Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
[b]அதிகரிக்கின்றது இந்தியத் தலையீடு
பொதுத்தேர்தலை நடத்த வேண்டாம்;
ஜனாதிபதிக்கு இந்தியா ஆலோசனை
புலிகளுக்கே அது சாதகமாகிவிடும்
:roll:
இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் இந்தியா, இப்பொழுது இலங்கை யின் ஜனநாயகத் தேர்தலிலும் தலையீடுகளை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் எதிர்வரும் புதனன்று புதுடில்லியில் ஆரம்பமாக விருக்கின்றன.
இந்நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாகப் பொதுத்தேர்தலை நடத்தி னால் புலிகளே நன்மை அடைவார்கள் என்று கூறி, பொதுத்தேர்தலுக்குச் செல்லாது அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளுமாறு இந்தியா, இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு இந்தியா அனுப்பிய அமைதி காக் கும் படை புலிகளோடு சண்டையில் இறங்கி பெருமளவில் உயிரிழப்புகளைச் சந்தித்தாலும் - அமைதிகாக்கும் படை வெளியேற்றப்பட்ட சூழ்நிலையாலும் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக வும், விடுதலைப் புலிகள் மீது வெஞ் சினம் கொண்டிருக்கும் இந்தியா, தனது வஞ்சக வலையை படிப்படியாக இலங் கையில் விரித்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷசார்க்| உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவும் இந்தியப் பிரதமர் வாஜ்பா யும் மாநாட்டின் பின்னர் தனியே சந்தித் துப் பேசியுள்ளனர். அப்பொழுது இலங் கையின் ஜனநாயகத் தேர்தலில் தலை யீடு செய்யும் அறிவுரையை இந்தியா வழங்கியிருக்கிறது. இச்சந்திப்பில் பிரதமர் வாஜ்பாயின் செயலாளரும்
தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மிஸ்ராவே கூடுதலாகப் பேசியிருக்கிறார்.
பிரதமருடனான அரசியல் நெருக் கடியைச் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும்படியும் சமாதான முயற் சியை மீண்டும் ஆரம்பிக்கும்படியும் இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூறப் பட்டது.
இன்றைய நிலையில் இலங்கை யில் திடீர் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படக் கூடாது எனவும் அவ்வா றான ஒரு தேர்தலில் விடுதலைப் புலி களின் சகாக்கள் கூடுதலான இடங் களை நாடாளுமன்றத்தில் பெற்று விடுதலைப் புலிகளே நன்மை அடைவார் எனவும் ஜனாதிபதிக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவுடனான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து புது டில்லியில் பேச்சு நடத்துவதற்காக அவர் உயர் மட்டக்குழு ஒன்றை அனுப்பு கிறார். அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தலைமையிலான இக்குழு எதிர்வரும் புதனன்று கொழும்பி லிருந்து புறப்படும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பேச்சுக்களை ஆரம் பித்தார். ஆயினும், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கடந்த நவம்பரில் பொறுப்பேற்றதையடுத்து அவரே இப் பொழுது பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய விடயங்களைக் கவனித்து வருகிறார்.
ஜனாதிபதி இந்தியாவுக்கு அனுப் பும் குழுவில் இராணுவத் தளபதி லெப் டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல, சட்டத்தரணி நீகெல் ஹெட்ச் ஆகியோர் இடம்பெறுவர்.
இரு நாடுகளுக்கிடையிலான உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வரை யறைகள் குறித்து புதுடில்லிப் பேச் சுக்களில் ஆராயப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இராணுவத் தளபதி லயனல் பல கல்ல கடந்த டிசெம்பர் மாதம் இந்தி யாவுக்கு விஜயம் செய்திருந்தபோது இது தொடர்பாக பேச்சு நடத்தியிருந் தார். புலனாய்வுத் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதில், இந்தியாவில் இலங்கைப்படையினருக்குப் பயிற்சிய ளிப்பதில், இந்தியக் கடற் படை யினர், கரையோரக் காவற்படையினர் - இலங்கைக் கடற்படையினர் ஆகி யோர் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுப டுத்தல் ஆகியவற்றில் இரு நாடுகளி டையேயும் கூடுதலான ஒத்துழைப்பு ஏற்படும் என்று இராணுவத் தளபதி அப்பொழுது கூறியிருந்தார்.
நன்றி: உதயன் (12.01.2004)
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
11.01.2004 அன்றைய தினக்குரல் வாரமலர் பத்திரிகையில் வெளியாகிய
~அம்பலத்துக்கு வராத அரசியல்.
நாட்டிýன் இரு முக்கிய தலைவர்களும் நாட்டுக்கு வெளியேயுள்ள நிலைமையில் தான் அதிரடிý நடவடிýக்கைகள் அரங்கேறுவது என்கிறார்கள். பச்சைக்கட்சித் தலைவர் வெளியே நின்றவேளையில் தான் மூýன்று முக்கிய அமைச்சுக்களும் பறிபோயின. அதேநேரம் அதிகார அம்மணியாரும் நாட்டுக்கு வெளியே நின்ற போதுதான் உடன்படிýக்கையிலிருந்து வெளியேறப் போவதாக பச்சைக்கட்சித் தலைவர் சூýளுரைத்திருக்கிறார். எது எப்படியோ, இருவரின் பின்னாலும் இரு முக்கிய நாடுகள் தானாம் ஆதிக்கம் செலுத்துகின்றனவாம் என்கிறார்கள்...
நன்றி: தினக்குரல் & தமிழ்நாதம்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>இந்து சமுத்திர வல்லாதிக்க போட்டியில் தமிழீழம்</b>
டி. சிவராம் (தராக்கி)
இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் எதிர்காலம் என்பதை நாம் ஆராய்வதானால் அதற்கு இன்றியமையாத பல விடயங்கள் உள்ளன. அதில் தலையாயது இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தன் போரியல், மற்றும் பொருளாதார நலன்களை நிலை நாட்டவும் விரிவாக்கவும் அன்றும் இன்றும் எடுத்துவரும் முயற்சிகளேயாகும். இதற்கடுத்தபடியாக நாம் கருத்திற்கொள்ள வேண்டியது இந்தியாவின் மேற்படி முயற்சிகளுக்கு எதிராக அல்லது அதனை மட்டுப்படுத்திடும் வகையில் சீனாவும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளான ஜப்பான் பிரித்தானியா என்பனவும் அன்றும் இன்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைத்துவரும் வியுூகங்களாகும். 1970 களின் பிற்கூற்றில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை விரிவாக்கிட அமெரிக்கா செய்த காய் நகர்த்தல்களில் சிறிலங்கா தொடர்பு பட்டிருந்ததாலேயே இந்தியா தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும், புகலிடமும் கொடுத்து அதன் மூலம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்பது எமது விடுதலைப் போராட்டம் புறக்கணிக்க முடியாத உண்மை.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகமான எந்த சக்தியோ இலங்கையில் தனது படைகளை வைத்திருக்க முடியாது. திருமலைத் துறைமுகத்தையோ இலங்கையிலுள்ள வேறு தளங்களையோ பயன்படுத்த முடியாது என அந்த ஒப்பந்தம் சிறிலங்காவை எக்காலத்துக்கும் பிணித்துவிட்டது என்பது அடுத்த உண்மை. இலங்கை அமைதிப்பேச்சுகளின் செல்திசையை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முற்றாக ஆக்கிரமிக்க முற்படுவதை மட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் மறைமுக முயற்சிகளின் விளைவாகவே இன்று சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கெடுபிடி ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் திரிசங்கு நிலையில் கிடக்கின்றன என்று சில சிங்கள ஆய்வாளர் கூறுவதும் நாம் இலகுவில் தட்டிக்கழித்திட முடியாத அடுத்த விடயம்.
இலங்கையின் துறைமுகங்களையும், வான்படைத்தளங்களையும் தங்கு தடையின்றிப் பயன்படுத்திட வழிவகுக்கும் யுஊளுயு என்ற ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசுடன் கைச்சாத்திட அமெரிக்கா 2002இல் தயாராக இருந்ததென்பதையும் அதை இந்தியா தலையிட்டுத் தடுத்துவிட்டதென்பதும் அடுத்த உண்மை.
இதுமட்டுமன்று தனித் தமிழீழ அரசு நிறுவப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். அதன் இருப்பிற்கு வங்காள விரிகுடா ஊடாகவும், மன்னார் வளைகுடாவினூடாகவும் செல்லும் கடற்பாதைகள் இன்றியமையாத உயிர் நாளங்களாக அமையும். இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் கையிலிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடைப்பட்ட 10 பாகை கடலோடை வழியாகவே தென்கிழக்காசியா, சீனா, ஜப்பான் என்பவற்றை நோக்கிச் செல்கின்றன என்பதும், தமிழீழத்தின் மீது நேரடியாகப் பாதைகளை நசுக்கியும், கடற்தடைகளைப் போட்டும் அதன் இருப்பை கேள்விக்குறியாக்கவே இந்தியா முயன்றிடும் என்பதும் தமிழீழ விடுதலைப் பற்றாளர் அனைவரும் அலசிப்பார்க்க மறுத்திட முடியாத விடயங்களாகும்.
தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் எம்மைச் சூழவுள்ள கடலுக்கும் உள்ள தொடர்பு அரசியல் hPதியாகவும் போரியல் hPதியாகவும் புறக்கணிக்கப்பட முடியாதது என்ற உண்மை இவ்வாறிருக்க போன கிழமை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா வகுத்துவரும் வியுூகங்களின் சில முக்கியமான பின்னணிகளைப் பற்றி எழுதிய கருத்துக்கள் விளங்கவில்லை எனவும், வரலாறு கிரலாறு என ஏன் எழுதிக் கொண்டிருக்கின்றீர்களென்றும் ஒரு சிலர் கூறினர்.
'படம்பார். பாடம் படி. சூரியன் கிழக்கில் உதிக்கும்" என்ற பாணியில் எழுதினால்தான் படிப்போம், இல்லையெனில் எமது குண்டுச்சட்டி இருக்கவே இருக்கிறது. குதிரை விடுவதற்கு எனக் கூறுபவர்க்காக எமது வருங்காலம் பற்றிய எமது கேந்திரப் பாதுகாப்புப் பற்றிய தேடல்களைக் கைவிட்டு அரிவரிப் பாடம் நடத்திக் கொண்டிருக்க இதுகாலமல்ல.
இந்தியாவின் பாதுகாப்புப் பற்றிய அக்கறைகள் நடைமுறைகள் என்பன எங்ஙனம் அதன் பெருநிலப்பரப்பு மையப்பட்டதாக ஆரம்பத்திலிருந்து அமைந்திருந்தன என்பதையும், 1971 ஆம் ஆண்டு பங்காளதேஷ் போருக்குப் பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு வியுூகங்கள் ஏன் எங்ஙனம் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இலங்கையைச் சுற்றிய கடற்பரப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுவந்துள்ளன என்பதையும் கண்டோம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய போரியல் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இலங்கை துணைபோகாமல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா கொண்ட அக்கறையின் விளைவாக 1974 - 76 ஆகிய ஆண்டுகளில் சிறிலங்கா அரசுடன் அது இருகடல் எல்லை ஒப்பந்தங்களை செய்து கொண்டது.
இக்காலகட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க - ஏகாதிபத்தியம் தளம் அமைத்து தனது கடலாதிக்கத்தை விரிவாக்க எடுத்த முயற்சியை சோவியத்யுூனியன், இந்தியா ஆகியவற்றின் பக்கம் நின்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அப்போதைய அரசு எதிர்த்து வந்தது. இது இந்தியாவிற்குத் தனது தென்புலக் கடற் பாதுகாப்புப் பற்றிய திருப்தியை ஏற்படுத்திற்று.
சிறிலங்கா அரசின் அனுமதியின்றி தன் கடற்பரப்பில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் பயணிக்க முடியாது என 1977ஆம் ஆண்டு ஜனவரி மாத இலங்கை கடற் சட்டப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தமையும் இதற்கு வலுவுூட்டியது.
ஆனால் இந்நிலை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் ஆட்சிக்கு வந்த போது மாறிற்று. 1981ஆம் ஆண்டு அணி சேரா நாடுகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் டி.யுூ.கோ கார்சியாதீவில் அமைத்திருந்த அணு ஆயுதக் கடற்படைத்தளம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற தீர்மானத்தை இந்தியா கொண்டுவர முனைந்தது. இத்தீர்மானத்தை மாற்றியமைத்திட சிறிலங்கா அரசு அங்கு கடும் முயற்சி எடுத்து அதில் டியுூகோ கார்சியா பற்றி குறிப்பிடப்பட்டதை நீக்குவதில் வெற்றியும் கண்டது. அமெரிக்காவிற்குச் சார்பாகவே சிறிலங்கா அரசு இதைச் செய்தது என்ற விடயம் இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்திற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்மேலாதிக்கம் நிறுவப்படுவதையும், விரிவடைவதையும் ஜே.ஆர். அரசு விரும்புவதையே அதன் மேற்படி நடவடிக்கை காட்டுகிறது என இந்திய வெளிவிவகார மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உஷாரடைந்தனர்.
அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதே ஆண்டு சிறிலங்கா அரசு திருமலை எண்ணெய் குதங்களை கோஸ்டல் கோப்ரேஷன் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முடிவெடுத்தது. இந்நிறுவனத்தின் பின்னணி மிகச் சந்தேகத்திற்கிடமாகவுள்ளதாக இந்தியா சிறிலங்கா அரசிடம் கூறி இதை தடுத்துவிட்டது. இதன் பின்னர் டெல்லிக்கும் சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலிக்குமிடையில் நடந்த பேச்சுகளின் விளைவாக திருமலை எண்ணெய்க் குதங்களை சர்வதேச ஒப்பந்தக் கேள்வி அடிப்படையில் கொடுப்பதாக உடன்பாடு காணப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க இலங்கை எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 1982 ஏப்ரல் மாதம் வெளியிட்ட சர்வதேசக் கேள்விப் பத்திரத்தில் 'எந்தவொரு இராணுவத்திற்கும் உரிய எரிபொருள் திருமலைக் குதங்களில் வைக்கப்படமாட்டாது" என்ற அறிவித்தலையும் வெளியிட்டது. இதனடிப்படையில் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் திருமலைக் குதங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான கேள்விப்பத்திரம் சமர்ப்பித்தது. வழங்கப்பட்ட அனைத்திலும் இதுவே இலாபகரமானதாக இருந்தபோதும் சிறிலங்கா அரசு அதைக்கிடப்பில் போட்டுவிட்டு சிங்கப்பூரில் அமெரிக்கப் பின்னணியுடன் இயங்குவதாககச் சந்தேகிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு திருமலைக்குதங்களை வழங்க ஏற்பாடு செய்யலாயிற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அணுவாயுதத்தளத்தை ஆதரிக்கவும்,திருமலையில் அமெரிக்கா மறைமுகமாகக் காலு}ன்ற உதவவும் சிறீலங்கா முயற்சி எடுத்த வேளையில்தான் இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைத் தமிழ் இளைஞர் சிலருக்குப் பயிற்சி அளிக்க முனைந்தது. (1981-82 காலப்பகுதியில் அந்த இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டபயிற்சி இராணுவப் பயிற்சிஅல்ல). திருமலைத்துறை முகப்பகுதியை எங்ஙனம் வேவு பார்ப்பது. பல்வேறு வகைக்கப்பல்களை எப்படி அடையாளங் காண்பது என்பதாகவே அப்பயிற்சி அமைந்திருந்தது.
மேற்படி இளைஞர்களுக்கும் விடுதலை அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கவில்லை.
இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது. போல் 1983 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அமெரிக்காவின் குரல் (ஏழiஉந ழக யுஅநசiஉய) வானொலி நிலையத்தை புத்தளம் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவி நடத்திட 20 ஆண்டுகளுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஒப்பந்தம் முடிந்து அதையடுத்துவரும் ஒவ்வொரு 10 ஆண்டும் அது புதுப்பிக்கப்படலாம் எனவும் உடன்பாடானது.
இந்து சமுத்திரத்தினுள் திரியும் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பற்படையுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான அதிநுண்ணலைப் பிறப்பாக்கியையும் மேற்படி வானொலி நிலையம் கொண்டிருக்கிறது என இந்தியாவும் சோவியத் யுூனியனும் குற்றஞ்சாட்டின. இந்த அதி நுண்ணலைத் தொலைத்தொடர்பு நிலையத்தை நிறுவுவதற்கான இடப்பரப்பு டியுூகோ கார்சியாத் தீவில் இல்லையெனவும் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள இரணவிலப்பகுதியே அதற்கு வசதி அமைந்திருக்கிறது எனவும் இந்திய போரியல் ஆய்வாளர் ஜஸ்ஜீத்சிங் அப்போது கருத்து வெளியிட்டார். இதுமட்டுமன்றி தன்மீதும் தனது நேசநாடுகள் மீது உளவியற்போரைத் தொடுக்கவே இந்த வானொலி நிலையத்தை மிகசக்தி வாய்ந்த தொன்றாக அமெரிக்கா நிறுவியுள்ளது என சோவியத் யுூனியன் குற்றஞ்சாட்டிற்று. இந்த வேளையில்தான் சிறீலங்காவை நிரந்தரமாகத்தன் பிடிக்குள் கொண்டு வரவும் அதன் வெளிச்சுயநிர்ணய உரிமையைத் தனக்கேற்றவாறு கத்தரித்து விடவும் இந்தியா தீர்மானித்தது. இக்குறிக்கோளை அடைந்திடுவதற்குரிய கருவியாக தமிழீழ விடுதலைப் போரை பயன்படுத்துவதற்கு அது ஆவன செய்யலாயிற்று.
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (11.01.04) & தமிழ்நாதம்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>இலங்கைத் தமிழர் விவகாரத்தில் யதார்த்தத்திற்கு முரணான கொள்கை நிலைப்பாட்டில் இந்திய அரசு</b>
பலாலி விமானத்தள ஓடுபாதையை புனரமைக்க இந்தியா உதவுவதன் சூட்சுமம் தான் என்ன?
இந்திய அரசுக்கெதிரான தமிழினத்தின் உணர்வுகளை யதார்த்த நிலையில் சிந்திப்பது அவசியம். ஏனெனில், தமிழர்கள் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றும், தாய் நாடென்றும் இன்று வரை கருதினார்கள். இனிமேலும் கருதுவார்கள்.
இந்திய மதத் தலைவர்கள், இலக்கிய விற்பன்னர்கள், கலாசார நிபுணர்களுடன் மிக நெருங்கிய உறவை வைத்திருக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள். அவர்களுடைய கசப்புணர்வு இந்திய மத்திய அரசுடன் தான். ஏனெனில், இந்திய மத்திய அரசு ஜயவர்தனாவின் வேண்டுதலுக்கமைய தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் கொள்கைக்கு இராணுவ ரீதியாக உதவி செய்தது.
இதன் காரணமாக, இந்த அநியாயங்களுக்கு அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டிய ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் அகால மரணத்தை எதிர்கொண்டார்.
இந்தத் துன்பகரமான நிகழ்வுடைய தாக்கத்தை தமிழர்கள் இன்றும் அனுபவிக்கின்றார்கள்.
தமிழருக்கெதிராக தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் அக்கினிச் சுவாலை போன்ற எதிர் அலைகள் ஏற்பட்டன. ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது, மரணத்தை எதிர்கொள்ளவில்லை. பதவியை இழந்த காலத்தில் தான் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
இதேவேளை, ராஜீவ்காந்தியின் தாயார் இந்திரா காந்தி பிரதமர் பதவி வகித்த காலத்தில் தான் அவரது வீட்டு வளாகத்தில் வைத்து சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டார். தமிழருக்கு எதிராக வீசும் அலைகள் போல் அப்போது சீக்கியருக்கு எதிராக ஏன் அந்த அலை வீசவில்லை என்பது தான் தமிழரின் கேள்வி.
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் தமிழ்ப் பிரதேசம் சகல வளங்களையுமிழந்து 72 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களுடைய உயிர்களும் பறிக்கப்பட்டன. உலக வங்கியின் அறிக்கையின் படி 3 இலட்சத்து 25 ஆயிரம் தமிழ் வீடுகள் சேதமாக்கப்பட்டன. 500 இற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் சேதமாக்கப்பட்டன. 85 இற்கும் மேற்பட்ட வீதிகள் சேதமாக்கப்பட்டன. கமத்தொழில், கைத்தொழில், மீன்பிடித் தொழில் சார்புடைய சகலதும் சேதமாக்கப்பட்டிருந்தன. 47 வீதமான தமிழ் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக்கப்பட்டனர்.
மனித நேயம் படைத்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த அவல நிலையை நேரில் கண்டால் நிச்சயம் கண்ணீர் விடுவர். இந்தத் துன்பங்களை நேரில் அனுபவித்த வெளிநாட்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிவாரணப் பணிகளுக்கு மேற்கு உலகத்தைச் சேர்ந்த அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, ஒல்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், பிரான்ஸ் முதலிய நாடுகளும், அவுஸ்திரேலிய முதலிய நாடுகளும் உதவிகளை வழங்கி வருகின்றன.
உதாரணமாக, ஜேர்மனி எந்த வித அரசியல் ஆதாயங்களுமில்லாமல் யாழ். குடாநாட்டில் சேதப்பட்ட 55 பள்ளிக் கூடங்களின் புனர்நிர்மாணத்துக்கு உதவி செய்தது. ஊர்காவல்துறையில் அர்ச். அந்தோனியார் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வதற்கு 195 இலட்சம் ரூபா செலவழித்தார்கள். அவர்களுடைய பணி பள்ளிக் கூடங்களின் புனர்நிர்மாணத்தில் மட்டும் நிற்கவில்லை. நீர் வழங்கல், வறியோர்க்கு வீடு கட்டிக் கொடுத்தல் முதலிய துறைகளிலும் நிவாரணப் பணிகளைச் செய்கின்றார்கள்.
இவ்விதமே, ஏனைய நாடுகளும் தங்கள் நிதி வல்லமைக்கேற்ப உதவிகளைத் திறம்படச் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த மேற்குலக நாடுகளின் உதவிகளை நாம் அலசும் பொழுது, இந்தியா ஒரு உதவியும் செய்யவில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்குச் செய்யாவிடினும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு மனிதாபிமான முறையில் உதவிகள் செய்திருக்கலாம். அதுவும் இல்லை.
இந்தியா எமது அயல்நாடு. எமது தாய்நாடு. எமது தந்தையர் நாடென்று கருதுகிறோம். அவர்கள் 6 500 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். தமிழ்ப் பிரதேச அநேக வீடுகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. அநேக தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். அசோகச்சக்கரத்தைத் தங்கள் கொடியாக வைத்திருக்கும் இந்தியா, பகவத்கீதையின் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் இந்தியா யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் அத்துமீறிச் சென்று கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள், தாதிமார்கள், நோயாளிகளைச் சுட்டுத்தள்ளியது. இந்தக் காட்டுமிராண்டித் தனம் 1987 ஆம் ஆண்டு கார்த்திகை நடுப்பகுதியில் நடந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தக் கொடூர குற்றச் செயல்களைப் புரிந்த இந்திய இராணுவத்திற்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். மனிதநேயம் படைத்த தமிழ்ச் சட்டத்தரணிகள் சர்வதேச நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடரவில்லை என்பது முக்கிய கேள்வியாகும்.
இந்தியா சமீபத்தில் செய்யும் இமாலயத் தவறுகள் ஒருவருடைய வீடு எரிந்தால் பக்கத்து வீட்டுக்காரர்தான் உடனடியாகத் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைப்பது மனிதாபிமானம். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் சகல வளங்களையும் இழந்து தமிழ் இனம், நடுத்தெருவில் நிற்கின்றது. அப்படிப்பட்ட கொடூ ரங்களையும், துயரங்களையும் எதிர் கொண்ட தமிழினத்தினுடைய முதுகில் இந்திய அரசு குத்தி விட்டது.
சமாதான முன்னெடுப்புகளில் பங்கு செய்யாத இந்தியா, புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, புனரமைப்புக்கு உதவி செய்யாத இந்தியா, சேதமடைந்த பள்ளிக் கூடங்கள், கோயில்கள், வீடுகள், வீதிகளுக்கு ஒரு செங்கட்டியாவது உதவி செய்யாத இந்தியா, தமிழ்க் குழந்தைகளுக்குப் பாலுணவு கூடக் கொடுக்க முடியாத இந்தியா, மிஞ்சிய தமிழ் மக்களைப் பூண்டோடு அழிப்பதற்கு இலங்கை விமானப்படை தமிழ் மக்களை அழிப்பதற்கு, இலங்கை விமானப்படைக்கு உதவுமுகமாக ஓடுபாதையை புனர்நிர்மாணம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.
பலாலி விமானப்படைத் தள ஓடுபாதைக்கு இந்தியா வழங்கவுள்ள உதவி தமிழ் அப்பாவி மக்களை அழிப்பதற்குச் சிங்கள இராணுவத்துக்குச் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா முதிர்ச்சியடையாததும், யதார்த்தத்துக்கு எதிரான கொள்கைகளையும் கடைப்பிடித்தால் சிங்கள தேசம் இந்தியாவுடைய பின்லாந்து அல்லது பூட்டான் அல்லது சீக்கிரமாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஆனால், தமிழ்த் தாயகத்தைப் பொறுத்தவரை நிலைமை அதுவல்ல. இந்த யதார்த்தத்தை இந்தியப் பாதுகாப்பு மந்திரியும், பிரதமரும் அறிந்திருப்பது அவசியம்.
இலங்கையில் பிரதம மந்திரிக்கும், ஜனாதிபதிக்குமுள்ள அரசியல் முரண்பாடுகள் எந்த விதத்திலும் புலிகளைப் பாதிக்காது.
சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த உச்சி மகாநாட்டில் இந்தியப் பிரதமர் எமது ஜனாதிபதிக்கு அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கும் படி புத்திமதி கூறியுள்ளார். இந்த அரசியல் நெருக்கடி தவிர்க்கப்படாவிட்டால் விடுதலைப்புலிகள் தான் இலாபமடைவார்களென வலியுறுத்தியுள்ளார்.
பலாலி விமான நிலைய ஓடுபாதையை இந்திய விமானப்படை உயரதிகாரிகள் வந்து பார்வையிட்டு, எவ்விதம் புனர்நிர்மாணம் செய்யலாமென்று ஒரு மதிப்பீடு செய்துள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக கொழும்பிலுள்ள புத்திஜீவிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், வட கீழ்ப் பிராந்திய பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். யுத்தம் வெடித்தால் அது மிகவும் கொடிய யுத்தமாக மாறும்.
கொழும்பு வாழ் புத்திஜீவிகள் அநேகர் இந்தியா தமிழர்களுக்கு என்ன தவறுகளைச் செய்தாலும் தமிழர்கள் இந்திய மத்திய அரசுடன் பகைமை உணர்வை வெளிப்படுத்தலாகாதென்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்கள். எம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்தியாவை தாய் நாடு, தந்தையர் நாடு என்று கருதினாலும், இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறுகளை மன்னிக்க முடியாது. இலங்கையின் இன்றைய அரசியல் முரண்பாடுகளுக்கு இந்தியா ஒரு சாராருக்கும், அமெரிக்கா இன்னொரு சாராருக்கும் ஆதரவு கொடுக்கின்றது.
எனவே, இது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள மறைமுக அதிகாரப் போட்டி.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைதியைக் கடைப்பிடித்து ராஜதந்திர முன்னெடுப்புகளைச் செயற்படுத்தியும், தமிழ்ப் பிரதேசத்துக்குப் புனர்நிர்மாண, புனரமைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துவதும் முதற் கடமை.
நன்றி: தில்லைக்கூத்தன் (தினக்குரல்)
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
என்ன செய்யப் போகின்றார்கள்.
தான் வைத்த பொறியைப் பற்றி தானே பறைசாற்றிப் பெருமிதமடைந்து இறுதியில் அதில் தானே |விழநேர்ந்து பலியாகும் துர்ப்பாக்கியம் யாருக்காவது நிகழ்ந்தால் அவர்கள் இன்றிருக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் போல் பரிதாபத்திற்குரியவர்களாயிருப்பர்.
ரணில் பறைசாற்றிய சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னல் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்பது சிலருக்குப் புரிந்திருக்கலாம். இதற்குள் தன்காலத்தில் அமெரிக்கா புலிகளைத் தடைசெய்துவிட்டதாக பெருமையடித்துக் கொண்;ட அம்மணி சந்திரிகாவையும் உள்ளடக்கலாம்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கு புலிகள் ஒன்றும் தீண்டத் தகாதவர்களல்ல. அவர்களுக்கென்று இப்பிராந்தியத்தில் இலங்கையின் மீதான நலன்கள் 2000ம் ஆண்டின் பின் முதன்மைப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கான அரசியல் பொருளாதார தேவைகருதி இலங்கையில் கொந்தளிப்பதாக இருக்கும் யுத்தத்தை தணிவித்து இலங்கையில் அமைதிச் சூழலைப் பேணவேண்டியிருக்கின்றது.
யுத்தத்தின் பச்சையான யதார்தத்தை புரிந்துகொண்டு சமாதானம் செய்ய இவ்விருகட்சிகளில் எது அதிகம் முன்வருகின்றதோ அதை ஆதரிக்க மேற்குலகம் தயாராகவே இருக்கின்றது. சந்திரிகாவினது சமாதான முயற்சிக்கும் இவ்வாறு ஆதரவு கிடைத்தது தெரிந்ததே.
யுத்தம் மீது மேற்குலகத்திற்கு கட்டிவளர்க்கப்பட்ட பெருமைகள் வன்னிப்போரை புலிகள் வெண்றதுடன் தகர்ந்துபோயிற்று. அதன் உடனடி விளைவாகவே இலங்கையின் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவிலிருந்து சமாதானத்திற்கான ஆதரவை மேற்குலகம் வன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
விடுதலைப்புலிகள் சர்வதேச அரசியல் அரங்கில் போராட்டம் தொடங்கி இத்தனை ஆண்டுகளும் இராஜதந்திர அரசியல் அர்த்தத்தில் அதிகம் பிரசன்னமாகியிருக்காத சூழலில் விடுதலைப்புலிகளின் போர் ஓர்மம், தாம் வரித்துக் கொண்ட இலக்கில் இருந்து விடாப்பிடியாக இருக்கும் தன்மை, வளைந்து கொடாமை, போன்ற குணாம்சங்களுக்கூடாகத்தான் மேற்குலகம் புலிகளை விளங்கி வைத்திருக்கிறது. மேலும் சிறிலங்கா அரசாங்கங்களின் இராஜதந்திர முயற்சிகளால் விடுதலைப் புலிகள் பிரிவினையின்றி வேறெதையும் ஆதரிக்காதவர்கள் என்றும், யுத்தத்தைத் தவிர மாற்று அணுகு முறைக்கு உடன்பாடற்றவர்கள் என்றும் அவர்கள் பலமான படைச் சக்தியை தவிர அவர்களுக்கான அரசியல் பின்னணி மிகவும் பலவீனமானதென்றும் நம்புவிக்கவோ அல்லது இக்கருத்தை எடுத்துக்கொள்ள வைக்கவோ முடிந்தது.
இத்தகையதொரு பின்னணியில் சமாதானத்தின் பொருட்டு புலிகளை யுத்தத்திற்கு திரும்பவிடாத ஒரு சூழலைப் பேண மேற்குலகம் விரும்புகின்ற யதார்த்ததை சிங்கள அரசியல் தலைவர்கள் அதிகம் இராஜதந்திர அர்த்தத்தில் புலிகளைத் தாம் வென்ற விட்டதாக எண்ணினர். தோற்றப்படுத்தினர்.
ஆனால் இப்பொழுது ரணில்-சந்திரிகாவுக்கிடையில் எழுந்துள்ள அதிகாரப்போட்டி மெய்நிலையை அதிகம் மேலெழுப்பிக் கொண்டுவருகிறது. அதைத் தரிசிக்கும் வாய்ப்பு இப்பொழுது மேற்குலகத்திற்கு கிடைத்திருக்கின்றது. கிடைத்தன் விளைவாய் மேற்குலகத்தின் பிரதிபலிப்பு இனப்பிரச்சினையின் மேற்குலகின் நிலைப்பாடு குறித்த மெய் நிலையை மேலெழுப்பி வருகின்றது. அதைத் தரிசிக்கும் வாய்ப்பும் சிங்களத் தலைவர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும், மக்களுக்கும் இப்பொழுது வாய்த்திருக்கின்றது.
சனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரப் போட்டிக்கு முடிவு கண்டுகொள்ள வேண்டும். அல்லது சமாதான முயற்சிகளில் பாரிய பின்னடைவுகள் ஏற்படும் என அமெரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சட் ஆர்மிரேஜ் கருத்துத் தெரிவித்து ஒரு சில நாட்களுக்குள் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கொலின் பவல் பிரமருக்கும் சனாதிபதிக்கும் தனித்தனியாக அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வண்ணம் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார். அதன் உள்ளடக்கம் இரு அரசியல் தலைவர்களும் தமது அதிகாரப் போட்டிக்குத் தீர்வுகண்டு புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது.
அமெரிக்காவின் இராஜங்க அமைச்சரிடமிருந்து கடிதம் மூலம் இச் செய்தி விடுக்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை கலந்த ஒரு வற்புறுத்தலாகவே இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
இதிலிருந்து எதை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கின்றது என்றால் இலங்கை அரசியலில் மேற்கிற்கிருக்கும் இன்றியமையாத முக்கியத்துவத்தையும் அதன் மனோபாவத்தையும் தான். இதைப் புரிந்து கொள்ள இன்னொன்றையும் நாம் பார்க்கலாம்.
அமெரிக்க நெப்ரெஸ்க்கா வெஸ்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் றொபட் சீ ஒபஸ்ற் கூறிய கருத்துக்களை அவதானிக்கலாம்.
விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால திட்டவரைபு எடுத்த எடுப்பிலேயே பல அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்படுவது ஆச்சரியப்படக் கூடிய தொன்றல்ல. உண்மையில் இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கையில் நிலவும் ஒரு துரதிஷ்ட நிலையே இதுவாகும். மேலும் தீர்வுத் திட்டம் குறித்துப் பேசுவதற்குக்கூட ஒப்புதல் மறுக்கப்பட்டிருப்பது பாரதூரமான விசனத்திற்குரிய ஒரு நிலையாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவிற்கும் ஏற்பட்டுள்ள அதிகாரத்துவ இழுபறி பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குரலாக இரு தரப்பினருமே எததையும் கூற முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.
புலிகள் சமர்ப்பித்துள்ள இன்றைய இடைக்கால தன்னாட்சி அதிகாரத் திட்டவரைபினை உன்னிப்பாக அவதானிக்காமல் இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள தீர்வுத் திட்டத்திற்கும் புலிகளின் திட்டத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட வேறுபாடுகளையே காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை புலிகளும் தாம்தெரிவித்திருக்கும் யோசனைகள் தொடர்பில் எத்தகைய சமரசத்திற்கும் வரமுடியாதவர்கள் என கூறவுமில்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் புலிகளுடன் திட்டவரைபு தொடர்பில் பேச்சு வார்த்தைக்குக் கூட அது செல்லமுடியாது தவறியிருப்பது மிகவும் விசனத்திற்குரிய ஒரு காரியமென்றே கூறவேண்டும். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகத் திட்டவரைபு குறித்து எதிர்போ, கண்டனமோ அதீதமானதென்றே இராஜீகமட்டத்தில் கருத்தெழாதது குறிப்பிடத்தக்கது. வரவேற்புகளும் கிடைக்கத் தான் செய்தன.
இலங்கையில் சமாதானத்தை நாடும் மேற்குலகத்தின் நிலைப்பாட்டை புலிகளுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று நம்பியிருந்த சிங்கள இராஜதந்திரத்தின் மீதே அது திரும்பிப் பாய்கின்றது. சர்வதேச அரசியலரங்கில் தமக்குக் கிடைத்தவாய்ப்பை புலிகள் பயன்படுத்தி தம்மைப் பிரசன்னப்படுத்திக் கொண்டவிதம் எச்சரிக்கையுடனேனும் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலப்பதற்கு எதிரானவர்களல்ல என்பதை விழங்க வைத்திருந்தது.
ஒஸ்லோவில் புலிகளின் உள்ளகச் சுயநிர்ணய உரிமையுடனான சமஸ்டிப் பிரகடனம், யுத்த நிறுத்த அனர்த்தங்களில் புலிகள் கடைப்பிடித்த பொறுமை, பேச்சுக்களில் அரசதரப்பின் வேண்டுகோளிற் மேசைக்கெடுக்காத பின்போட்டமை, தாமாக ஒரு இடைக்கால திட்ட வரைபை முன்வைத்தமை போன்றனவெல்லாம் இதுவரைகாலம் புலிகள் பற்றி தோற்றப்படுத்தப்பட்டு வந்த பல விடயங்களைச் சர்வதேச எண்ணங்களில் மாற்றங்காணவோ குறைந்த பட்சம் வீரியம் குறையவோ வாய்ப்பளித்திருந்தது.
இத்தகைய பின்னணியில் புலிகள் யுத்தத்திற்கு திரும்பினால் காத்திரமான அழுத்தத்தையோ வற்புறுத்தல்களையோ செய்யும் அரசியல் புறநிலையை, தார்மீக பலத்தை மேற்குலகம் இழந்து வருகின்றது. அதை மேற்கு வைத்திருக்க வேண்டுமாயின் சிங்களத் தலைவர்கள் மீது மிகப் பலமான எச்சரிக்கை தோரணையிலான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
நாடு யுத்தத்திற்குத் திரும்புமாயின் அதற்கான மகாபொறுப்பு சர்வதேச அரங்கில் சிங்கள ஆட்சியாளர்கள் மீது விழுமேயின்றி புலிகள் மீதல்ல.
இப்பொழுதுள்ள மேற்கின் நிலைமையோ இலங்கையோ யுத்தத்திற்குத் திரும்பிவிடாது செய்வதாயின் இலங்கையின் அரசியல் தலைவர்கள் மீது காத்திரமான அழுத்தத்தை பிரயோகிப்பதுடன் புலிகளின் திட்ட வரைபு குறித்து சாதகமாகப் பரிசீலிக்க அவர்களை நிர்ப்பந்திப்பதில் தான் தங்கியிருக்கின்றது.
சிங்களத் தலைவர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் நிலைமையை எங்கள் ஊரில் சொல்வார்கள் 'உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்" என்று.
நன்றி ஜி.கே. ஈழநாதம்.
:wink: :?: :?:
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
நேற்றிரவு, மன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில், எண்ணுறுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனவும், இவற்றிற்கு இந்திய கடலோரக் காவற்படையினர் பாதுகாப்பு வழங்கினர் எனவும், மன்னார் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று, நேற்று முன்தினமும், வடமராட்சிக் கடற்பரப்பில், இந்தியக் கடலோரக் காவல்படையின் துணையுடன், நூறுக்கும் மேற்பட்ட இழுவைப்படகுகள், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: Tamildailynews (20.01.2004)
இதன் நோக்கம் என்ன நாம் அறியோம் பராபலனே.... பொறுத்திருந்து பார்ப்போம்...
:roll: :? :?: :!:
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>இந்திய நோக்கில் சமாதானம்...?</b>
.இந்திய அரசின் இலங்கையின் அரசியல் இயக்கம் மீதான ஆதிக்க நடவடிக்கைகள் மெல்ல மெல்லஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த வகையிலும்தலையிடாது என ஒரு பேச்சுக்கு அடிக்கடி வெளிப்படையாக கருத்துக்கூறிவரும் இந்திய அரசு இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு,வர்த்தகம் மற்றும் சமாதான முன்னெடுப்புக்கள் அனைத்துள்ளும்தனது சுய அபிலாசைகள் மற்றும் பிராந்தியாPதியிலான அரசியல் மற்றும் இராணுவ நலன்களுக்கேற்பதொடர்ந்தும் தன்மூக்கை நுழைத்துவருகின்றது.
இந்த விவகாரம் அண்மைக்காலமாக அதுவும் சமாதான நடவடிக்கைகள் ஒரு முட்டுக்கட்டை நிலையைஎட்டத் தொடங்கியபின் அதிகரித்த வேகத்தில் சற்று வெளிப்படையாகவே நிகழத்தொடங்கியுள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.1990களின் ஆரம்பத்தில் அதுவும் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்தின் பின் இலங்கைவிவகாரங்களில் ஒரு வித கோபம் கலந்த வெறுப்புணர்வுடன் எந்தவிதமான ஈடுபாட்டையும் வெளிப்படையாகக் காட்டாது ஒதுங்கியிருப்பது போன்று காட்டிக்கொண்டாலும் அனைத்துநிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானிக்கத் தவறியதில்லை.
சந்திரிகா அரசு பதவியேற்றபின்னர் அதுவும் மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமான பின்னர் இந்தியாவின் அணுகுமுறைகள் மீண்டும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில்முனைப்புக் கொள்ளத்தொடங்கின.போரின் தீவிரம் அதிகரித்தகாலங்களில் இலங்கையின் இறைமை உரிமை, ஒருமைப்பாடுபோன்றவற்றில் தனக்குப் பெரிதும் அக்கறையுடன் கூடிய ஆர்வம் இருப்பதாக இந்திய ஆளும்வர்க்கம்கூறத்தொடங்கியதுடன் இலங்கைக்கு இரா ணுவ மற்றும் பாதுகாப்பு hPதியிலான உதவிகளை தாமாகவேசெய்யமுன்வந்ததை சந்திரிகா அரசும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்தது.
யுத்தத்திற்கு உதவி அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உதவியென்ற பெயரில் மேற்குலகநாடுகள் குறிப்பாக அமெரிக்காவும், அதற்குச் சார்பான நாடுகள் இலங்கைக்குள் பல்வேறு வழிகளாலும் ஊடுருவி தம்மை இலங்கையின் ரட்சகர்களாக காட்ட முனைந்து கொண்டிருந்த வேளை யில்,அதனை முறியடிக்கவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது.இந்தியாவுக்கு எதிரான போக்குடைய பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுதாPதியிலான உதவி களை செய்துகொண்டிருந்தமையும், இந்தியாவினால் சகித்துக் கொள்ள முடியாத விடயமாக இருந்ததில் வியப்பில்லை.
ஆனையிறவு விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து யாழ்.குடாநாடு புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டபோது குடாநாட்டினுள் நிலைகொண்டிருந்த சுமார் 30,000 க்கும் அதிகமான படையினரைக் காப்பாற்ற இந்தியாவின்கால்களில் விழுவ தைத் தவிர சந்திரிகாவுக்கு வேறுவழியிருக்கவில்லை. இது இந்தியா -இலங்கைமீது தனது மேலாதிக்கத்தை மீண்டும் செலுத்த வாய்ப்பான சூழலை உருவாக்கிக்கொடுத்தது.
ரணில் ஆட்சிக்கு வந்ததும் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமாதான சூழலை ஏற்படுத்தியபோது, அதன்பின்னணியில் அதாவது சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட நோர்வேயின் வருகையுடன் மேற்குலகின்அதாவது, அமெரிக்க சார்பு நாடுகளின் உறவுகள் இலங்கை அரசுடன் வலுப்பெறத்தொடங் கியது.இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாத ஒன்றாகும்.மேற்குலக ராஜதந்திரம் சமாதான நகர்வுகளில் இந்தி யாவை தாம் புறக்கணித்துச் செயற்படவில்லைஎன்ற தோற்றத்தை உருவாக்கி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இந்தியாவுக்கு அனைத்தையும்உடனுக்குடன் தெரிவித்துக் கலந்து ரையாடியபோதிலும் இந்தியா அதில் திருப்தி கொண்டதுகிடையாது.
இந்த சமாதான முயற்சி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரோபாயத்தின் முக்கிய அம்சம் என்றே இந்தியா உணர்ந்திருந்தால் அதனை ஆதரிப் பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டாலும் மறைமுகமாகஅத னை எதிர்க்கவும் அமைதி முயற்சிகளைக் குழப்பவும் சந்திரி காவை - அதாவது ஜனாதிபதியைதனக்கான கருவியாக பயன்படுத்திக்கொண்டது.சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பம் சமாதானத்தைப் புறந்தள்ளியதில் இந்தியாவுக்கு உண்டான திருப்தியை அண்மைக்காலத்தில் இந்திய ராஜதந்திரிகளான தீக்ஷீத், ராஸ்கோத்ரா, முனி ஆகியோர் வெளியிட்ட நுட்பமான கருத்துக்கள்வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் ஹிந்தித்துவ கோட்பாட்டை ஆதரித்து முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தடுக்கமுடியாது மௌனம் காக்கும் பாரதீய ஜனதா அரசு இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுூப் ஹக்கீமை அழைத்துப்பேசி முஸ்லிம்களுக்காக உருகுவது வேடிக்கையான விடயம்.சமாதான முயற்சியை குழப்பும் ஒரு சாதனமாகவே முஸ்லிம் காங்கிரசையும், ஹக்கீமையும் இந்தியா கையாளத்தொடங்கியுள்ளது, இரகசியமான விடயமல்ல.
இதேவேளை, ஒரு காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்த ஜே.வி.பி யை இந்தியா தனது காலடியில் விழவைத்தமையானது சமாதானத்துக்கு எதிரான சக்திகளை இந்தியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தொடங்கிவிட்டமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆக இலங்கையில் சமாதானம் என்பதை இந்தியா நியாயமான முறையில் அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதையே அண்மைக்கால அதன் செயற்பாடுகள் உணர்த்துவதாக உள்ளது.இது இந்திய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஒரு தீர்வை திணிக்க முயலும் இந்திய ஆளும்வர்க்கத்தின் ஆழ்மனநோக்கம் இன்னமும் மாறவில்லை என்பதை உணர்த்தவே செய்கிறது
நன்றி: நமது ஈழநாடு (19.01.2004)
http://www.eezhanaadu.com/achieves/1901200.../editorial.html
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>பாதுகாப்பு உடன்படிýக்கை குறித்து 'பனிப் போர்"</b>
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை அடுத்த மாத (பெப்ரவரி) இறுதியில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரியவரும் நிலையில், இந்த உடன்படிýக்கை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க தரப்பிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையே 'பனிப் போர்" (ஊழடன றுயச) ஒன்று முன்னெடுப்பதை அவதானிக்கக் கூýடிýயதாக இருக்கிறது.
கடந்த வருடம் அக்டோபரில் புதுடிýல்லிக்கு மேற்கொண்டிýருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை தொடர்பிலான யோசனைகளை முன்வைத்து பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளையும் முடுக்கிவிட்டிýருந்தார். ஆனால், நவம்பரில் விக்கிரமசிங்க அமெரிக்காவில் இருந்தவேளை பாதுகாப்பு அமைச்சைத் தன் வசமாக்கிக் கொண்டு 'அதிரடிý அரசியல் நடவடிýக்கையில" இறங்கிய திருமதி குமாரதுங்க, இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்படிýக்கை குறித்து நடவடிýக்கைகளை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தலைமையிலான குழுவினரை இரு வாரங்களுக்கு முன்னர் புதுடிýல்லிக்கு அனுப்பிய திருமதி குமாரதுங்க, உடன்படிýக்கை ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் தீவிரப்படுத்தியிருந்தார்.
தங்களால் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு உடன்படிýக்கை யோசனைகளைச் சாத்தியமாக்கி, ஜனாதிபதி பெயரெடுத்துக் கொண்டு அனுகூýலம் அடையப் போகின்றார் என்பதே, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பினருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூýறப்படுகிறது.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கையை செய்து கொள்வதன் அரசியல் அனுகூýலத்தை ஜனாதிபதி தரப்பு அடைந்துவிடக்கூýடாது என்பதில் பிரதமர் தரப்பு வெகு அக்கறையாக இருக்கிறது என்பதைச் சில அண்மைக்கால செயற்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றன. சிறில் ஹேரத் தலைமையில் அண்மையில் புதுடிýல்லிக்கு அனுப்பப்பட்டிýருந்த குழுவில் சட்ட மா அதிபர் திணைக்கள, திறைசேரி அதிகாரிகளோ உள்ளடக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை செய்துகொள்வதை தாமதிக்குமாறு (தற்போதைய கொழும்பு அரசியல் நெருக்கடிý நிலையைக் காரணமாகக் காட்டிý) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக பிரதமர் விக்கிரமசிங்க தரப்பினர் விடுத்த வேண்டுகோள்கள் எதிர்பார்த்த பலனைத் தராததையடுத்து, அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான பொருளாதார மறுசீரமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் மிலிந்த மொரகொடவை பிரதமர் அவசரமாக புதுடிýல்லிக்கு அனுப்பி, வைத்திருக்கிறார் என்று நம்பகமாகத் தெரிய வருகிறது.
இதன் பிரகாரம் புதுடிýல்லியில் நேற்றுச் சனிக்கிழமை காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கும் மிலிந்த மொரகொட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை மற்றும் பல்வேறு அரசியல் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடிýயிருக்கிறார். மேற்படிý சந்திப்பில் அதிகாரிகள் மட்டத்திலான எவரும் கலந்து கொள்ளாத அதேசமயம், இது சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்க செய்தியாளர்கள் எவரும் கூýட அனுமதிக்கப்படவில்லையெனத் தெரிய வருகிறது.
இந்த இழுபறி நிலைமை குறித்து நேற்றுத் 'தினக்குரல்"க்குக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவிற்கு நெருக்கமான ஒருவர், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பெப்ரவரி மாத இறுதியில் கைச்சாத்திடப்படுமென்றும், ஜனாதிபதியிடம் இதற்கான இணக்கத்தை புதுடிýல்லி அறிவித்திருக்கிறதென்றும் கூýறினார்.
ஜனாதிபதி மேற்கொண்ட இந்த நடவடிýக்கைகளுக்கு எதிராக இந்திய அரசியல் தலைமைத்துவத்திற்கு பிரதமர் தரப்பு பல்வேறு வழிகளில் அழுத்தத்தினை வழங்கினாலும் அவற்றைப் புதுடிýல்லி நிராகரித்திருப்பதாகச் சொன்ன அவர், பாதுகாப்பமைச்சர் மற்றும் நாட்டிýன் தலைவி என்ற அடிýப்படையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு (பாதுகாப்பு ஒப்பந்தம்) ஒத்துழைப்பு வழங்குவதென்ற புதுடிýல்லியின் தீர்மானம் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினூடாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் கூýறினார்.
மாகாண சபை அல்லது பொதுத் தேர்தலொன்று வரும் சூýழ்நிலையில், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கையினை ஜனாதிபதி மேற்கொண்டால், அது அவருக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கிவிடுமென ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அச்சப்படுவதாக அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.
நன்றி: தினக்குரல்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
[b]தலைநகரில் தமிழ் அவதானிகளுடன் இந்தியதூதரக அதிகாரிகளின் சந்திப்புகளின் பின்னணி?
இலங்கை இன நெருக்கடிýக்குத் தீர்வைக் காண்பதற்கான சமாதான முயற்சிகளில் தன்னை நுழைப்பதை பல வருடங்களாக தவிர்த்து வந்ததன் விளைவாக இலங்கை விவகாரங்களில் ஏதோ ஒரு வகையில் 'முக்கிய அந்தஸ்தில்" இருந்து ஓரங்கட்டப்பட்டிýருந்த இந்தியா இப்போது, அந்த முயற்சிகளில் சம்பந்தப்படுவதற்கு தன்னாலான பிரயத்தனங்களைச் செய்து வருவதை அவதானிக்கக் கூýடிýயதாக இருக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன்னர் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்ததை இந்தியத் தரப்பினரால் சகித்துக் கொள்ள முடிýயாமல் இருந்தது இரகசியமான ஒரு விடயமேயல்ல.
இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளைப் பரிசீலனை செய்வதற்கான கலந்தாலோசனைகள் என்ற வடிýவில் மீண்டும் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், கடந்த நவம்பர் ஆரம்பத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட'அமைச்சுக்கள் பறிப்பு அதிரடிý நடவடிýக்கைகள" அந்த எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் தகர்த்து விட்டிýருந்தன.
இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ளும் ஒரு வியூகமாகவே, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த கையோடு திருமதி குமாரதுங்க 'அதிரடிý அரசியல் நடவடிýக்கைகளை" மேற்கொண்டார் என்றும் இது விடயத்தில் இந்தியாவின் 'ஆசீர்வாதம" அவருக்கு மிகவும் தாராளமாகவே கிடைத்திருந்தது என்றும் அப்போதே பேசப்பட்டது.
சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க ஆவல் கொண்டிýருப்பதாக ஜனாதிபதி தரப்பு என்னதான் கூýறிக் கொண்டிýருந்தாலும், அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவான சூýழ்நிலைகள் எதுவிதத்திலும் தோன்றுவதைத் தடுக்கும் வகையிலான முனைப்புடனேயே காரியங்கள் கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிýருப்பதை அவதானிக்கக் கூýடிýயதாகவிருக்கிறது.
சமாதான முயற்சிகளை ஜனாதிபதியின் }லங்கா சுதந்திரக் கட்சியை விடக் கூýடுதலான அளவுக்கு கர்ணகடூýரமாக எதிர்த்த ஜனதா விமுக்திப் பெரமுனையை ஜனாதிபதியின் கட்சியுடன் 'முடிýச்சுப் போட வைத்த" பின்னணியிலும் சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூýடாதென்பதில் உறுதியுடன் செயற்படும் தரப்பினரே இருக்கின்றனர் என்பது வெளிப்படையானது.
இந்த வியூகங்களின் பின்னணியில் இந்தியத் தரப்பின் நம்பிக்கையூட்டல்களும் கணிசமானளவுக்கு உதவியிருப்பதாக நம்பாமல் இருக்க நியாயம் இல்லை. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் ஜனாதிபதி தரப்பு காட்டும் அதீத ஆர்வமும், அவசரமும் இந்தக் கருத்துக்கே வலுச் சேர்ப்பதாக இருப்பதை நிராகரிக்க எவராலும் முடிýயாது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் சிரேர்;ட அதிகாரிகள் இனநெருக்கடிýத் தீர்வில் அக்கறையுடன் கருத்துகளை வெளிப்படுத்திவரும் தலைநகரில் உள்ள சில தமிழ் அவதானிகளையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடிýயிருக்கிறார்கள்.
இச் சந்திப்புகளின் போது அலசப்பட்ட விடயங்களை அடிýப்படையாகக் கொண்டு நோக்குகையில், சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூýடிýய சூýழ்நிலை உருவாகுமோ இல்லையோ, இலங்கை இனநெருக்கடிý விவகாரத்தில் இனிமேலும் விலகிநிற்கும் ஒரு தரப்பாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை என்பதை உணரக்கூýடிýயதாக இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூýறுகிறார்கள்.
அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் கூட ஏதோ ஒரு மட்டத்தில் தொடர்புகளை ஆரம்பிக்க இந்தியத் தரப்புக்கு ஆர்வம் இருப்பதை இந்த உயர்ஸ்தானிகரக அதிகாரிகளின் கருத்துகள் புலப்படுத்துவதாகவும் கூýறப்படுகிறது.
நன்றி: தினக்குரல்
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) :mrgreen:
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
Quote:நேற்றிரவு, மன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில், எண்ணுறுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனவும், இவற்றிற்கு இந்திய கடலோரக் காவற்படையினர் பாதுகாப்பு வழங்கினர் எனவும், மன்னார் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று, நேற்று முன்தினமும், வடமராட்சிக் கடற்பரப்பில், இந்தியக் கடலோரக் காவல்படையின் துணையுடன், நூறுக்கும் மேற்பட்ட இழுவைப்படகுகள், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: Tamildailynews (20.01.2004)
இதன் நோக்கம் என்ன நாம் அறியோம் பராபலனே.... பொறுத்திருந்து பார்ப்போம்...
<b>சர்வதேச கடற்பிராந்திய சட்டத்தை மீறிவரும் இந்திய கரையோர கடற்படையின் நடவடிக்கை</b>
பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் வடபிராந்திய மீனவர் சமுதாயம்
இருபது வருட யுத்தத்தின் விளைவாக ஏனைய சமுதாயங்களைப் போல் மீனவர் சமுதாயமும் அவலங்களையும், துயரங்களையும் மிகவும் கடுமையாக எதிர்கொண்டது.
வடபிராந்திய மீனவர் விடயத்தை 'இரு கோண" பிரச்சினையாக இருபது வருடங்களாகக் கருத வேண்டியிருந்தது. சமீப காலமாக இந்த விடயம் 'முக்கோணப்" பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. காலப்போக்கில் முக்கோணப் பிரச்சினையும் மாறி சர்வதேசப் பிரச்சினையாக எழப்போகின்றது.
இரு கோணப் பிரச்சினை
இந்த விடயத்தில் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களையும், மன்னார் மாவட்ட மீனவர்களையும் பற்றிப் பார்க்கவேண்டும். யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து மன்னார் மாவட்டத்திலும், யாழ்.குடாநாட்டிலும் சிங்கள இராணுவமும், கடற்படையினரும் அதிகமாக நிலைகொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை இந்த இரு மாவட்ட மீனவர்கள் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மிக மோசமான கட்டுப்பாடுகளை மீனவர்கள் மீது இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலிஸாரும் திணித்தார்கள.
இவ்விதமான மிகவும் படுமோசமான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டபடியினால் அவர்களுடைய வருமானம் மிகக் குறைந்து அதன் விளைவாக வறுமையில் வாடினார்கள். தற்பொழுதும் வறுமையை அனுபவிக்கிறார்கள். சிங்களப் படையினர் விதித்த கட்டுப்பாடுகள் மூன்று வகைப்படும்.
இப்பகுதி மீனவர்கள் கரையோரப் பகுதியில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதியுண்டு.
படையினரால் விதிக்கப்பட்ட குறித்த நேரங்களில் மட்டுமே மீனவர்கள் தங்கள் தொழிலில் ஈடுபடலாம்.
மீனவர் பாவிக்கும் இயந்திரப் படகுகளில் மிகவும் சக்தி குறைந்த இயந்திரத்தையே உபயோகிக்க வேண்டும். இதன் விளைவாக மீனவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
உதாரணமாக: 1988 ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டில் 14 702 தொன் மீன்களை மீனவர்கள் பிடித்தார்கள். ஆனால், 1996 ஆம் ஆண்டு இவ்விதமான கடுமையான கட்டுப்பாடு காரணமாக 1540 தொன் மீன்கள் மட்டுமே யாழ்.குடாநாட்டில் பிடிக்கப்பட்டன.
ஆனால், மன்னார் மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு 9050 தொன் மீன் பிடித்தார்கள். 1995 ஆம் ஆண்டு 4577 தொன் தான் அவர்கள் பிடித்தார்கள். இது அரசாங்க மீன்பிடித் திணைக்களத்தின் புள்ளிவிபரம். இதிலிருந்து அறியக் கூடியது யாதெனில், சிங்கள இராணுவம் தமிழ் பிராந்தியத்தில் மீன் வளம் நன்றாக இருந்தபொழுதிலும் அவற்றை அனுபவிக்க முடியாத முறையில் தமிழ் இன ஒழிப்பின் படனமாக இவ்விதமாக மனிதாபிமானத்துக்கு முரணாகக் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். ஆகவே இது சிங்களப் படையினரால் தமிழ் மீனவர்களுக்குத் திணித்த பொருளாதாரப் பிரச்சினை.
முக்கோணப் பிரச்சினை
இருபது வருட காலமாக சிங்கள இராணுவத்துக்கும் தமிழ் மீனவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை இரு கோணப் பிரச்சினை. ஆனால், தற்பொழுது விரும்பத்தகாத தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கோணப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது.
யாழ்.மாவட்ட மீனவர்களும், மன்னார் மாவட்ட மீனவர்களும் அவர்களுடைய கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் எமது அயல்நாட்டு இந்திய மீனவர்கள் எமது கடல் பிராந்திய இறையாண்மையையும் அத்துமீறி எங்கள் கடலில் எங்களுடைய மீன் வளங்களை பகற்கொள்ளை அடித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான கடற்பிராந்தியத்தில் மீன்வளம் வற்றிப் போன காரணத்தினால் எங்கள் கடலில் வந்து எங்கள் மீன் வளங்களை அபகரித்துச் செல்கின்றனர். இந்த அயல்நாட்டு மீனவர்களுடைய செயற்பாடு நீதிக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் முரண்பட்ட செய்கை. இதை சுருங்கக் கூறுவதாயின் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எங்கள் மீனவரின் கதை மாறிவிட்டது.
சில காலமாக இந்திய மீனவர்கள் எங்கள் கடலில் பிரவேசித்து மீன்பிடிப்பதை அவதானித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை கைப்பற்றியும், பொலிஸார் மூலம் வடபிராந்திய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்ற விசாரணை நடக்கும் பொழுது சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸார் வழக்குகளை வாபஸ் பெற்றனரென பத்திரிகைகள் மூலம் செய்திகள் வெளிவந்தன. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் இந்திய கரையோரக் கடற்படையிடம் கொடுத்து விட்டனர். ஆகவே, இந்த விவகாரத்தில் அரசியல் காரணமாக சட்டம் தன் கடமையைச் செய்யமுடியவில்லை.
இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பிரதேசத்தில் தற்செயலாக சென்று மீன்பிடித்தால் பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து அநேக வருடங்கள் சிறையில் தள்ளும். இதேமாதிரி தான் பாகிஸ்தான் மீனவர்களும் தற்செயலாக இந்தியக் கடல் பிரதேசத்தில் மீன்பிடித்தால் இந்தியக் கடற்படை அவர்களைக் கைது செய்து அநேக வருடங்கள் சிறையில் தள்ளும். ஆனால், இலங்கையில் அரசியல் காரணங்களுக்காக 48 அல்லது 72 மணித்தியாலயங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்.
சில சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்களின் சட்ட மீறல்களை பொறுக்கமுடியாத மீனவப் பொதுமக்கள் அத்துமீறிச் செயலில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றனர். இதன் பிரதிபலிப்பாக வடமராட்சிக் கடலில் அவர்கள் நூற்றுக்கணக்கான இந்தியப் படகில் வந்து எங்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பாக இந்திய கரையோரக் கடல் படையும் வந்து நிற்கின்றது எனச் செய்திகள் வெளியாகின்றன.
இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் இந்திய மத்திய அரசின் செயற்பாடு இலங்கையின் இறையாண்மையை ஆக்கிரமித்து விட்டதென்பதே கருத்து. அது மட்டுமல்ல இந்தியக் கரையோரக் கடற்படை இந்திய கடற்பிராந்தியச் சட்டத்தை மீறுவதல்லாமல் சர்வதேச கடல் பிராந்தியச் சட்டத்தை மீறிய அப்பட்டமான செயலாகவே அமையும். இது இந்தியாவினுடைய பகிரங்க ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துகின்றது. இந்த விடயத்தில் இலங்கைக் கடற்படையோ, இலங்கை அரசாங்கமோ, ஜனாதிபதியோ ஒருவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.
தமிழ் பிரதேச பாராளுமன்ற அங்கத்தவர்கள் விசேடமாக மன்னார், யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்ன காரணத்துக்காக மௌனம் அனுர்;டிக்கிறார்கள் என்பது புரியவில்லை? இந்தியாவினுடைய மிரட்டல்களுக்கு தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பயந்து விட்டார்களோ என்று சந்தேகிக்க இடமுண்டு. இந்திய கரையோரக் கடற்படையினர் எங்கள் கடலில் நிலை கொண்டது உண்மையாயிருந்தால் இது ஒரு பாரதூரமான ஆக்கிரமிப்பு. இந்தியா, இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடமுன் இப்படி நடந்தால் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் எவ்விதமான ஆக்கிரமிப்பு நடக்குமென்பதை எண்ணிப் பார்க்கலாம்.
சிங்கள அரசாங்கம் தமிழ் கடல் பிராந்தியத்தையும் அதனுடைய இறையாண்மையையும் இந்தியாவுக்குத் தாரை வார்த்து விட்டதா என்ற சந்தேகம் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனுக்கும் உதயமாகின்றது. இவ்விதமான நிகழ்வுகள் நடக்குமென்ற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகளால் ஏற்படுத்திய இடைக்கால தன்னாட்சி வரைவில் அம்பாறையிலிருந்து புத்தளம் வரையுள்ள தமிழ் கடற்பிராந்தியம் தமிழருக்கு மாத்திரமே சொந்தமாயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த யோசனையிலுள்ள உள் நோக்கங்களையும், தூரதிர்;டிப் பார்வையையும் கொழும்பிலுள்ள தமிழ் புத்திஜீவிகள் உணரமுடியுமா?
இந்திய மீனவர்கள் எமது கடலில் வந்து எங்கள் மீன் வளங்களை அபகரித்துச் சென்றால் தற்பொழுது வறுமையில் வாழும் எங்கள் மீனவர்கள் இனிமேல் பட்டினிச் சாவைத் தான் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு அரசியலை கலக்காமல் மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும்.
யாழ். மாவட்ட, மன்னார் மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களும், மனித உரிமை ஸ்தாபனங்களும், பொதுஜன அமைப்புகளும் சமயப் பெரியோர்களும் வடபிராந்திய புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எங்கள் கடலில் இந்திய மீனவர்கள் அத்துமீறி, மீன்பிடிக்க விடப்படலாகாதென்ற மகஜரை அவசரமாக அனுப்புவது முதற்கடமை. இரண்டாவதாக இவர்கள் இந்தியப்பிரதமருக்கும் இங்கேயுள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இதுபற்றி மகஜர் அனுப்ப வேண்டும். இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பொழுது எமது தமிழ் பிரமுகர்கள் இப்பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாகக் கருதி ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஓர் அவசர கடிதம் அனுப்புவது முக்கிய கடமையாகும். ஐ.நா. மனித உரிமைக்குழுத்தலைவருக்கும் இவ்விடயம் பற்றித் தெரிவிப்பது மிகவும் சாலச்சிறந்தது. ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிய மகஜர்களின் பிரதிகளை இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு அனுப்புவது அவசியம்.
ஐ.நா. இயற்றிய கடல் சட்ட விதிகளின்படி ஒரு நாட்டினுடைய கடல் பிராந்திய இறையாண்மையை பன்னிரண்டு கடல் மைல் வரையுண்டு என்பது தெரிந்த விடயம். ஆனால், நாடுகள் இருநூறு கடல் மைல் வரை பொருளாதார வலயமாகப் பாவிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடல்வெளி மிகவும் குறுகியதென்ற காரணத்தினால் இடைவெளியில் அரைவாசி இலங்கைக்கும் அரைவாசி இந்தியாவுக்கும் சொந்தமென்று கருதுவது தான் யதார்த்தம். இதுதான், சர்வதேச கடல் பிராந்தியச்சட்டம். இந்த விதிகளுக்கு அமையவே இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.
இலங்கையில் தற்பொழுது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கின்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோர்வே நாட்டுப் பிரதிநிதிகள், கண்காணிக்கின்றனர். ஆகவே, நோர்வே அரசாங்கத்தின் ஒத்தாசையுடன் இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளமைப்பு, இந்திய மத்திய அரசு கொழும்பில் ஒரு மகாநாட்டில் பங்குபற்றி ஒரு தீர்வைக் காணுவது அவசியம். ஆனால், யதார்த்தத்தை மறந்து இந்தியா விடுதலைப்புலிகள் பங்குபற்றும் மகாநாட்டில் தாங்கள் பங்குபற்ற மாட்டோமென்று கூ றினால் அது மனிதாபிமான செயலுக்கு முரண்பாடானதாகக் கருதமுடியும்.
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் வந்து மீன்பிடிப்பதை அனுமதித்தால், நாளை பாகிஸ்தான் மீனவர்களும் இங்குவந்து மீன்பிடிப்பார்கள். அதுபோல் தாய்வான் படகுகளும் தாய்லாந்து படகுகளும் நிச்சயம் எங்கள் கடலில் வந்து அவர்களும் மீன்பிடிப்பார்கள். ஆகவே இந்தியா, பாகிஸ்தான், தாய்வான், தாய்லாந்து நாட்டினர் எங்கள் கடலில் வந்து மீன்பிடிக்க முடியும். எங்கள் கடலில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அநேக கட்டுப்பாடுகள் உண்டு. ஆகவே, இது நீதி, நியாயம், நேர்மைக்கு முரண்பாடான செயல்பாடு. தன்மானமுள்ள தமிழன் இதை பொறுத்துக் கொண்டும் சகித்துக்கொண்டுமிருக்கமாட்டான்.
நன்றி: தினக்குரல் (தில்லைக்கூத்தன்)
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
[b]சந்திரிகா - ரணில் அதிகாரப் போர் நிழல்..............
இந்திய - அமெரிக்க பனிப்போர் நிஜம்.............
இலங்கை அரசியல் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இலங்கை மீதான இந்திய - அமெரிக்க ஆதிக்கப்போட்டியாக உருவெடுத்துள்ளது போல் தெரிகிறது. பின்னது நிஜயவடிவம் என்றால், முன்னது அதன் நிழல் வடிவம் என்றே கூறும் வகையில் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.
இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதான ஆதிக்கத்தை தம்வசம் வைத்துக்கொள்வதில் இந்தியாவும், அமெரிக்காவும் காட்டும் அக்கறையானது எதிர்காலத்தில் அவர்களது இராணுவ மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலான தொன்றாகும்.
அவர்களின் இந்தத் தேவையானது, இரு தரப்புக்கிடையேயான ஒரு ராஜதந்திர யுத்தமாக மாறுமளவிற்கு நிகழ்வுகள் யாவும் இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தி நடந்துவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ரணில் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் அரசுடனான தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டதையடுத்து, இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு நெருக்கடி ஏற்பட அரம்பித்தது.
இனப்பிரச்சினைக்கான சர்வதேச அனுசரனையுடனான பேச்சுவார்த்தை நீண்ட காலம் தொடர்வதற்கு சாத்தியம் இருக்காது எனவும், விடுதலைப்புலிகள் அதனை எப்படியாவது குழப்பி மீண்டும் போர் நிலையொன்றைத் தோற்றுவித்து விடுவார்கள் என்ற தப்புக்கணக்கை இந்தியா போட்டதன் காரணமாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் குறித்து அக்கறை காட்டாது இருந்துவிட்டது.
ஆனால் இந்திய மதிப்பீட்டிற்கு மாறாக, பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்களின் விடுதலைப்புலிகள் காட்டிய விசுவாசமான ஆர்வம் இந்திய நினைப்புக்கு மாறான நிலைமைகைள தோற்றுவிக்க காரணமாயிற்று.
பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு சர்வதேச hPதியில் கிடைந்து வந்த அபரிமிதமான ஆதரவும், அளித்துவந்த ஊக்கமும், இந்தியா எதிர்பார்க்காத ஒன்றேயாகும். இன்னும் தெளிவாகக் கூறுவதானால் சமாதான முயற்சிகளில் விடுதலைப்புலிகள் காட்டிவந்த விரும்பமும் அவர்கள் காட்டிய பொறுமையும், கையாண்ட ராஜதந்திர hPதியிலான உத்திமுறைகளும் சர்வதேச நாடுகளின் கவனத்தை வன்னிநோக்கி தீர்க்கமாக திருப்பச் செய்தமையானது இந்தியாவால் சகிக்க முடியாத விடயமேயாகும்.
இந்த சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் பின்புலத்தில் அமெரிக்காவின் வலுவான அறிவுறுத்தலும் நெறிப்படுத்தலும் இருந்துள்ளதை இந்தியா நன்கு அறிந்து கொண்டபோதும், அதனை உடனடியாக ஊடுருவித் தனது ஆளுமையை அதற்குள் ஆழமாகப் பதித்துக்கொள்ள சரியான வாய்ப்புக்கிடைக்காததால் காலம் வரும் வரை பார்த்திருந்தது என்றால் மிகையாகாது.
இதேவேளை அமெரிக்காவின் அணுகுமுறையானது இந்தியாவை புறந்தள்ளுவதாகவோ, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் இந்தியாவுக்கான பங்கு நிராகரிப்பதாகவோ வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. இந்தியாவை சமாதான நடவடிக்கைகளுடன் ஒன்றினைத்துச் செல்வது போன்று தோற்றம் காட்டும் உத்திமுறைகளைக் கையாண்டதால், இந்தியாவாலும் எதுவுமே உடனடியாகச் செய்ய முடியாது போயிற்று. எனினும் நிலைமைகளின் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருந்ததுடன் தனது நியாயமான தலையீடு ஒன்றை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கும் மறைமுகச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தது.
தனது இந்த மூலோபாயத்தை செயற்படுத்த பிரதமருக்கு எதிரான அதிகார மிக்க சனாதிபதியை இந்தியா பயன்படுத்த முயன்ற அதேவேளை, ரணிலுக்கும் அவர் முன்னெடுக்கம் சமாதான முயற்சிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் தனது ஈராண்டு கால வேட்கையைத் தணித்துக்கொள்ள சமாதானத்தை நகர்த்தி முன்னேற்ற ஆதரவு பலமாக இருக்கும் அமெரிக்க ஆதரவு சர்வதேச சமூகத்தை விரும்பாத இந்தியாவை தனது இலக்கினை எட்ட சந்திரிகா பயன்படுத்த முயன்றதும் தெரிந்த விடயங்களேயாகும்.
இந்த நடவடிக்கைக்காக சந்திரிகாவால் தேர்ந்தெடுக்க்பபட்ட ராஜதந்திர வேறு யாருமல்ல லக்ஸ்மன் கதிர்காமரே தான்.
சந்திரிகாவின் அதிகார அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் சமாதான முன்னேடுப்புகளில் இருந்து ரணில் விலகுவதாக வெளிவந்த அறிவிப்பு சமாதான முன்னெடுப்புக்களை சந்திரிகாவே பொறுப்பேற்கவேண்டும் என்ற ரணிலின் கோரிக்கை அதிகாரபலம் கொண்ட அரசுடன்தான் இனிப்பேச்சுக்களைத் தொடரமுடியும் என்ற விடுதலைப்புலிகளின் அறிவிப்பு ஆகியன சிறிலங்காவின் பிரச்சினைகளுள் சந்திரிகாவை ஊடுருவல் ஊடகமாகப் பயன்படுத்தி உள்நுழைய இந்தியாவுக்கு போதுமான காரணிகளாகிவிட்டது.
சந்திரிகா அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண பிரதமர் ரணிலுடன் விரைவாக இணக்கத்திற்கு வருமாறு விடுக்கப்பட்ட அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு சந்திரிகா கொஞ்சமேனும் அசையவில்லை.
இதற்கு அவர் வசமிருந்த நிறைவேற்று அதிகாரபலமும், இந்தியாவின் வலுவான ஆதரவுப் பின்னணியும்தான் காரணம் எனலாம். இப்போது இந்தியத் தலையீட்டுக்கான சமாதான சூழல் ஒன்றை சந்திரிகா உருவாக்கிவிட்டுள்ளார் என்றே கூற வேண்டும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்கென ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஏனைய சில ஜரோப்பிய நாடுகளும் ராஜதந்திரிகள் அடங்கிய குழுக்களை அனுப்பமுயன்று வரும் இவ்வேளையில், அதற்கு முன்னர், இந்த அமெரிக்கச் சார்பு நாடுகளின் முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையாக சனாதிபதியும் பிரதமரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தலைப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது இந்தியாவின் மற்றொரு ஊடுருவல் தந்திரோபாயமாகும். இதன் மூலம் இத்தகைய முயற்சியை ஏற்கெனவே வேறுவேறு வழிமுறைகளில் ஆரம்பித்துவிட்டுள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் தமது முயற்சிகளைக் கைவிடவோ ஒதுங்கிப் போகவோ ஒத்திப்போடவோ நேரிடலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சந்திரிகாவையும் ரணிலையும் ஒற்றுமைப்படுத்துவதென்பது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக இந்தியா எடுக்கும் ஆத்மார்த்தமான முயற்சியாக நிச்சயம் இருக்காது.
இதன் பிரதான நோக்கம் இலங்கை மீதான தனது ஆதிக்க வலுவை இந்தியா நிரூபிக்க முயலுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளை இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாப்பதற்கான முறையில் நகர்த்துவதாகவுமே இருக்கும். நிச்சயமாக இந்த முயற்சி சந்திரிகாவின் அரசியல் நலன்களை பாதுகாப்பதற்காகவும் அமையும் என்பதில் ஜயமில்லை.
இதில் இந்தியாவின் சொல்லை சந்திரிகா கேட்பார். ஆனால் ரணில் அதற்கெல்லாம் உடன்படுவாரா என்பது விடைகாண முடியாத கேள்வியாகும். ரணில் இந்திய அணுகுமுறைக்கு ஒப்புதல் அளித்தால் அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் ஆதரவை இப்போதிருக்கும் அளவுக்கு அவரால் பெறமுடியாமல் போகும்.
ரணிலின் அரசியல் எதிர் காலத்திற்கு இது பாதிப்பாகவும் அமையும். எனவே ரணிலின் முடிவு இந்த முயற்சிகளில் இந்தியாவுக்கு எதிராக அமையாவிட்டாலும், இந்தியாவின் முழுமையான அபிலாசைகளை நிறைவேற்ற உதவியாக அமையப்போவதில்லை என்பது தெளிவு.
எந்த வகையிலும் சந்திரிகா ரணில் ஒன்றுமையென்பது சாத்தியமானதாக இருக்காது. இருந்தாலும் நிரந்தரமானதாக அமையாது. இலங்கை மீதான தமது ஆதிக்கவலுவை இந்தியா ஊடுருவி சிதைப்பதை அமெரிக்காவும் விட்டுக்கொடுக்காது. ஆகவே இலங்கையில் சமாதான முயற்சிகள் இந்தப்புத்தாண்டிலும் இழுபறி நிலையில் தொடரும் சாத்தியமே உண்டு.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மட்டும் சமாதானம் மீதான பற்றுறுதியை உறுதிப்படுத்த தொடர்ந்து விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு பொறுமைகாக்க வேண்டுமென சர்வதேச சமூகம் நினைப்பதில் அர்தமுமிலலை. நியாயமுமில்லை.
நன்றி: தூரன் ஈழநாதம்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
என்ன ஈழநாதம் பத்திரிகையோ.. அப்ப நிழலும் நிஜம்மாதிரித்தான்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
இந்தியாவுடன் இலங்கை செய்து கொள்ளும்
பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு புலிகள் கடும் எதிர்ப்பு!.
புதுடில்லிக்கு மதியுரைஞர் பாலசிங்கம் அறிவிப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையும் எதிர்ப்பும் வெளி யிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் தற்போதைய சமாதான முயற்சிகளில் மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற் படுத்தும் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான தமது இயக் கத்தின் ஆட்சேபத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், நோர்வே ஊடாக இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
உத்தேச ஒப்பந்தம் அதிகாரச் சமநிலை விடயத்தில் புலிகளுக்குப் பாதகமான விளைவு ஏற்படுத்தும், இராணுவச் சமநிலையில் ஏற்படும் குழப்பம், இலங்கை சமாதான முயற்சி களுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்படிக்கையையே குழப்பி விடும்|| - என்று மதியுரைஞர் பால சிங்கம் நோர்வேத் தரப்புக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இந்தியாவுடனான இராணுவ ஒப்பந்தம், சிங்கள அரசியல் தலை மைத்துவத்தை தமிழர் தொடர்பாகக் கடுமையான - யுத்த முனைப்புடைய - போக்கைக் கடைப்பிடிக்கத் து}ண் டும். அது ஏற்கனவே முரண்பட்டிருக் கும் சமூகங்களை ஆற்றுப்படுத்தவும் அவற்றிடையே சமாதானத்தை வளர்க் கவும், மிக முக்கிய அடிப்படையாக விளங்கும் பரஸ்பர நம்பிக்கையை அடியோடு தகர்த்து விடும்|| - என்றும் விளக்குகின்றார்; பாலசிங்கம்.
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசி யல் நெருக்கடியால் சமாதான நட வடிக்கைகளுக்கு அபாயம் நேர்ந்துள்ள இந்த இக்கட்டான சமயத்தில், இரா ணுவ சம்பந்தப்பட்ட பாதுகாப்பு ஒப் பந்தம் ஒன்றை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தந்திரோபா யத் தேவை ஏதும் இந்திய அரசுக்கு உருவாகவில்லை|| - என்றும் பால சிங்கம் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய ஒப்பந்தம் தமிழர் களின் நலனுக்குத் தீங்கு விளைவிப் பதாகவும் அவர்களின் பேரம் பேசும் வலுவைப் பாதிப்பதாகவும் அமையும்|| எனவும் நோர்வே அனுசரணையாளர் ஊடாக இந்தியாவுக்கு அவர் தெரி யப்படுத்தியிருக்கின்றார்.
புலிகளின் இராணு வலிமையைச் சமாளிப்பதற்கு இத்தகைய இராணுவ ஒப்பந்தம் பயனுள்ள ஒரு பொறி என்று பிரசாரப்படுத்துவதன் மூலம் அரசி யல் லாபம் தேடும் விரக்தியின் முனைப் பில் இலங்கையின் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக் கிரமசிங்க ஆகிய இருவருமே உள் ளனர் என்றும் பாலசிங்கம் கூறினார்.
இந்த உத்தேச ஒப்பந்தம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏற்கனவே கவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச ஒப்பந்தம் தமிழரை அச்சுறுத்த முன்வைக்கப்படும் ஒரு பூச்சாண்டி. அது இந்த நாட்டின் இனப் புூசலில் வெளிநாட்டு சக்திகளை ஈடு படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்னும் சர்வதேச வலைப்பின்னலின் ஓர் அங்கம்|| - என்று கடந்த 14ஆம் திகதி ஷஉதயன்| பத் திரிகைக்கு அளித்த விசேட செவ்வி யில் தமிழ்செல்வன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இனப்புூசலுக்குள் பிற நாடு களை இழுப்பது நீண்டு செல்லும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்க லாக்கும்|| - என்று அவர் தெரிவித்தார்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எப்பலிருந்து Our India சும்மாதான் கேட்டன் சொறி பிரதர்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
இந்த [b]oh our india என்ற தலையங்கத்தில் பலகோடி சொல்லமுடியாத உணர்சிகள் புதைந்து கிடக்கின்றது..... உங்களுக்குள்ளும் நான் அறிவேன்... ஆனால் இது எனது நாழாந்த வாழ்கை நாட்குறிப்பாகும் எல்லாத்தையும் விட...... இது எனது தனிபட்ட ஏதோ ஓர் உணர்ச்சி ... :wink: :|
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
BBC Wrote:எப்பலிருந்து Our India சும்மாதான் கேட்டன் சொறி பிரதர் கொஞ்ச தமிழ்நாட்டுத்தமிழ்.. கொஞ்சம் மலையாளத்தமிழ்.. கொஞ்சம் கர்நாடகத்தமிழ்.. கொஞ்சம் ஆத்திரத் தமிழ்.. எல்லாம் சேர்ந்ததுதானே இலங்கைத் தமிழ்.. எண்டபடியால் Our India சொல்லுவதில் என்ன தவறு..?
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இல்ல India மத்தபாட்டி எண்டு சொல்லிட்ருந்தார் ஆனா சடுனா Our India எண்டு டொபிக் போட்டார். அதான் கேட்டனான்.
பிரைவேட்னா சொறி பொஸ்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடும் தருணம் வந்துவிட்டது
புதுடில்லியில் லடீ;மன் கதிர்காமர்
சமாதான நடவடிக்கைகள் மரணமடையும் கட்டத்தை எட்டிவிட்டதாகவும் இலங்கையின் விவகாரங்களில் இந்தியா ஆர்வம் காட்டுவதற்கான 'நேரம்" வந்துவிட்டதாகவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகருமான லடீ;மன் கதிர்காமர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா ஆர்வம் காட்டுவதற்கான நேரம் வருகிறது. அது தனது கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது, அது மறைமுகமாகவோ, தாழ்ந்த மட்டத்திலோ ஏதாவது ஒரு வழியில் எமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சமிக்ஞைகளை அனுப்ப ஆரம்பிக்க வேண்டுமென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.ஏ.என்.எஸ்.க்கு அளித்த பேட்டியில் லடீ;மன் கதிர்காமர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான தன்மை அண்மித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்ததை லடீ;மன் கதிர்காமர் நிராகரித்துவிட்டார்.
மடத்தனமான கதைகள் நிரம்ப இடம் பெறுகின்றன. இது யதார்த்தத்தை அவர் (டிரோன்) முற்று முழுதாக இழந்து விட்டதை வெளிப்படுத்துகின்றது என்றும் கதிர்காமர் கூறியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கதிர்காமரும் டிரோன் பெர்னாண்டோவும் அங்கு சென்றுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரலில் மாகாண சபைத் தேர்தல்கள் முடிவடைந்த பின் மாகாண அமைச்சுப் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதற்கு குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்ணனியும் இணங்கியிருப்பதாக டிரோன் பெர்னாண்டோ கூறியிருந்தார்.
அத்துடன், சகவாழ்வு ஏற்பாடுகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லவும் சமாதானப் பேச்சுவார்த்தையை அரசாங்கமும் புலிகளும் முன்னெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கு திருமதி குமாரதுங்கவும் ஏற்கனவே விபரமான செயற்திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அதன் பிரகாரம் தேசிய பாதுகாப்பு சபை அமைக்கப்படும் எனவும் அதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் ஜனாதிபதியின் கலந்தாலோசனையின் பேரில் வட கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடு பிரதமர் வசம் இருக்கும் என்றும் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக எந்த விதமான நம்பிக்கையும் இல்லை. தற்போதைய முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு ஜனாதிபதி முன்வைத்த நான்கு யோசனைகளையும் பிரதமர் நிராகரித்துவிட்டார் என்று கதிர்காமர் கூறினார். அவர் (பிரதமர்) நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார். சமாதான நடவடிக்கைகள் முடிவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டது என்றும் கதிர்காமர் கூறினார்.
1987-90 காலப்பகுதியில் இடம்பெற்ற இழப்பீட்டை ஏற்படுத்திய அனுபவத்தை இந்தியா மறந்துவிட வேண்டும் என்று கூறிய கதிர்காமர், இது பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வு. இப்போது முழு விவகாரத்திலும் இந்தியா புதிய கண்ணோட்டத்தைச் செலுத்த வேண்டும். இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், உங்கள் நலன்கள் எங்கிருக்கின்றது. பார்வையைச் செலுத்துங்கள் என்று கதிர்காமர் தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மற்றும் சிரேர்;ட அரசாங்க அதிகாரிகளை சந்தித்த கதிர்காமர் இலங்கையின் நிலைவரங்கள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
பிராந்தியத்தின் பூகோள அரசியலில் இந்தியா மேலாதிக்க சக்தியாக உள்ளது. நாம் யாவரும் இந்தியாவின் பாதுகாப்பு விடயங்கள் குறித்து மதிப்பளிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் சமாதான யோசனைகளில் ஏற்படும் தாக்கங்கள் இந்தியாவின் நலன் சார்ந்தவை என்பவற்றை கவனிக்க வேண்டும். அவை சமர்;டித் தீர்வுக்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளன என்று கதிர்காமர் கூறினார்.
கொழும்புக்கும், புலிகளுக்கும் இடையில் தீர்வொன்று எட்டப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு, இந்தியாவாலே முடியும். இந்தியா மௌனம் காத்ததால் இலங்கையின் விவகாரங்களில் நோர்வேயும், ஜப்பானும் தலையிடுகின்றன.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகளை இட்டு விடுதலைப் புலிகள் கவலையடைந்துள்ளனர். உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், கொழும்புக்கும் தமக்கும் இடையிலான இராணுவ சமநிலை இழக்கப்பட்டுவிடும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால், முன்னோக்கிச் செல்வதற்கு வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் கதிர்காமர் கூறியிருக்கின்றார்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
'இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிýக்கையை கைச்சாத்திடுவதில் இந்திய அரசு உறுதி"
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை பெற்றுக் கொள்வதில் புதுடிýல்லி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை நாட்டிýன் தலைவி மற்றும் பாதுகாப்பமைச்சர் என்ற அடிýப்படையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் செய்து கொள்வதில் இந்தியாவுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லையென்றும் ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான லடீ;மன் கதிர்காமர் நேற்று செவ்வாய்க்கிழமை தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு புதுடிýல்லியில் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சிங்ஹா, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமரின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஆலோசகர் பிரஜேஸ் மிர்;ரா ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த லடீ;மன் கதிர்காமர் கொழும்பு திரும்பிய பின்னர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவைச் சந்தித்து இந்த பேச்சுக்கள் பற்றி விளக்கிக் கூýறியிருக்கிறார்.
இந்தியாவிற்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட லடீ;மன் கதிர்காமர், இலங்கையின் அரசியல் நிலைவரம் குறித்து இந்தியா ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாகவும், உள்நாட்டு அரசியல் நெருக்கடிý சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே இந்தியாவின் அபிப்பிராயமாக இருக்கிறதென்பது இந்த சந்திப்புக்களில் புலப்பட்டதாகவும் கூýறினார்.
இந்திய - இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கை மேற்கொள்ளப்படுவது தாமதமாகும் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் இலங்கையின் அரசியல் நெருக்கடிý இதற்கு காரணமாக உள்ளதென்றும் கூýறப்படுவது உண்மை தானா என்று கேட்டபோது பதிலளித்த கதிர்காமர் மேற்படிý விடயங்கள் இந்த தாமதத்திற்கான சிறிய காரணங்களாகுமென கூýறினார்.
இந்திய- இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கையென்பது இரு நாட்டு அரசியல் தலைமைத்துவங்களுக்கிடையே செய்து கொள்ளும் ஒப்பந்தம் அல்லவெனக் குறிப்பிட்ட அவர், இது இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் என்பதால், இதுபற்றி மேலும் பல பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிýய தேவை உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான கால எல்லையினை நிர்ணயிக்க முடிýயாதுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பிரதமர் தரப்புடன் தான் செய்துகொள்ள வேண்டுமென்று புதுடிýல்லிக்கு மறைமுக அழுத்தங்கள் வழங்கப்பட்டிýருப்பது பற்றிக் கேட்ட போது பதில் கூýறிய கதிர்காமர் இதுபற்றி தமக்கு தெரியாதென்றும் ஆனால் திருமதி குமாரதுங்கவுடன் இந்த ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு புதுடிýல்லி தயாராக உள்ளதென்றும் கூýறினார்.
நன்றி: தினக்குரல்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூýட்டும் சவால்கள்</b>
இலங்கையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவே இருக்கும்
இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.
வைசராய், என கொழும்பில் (அவர் பணியாற்றிய காலகட்டத்தில்) வர்ணிக்கப்பட்டவரான கே.என்.தீக்ர்pத் புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப்போகும் 'அச்சமூýட்டும் சவால்கள்" என்ற தலையங்கத்தில் பத்தியொன்றை எழுதியிருக்கிறார்.
இணையத் தளமொன்றில் பிரசுரிக்கப்பட்டிýருக்கும் அதன் விபரம் வருமாறு:
தற்போது நடைபெற்று வரும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிýயான அரசியல் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிýயுள்ளமை தவிர்க்க முடிýயாததொன்றாகும்.
உரிய காலத்திற்கு முன்னரே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதென்ற ஜனாதிபதி குமாரதுங்கவின் தீர்மானம் எதிர்பார்க்கப்படாததொன்றல்ல. கடந்த இரு வருடங்களாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முறுகலான இணக்கத்தையே பேணி வந்தார்கள்.
இருவருக்குமிடையில் காணப்பட்ட அரசியல் கசப்புணர்வும் எப்பொழுதும் சச்சரவிடக்கூýடிýய நிலையும் வெளிப்படையாகத் தெரிந்ததொன்றாகும்.
குமாரதுங்கவின் பார்வைக்கு விக்கிரமசிங்கவின் விடுதலைப் புலிகளுடனான நேரடிýச் சமாதானப் பேச்சுகள் அதிக விட்டுக் கொடுப்புடன் நடைபெறுவதாகத் தோன்றியது. பெரும்பாலான சிங்கள மக்களின் கருத்தும் கூýட இதுவாகத் தான் இருந்தது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், விக்கிரமசிங்கவினது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி இலங்கையின் அரசியல் கட்சிகள் சிலவற்றால் எதிர்வு கூýறப்பட்டமை குறித்த ஒரு அம்சமாகும்.
விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுகளுக்கு முனைப்புக் காட்டுவது, அதை 2007 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரசியல் கோர்மாகப் பயன்படுத்துவதற்காகவே என்ற அடிýப்படையில் அந்தச் சிந்தனைகள் இருந்தன. அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கையை ஆரம்பிப்பார் என்றவாறு வாதங்கள் சென்றன.
இவ்வாறான சாத்தியக்கூýறுகளை விடுதலைப் புலிகளும் உணர்ந்திருந்தார்கள் என்பது பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது. நடைமுறை ரீதியாக பெருமளவிற்கு இறைமை கொண்ட தமிழ் ஆட்சி அலகொன்றை வலியுறுத்தும் தீர்வுத் திட்ட வரைபொன்றை அரசிடம் முன்வைத்தமை மற்றும் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த 2002 பெப்ரவரியில் இருந்து ஆட்பலத்தை வலுப்படுத்தியதற்கு அப்பால் ஆயுத தளபாடங்களையும், கணிப்பியல் திட்டம் சார்ந்த வழங்கல்களையும் உறுதியாகக் கட்டிýயெழுப்பியமை என்பவற்றில் இருந்து தெளிவாகின்றது.
இந்த மாற்றங்களுக்கு சமாந்தரமாக, முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் அடிýப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் படிý ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோர்வே அனுசரணையாளர்கள் அதிகரித்த அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தார்கள்.
பாராளுமன்றத் தேர்தல்களை தாமதப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருந்தால் இந்த விளையாட்டிýல் தான் தோல்வியடைய நேரிடும் என்று ஜனாதிபதி நிலைமையைச் சரியாக மதிப்பிட்டார்.
தேர்தல் முடிýவுகள் குமாரதுங்கவின் எதிர்பார்ப்பில் குறைபாட்டைக் காட்டிýயது. முன்னைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த பெரும்பான்மையை விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. }லங்கா சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் பங்காளர்களாகக் கொண்ட குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூýட்டமைப்பானது, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு எட்டு ஆசனங்கள் குறைவாக 105 ஆனங்களைப் பெற்றுக் கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து 22 ஆசனங்களையும் வெற்றி கொண்டன. இந்த மூýன்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு புறமாக, பாராளுமன்றத்தில் சமநிலை தீர்மானிக்கக்கூýடிýய சில புதிய அரசியல் குழுக்கள் வெளித்தோன்றியுள்ளன.
மத்திய மலைப் பிரதேசத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குப் பகுதியில் இருந்து 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களை வென்றுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை அடைவதற்காக சிறிய அரசியல் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூýட்டணி அமைக்க குமாரதுங்கவும், அவ்வாறே விக்கிரமசிங்கவும் முயல்கின்றனர். ஆதரவை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு விதிக்கும் நிபந்தனையை எந்தக் கட்சியாலும் ஏறறுக் கொள்ள முடிýயாதென்பதால் அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கூýட்டணியிலும் இணையும் சாத்தியம் காணப்படவில்லை.
வருகின்ற நாட்களில் குமாரதுங்கவும், விக்கிரமசிங்கவும் ஜாதிக ஹெல உறுமயவையும், }லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தம் பக்கம் சாய்ப்பதற்கு முயலுவார்கள்.
இதேவேளை, குமாரதுங்க கூýட்டணியில் ஏற்படும் பிரச்சினையை சமாளிக்க வேண்டிýயுள்ளது. பிரதமர் பதவிக்கான அவரது முதல் தெரிவாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் இருந்தார். ஜனாதிபதி சிங்களவராகவும், தமிழரான கதிர்காமர் பிரதமராகவும் இருப்பது அரசாங்க உயர்மட்டங்களில் இன சமத்துவ விம்பத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருந்திருக்கக்கூýடும்.
ஆனால், அவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து வந்த அழுத்தங்களுக்கு இணங்க வேண்டிýயிருந்ததுடன், சிங்களவரான மகிந்த ராஜபக்ர்வை பிரதமராக நியமிக்க வேண்டிý ஏற்பட்டது.
இன்னுமொரு சிக்கலான விடயம் என்னவென்றால், முன்னாள் கிளர்ச்சிக் குழுவான மக்கள் விடுதலை முன்னணி, குமாரதுங்கவின் கூýட்டமைப்பு வெற்றி பெற்ற 105 ஆசனங்களில் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளமையாகும்.
மக்கள் விடுதலை முன்னணி மையத்துக்கு சற்று இடமான, அரசியல் சித்தாந்தத்துடன் உறுதியான சிங்கள இனத்துவ சார்பைக் கொண்டதாக விளங்குகிறது. இது ஜனாதிபதிக்கு, ஆளும் கூýட்டணிக்கு, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்ப்பதில் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூýடும்.
ஜாதிக ஹெல உறுமயவும் கூýட இதேபோன்ற இடர்பாடுகளை ஏற்படுத்த முடிýயும்.
குமாரதுங்க முன்னுள்ள முதலாவது சவால், கூýட்டணியொன்றை உருவாக்கி அதன் மூýலம் உறுதியான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த நடைமுறை சிக்கலானது என்பதற்கு, சில முக்கிய அமைச்சுகள் தந்தாலொழிய, அமைச்சரவையில் இணையமாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளமை ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடைநிறுத்தமானது தொடர்ந்த வண்ணம் உள்ளது. குமாரதுங்கவின் அரசு உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டாலே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடிýயும். இந்த நடைமுறை இடர்பாடுகளைத் தீர்ப்பதும் பின்னர் கருத்து வேறுபாட்டிýற்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு மூýலம் தீர்வு காண்பதும் நீண்ட கடிýனமான பணியாக இருக்கும். ஏனென்றால், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றை உள்ளடக்கிய திட்ட வரைபிற்கும், அரசு கருதும் தீர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள் துருவ மயப்பட்டதாகக் காணப்படுகின்றன.
நோர்வே அனுசரணை மூýலம் தீர்வு காண்பதற்காக மேற்கு நாடுகளின் உதவியை விக்கிரமசிங்க விரும்புவதாகவும், குமாரதுங்க அதிகமான இந்தியப் பங்களிப்பை விரும்புவதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இது பற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கும் என்பதுடன், நேரடிýயாக இப் பிரச்சினையில் சம்பந்தப்படாது என்பதை ஒருவர் அனுமானிக்க முடிýயும்.
இன்னுமொரு முரணான ஆட்சியில் இருந்த போது, இலங்கைப் பிரச்சினையில் நேரடிýயாகத் தலையிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூýட்டணி அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிýருந்த போதும், தற்போதும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிýல் பல்வேறு வகைப்பட்ட ஏராளமான தொடர்புகளைக் கொண்டிýருப்பதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை புலனாய்வு செய்தவரான கார்த்திகேயன் அண்மையில் எழுதிய புத்தகம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையில் இந்தியாவுக்கான எதிர்கால வாய்ப்புகள் ஊக்கமளிக்காததும் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததும் ஆகும்.
புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூýட்டும் சவால்கள்
இலங்கையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவே இருக்கும்
இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.
வைசராய், என கொழும்பில் (அவர் பணியாற்றிய காலகட்டத்தில்) வர்ணிக்கப்பட்டவரான கே.என்.தீக்ர்pத் புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப்போகும் 'அச்சமூýட்டும் சவால்கள்" என்ற தலையங்கத்தில் பத்தியொன்றை எழுதியிருக்கிறார்.
இணையத் தளமொன்றில் பிரசுரிக்கப்பட்டிýருக்கும் அதன் விபரம் வருமாறு:
தற்போது நடைபெற்று வரும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிýயான அரசியல் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிýயுள்ளமை தவிர்க்க முடிýயாததொன்றாகும்.
உரிய காலத்திற்கு முன்னரே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதென்ற ஜனாதிபதி குமாரதுங்கவின் தீர்மானம் எதிர்பார்க்கப்படாததொன்றல்ல. கடந்த இரு வருடங்களாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முறுகலான இணக்கத்தையே பேணி வந்தார்கள்.
இருவருக்குமிடையில் காணப்பட்ட அரசியல் கசப்புணர்வும் எப்பொழுதும் சச்சரவிடக்கூýடிýய நிலையும் வெளிப்படையாகத் தெரிந்ததொன்றாகும்.
குமாரதுங்கவின் பார்வைக்கு விக்கிரமசிங்கவின் விடுதலைப் புலிகளுடனான நேரடிýச் சமாதானப் பேச்சுகள் அதிக விட்டுக் கொடுப்புடன் நடைபெறுவதாகத் தோன்றியது. பெரும்பாலான சிங்கள மக்களின் கருத்தும் கூýட இதுவாகத் தான் இருந்தது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், விக்கிரமசிங்கவினது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி இலங்கையின் அரசியல் கட்சிகள் சிலவற்றால் எதிர்வு கூýறப்பட்டமை குறித்த ஒரு அம்சமாகும்.
விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுகளுக்கு முனைப்புக் காட்டுவது, அதை 2007 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரசியல் கோர்மாகப் பயன்படுத்துவதற்காகவே என்ற அடிýப்படையில் அந்தச் சிந்தனைகள் இருந்தன. அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கையை ஆரம்பிப்பார் என்றவாறு வாதங்கள் சென்றன.
இவ்வாறான சாத்தியக்கூýறுகளை விடுதலைப் புலிகளும் உணர்ந்திருந்தார்கள் என்பது பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது. நடைமுறை ரீதியாக பெருமளவிற்கு இறைமை கொண்ட தமிழ் ஆட்சி அலகொன்றை வலியுறுத்தும் தீர்வுத் திட்ட வரைபொன்றை அரசிடம் முன்வைத்தமை மற்றும் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த 2002 பெப்ரவரியில் இருந்து ஆட்பலத்தை வலுப்படுத்தியதற்கு அப்பால் ஆயுத தளபாடங்களையும், கணிப்பியல் திட்டம் சார்ந்த வழங்கல்களையும் உறுதியாகக் கட்டிýயெழுப்பியமை என்பவற்றில் இருந்து தெளிவாகின்றது.
இந்த மாற்றங்களுக்கு சமாந்தரமாக, முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் அடிýப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் படிý ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோர்வே அனுசரணையாளர்கள் அதிகரித்த அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தார்கள்.
பாராளுமன்றத் தேர்தல்களை தாமதப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருந்தால் இந்த விளையாட்டிýல் தான் தோல்வியடைய நேரிடும் என்று ஜனாதிபதி நிலைமையைச் சரியாக மதிப்பிட்டார்.
தேர்தல் முடிýவுகள் குமாரதுங்கவின் எதிர்பார்ப்பில் குறைபாட்டைக் காட்டிýயது. முன்னைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த பெரும்பான்மையை விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. }லங்கா சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் பங்காளர்களாகக் கொண்ட குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூýட்டமைப்பானது, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு எட்டு ஆசனங்கள் குறைவாக 105 ஆனங்களைப் பெற்றுக் கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து 22 ஆசனங்களையும் வெற்றி கொண்டன. இந்த மூýன்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு புறமாக, பாராளுமன்றத்தில் சமநிலை தீர்மானிக்கக்கூýடிýய சில புதிய அரசியல் குழுக்கள் வெளித்தோன்றியுள்ளன.
மத்திய மலைப் பிரதேசத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குப் பகுதியில் இருந்து 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களை வென்றுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை அடைவதற்காக சிறிய அரசியல் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூýட்டணி அமைக்க குமாரதுங்கவும், அவ்வாறே விக்கிரமசிங்கவும் முயல்கின்றனர். ஆதரவை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு விதிக்கும் நிபந்தனையை எந்தக் கட்சியாலும் ஏறறுக் கொள்ள முடிýயாதென்பதால் அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கூýட்டணியிலும் இணையும் சாத்தியம் காணப்படவில்லை.
வருகின்ற நாட்களில் குமாரதுங்கவும், விக்கிரமசிங்கவும் ஜாதிக ஹெல உறுமயவையும், }லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தம் பக்கம் சாய்ப்பதற்கு முயலுவார்கள்.
இதேவேளை, குமாரதுங்க கூýட்டணியில் ஏற்படும் பிரச்சினையை சமாளிக்க வேண்டிýயுள்ளது. பிரதமர் பதவிக்கான அவரது முதல் தெரிவாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் இருந்தார். ஜனாதிபதி சிங்களவராகவும், தமிழரான கதிர்காமர் பிரதமராகவும் இருப்பது அரசாங்க உயர்மட்டங்களில் இன சமத்துவ விம்பத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருந்திருக்கக்கூýடும்.
ஆனால், அவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து வந்த அழுத்தங்களுக்கு இணங்க வேண்டிýயிருந்ததுடன், சிங்களவரான மகிந்த ராஜபக்ர்வை பிரதமராக நியமிக்க வேண்டிý ஏற்பட்டது.
இன்னுமொரு சிக்கலான விடயம் என்னவென்றால், முன்னாள் கிளர்ச்சிக் குழுவான மக்கள் விடுதலை முன்னணி, குமாரதுங்கவின் கூýட்டமைப்பு வெற்றி பெற்ற 105 ஆசனங்களில் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளமையாகும்.
மக்கள் விடுதலை முன்னணி மையத்துக்கு சற்று இடமான, அரசியல் சித்தாந்தத்துடன் உறுதியான சிங்கள இனத்துவ சார்பைக் கொண்டதாக விளங்குகிறது. இது ஜனாதிபதிக்கு, ஆளும் கூýட்டணிக்கு, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்ப்பதில் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூýடும்.
ஜாதிக ஹெல உறுமயவும் கூýட இதேபோன்ற இடர்பாடுகளை ஏற்படுத்த முடிýயும்.
குமாரதுங்க முன்னுள்ள முதலாவது சவால், கூýட்டணியொன்றை உருவாக்கி அதன் மூýலம் உறுதியான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த நடைமுறை சிக்கலானது என்பதற்கு, சில முக்கிய அமைச்சுகள் தந்தாலொழிய, அமைச்சரவையில் இணையமாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளமை ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடைநிறுத்தமானது தொடர்ந்த வண்ணம் உள்ளது. குமாரதுங்கவின் அரசு உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டாலே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடிýயும். இந்த நடைமுறை இடர்பாடுகளைத் தீர்ப்பதும் பின்னர் கருத்து வேறுபாட்டிýற்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு மூýலம் தீர்வு காண்பதும் நீண்ட கடிýனமான பணியாக இருக்கும். ஏனென்றால், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றை உள்ளடக்கிய திட்ட வரைபிற்கும், அரசு கருதும் தீர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள் துருவ மயப்பட்டதாகக் காணப்படுகின்றன.
நோர்வே அனுசரணை மூýலம் தீர்வு காண்பதற்காக மேற்கு நாடுகளின் உதவியை விக்கிரமசிங்க விரும்புவதாகவும், குமாரதுங்க அதிகமான இந்தியப் பங்களிப்பை விரும்புவதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இது பற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கும் என்பதுடன், நேரடிýயாக இப் பிரச்சினையில் சம்பந்தப்படாது என்பதை ஒருவர் அனுமானிக்க முடிýயும்.
இன்னுமொரு முரணான ஆட்சியில் இருந்த போது, இலங்கைப் பிரச்சினையில் நேரடிýயாகத் தலையிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூýட்டணி அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிýருந்த போதும், தற்போதும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிýல் பல்வேறு வகைப்பட்ட ஏராளமான தொடர்புகளைக் கொண்டிýருப்பதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை புலனாய்வு செய்தவரான கார்த்திகேயன் அண்மையில் எழுதிய புத்தகம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையில் இந்தியாவுக்கான எதிர்கால வாய்ப்புகள் ஊக்கமளிக்காததும் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததும் ஆகும்.
நன்றி: தினக்குரல்
|