Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துடுப்பெடுத்தாட்டம் - கவிதை
#1
இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது.
படித்துப்பாருங்கள்.

[size=18]துடுப்பெடுத்தாட்டம்

ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு
ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு
"கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு
துடுப்பு எனசொல்வார் தமிழில்.

பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச
தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில்
பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே
முக்கி முக்கி அடித்தவர்.

கையை மடிக்காது வீசவேண்டும் அதனை
கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில்
தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால்
உயர்த்திக் காட்டுவார் விரல்.

நடுவர் இருவர் நட்ட தடிக்குள் அடித்துவிட்டு
ஓடுவர் இருவர் வட்டத்தைவிட்டு - தரையில்
முட்டிச்சென்றால் நான்கும் முட்டாமல் சென்றால்புள்ளி
கட்டாயம் பெறுவார் ஆறு.

காலுக்கும் தலைக்கும் கைகள் இரண்டிற்கும்
நாலுபுறமும் இடுவார் காவல் - இல்லையெனில்
துள்ளும் பந்துவந்து தோலோடு என்புடைக்கும்
பல்லும் போகும் பறந்து.

சுழல்ப்பந்து வீச்சென்றால் துரிதாக விளையாடார்
மழைவந்து குழப்பாதோ எனநினைப்பார் - வளைபந்தும்
வரும் ஒருகரையால் விழுந்து சுருண்டுபின்
விரையும் மறுகரையால் ஒழிந்து.

ஒருநாள் என்றால் உற்சாகம் இடைவிடாது
ஐந்துநாள் என்றால் சிறுது}க்கம் - ஒருநாளும்
தவறாது வர்ணனையை வானலையில் கேட்பார்
பாரெங்கும் மக்கள் பரந்து.

ஒருநு}று அரைநு}று அடித்துவிட்டால் புகழ்மாலை
ஒருபந்தில் அகன்றுவிட்டால் பொன்வாத்து - குறிபார்த்து
எறிபவர்க்கும் கோணாமல் பிடிப்பவர்க்கும்
பரிவாரம் பலநாளாய் தொடரும்.

வெள்ளையுடை போட்டு வெயிலில் விளையாடும்
நல்லகுணம் கொண்டோர் விளையாட்டென்பார் - இந்நாளில்
சிறுதொகைக்காய் சுூதாட்டம் குழறுபடி ஏமாற்றம்
வெறுவெறுப்பை ஊட்டுவார் வீணோர்.

முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.
Reply
#2
முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.

அடித்த பந்தை தேடி தேடி தான் வலம்வருவீர்களோ? துடுப்பந்தா விளையாட்டின் விதிமுறைகளை எல்லாம் உங்கள் கவிதையில் சொல்லி இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள்.

Reply
#3
அடித்த பந்தை தேடுகிறது ஒரு சாட்டு. (சும்மா!)
அப்போ தங்கை அல்லது நண்பி என்று மாற்றிவிடவா? (இதுவும் சும்மாதான்!)

துடுப்பெடுத்தாட்ட விதிமுறைகள்..... ம்!....அனுபவம்தான்!
அவைகளை அறிந்தபடியால்தான் இப்படியான கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது.

வாழ்த்துக்களுக்கு நன்றி ரமா.
Reply
#4
!!!
Reply
#5
ஆகா பழைய ஞாபகங்களை மீட்கிறது உங்கள். கவிதைகள். இப்ப எனக்கு கிறிக்கட் விளையாடணும் போல இருக்கு. Cry
வாழ்த்துக்க:ள்
Reply
#6
ம்.. வித்தியாசமான கவிதைக் களம். வாழ்த்துக்கள்!!
.
Reply
#7
ஒவ்வொரு கோணத்திலயும் கவி எழுதினால்தான் -
கவிஞர் என்ற சொல் முழுமையடையும்-!

அதை நீங்க செய்திருக்கிங்க-
ம்ம்.. பொறாமைல- ஒரு பெருமூச்சுதான் விட முடிகிறது-! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொடருங்கள் - ஆசிரியரே! 8)
-!
!
Reply
#8
ரமா, ஜீவா, இனியவள், சேழியன், வர்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல.
எதையும் நகைச்சுவையோடு சொன்னால் மனதிலே உடனே பதிந்துவிடும். நகைச்சுவை ஒரு நல்ல மருந்து அல்லவா? என்னவோ எழுதும்போது மனதுள் மலர்வதை நகைச்சுவையாக்கி எழுத விளைகிறேன்.
Reply
#9
கவிஞர் செல்வமுத்து அவர்களுக்கு
ஒரு கட்டுரையின் விரிவாக்கத்தை சுவையாக எள்ளலும் தோய்ந்த கவிதையாக்கி துடுப்பாட்டம் அறியாதோரும் அறியவைக்கும் நல்ல முயற்சி வாழ்த்துகள்..

-
Reply
#10
ஆஹா வித்தியாசமான கவிதை படைத்த செல்வமுத்து ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!! பழைய ஞாபகங்களை மீட்கிறது.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)