ஊமை சொன்னது சரியாக இருக்கலாம் மாதம் திகதி எனக்கு சரியான ஞாபகத்தில் இல்லை (காரணம் பதிவுகள் எதுவும் என்னிடம் இல்லை ஒரு ஞாபகத்தில்தான் எழுதுகிறேன் இதில் பிழைகள் இருப்பின் அறிய தரவும்) 2 நாட்கள் குண்டு வீச்சு நடந்தது தமிழீழத்தின் முதல் குண்டு வீச்சு தாக்குதல் இதுதான்.விமானங்கள் இத்தாலிய ரக சியாமா செட்டி ரகம் என்பதுதான் உண்மை.பொதுவான தாக்குதல்கள் எல்லாம் அதிகாலை வேளையிலேயே நடைபெற்றதால் அத்தாக்குதலும் காலை வேளைநடைபெற்றதாக எனக்கு ஞாபகம்(வயசும் போட்டுதல்லோ <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
அடுத்து முகத்தார் ஞாபக படுத்தின ; இலங்கை இராணுவத்தின் இஸ்ரேலிய பயிற்சி பெற்ற பாரா அதிரடி துருப்பினரின்தமிழீழத்தில் முதல் முதல் தரையிறக்க தாக்குதல்.
1985ம் ஆண்டு மார்கழி 21ம் திகதி காலை.
சுதுமலை அம்மன் கோயிருக்கு அருகாமையில் அமைந்திருந்த புலிகளின் முக்கிய தலைமை முகாம். அங்கு அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு உட்பட ஜொனி மற்றும் பலஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். சுது மலை வயல் வெளியில் 2 கெலிகளில் இஸ்ரேலிய பாரா துருப்பிடம் பயிற்சி பெற்ற இலங்கை விசேட பாரா துருப்பினர் தரையிறக்க படுகிறனர். அப்போ கெலிகளின் சத்தம் கேட்டால் அதிலிருந்து சுடுவார்கள் அவ்வளவுதான் ஆனால் இப்படி இராணுவத்தை தரையிறக்குவார்கள் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
தரையிறங்கிய இராணுவம் ஒரு துரோகிகொடுத்த துல்லியமான தகவல்கள் வரைபடத்துடன் மெதுவாக முன்னேறி புலிகளின் முகாமை அண்மித்து விட்டனர் அப்போது அந்த பகுதி நாய்களின் வித்தியாசமான இடைவிடாத குரைப்பால் முகாம் காவல் கடைமையிலிருந்த போராளி உசாரடைந்து நித்திரையிலிருந்த மற்றைய போரளிகளையும் எழுப்பிவிட கிட்டு தனது அணியை உசார் நிலையில் வைத்துவிட்டு பார்த்தபோது இராணுவத்தின் துப்பாக்கிகள் முகாமை நோக்கி இயங்கியது;
அப்பேதான் தாங்கள் முற்றுகைக்குள்ளாகியிருப்பதை உணர்ந்த கிட்டு எவரையும் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் எல்லோரையும் பதுங்கியிருங்கள் என கட்டளையிட்டு விட்டு மற்றைய புலிகள் முகாம்களிற்கு நிலைமையை வானலை தகவல் முலம் அறிவிக்கிறார். உடனடியாக மற்றைய முகாம்களிலிருந்து போராளிகள் அங்கு விரைகிறார்கள்.
தாக்குதல் நடத்திய இராணுவம் பதில் தாக்குதல் ஏதும் வராத காரணத்தால் குழம்பிபோய் மேலும் முன்னேறி புலிகளின் முகாமினை அண்மித்த போது எதிர்பாராத திடீர் தாக்குதல் முகாமிலிருந்து வெளிப்பட நிலை குலைந்த இராணுவம் தம்மை சுதாகரிப்பதற்குள் வெளியிலிருந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டது.
முற்றுகையிட வந்த இராணுவத்தினருக்கு தாமே முற்றுகையிட பட்டிருப்பது அப்போது தான் விழங்கியது அவசர அவசரமாக மீண்டும் கெலி தரையிறக்க பட்டு உயிர் தப்பினால் போதுமென்று விசேட இராணுவம் ஓடியது
அச்சமரில் அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் இருந்த வமான எதிர்ப்பு துப்பாக்கியானG.P.M.G துப்பாக்கியால் கெலிகளை நோக்கி தாக்குதல் நடத்தி கொண்டிருந்த மேஜர் அல்பேட் (கந்தையா ருபநிதி .நீர்வேலி) வீரமரணமடைந்தார்.
இந்த முகாம் பற்றிய துல்லியமான வரைபடத்துடன் தகவல்களை வழங்கியவர் மானிப்பாய் வைத்திய சாலைக்கு அருகில் வசித்தவர் பின்னர் அவர் கண்டு பிடிக்க பட்டு புலிகளால் மானிப்பாய் மருதடி சந்தியில் மரண தண்டனை வழங்க பட்டது.