினை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவிடம் தெற்காசியப் பிராந்தியக் கொள்கை வகுப்பில் தற்போது சரிசமமான கொள்கைகள் பேணப்படுவதில்லையென்றும் இந்திய அரசியல் தலைமையில் இது பலமுறையெடுத்துக் கூறப்பட்டும் சீர் செய்யப்படாத ஒரு விடயமாகக் காணப்படுவதாகவும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களிடையே பாரிய முரண்பாடு இருப்பதாகவும் இவை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் பிராந்தியங்கள் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுமென்றும் எச்சரித்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------------

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக புலனாய்வு நிபுணர் நாராயணன் நியமனம் - இலங்கை விவகாரங்களில் பரிச்சயமிக்கவர்.

(வெள்ளிக்கிழமை 28 சனவரி 2005 அருள்)
இலங்கை விடயங்களில் பரிச்சயமிக்க புலனாய்வு நிபுணரான கே.நாராயணன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் விசேட ஆலோசகரும் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவருமான கே.நாராயணன் (வயது-70) இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இப் பதவியிலிருந்த கே.என்.டிக்சிற் இம்மாத ஆரம்பத்தில் காலமானார். அதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. நாராயணன் பாதுகாப்புத் துறையின் ஒரு நிபுணர். இலங்கை விடயங்களில் விசேட நிபுணத்துவம் பெற்றவர் என்று தெரிவிக்கப்படு கின்றது. 1989-90 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு அலுவலகத் தலைவராக நாராயணன் கடமை யாற்றினார். இந்தக் காலப்பகுதியில் இந்தியப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் புலனாய்வு கூட்டுக் குழுத் தலைவரானார். அதன்பின் 1991இல் மீண்டும் புலனாய்வு அலுவலகத் தலைவரானார். அடுத்த ஆண்டில் ஓய்வுபெற்றார்.

இந்தியாவில் தற்போதைய அரசு பதவிக்கு வந்த உடனேயே கடந்த மேமாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவரை உள்நாட்டு பாதுகாப்புக்கான விசேட ஆலோசகராக நியமித்திருந்தார்.

நன்றி: நிதர்சனம்
Reply
#56
இந்தியப்படை உயர்மட்டத்தினரை ஜனாதிபதி சந்திரிகா சந்திப்பு

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளுக்கென இலங்கை வந்துள்ள இந்தியக் கடல் மற்றும் இராணுவத்தரப்பினரின் உயர்மட்டக்குழுவினரை சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்துப்பேசியுள்ளார்.

இந்தியப் படையினர் இலங்கையில் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிக்கு தனது அரசின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி சந்திரிகாää இலங்கையை ஆழிப்பேரலை தாக்கியவுடன் முதலில் வந்து உதவிய படையினர் இந்தியத் தரப்பினரே என்று கூறி இந்தியப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இந்தியப்படையினர் தாம் இலங்கையில் தற்போது மேற்கொண்டு வரும் பணி தொடர்பான தமது அனுபவங்களை ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எடுத்துக்கூறினர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியத்தூதுவர் நிருபாமா ராவும் உடனிருந்தார்.

--------------------

இந்திய-இலங்கை கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்த 742 கோடி ரூபா செலவில் புதிய திட்டம்

இந்தியா தனது கரையோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு 742 கோடி ருபா செலவிலான புதிய திட்டம் உள்றை அமுல்படுத்தவுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கடல் ரோந்துப் பாதுகாப்பு மேலதிகமாகவும் அதேவேளை தற்போது அமுலில் உள்ள சில பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மேலதிகமாகவும் இந்தப்புதிய திட்டம் அமையும் எனக்கருதப்படுகிறது.

தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல் சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடல் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கரையோரப் பொலிஸ் நிலையங்கள் அமைப்பு மற்றும் விசேட ரோந்து நடவடிக்கைகள் ஆகியவை உட்பட பல முக்கிய உபாயங்கள் அடங்கிய திட்டமாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு துறைசார் நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்
Reply
#57
anpagam Wrote:இந்தியப்படை உயர்மட்டத்தினரை ஜனாதிபதி சந்திரிகா சந்திப்பு

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளுக்கென இலங்கை வந்துள்ள இந்தியக் கடல் மற்றும் இராணுவத்தரப்பினரின் உயர்மட்டக்குழுவினரை சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்துப்பேசியுள்ளார்.

இந்தியப் படையினர் இலங்கையில் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிக்கு தனது அரசின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி சந்திரிகாää இலங்கையை ஆழிப்பேரலை தாக்கியவுடன் முதலில் வந்து உதவிய படையினர் இந்தியத் தரப்பினரே என்று கூறி இந்தியப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இந்தியப்படையினர் தாம் இலங்கையில் தற்போது மேற்கொண்டு வரும் பணி தொடர்பான தமது அனுபவங்களை ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எடுத்துக்கூறினர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியத்தூதுவர் நிருபாமா ராவும் உடனிருந்தார்.

--------------------

இந்திய-இலங்கை கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்த 742 கோடி ரூபா செலவில் புதிய திட்டம்

இந்தியா தனது கரையோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு 742 கோடி ருபா செலவிலான புதிய திட்டம் உள்றை அமுல்படுத்தவுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கடல் ரோந்துப் பாதுகாப்பு மேலதிகமாகவும் அதேவேளை தற்போது அமுலில் உள்ள சில பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மேலதிகமாகவும் இந்தப்புதிய திட்டம் அமையும் எனக்கருதப்படுகிறது.

தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல் சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடல் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கரையோரப் பொலிஸ் நிலையங்கள் அமைப்பு மற்றும் விசேட ரோந்து நடவடிக்கைகள் ஆகியவை உட்பட பல முக்கிய உபாயங்கள் அடங்கிய திட்டமாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு துறைசார் நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

:roll: :roll:

மேலுள்ளதைப் பார்த்தால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் ஓங்கி அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்துவிட்டது மாதிரி தெரிகிறது. அமெரிக்கப் படையினர் வெளியெறுவர் எனவும் செய்திகள் வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Reply
#58
இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

அடுத்த நிலையிலேயே ஜப்பான்
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக் கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் ஜப்பான் உள்ளது.
ஆகக்கூடுதலான தொகையாக இரண்டாயி ரத்து 724 கோடி ரூபாவை இந்தியாவே வழங் கியுள்ளது. இரண்டாவது நிலையில் ஜப்பான் இரண்டாயிரத்து 560 கோடி ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. ஆழிப் பேரலை அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் இழப்புகளும் சுமார் 13 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபா வரை இருக்கலாம் என உத்தேசமாக மதிப்பிடப்பட் டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வ தேச நாணய நிதியம் மற்றும் இந்தியா ஜப்பான் அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் என்பன 13 ஆயிரத்து 694 கோடி ரூபா வரை வழங்கி உதவ முன்வந்துள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்தியாவே ஆகக் கூடுதலாக வழங்கியுள்ளது.
அமெரிக்கா 134 கோடி ரூபா நோர்வே 115 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஆயிரத்து 400 கோடி ரூபா என வழங்கியுள்ளன. மேலும் உதவிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக் கின்றன என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: உதயன்
Reply
#59
anpagam Wrote:இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

அடுத்த நிலையிலேயே ஜப்பான்
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக் கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் ஜப்பான் உள்ளது.
ஆகக்கூடுதலான தொகையாக இரண்டாயி ரத்து 724 கோடி ரூபாவை இந்தியாவே வழங் கியுள்ளது. இரண்டாவது நிலையில் ஜப்பான் இரண்டாயிரத்து 560 கோடி ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. ஆழிப் பேரலை அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் இழப்புகளும் சுமார் 13 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபா வரை இருக்கலாம் என உத்தேசமாக மதிப்பிடப்பட் டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வ தேச நாணய நிதியம் மற்றும் இந்தியா ஜப்பான் அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் என்பன 13 ஆயிரத்து 694 கோடி ரூபா வரை வழங்கி உதவ முன்வந்துள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்தியாவே ஆகக் கூடுதலாக வழங்கியுள்ளது.
அமெரிக்கா 134 கோடி ரூபா நோர்வே 115 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஆயிரத்து 400 கோடி ரூபா என வழங்கியுள்ளன. மேலும் உதவிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக் கின்றன என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: உதயன்

செய்திக்கு நன்றி
Reply
#60
இந்திய இராஜதந்திரத்தை அடித்துச் சென்ற சுனாமி

-ஜெயராஜ்-

தெற்காசியப் பிராந்தியத்தில் அனர்த்தத்தை விளைவித்த சுனாமியினால் ஏற்பட்ட அரசியல் தாக்கம் புவிசார் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் தொடர்பான உணர்வுகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கி விட்டன. இவ் உணர்வுகள் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதவையே ஆகும். ஏனெனில் புவிசார் அரசியலில் சுனாமி அரசியல் ஏற்படுத்திய தாக்கம் பெரியதாகும். சுருக்கமாகக் கூறுவதானால் தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலையை மாற்றிவிடக் கூடிய அளவிற்கு அதன் தாக்கம் உள்ளது.

சுனாமியினால் தென்கிழக்காசிய நாடுகள் பாதிப்புற்ற போது இந்தியாதான் இப்பிராந்தியத்தின் (இந்து சமுத்திர பிராந்தியத்தின்) வல்லரசு என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டது. இதன் வெளிப்பாடே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மட்டுமல்ல மீட்புப்பணிக்கென தனது கடற்படைக் கப்பல்களையும் உலங்குவானூர்திகளையும் இராணுவத்தினரையும் அனுப்பி வைத்தது. அத்தோடு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தபோதும் தம்மாலேயே தமது இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற ரீதியில் நிவாரண உதவிகளையும் இந்தியா ஏற்க மறுத்து விட்டது.

ஒரு வகையில் பார்த்தால் இந்திய அரசு தனது நாட்டில் மேற்கொள்ள வேண்டியதான நிவாரணப் பணிகளையும் ஓரம் தள்ளிவிட்டு அண்டைய நாடுகளுக்கு நிவாரண உதவிகளை உணவுப் பண்டங்கள் நிதி ஆளணி என்ற ரீதியில் உதவ முன்வந்தமைக்கு காரணம் சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை ஏனைய நாடுகள் -குறிப்பாக மேற்குலக வல்லரசுகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இப் பிராந்திய அரசியலில் தலையீடு செய்வதை நிறுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

ஆனால் இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவுற்றது என்பதே உண்மையாகும். அத்தோடு இச்சுனாமி அரசியல் தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டை இந்தியா திறம்பட்ட முறையில் கையாளவும் இல்லை. இவ்வாறான நிலைமை தோன்றியமைக்கு இத்தகையதொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு தமது நலனுக்குப் பயன்படுத்த முடியும் என மேற்குலக வல்லரசுகள் ஏற்கனவே அனுபவரீதியில் புரிந்து கொண்டு இருந்தமையும் சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் மிக உயர்வாக இருந்தமையுமே காரணமாகும்.

சுனாமி தாக்கியதும் இலங்கைக்கெனப் பெரும் நிவாரண உதவிகளை இந்திய அரசு அறிவித்ததோடு விரைந்தும் செயற்பட்டது. இந்தியாவின் சரக்குக் கப்பல்களும் கடற்படை கப்பல்களுமே சுனாமிக்குப் பின்னர் இலங்கை வந்தடைந்த முதலாவது நிவாரணக் கப்பல்களாக இருந்தன.

இவ் விரைந்த செயற்பாட்டின் மூலம் சிறிலங்கா அரசை தனது பிடிக்குள்ஃ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்றே இந்தியா கருதியது. ஆனால் வழமைபோலவே இந்தியாவுடன் கலந்து போசாமலே- ஏன் இந்தியாவிற்கு அறிவிப்புச் செய்யாமலே அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைத் துறைமுகங்களுக்குள் பிரவேசிக்கவும் அமெரிக்க இராணுவ விமானங்கள் விமானத் தளங்களில் தரையிறங்கவும் சிறிலங்கா அரசால் அனுமதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல நாட்டுப் போர்க்கப்பல்கள்ää விமானங்கள் இராணுவ கடற்படை சிப்பாய்கள் சிறிலங்காவிற்குள் பிரவேசித்தன. இது ஒரு வகையில் இப்பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி தம்மிடம் உள்ளதென இந்தியாவிற்கு மேற்கு நாடுகள் உணர்த்திய வெளிப்படுத்திய சம்பவம் எனக் கொண்டாலும் தவறாக மாட்டாது.

அமெரிக்கத் துருப்புக்கள் இலங்கையில் தரையிறங்கியதும் இது குறித்து இந்திய அரசு விசனம் அடைந்திருப்பதாகவும் சிறிலங்கா அரசிற்கு சில அறிவித்தல்களைச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தபோது சிறிலங்கா அதனை மறுத்தது. அமெரிக்க வருகை இந்தியாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதானதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது வரும் தகவல்களின் படியும் இந்தியத்தரப்பில் இருந்து வெளிப்படுத்தும் கருத்தின் அடிப்படையிலும் அமெரிக்க இராணுவத்தினரின் வருகை குறித்து சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அதாவது இந்தியாவுடன் ஆலோசனையோ அன்றிப் கருத்துப்பரிமாற்றமோ இன்றி அமெரிக்கத் துருப்புக்கள் வருகைக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனை வெளிப்படுத்துவது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கின் பேட்டியும் அமைந்திருந்தது. 'இரண்டு நாடுகளும் கலந்தாலோசித்த பின்னர் யார் வேண்டுமானாலும் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்." என்ற நட்வர்சிங்கின் கூற்றுக்கள் இந்தியா இதில் ஓரம் கட்டப்பட்டு இருந்தது என்பதையே வெளிக்காட்டுவதாக இருந்தது.

இந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர போட்டியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்த அதேவேளை இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வி கண்டுள்ளது. ஏனெனில் சுனாமி அரசியலின் பின்னணியில் ஏற்படக்கூடிய அன்றி பயன்படுத்திக்கொள்ளக் கூடியதான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பினை இந்திய இராஜதந்திரிகள் வெற்றிகரமாக கையாளவில்லையென்றே கூறலாம்.

கடந்த நூற்றாண்டின் 90 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டில் இந்தியா பெரிதாக எதனையும் சாதித்துக் கொண்டதாக இல்லை. ஒரு மந்த நிலையிலேயே அது இருந்தது. மாறாகத் தவறானதொரு வழிமுறையைக் கைக்கொண்டது என்றே கூறலாம். அதிலும் இனப்பிரச்சினை தொடர்பான அதன் இராஜதந்திரமானது உணர்ச்சிகளின் அடிப்படையிலானதாக இருந்ததே ஒழிய -மதிப்பிடத்தக்க மதிநுட்பத்துடனும் தேச நலனுடனும் கூடியதாகவும் இருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்த இந்திய அரசு இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறையில் பெரும் தவறிழைத்திருந்ததென்பது வெளிப்படையானது.

இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் எனக் கூறிய இந்திய அரசின் நடவடிக்கைகள் சம நிலையானதாக இருக்கவில்லை. சிறிலங்கா அரசுக்கு சார்பாகவே இருந்தது.

மறுபுறத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மாறாகச் செயற்படுபவர்களையும் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களையும் கொண்டே தமிழ் மக்களை அணுகவும் இந்தியா முனைந்துள்ளது. அதாவது தமிழ்மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயுள்ள சக்திகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா முயன்று கொண்டிருந்தது.

அதுமட்டுமன்றி இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியாவிற்கு இதில் உரிய பங்கை வழங்குவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே இருந்தது. இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியா ஊடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்;குமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டது.

ஆனால் இந்திய மத்திய அரசும் சரி தமிழக அரசும் சரி இலங்கையின் கள நிலவரம் இலங்கை தொடர்பாகச் சர்வதேச நாடுகளின் பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றம் விடுதலைப்புலிகள் விடயத்தில் அவர்களின் அண்மைக்காலப் போக்கு என்பன போன்ற எதிலுமே கவனம் செலுத்தவில்லை. இராஜதந்திர நகர்வுகளை ஏதோவொரு வரையறைக்குள் உட்பட்டது போன்றதாகவே இலங்கை விவகாரத்தை இந்தியா கையாண்டது.

இவ்வாறு இந்தியா கையாண்டமைக்கு வறட்டுத்தனம் பொருந்திய சில இராஜதந்திரிகள் காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக அண்மையில் காலமான முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் டிக்சிற் போன்ற இராஜதந்திரிகளின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் போன்றவர்களின் வறட்டுத்தனமான வழி காட்டுதலும் காரணமாக இருந்திருக்கலாம்.

மேலும் சுனாமி அனர்த்தத்தின்போது மேற்கு நாடுகளின் இராஜதந்திரத்தைப் புரிந்து கொண்டாவது இந்திய இராஜதந்திரிகள் நடந்து கொண்டிருக்கலாம். இந்தியா மட்டும்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடு அல்ல சிறிலங்காவிற்கு நிதியுதவி செய்யும் பிரதான 12 நாடுகளில்; அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தே உள்ளன.

இருப்பினும் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கை அரசியலில் தீவிர கவனம் செலுத்திய மேற்கு நாடுகள் நிவாரணம் என்ற நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கைகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல ஒப்பிற்குச் சிறிய அளவிலாயினும் வடக்கு- கிழக்கில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டன.

ஆனால் இந்தியா ஆட்சியாளர்களோ கொழும்பிலுள்ள சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவரோ இவ் விடயத்தை எள்ளளவிலும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துடனேயே தமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டன. இந்தியா கடைப்பிடித்த இவ் இராஜதந்திரமே இன்று இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கிற்கு எல்லையிடுபவையாகியுள்ளன.

ஆனால் இந்தியாவில் இருந்து காலம் தாழ்த்திய நிலையிலாயினும் இலங்கை தொடர்பான சிறிலங்காவின் கொள்கை குறிப்பாக இலங்கையின் தமிழர் தொடர்பான நிலைப்பாடு மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இக் கருத்தினைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை பேராசிரியர் சகாதேவன் போன்றவர்கள் தமது கருத்துக்களை ஏன் முன்னர் வலுவாக வெளிப்படுத்தவில்லை. தற்பொழுது வெளிப்படுத்தவேண்டிய தேவை ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் இடமுண்டு. ஆனால் இதற்குச் சில வேளை இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தி பொருந்தியவர்களாக இருந்த டிக்சிற் போன்றவர்களின் வறட்டுத்தனமான பிடிவாதங்கள் இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளியிருக்கலாம். அல்லது சுனாமி இப் பிராந்தியத்தில் உருவாக்கிய இராணுவச் சமநிலை மாற்றம் பேராசிரியர் சகாதேவன் போன்றவர்களுக்கு இலங்கை தொடர்பான- குறிப்பாக இலங்கைத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்திருக்கலாம்.

காரணம் எதுவாயினும் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாது ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையானதொன்று.

இப்பிராந்தியத்தில் அமெரிக்காவோ அன்றி அதன் நேசநாடுகளோ தமது ஆயுதப் படைகளை நிரந்தரமாக வைத்திருக்காது போனாலும இப்பிராந்தியத்தில் எவ்வேளைகளிலும் தமது ஆயுதப்படைகளை இந்தியாவின் அனுசரணையின்றி அதாவது இந்தியாவின் கருத்தறியாது தரையிறக்க முடியும் என்பதை அவை செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளன.

அத்தோடு சிறிலங்கா இந்தியாவின் விசுவாசம் மிக்க உற்ற நண்பனாக எப்பொழுதுமே இருக்க மாட்டாது என்பதையும் இந் நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கும். இதேவேளை வரலாற்று ரீதியாகவும் சரி இன்றும் சரி இந்தியா மீது சிறிலங்கா தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது கிடையாது.

நன்றி: ஈழநாதம் & தமிழ்நாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)