03-01-2004, 06:04 PM
இது பரணியோட கவிதை. அவர் ஏன் இதை இங்கை போடலைன்னு தெரியலை. இல்லை ரொம்ப காலத்துக்கு முன்னால் போட்டு நான் பாக்கலையா? பரணி தான் சொல்லணும்.
உறவு, நண்பர்கள் இல்லாம வெளி நாட்டிலை தவிக்கிற தமிழனோட மனத்தை ரொம்ப அருமையா சொல்லியிருக்கார்.
வாழ்த்துக்கள் பரணி
[size=18]ஆதங்கம்
[size=14]எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன்
ஆலயத் திருவிழாக்கள்
பாடசாலை விளையாட்டு
பொங்கலின் களிப்புகள்
புத்தாண்டு கொண்டாட்டம்
தீபாவளி விற்பனை என
எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே
அவைமட்டுமல்ல
உறவுகளின் திருமணங்கள்
உடன்பிறப்பின் சந்தோசங்கள்
ஊரவரின் மறைவுகள்
நண்பர்களின் விருந்துபசாரங்கள்
என எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே
இன்றும்கூட
நாம் ஆலயம் சென்றோம்
நாம் உறவினர் வீடு சென்றோம்
அவர்கள் வந்தார்கள்
இவர்கள் வந்தார்கள் என
என் வீட்டார் கூறும்போது எனக்கு
ஆத்திரமும் பொறாமையும்
ஓருங்கே வருகின்றது
நான் மட்டும் இங்கே
அனாதையாய் வாழ்கின்றேன்
உறவினர் இல்லை
ஊரவர் இல்லை
பண்டிகை இல்லை
இது என்ன வாழ்க்கை
தமிழனாய் பிறந்து
இன்று தனியனாய் வாழ்கின்றேன்
அங்கும் இல்லை
இங்கும் இல்லை
இடையினில் வாடுகின்றேன்
அழகாக உடுத்த ஆடை உண்டு
ஆசைதீர உண்ண உணவுகள் உண்டு
கால்நீட்டி உட்கார அழகான மனை உண்டு
இத்தனை இருந்தும்
உறவுகள் இல்லாது
ஊரவர் இல்லாது
எப்படி வாழ்வது
நன்றி - பரணிதரன்
உறவு, நண்பர்கள் இல்லாம வெளி நாட்டிலை தவிக்கிற தமிழனோட மனத்தை ரொம்ப அருமையா சொல்லியிருக்கார்.
வாழ்த்துக்கள் பரணி
[size=18]ஆதங்கம்
[size=14]எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன்
ஆலயத் திருவிழாக்கள்
பாடசாலை விளையாட்டு
பொங்கலின் களிப்புகள்
புத்தாண்டு கொண்டாட்டம்
தீபாவளி விற்பனை என
எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே
அவைமட்டுமல்ல
உறவுகளின் திருமணங்கள்
உடன்பிறப்பின் சந்தோசங்கள்
ஊரவரின் மறைவுகள்
நண்பர்களின் விருந்துபசாரங்கள்
என எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே
இன்றும்கூட
நாம் ஆலயம் சென்றோம்
நாம் உறவினர் வீடு சென்றோம்
அவர்கள் வந்தார்கள்
இவர்கள் வந்தார்கள் என
என் வீட்டார் கூறும்போது எனக்கு
ஆத்திரமும் பொறாமையும்
ஓருங்கே வருகின்றது
நான் மட்டும் இங்கே
அனாதையாய் வாழ்கின்றேன்
உறவினர் இல்லை
ஊரவர் இல்லை
பண்டிகை இல்லை
இது என்ன வாழ்க்கை
தமிழனாய் பிறந்து
இன்று தனியனாய் வாழ்கின்றேன்
அங்கும் இல்லை
இங்கும் இல்லை
இடையினில் வாடுகின்றேன்
அழகாக உடுத்த ஆடை உண்டு
ஆசைதீர உண்ண உணவுகள் உண்டு
கால்நீட்டி உட்கார அழகான மனை உண்டு
இத்தனை இருந்தும்
உறவுகள் இல்லாது
ஊரவர் இல்லாது
எப்படி வாழ்வது
நன்றி - பரணிதரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

