Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை
#1
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை
<img src='http://www.dinamalar.com/2005Dec06/photos/science.jpg' border='0' alt='user posted image'>
கடந்த பிப்ரவரியில் மட்டும் 10 ஆயிரம் எச்.ஐ.வி., பாசிடிவ் தாய்மார்கள், குழந்தைகளைப் பெற்று மாஸ்கோவின் தெருக்களில் அனாதைகளாக விட்டுச் சென்றுள்ளனர். "ரஷ்ய சட்டங்கள், எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்களைப் பாகுபடுத்துவதைக் கண்டிக்கின்றன. ஆனால், இந்த பெண்களும், குழந்தைகளும் படும் துன்பங்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்கிறது' என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். எச்.ஐ.வி., பற்றிய சமூக ஒதுக்கல், பள்ளிகளிலும், கிளினிக்குகளிலும், அவர்களின் வீடுகளிலும் கூடக் காணப்படுகின்றது. எச்.ஐ.வி., பாசிடிவ் பெண்கள் பலரை டாக்டர்கள் வார்த்தைகளால் சாடுவதும், சிகிச்சை தர மறுப்பதும் ரஷ்யாவில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது.

அனாதைகளாக விடப்படும் குழந்தைகள், எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களிலோ, அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டுகளிலோ வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். ரஷ்ய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,க்களும், உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் நிறைய பேராடியிருந்தாலும், இன்னும் பேராடுவதற்கு நிறைய தேவைகள் உள்ளன. ரஷ்யாவில் எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்கள் வேலையில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். வாடகைக்கு இருப்பவர்கள் உடனே வீட்டை காலி செய்யப்படுகிறார்கள். எச்.ஐ.வி., வைரஸ் தாக்கப்பட்டவர் என்று தெரிந்தால், டாக்டர்கள் கூட சரியாக சிகிச்சை தருவதில்லை.

Dinamalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே கருதுகிறேன். காரணம் இப்போது கூட எமது மருத்துவமனையில் மட்டும் மூன்று HIV நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களை எவரும் அவமரியாதை செய்யவோ அன்றி வெளியே துரத்தவோ முயலவில்லை.

HIV குழந்தைகள் விடயத்திலும் அவ்வாறுதான். இங்கு தாய் தந்தையர்கள் பிள்ளைகளது நலன்களில் அக்கறை செலுத்தாவிடின் அப்பிள்ளைகளை அரசாங்கமே சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தில் சேர்த்துப் பராமரிக்கிறது.

HIV குழந்தைகளுக்கான சிறப்பு வாழ்வகங்கள் இங்கே செயற்படுகின்றன.

மேலே உள்ளவாறான செய்திகளை அமெரிக்க சார்பு செய்திநிறுவனங்களும் பத்திரிகைகளும் வெளியிடுவதன் நோக்கம் விளாடிமிர் புத்தின் தான் எண்ணுவதைச் செய்து முடிக்கும் தலைவர் என்பதால்தான்.

புத்தின் முன்னைய அதிபர் யெல்சின்போல 24 மணிநேரமும் போதையில் மிதந்தபடி அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டிக்கொண்டிருந்தால் ஆகா ஓகோ என்று எழுதுவார்கள்.

உதாரணமாக இந்தப் பத்திரிகைகள் எல்லாம் யெல்சினை வானளாவப் புகழ்ந்தன. காரணம் அவர் ஒரு அமெரிக்காவின் இரகசிய முகவர்.

அவர் காலத்தில் 1997ல் ஒரு டொலரிற்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு 2000ல் புத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது ஒரு டொலரிற்கு 28 ரூபிளாக இருந்தது.

ஆனால் 2000லிருந்து இன்றுவரை ரூபிளின் மதிப்பு 28ற்கும் 30ற்கும் இடையில் இருந்துவருகிறது.

இதுதான் அமெரிக்காவிற்கும் அதன் நேசநாடுகளுக்கும் பிடிக்காத விடயம். அதற்காக இப்படி ரஷ்யாவில் எல்லாமே படுமோசம் என்ற சித்தரிப்புகள்.

இவற்றை நம்பி தமிழகப் பத்திரிகைகளும் இதனைப் பிரசுரிப்பதுதான் வேதனை. உலகம் முழுவதும் ரஷ்யாவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தினாலே ரூபிளின் மதிப்பு டொலருடன் போட்டியிடும் என்ற உண்மையை ஏனோ எல்லோரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

<b>
அன்புடன் திரு</b>
Reply
#3
<b>திரு</b>

நீங்கள் குறிப்பிட்டபடி ரூபிளின் மதிப்பு முன்பு டொலருக்கு 6 இலிருந்து இப்போது 28 தொடக்கம் 30 வரை உயர்ந்துள்ளதென்றால் ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதாகவல்லவா அர்த்தம். இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை அல்லவா குறிக்கின்றது.
Reply
#4
ரஷ்சியா இந்தியாவுக்குக்கு மட்டும் அள்ளிக்கொடுத்தது கொஞ்சமா? காசு இருக்கும் வரைதான் அண்ணன் தம்பி, காசு இல்லாட்டில், காசு இருப்பவன் புதிய சொந்தம். :wink:
.

.
Reply
#5
thiru Wrote:இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே கருதுகிறேன். காரணம் இப்போது கூட எமது மருத்துவமனையில் மட்டும் மூன்று HIV நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களை எவரும் அவமரியாதை செய்யவோ அன்றி வெளியே துரத்தவோ முயலவில்லை.

HIV குழந்தைகள் விடயத்திலும் அவ்வாறுதான். இங்கு தாய் தந்தையர்கள் பிள்ளைகளது நலன்களில் அக்கறை செலுத்தாவிடின் அப்பிள்ளைகளை அரசாங்கமே சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தில் சேர்த்துப் பராமரிக்கிறது.

HIV குழந்தைகளுக்கான சிறப்பு வாழ்வகங்கள் இங்கே செயற்படுகின்றன.

மேலே உள்ளவாறான செய்திகளை அமெரிக்க சார்பு செய்திநிறுவனங்களும் பத்திரிகைகளும் வெளியிடுவதன் நோக்கம் விளாடிமிர் புத்தின் தான் எண்ணுவதைச் செய்து முடிக்கும் தலைவர் என்பதால்தான்.

புத்தின் முன்னைய அதிபர் யெல்சின்போல 24 மணிநேரமும் போதையில் மிதந்தபடி அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டிக்கொண்டிருந்தால் ஆகா ஓகோ என்று எழுதுவார்கள்.

உதாரணமாக இந்தப் பத்திரிகைகள் எல்லாம் யெல்சினை வானளாவப் புகழ்ந்தன. காரணம் அவர் ஒரு அமெரிக்காவின் இரகசிய முகவர்.

அவர் காலத்தில் 1997ல் ஒரு டொலரிற்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு 2000ல் புத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது ஒரு டொலரிற்கு 28 ரூபிளாக இருந்தது.

ஆனால் 2000லிருந்து இன்றுவரை ரூபிளின் மதிப்பு 28ற்கும் 30ற்கும் இடையில் இருந்துவருகிறது.

இதுதான் அமெரிக்காவிற்கும் அதன் நேசநாடுகளுக்கும் பிடிக்காத விடயம். அதற்காக இப்படி ரஷ்யாவில் எல்லாமே படுமோசம் என்ற சித்தரிப்புகள்.

இவற்றை நம்பி தமிழகப் பத்திரிகைகளும் இதனைப் பிரசுரிப்பதுதான் வேதனை. உலகம் முழுவதும் ரஷ்யாவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தினாலே ரூபிளின் மதிப்பு டொலருடன் போட்டியிடும் என்ற உண்மையை ஏனோ எல்லோரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

<b>
அன்புடன் திரு</b>

திரு உங்களின் விபரமான தகவல்களுக்கு நன்றிங்க .... இன்றய கால கட்டத்தில எந்த செய்திகளை நம்புவது என்றே தெரியவில்ல .... இந்த செய்திகாரங்க எல்லாரும் அவ அவன் தான்பாட்டுக்கு நெனச்சமாதிரி எழுதிட்டு.. இத வாசிச்சு சாவுங்கடா சாவுகிராக்கிங்க என்று சொல்லாமல் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கிறான் ..... நாமலும் என்ன பண்ணமுடியும் ...
ஏதோ தகவல் போட்ட்ருக்காங்க அப்டீன்னு அத வாசித்து விட்டு பேசாம இருக்க வேண்டியதுதான் .... உள்ளூர் சமாச்சாரம்ன்னா பறவாயில்ல யாரயாவது வெசாரிச்சு அது உன்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கலாம் .... இது வெளிநாட்டு சமாச்சாரம்....இத யாருகிட்ட போயி விசாரிச்சு தெரிஞ்சுக்கிறது ....
நீங்க அங்க இருக்கிற படினால இப்ப இந்த உண்ம நெலமைய தெலிவு படுத்தினீங்க ....
நன்றிங்க
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
thiru Wrote:
Vasampu Wrote:<b>திரு</b>

நீங்கள் குறிப்பிட்டபடி ரூபிளின் மதிப்பு முன்பு டொலருக்கு 6 இலிருந்து இப்போது 28 தொடக்கம் 30 வரை உயர்ந்துள்ளதென்றால் ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதாகவல்லவா அர்த்தம். இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை அல்லவா குறிக்கின்றது.

Vasampu

தெளிவாகக் குறிப்பிடாதது எனது தவறு. நேரமின்மையால் அவசரமாக எழுதிவிட்டுச் சென்றதால் நேர்ந்த வழு. பொறுத்தருளுங்கள்.

1997 லிருந்து 2000வரை முன்னாள் அதிபர் யெல்சின் அவர்களது ஆட்சிக்காலத்தில் அதாவது ஒரு குறுகிய காலமான 03 வருடங்களிற்குள் ரஷ்யாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்தது. அதனால் 1997 ல் ஒரு டொலருக்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு -யெல்சின் புத்தினிடம் 2000 ஆண்டில் ஆட்சிப்பொறுப்பினை ஒப்படைக்கும்போது- 28 ரூபிளாகக் காணப்பட்டது.

ஆனால் புத்தின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இந்தப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதனால் அது கடந்த 05 வருடங்களாக -ஒரு டொலருக்கான ரூபிளின் மதிப்பாக 28 தொடக்கம் 30 ரூபிளாக- நிலையாக நிற்கிறது.

இந்த நிலையிலிருந்து மீண்டும் பொருளாதாரத்தை மேலெழுப்ப பலவகையில் புத்தின் முயன்றுவருகிறார்.

முக்கியமாகப் பெரும் வணிக நிறுவனங்கள் ஒழுங்காக வரிகட்டுவதில்லை. அதுதொடர்பாக உலக அளவில் பிரபலமான ஒரு வழக்கில் ரஷ்ய அரசு சார்பாக அண்மையில் தீர்ப்பு வந்தது.

இதில் தற்போது சிறையிலடைக்கப்பட்டிருக்கும் மிகையில் ஹடறோவ்ஸ்க்கி என்ற பெருவணிகர் தலைவராக இருந்த யூக்கோஸ் மசகெண்ணை உற்பத்தி நிறுவனம் வருமானவரி ஏய்ப்பு (பலமில்லியன் கோடி ரூபாய்கள்)செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டு அந்த நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவெனில் முழுக்க முழுக்க ரஷ்யாவின் உள்விவகாரமான இந்த வழக்கில் ஹடறோவ்ஸ்க்கிக்கு ஆதரவாக நேரடியான சட்ட உதவியிலிருந்து மறைமுகமான ராசதந்திர அழுத்தம் வரைக்கும் பிரயோகித்து அமெரிக்க அரசு போராடியது.

காரணம் வரிஏய்ப்பின் மூலம் ரஷ்ய அரசை வங்குரோத்தாக்கி தம்மை ஆதரிக்க வைப்பதற்கான ஒரு கருவியாக யூக்கோஸ் நிறுவனத்தினை அமெரிக்கா பயன்படுத்தியது.

இப்போது அடுத்தடுத்து வருமான வரி ஏய்ப்பு வழக்குகள் பல நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டு வருகின்றன.

அதுபோக, வானம்பாடி அவர்களது பதில் கண்டு மகிழ்ச்சி. தங்களைப்போலவே எமக்கும் ஏனைய நாடுகள் குறித்த தகவல்களை பல்வேறு செய்தி நிறுவனங்கள் பல்வேறு கோணங்களில் தரும்போது குழப்பம்தான் எஞ்சும்.

ஆனால் தங்களைப்போன்று இங்கு இப்படித் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் வாயிலாக நாம் இங்கு பலநாடுகளில் வதியும் நண்பர்கள் வாயிலாக உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா.

அதற்காக தங்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

<b>அன்புடன் திரு. </b>
Reply
#7
<b>நன்றி திரு</b>

உங்கள் விளக்கத்திற்கு. உண்மையில் புட்டினின் தலைமையில் மீண்டும் ரஷ்யா ஒரு வல்லரசாகத் தலைநிமிர வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)