09-09-2005, 10:29 PM
;[size=18] கள உறுப்பினார்களே! இந்தப் பகுதியினுடாக பாரதிதாசனின் கவிதைகளை உங்கள் முன் சமர்பிக்கப் போகின்றேன்.
கவிதைகளுக்கு முன் அவரைப் பற்றி சிறு அறிமுகம். (அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டும்)
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். புதுச்சேரியில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இவரின் தந்தையாவார். தாய் இலக்குமி அம்மாள். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். மனைவியாரின் பெயர் பழநி அம்மையார். 1920ல் அவரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
முத்தமிழ் மன்னராக விளங்குவதற்குரிய அறிகுறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன. இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் நம் கவிஞர் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
"சுப்புரத்தினம் ஒரு கவி-அதற்குரிய தன்மை அவரிடம் உண்டு என்ற எண்ணம் பாரதியாருக்கு அவரைக் கண்டபொழுதே தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார்.
இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு "சுதேச மித்திரன்" இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன் கிண்டல்காரன் பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.
இந்தியாவில் முதன் முதலில் குடும்ப கட்டுப்பாடு பற்றி பாடல் எழுதிய கவிஞர் நம்ம கவிஞரே...
அடிநாள் முதலே சாதி பேதத்தையும் சமயபேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும் விரிந்த அறிவும் கொள்கைக்குப் போரடும் குணமும் கொண்டவர்.
1946ம் ஆண்டு ஐhலை மாதம் 29ம் திகதி அறிஞர் அண்ணா அவர்களால் நிதி தரட்டப்பட்டு கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970ல் சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது.
"புதுச்சேரியில் கவிஞரின் வீடு எங்கே என்று கேட்டால் பெருமாள் கோயில் தெரு 95ம் இலக்கமுள்ள வீட்டைக் காட்டுவர்கள். வீட்டின் முகப்பில் பாரதிதாசன் என்னும் பெயர் காணப்படும்.
வீட்டின் உள்ளே சென்றால் தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் மனிதர் உங்களை வரவேற்பார்.
"முறுக்கான மீசை கம்பிராமான தோற்றம் ஆணித்தரமான பேச்சு தலைக்கேறிய தமிழ் மயக்கம் இத்தனைச் சிறப்புக்களுடன் கொண்ட இவர் தாம் பாரதிதாசன்....
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். அவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடமையாக்கப்பட்டது
கவிதைகளுக்கு முன் அவரைப் பற்றி சிறு அறிமுகம். (அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டும்)
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். புதுச்சேரியில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இவரின் தந்தையாவார். தாய் இலக்குமி அம்மாள். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். மனைவியாரின் பெயர் பழநி அம்மையார். 1920ல் அவரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
முத்தமிழ் மன்னராக விளங்குவதற்குரிய அறிகுறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன. இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் நம் கவிஞர் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
"சுப்புரத்தினம் ஒரு கவி-அதற்குரிய தன்மை அவரிடம் உண்டு என்ற எண்ணம் பாரதியாருக்கு அவரைக் கண்டபொழுதே தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார்.
இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு "சுதேச மித்திரன்" இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன் கிண்டல்காரன் பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.
இந்தியாவில் முதன் முதலில் குடும்ப கட்டுப்பாடு பற்றி பாடல் எழுதிய கவிஞர் நம்ம கவிஞரே...
அடிநாள் முதலே சாதி பேதத்தையும் சமயபேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும் விரிந்த அறிவும் கொள்கைக்குப் போரடும் குணமும் கொண்டவர்.
1946ம் ஆண்டு ஐhலை மாதம் 29ம் திகதி அறிஞர் அண்ணா அவர்களால் நிதி தரட்டப்பட்டு கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970ல் சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது.
"புதுச்சேரியில் கவிஞரின் வீடு எங்கே என்று கேட்டால் பெருமாள் கோயில் தெரு 95ம் இலக்கமுள்ள வீட்டைக் காட்டுவர்கள். வீட்டின் முகப்பில் பாரதிதாசன் என்னும் பெயர் காணப்படும்.
வீட்டின் உள்ளே சென்றால் தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் மனிதர் உங்களை வரவேற்பார்.
"முறுக்கான மீசை கம்பிராமான தோற்றம் ஆணித்தரமான பேச்சு தலைக்கேறிய தமிழ் மயக்கம் இத்தனைச் சிறப்புக்களுடன் கொண்ட இவர் தாம் பாரதிதாசன்....
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். அவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடமையாக்கப்பட்டது


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ரமா? ராமா? எது சரி :?: