![]() |
|
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வாடகை வீடு இவர்களுக்கு இல்லை (/showthread.php?tid=2182) |
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை - Vaanampaadi - 12-06-2005 வாடகை வீடு இவர்களுக்கு இல்லை <img src='http://www.dinamalar.com/2005Dec06/photos/science.jpg' border='0' alt='user posted image'> கடந்த பிப்ரவரியில் மட்டும் 10 ஆயிரம் எச்.ஐ.வி., பாசிடிவ் தாய்மார்கள், குழந்தைகளைப் பெற்று மாஸ்கோவின் தெருக்களில் அனாதைகளாக விட்டுச் சென்றுள்ளனர். "ரஷ்ய சட்டங்கள், எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்களைப் பாகுபடுத்துவதைக் கண்டிக்கின்றன. ஆனால், இந்த பெண்களும், குழந்தைகளும் படும் துன்பங்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்கிறது' என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். எச்.ஐ.வி., பற்றிய சமூக ஒதுக்கல், பள்ளிகளிலும், கிளினிக்குகளிலும், அவர்களின் வீடுகளிலும் கூடக் காணப்படுகின்றது. எச்.ஐ.வி., பாசிடிவ் பெண்கள் பலரை டாக்டர்கள் வார்த்தைகளால் சாடுவதும், சிகிச்சை தர மறுப்பதும் ரஷ்யாவில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது. அனாதைகளாக விடப்படும் குழந்தைகள், எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களிலோ, அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டுகளிலோ வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். ரஷ்ய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,க்களும், உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் நிறைய பேராடியிருந்தாலும், இன்னும் பேராடுவதற்கு நிறைய தேவைகள் உள்ளன. ரஷ்யாவில் எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்கள் வேலையில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். வாடகைக்கு இருப்பவர்கள் உடனே வீட்டை காலி செய்யப்படுகிறார்கள். எச்.ஐ.வி., வைரஸ் தாக்கப்பட்டவர் என்று தெரிந்தால், டாக்டர்கள் கூட சரியாக சிகிச்சை தருவதில்லை. Dinamalar - thiru - 12-06-2005 இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே கருதுகிறேன். காரணம் இப்போது கூட எமது மருத்துவமனையில் மட்டும் மூன்று HIV நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களை எவரும் அவமரியாதை செய்யவோ அன்றி வெளியே துரத்தவோ முயலவில்லை. HIV குழந்தைகள் விடயத்திலும் அவ்வாறுதான். இங்கு தாய் தந்தையர்கள் பிள்ளைகளது நலன்களில் அக்கறை செலுத்தாவிடின் அப்பிள்ளைகளை அரசாங்கமே சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தில் சேர்த்துப் பராமரிக்கிறது. HIV குழந்தைகளுக்கான சிறப்பு வாழ்வகங்கள் இங்கே செயற்படுகின்றன. மேலே உள்ளவாறான செய்திகளை அமெரிக்க சார்பு செய்திநிறுவனங்களும் பத்திரிகைகளும் வெளியிடுவதன் நோக்கம் விளாடிமிர் புத்தின் தான் எண்ணுவதைச் செய்து முடிக்கும் தலைவர் என்பதால்தான். புத்தின் முன்னைய அதிபர் யெல்சின்போல 24 மணிநேரமும் போதையில் மிதந்தபடி அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டிக்கொண்டிருந்தால் ஆகா ஓகோ என்று எழுதுவார்கள். உதாரணமாக இந்தப் பத்திரிகைகள் எல்லாம் யெல்சினை வானளாவப் புகழ்ந்தன. காரணம் அவர் ஒரு அமெரிக்காவின் இரகசிய முகவர். அவர் காலத்தில் 1997ல் ஒரு டொலரிற்கு 06 ரூபிளாக இருந்த பண மதிப்பு 2000ல் புத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது ஒரு டொலரிற்கு 28 ரூபிளாக இருந்தது. ஆனால் 2000லிருந்து இன்றுவரை ரூபிளின் மதிப்பு 28ற்கும் 30ற்கும் இடையில் இருந்துவருகிறது. இதுதான் அமெரிக்காவிற்கும் அதன் நேசநாடுகளுக்கும் பிடிக்காத விடயம். அதற்காக இப்படி ரஷ்யாவில் எல்லாமே படுமோசம் என்ற சித்தரிப்புகள். இவற்றை நம்பி தமிழகப் பத்திரிகைகளும் இதனைப் பிரசுரிப்பதுதான் வேதனை. உலகம் முழுவதும் ரஷ்யாவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தினாலே ரூபிளின் மதிப்பு டொலருடன் போட்டியிடும் என்ற உண்மையை ஏனோ எல்லோரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். <b> அன்புடன் திரு</b> - Vasampu - 12-06-2005 <b>திரு</b> நீங்கள் குறிப்பிட்டபடி ரூபிளின் மதிப்பு முன்பு டொலருக்கு 6 இலிருந்து இப்போது 28 தொடக்கம் 30 வரை உயர்ந்துள்ளதென்றால் ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதாகவல்லவா அர்த்தம். இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை அல்லவா குறிக்கின்றது. - Birundan - 12-06-2005 ரஷ்சியா இந்தியாவுக்குக்கு மட்டும் அள்ளிக்கொடுத்தது கொஞ்சமா? காசு இருக்கும் வரைதான் அண்ணன் தம்பி, காசு இல்லாட்டில், காசு இருப்பவன் புதிய சொந்தம். :wink: - Vaanampaadi - 12-06-2005 thiru Wrote:இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே கருதுகிறேன். காரணம் இப்போது கூட எமது மருத்துவமனையில் மட்டும் மூன்று HIV நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். திரு உங்களின் விபரமான தகவல்களுக்கு நன்றிங்க .... இன்றய கால கட்டத்தில எந்த செய்திகளை நம்புவது என்றே தெரியவில்ல .... இந்த செய்திகாரங்க எல்லாரும் அவ அவன் தான்பாட்டுக்கு நெனச்சமாதிரி எழுதிட்டு.. இத வாசிச்சு சாவுங்கடா சாவுகிராக்கிங்க என்று சொல்லாமல் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கிறான் ..... நாமலும் என்ன பண்ணமுடியும் ... ஏதோ தகவல் போட்ட்ருக்காங்க அப்டீன்னு அத வாசித்து விட்டு பேசாம இருக்க வேண்டியதுதான் .... உள்ளூர் சமாச்சாரம்ன்னா பறவாயில்ல யாரயாவது வெசாரிச்சு அது உன்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கலாம் .... இது வெளிநாட்டு சமாச்சாரம்....இத யாருகிட்ட போயி விசாரிச்சு தெரிஞ்சுக்கிறது .... நீங்க அங்க இருக்கிற படினால இப்ப இந்த உண்ம நெலமைய தெலிவு படுத்தினீங்க .... நன்றிங்க - thiru - 12-06-2005 thiru Wrote:Vasampu Wrote:<b>திரு</b> - Vasampu - 12-06-2005 <b>நன்றி திரு</b> உங்கள் விளக்கத்திற்கு. உண்மையில் புட்டினின் தலைமையில் மீண்டும் ரஷ்யா ஒரு வல்லரசாகத் தலைநிமிர வேண்டும் என்பதே எனது விருப்பமும். |