11-03-2003, 08:51 PM
ஆ சாமி
தினபூமி
அதிகாரப் பகிர்வுக்கான
புலிகளின் திட்டம்: சுப்ரமணியசாமி எதிர்ப்பு
மதுரை, நவ. 3_
இலங்கை அரசுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள திட்டத்திற்கு ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளார்.
இது குறித்து சுப்ரமணியசாமி மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_
இலங்கையில் அமைதிப்பேச்சு என்ற விடுதலைப்புலிகளது திட்டம் இலங்கையின் அழிவு மட்டுமல்லாது இந்தியாவின் தேசபாதுகாப்புக்கே சவாலாக இருக்கும். விடுதலைப்புலிகளது ஆட்சியை பங்கிடும் எந்த முறைக்கும் இந்தியா ஒத்துக் கொள்ள கூடாது.
விடுதலைப்புலிகள் கேட்கும் இடைக்கால அதிகாரம் தீவிரவாத நிலையை ஏற்படுத்துவதோடு நம் தமிழ்நாட்டில் தேசவிரோத சக்தி, தீவிரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் மாநிலத்திலுள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து பணஉதவி பெரும் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் அமைப்பு லத்தீன் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா போல் ஆகிவிடும். அதன் பிறகு தமிழ்நாடு மற்றொரு காஷ்மீராக மாறிவிடும்.
விடுதலைப்புலிகளின் இந்த திட்டத்தை இலங்கை ஏற்றுக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமானால் இலங்கை தோல்வியுற்ற தேசமாக ஒத்துக் கொள்ளப்படவேண்டும். இந்நிலையில் தேச நலனை பாதுகாக்க இலங்கையை இந்தியாவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு சுப்ரமணியசாமி அதில் கூறிஉள்ளார்.
தினபூமி
அதிகாரப் பகிர்வுக்கான
புலிகளின் திட்டம்: சுப்ரமணியசாமி எதிர்ப்பு
மதுரை, நவ. 3_
இலங்கை அரசுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள திட்டத்திற்கு ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளார்.
இது குறித்து சுப்ரமணியசாமி மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_
இலங்கையில் அமைதிப்பேச்சு என்ற விடுதலைப்புலிகளது திட்டம் இலங்கையின் அழிவு மட்டுமல்லாது இந்தியாவின் தேசபாதுகாப்புக்கே சவாலாக இருக்கும். விடுதலைப்புலிகளது ஆட்சியை பங்கிடும் எந்த முறைக்கும் இந்தியா ஒத்துக் கொள்ள கூடாது.
விடுதலைப்புலிகள் கேட்கும் இடைக்கால அதிகாரம் தீவிரவாத நிலையை ஏற்படுத்துவதோடு நம் தமிழ்நாட்டில் தேசவிரோத சக்தி, தீவிரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் மாநிலத்திலுள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து பணஉதவி பெரும் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் அமைப்பு லத்தீன் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா போல் ஆகிவிடும். அதன் பிறகு தமிழ்நாடு மற்றொரு காஷ்மீராக மாறிவிடும்.
விடுதலைப்புலிகளின் இந்த திட்டத்தை இலங்கை ஏற்றுக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமானால் இலங்கை தோல்வியுற்ற தேசமாக ஒத்துக் கொள்ளப்படவேண்டும். இந்நிலையில் தேச நலனை பாதுகாக்க இலங்கையை இந்தியாவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு சுப்ரமணியசாமி அதில் கூறிஉள்ளார்.

