06-22-2004, 03:02 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/refugees.jpg' border='0' alt='user posted image'>
நான் தமிழிச்சி
ஏனென்றால் தமிழில் பேசுவேன்
தனித்துவங்கள் வைத்திருக்கேன்...
நாங்கள்
வாழ்ந்ததென்னவோ சீராய்
எங்கள் சீமையில தான்...
வந்தான் சிங்களவன்
வளமான எங்கள் வாழ்வு சீரழிக்க
தொடர்ந்தான் அடக்குமுறைகள்....
அதுகண்டு
ஈழத்துக் காந்தி முதலாய் பலரும்
சாத்வீகமாய்க் குரல் கொடுக்க
கொடுத்தான் வன்முறையால் பதிலடி
அது பொறுக்காமல்
பொங்கி எழுந்தாங்கள்
நான் பெத்த பொடியள் புலியாய்
எடுத்தாங்கள் துப்பாக்கி.....
எல்லாம் விரைவாய் முடியும் என்றிருக்க
தூர இருந்து கழுகும்
அயலில் இருந்து அசோகச் சக்கரமும்
இன்னும் பலதும்
வன்முறை கண்டு வியாபாரம் செய்ய
சிங்களத்தானுடன் சேர்ந்தே
கூத்தடிக்கின்றார் எங்கள் மண்ணில்
அழிவுகளையும் துன்பங்களையும்
எங்கள் சொத்தாக்கி.....!
இது புரிந்தும் புரியாததுகளாய்
உள்வீட்டுக் குள்ளநரிகளும்
கூட இருந்து கூத்தடிக்குதுகள்
தனக்குத்தானே குழிபறிக்க
எல்லாம் கெடுதியாய்ப் போச்சு...!
சரி இவற்றோடு
போகட்டும் என் வாழ்வு
சிங்களத்தின் இனவெறிக்கு இரையாக...!
இந்தப் பிஞ்சுகள் வாழ்வுமெல்லோ
அகதி என்று
அருவருப்பாய்ப் போகுது
காலங்காலமாய்
சீரான கல்வி பெற்று
மாண்புகள் கண்ட
எங்கள் தலைமுறைகள் - இன்று
ஒரு கணணிகும்
சிங்களத்தானிடம் மண்டியிடும் நிலையிருக்கு
இந்த நிலைகள் களைந்து
பிஞ்சு இதுகள்
சொந்த மண்ணில்
செழிப்பாய்
தன் இனம் பெருக்கி
புகழ் பெருக்கி
இனம் காத்து இனமானம் காத்து
நிம்மதியாய் வாழ்ந்திட
பகையோ புகையோ
எதுகண்டும் அவைதம்
வேரறுத்துக் காட்டுங்கள் ஒரு நல்வழி
என் சீவன் போகமுதல்
நிம்மதியாய் போய்ச் சேர......!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
நான் தமிழிச்சி
ஏனென்றால் தமிழில் பேசுவேன்
தனித்துவங்கள் வைத்திருக்கேன்...
நாங்கள்
வாழ்ந்ததென்னவோ சீராய்
எங்கள் சீமையில தான்...
வந்தான் சிங்களவன்
வளமான எங்கள் வாழ்வு சீரழிக்க
தொடர்ந்தான் அடக்குமுறைகள்....
அதுகண்டு
ஈழத்துக் காந்தி முதலாய் பலரும்
சாத்வீகமாய்க் குரல் கொடுக்க
கொடுத்தான் வன்முறையால் பதிலடி
அது பொறுக்காமல்
பொங்கி எழுந்தாங்கள்
நான் பெத்த பொடியள் புலியாய்
எடுத்தாங்கள் துப்பாக்கி.....
எல்லாம் விரைவாய் முடியும் என்றிருக்க
தூர இருந்து கழுகும்
அயலில் இருந்து அசோகச் சக்கரமும்
இன்னும் பலதும்
வன்முறை கண்டு வியாபாரம் செய்ய
சிங்களத்தானுடன் சேர்ந்தே
கூத்தடிக்கின்றார் எங்கள் மண்ணில்
அழிவுகளையும் துன்பங்களையும்
எங்கள் சொத்தாக்கி.....!
இது புரிந்தும் புரியாததுகளாய்
உள்வீட்டுக் குள்ளநரிகளும்
கூட இருந்து கூத்தடிக்குதுகள்
தனக்குத்தானே குழிபறிக்க
எல்லாம் கெடுதியாய்ப் போச்சு...!
சரி இவற்றோடு
போகட்டும் என் வாழ்வு
சிங்களத்தின் இனவெறிக்கு இரையாக...!
இந்தப் பிஞ்சுகள் வாழ்வுமெல்லோ
அகதி என்று
அருவருப்பாய்ப் போகுது
காலங்காலமாய்
சீரான கல்வி பெற்று
மாண்புகள் கண்ட
எங்கள் தலைமுறைகள் - இன்று
ஒரு கணணிகும்
சிங்களத்தானிடம் மண்டியிடும் நிலையிருக்கு
இந்த நிலைகள் களைந்து
பிஞ்சு இதுகள்
சொந்த மண்ணில்
செழிப்பாய்
தன் இனம் பெருக்கி
புகழ் பெருக்கி
இனம் காத்து இனமானம் காத்து
நிம்மதியாய் வாழ்ந்திட
பகையோ புகையோ
எதுகண்டும் அவைதம்
வேரறுத்துக் காட்டுங்கள் ஒரு நல்வழி
என் சீவன் போகமுதல்
நிம்மதியாய் போய்ச் சேர......!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->