03-01-2006, 07:22 AM
<b>காற்றே நலமா?
என்னை தாங்கி நின்ற
தாய் நிலமே நலமா?
கடலே நலமா?
அலையே நலமா?
கரை தூங்கும்-கட்டுமரமே
நீ- சுகமா?
மரத்தடி பிள்ளையாரே நலமா?
எங்கள் மனங்களில் வாழும்
மறவர் குலமே
நீங்களும் நலமா?
ஒற்றை பனை மரமே - நலமா?
உயிர்வாழ பால் தந்த பசுவே
நீயும் நலமா?
பள்ளிக் கூடமே நீ நலமா?
பாடம் சொல்லி தந்த - குருவே
நீங்களூம் நலமா?
முரட்டு வீதியே
நீ நலமா?
அதில் முக்கி முக்கி போகும்
மாட்டுவண்டிலே நீ நலமா?
தோழர்களே நீங்க நலமா?
தோழியரே நீரும் சுகமா?
முச்சை கயிறு அறுந்து போக
ஓடி போன நான் விட்ட
பட்டமே நீ நலமா?
எங்கு நீ இருந்தாலும்
என்னையும் கேளேன்
"நீ நலமா?"
வயல் வெளியே நலமா?
வரம்புகளே நீங்கள் சுகமா?
ஆழக்கிணறே நீ நலமா?
அதனருகில் நிழல் பரப்பும்
ஆலமரமே நீயும் நலமா?
பத்துதரம் கிழமைக்கு நான்
ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?
பாதி வழியில் எனை துரத்தும்
ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?
காற்றே நீ நலமா?
நான் காதலித்த தேசமே
நீ நலமா?
மரமேறும் அணிலே நலமா?
மறைந்திருந்து பாடும்
குயிலே நீ சுகமா?
பூவரசம் மரமே நலமா?
வாடாமல் என்றும் நிற்கும்
வாதராணி மரமே - நீ சுகமா?
வேப்பமரமே சுகமா?
அதன் விரிந்த கிளைகளில் வாழும்
காக்கைகளே நீங்களும் நலமா?
கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?
விலை எதுவும் நெருங்கா
தலைவரே நீங்க நலமா?
விடுதலைக்காய் வெடித்து சிதறும்
வேங்கைகளே - நீரும்
"உயிர் பிரிந்திருக்காதெனின்"
சொல்லுங்கள் - சுகமா?</b>[color=green]
என்னை தாங்கி நின்ற
தாய் நிலமே நலமா?
கடலே நலமா?
அலையே நலமா?
கரை தூங்கும்-கட்டுமரமே
நீ- சுகமா?
மரத்தடி பிள்ளையாரே நலமா?
எங்கள் மனங்களில் வாழும்
மறவர் குலமே
நீங்களும் நலமா?
ஒற்றை பனை மரமே - நலமா?
உயிர்வாழ பால் தந்த பசுவே
நீயும் நலமா?
பள்ளிக் கூடமே நீ நலமா?
பாடம் சொல்லி தந்த - குருவே
நீங்களூம் நலமா?
முரட்டு வீதியே
நீ நலமா?
அதில் முக்கி முக்கி போகும்
மாட்டுவண்டிலே நீ நலமா?
தோழர்களே நீங்க நலமா?
தோழியரே நீரும் சுகமா?
முச்சை கயிறு அறுந்து போக
ஓடி போன நான் விட்ட
பட்டமே நீ நலமா?
எங்கு நீ இருந்தாலும்
என்னையும் கேளேன்
"நீ நலமா?"
வயல் வெளியே நலமா?
வரம்புகளே நீங்கள் சுகமா?
ஆழக்கிணறே நீ நலமா?
அதனருகில் நிழல் பரப்பும்
ஆலமரமே நீயும் நலமா?
பத்துதரம் கிழமைக்கு நான்
ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?
பாதி வழியில் எனை துரத்தும்
ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?
காற்றே நீ நலமா?
நான் காதலித்த தேசமே
நீ நலமா?
மரமேறும் அணிலே நலமா?
மறைந்திருந்து பாடும்
குயிலே நீ சுகமா?
பூவரசம் மரமே நலமா?
வாடாமல் என்றும் நிற்கும்
வாதராணி மரமே - நீ சுகமா?
வேப்பமரமே சுகமா?
அதன் விரிந்த கிளைகளில் வாழும்
காக்கைகளே நீங்களும் நலமா?
கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?
விலை எதுவும் நெருங்கா
தலைவரே நீங்க நலமா?
விடுதலைக்காய் வெடித்து சிதறும்
வேங்கைகளே - நீரும்
"உயிர் பிரிந்திருக்காதெனின்"
சொல்லுங்கள் - சுகமா?</b>[color=green]
-!
!
!


சரி பறவாய் இல்லை. நான் நலம் நீங்கள் நலமா? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: