11-21-2005, 12:41 PM
தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு ரி.ரி.என் தொலைக்காட்சி தனது சிறப்பு நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு கட்டணமின்றி ஒளிபரப்பு செய்கிறது.
இது தொடர்பாக ரி.ரி.என் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எமது தேசத்தின் விடுதலைக்காக, தம்மை அர்ப்பணித்துவிட்ட அற்புதமான தியாகிகளின் நினைவு சுமந்து ரி.ரி.என் தமிழ் ஒளியில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழீழ தேசிய பேரெழுச்சி நாளான, மாவீரர் நாளை முன்னிட்டு, 25 ஆம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில், ரி.ரி.என் தமிழ் ஒளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் தாய்மடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவிருக்கிறது.
தேசிய பேரெழுச்சி நிகழ்வுகளுடன், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளையும் உள்ளடக்கி உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகள் ரி.ரி.என்னில் ஒளிபரப்பாக உள்ளன.
25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரையான மூன்று நாட்களும், கட்டணங்கள் எதுவும் இன்றி உங்களின் தமிழ்ஒளி உங்களின் பார்வைக்கு வலம் வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/?cn=21884
இது தொடர்பாக ரி.ரி.என் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எமது தேசத்தின் விடுதலைக்காக, தம்மை அர்ப்பணித்துவிட்ட அற்புதமான தியாகிகளின் நினைவு சுமந்து ரி.ரி.என் தமிழ் ஒளியில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழீழ தேசிய பேரெழுச்சி நாளான, மாவீரர் நாளை முன்னிட்டு, 25 ஆம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில், ரி.ரி.என் தமிழ் ஒளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் தாய்மடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவிருக்கிறது.
தேசிய பேரெழுச்சி நிகழ்வுகளுடன், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளையும் உள்ளடக்கி உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகள் ரி.ரி.என்னில் ஒளிபரப்பாக உள்ளன.
25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரையான மூன்று நாட்களும், கட்டணங்கள் எதுவும் இன்றி உங்களின் தமிழ்ஒளி உங்களின் பார்வைக்கு வலம் வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/?cn=21884

