Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
காதல் ஒரு ஆச்சரியம்!
* அஞ்சல் அட்டை மாதிரி
திறந்தே இருக்கிறேன்
நீ படிக்கும்படியாக...
தபால் உறையாக
நீ
மூடியே இருக்கிறாய்
நான் தவிக்கும்படியாக!
* காதல் ஒரு ஆச்சரியம்...
அறுபத்திரெண்டு கிலோ எடையை
அந்தரத்தில்
மிதக்க விட்டிருக்கிறது!
* கூட்டமாய் இரை தேடுகிற
கோவில் புறாக்களின்
குணம் இல்லை உனக்கு...
பட்டாம்பூச்சியாக
நீ
தனித்தே பறப்பது
பிடித்திருக்கிறது எனக்கு!
* வானம் பார்த்திருக்கும்
ஏழை விவசாயி போல
எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;
பருவ மழையே
எப்போது பெய்வாய் நீ?
* கல்கி அவதாரத்தில்
கடவுள் வைத்த
காலடி போல
கவனமாகத்தான் நடக்கிறாய்...
அது சரி –
எல்லா அடியையும்
ஏன்
என் தலையில் வைக்கிறாய்!
* உண்ட மயக்கத்து
உறக்கமாக இருந்தாலும்
ஒவ்வொரு தடவையும்
உன் முகத்தை
மனக்கண்ணில்
பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;
அதுவே
நீண்ட உறக்கமாகிப் போனாலும்
கடைசியாய் கண்டது
உன் முகமாக இருக்கட்டும்!
க.சந்திரகலா, அதங்கோடு
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நன்றாய் இருக்கிறது சுட்ட கவிதை. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றாக இருக்கின்றது. அறிய தந்தமைக்கு நன்றி சுண்டல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சுட்டாலும் சுண்டல் தான்.. நன்றி சுண்டல்
[b][size=18]
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
சுண்டல் சுற்றிய தாளில் வந்த கவிதை அருமை
நன்றி சுண்டல் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
<b>ஓசையின்றி</b>
* ஓசையின்றி
வழிந்தோடிய
நீரோடை கண்டேன்
வாடிய உன் முகமதில்
கரு விழியாளே...
ஒரு சொல் கேளாய்...
* நம்மில்
ஏற்பட்ட காதல்
கால் சட்டையில் ஒட்டும்
கடற்கரை மணலல்ல
தட்டி விட்டுச் செல்ல...
* உச்சியில்
நிற்கும் சூரியன்
சுடத்தான் செய்யும்
தலை சாயத் தொடங்கினால்
சுட்ட சூரியனும் சுகமாகுமே...
சுற்றங்களும் அப்படித்தான்!
* காதலர்கள்
கட்டுண்டிருப்பது
நேற்றல்ல இன்றல்ல
என்றும் நிகழும்
நிகழ்வுதானே...
* உறவுகள் நம்மை
ஒருநாளும்
உதறித் தள்ளாது
நாம் திசை மாறி
தீயவற்றை நாடாது வரை!
* ஒருவரை ஒருவர்
நினைந்து
வெம்பி இருப்பதை விட
நம்பி இருப்போம்
நல்வழி பிறக்குமென்று!
* காலம் கனியும் வரை
நாம் சந்தித்தாலும்
நீ யாரோ
நான் யாரோ
என ஒதுங்கியே செல்வோம்!
* தனியாக இருந்தாலும்
நீயும், நானுமாய்
கனவுலகில் சஞ்சரிக்க
தடையேதுமில்லையே!
* நினைவு தானே
கனவாகிறது
கனவை நிஜமாக்க
ஆசையாய் காத்திருப்போம்
ஓசையின்றி!
ஏ.பி.முருகேசன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சுண்டல் சுப்பர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நன்றி சுண்டல்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
போய் வா காதலனே!
*
உன்னையா
என்
உள்ளத்தில் எழுதினேன்...
* கை வளையல் கேட்டதற்கு
குரல்வளை தரவா என்றாய்...
கண்ணாடி வளையலுக்கே
கணக்கு பார்க்கிறவன்
என்பது தெரியாமல்
உன்னையா
என்
உயிரென்று கருதினேன்!
* புளியை விட
புளிப்புதான் என்றாலும்
என்
உதட்டின் நிறம் என்பதால்
ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்...
* நான் குளிக்கும்
தண்ணீரை
வேருக்குத் திருப்பி விட்டதால்
என் வீட்டு
வேப்பங்காய் கூட
விதையில்லாத திராட்சையாக
இனிக்கிறதென்று
சொல்லிச் சொல்லியே
என்னைக் கொன்றாய்...
* கழுத்து வரையிலும்
காசு, நகை
ஆசைகளை வைத்துக் கொண்டு
வாய் வழியே
காதல் பொங்கி
வழிந்தவனே...
* நான்
உடுத்தியிருக்கும்
ஒற்றைப் புடவையைத் தவிர
மாற்றுத் துணி கூட
மறுப்பவன் நீ என்றால்
சரியான
ஆண்மகன் நீ
ஒத்துக் கொள்கிறேன்...
* என் வீட்டு
உத்திரத்தைப் பிடுங்கித்தான்
உன்
உடைந்த முதுகுக்கு
முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்
போய் வா காதலனே...
உன்னை, என்
பழைய தோழிகளின் பட்டியலில்
சேர்த்துக் கொள்கிறேன்!
க.சந்திரகலா,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
நல்ல கவிதைகள் சுண்டல் அண்ணா..வாசிக்க நல்லா அருமையாக இருக்கு..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் குளிக்கும்
தண்ணீரை
வேருக்குத் திருப்பி விட்டதால்
என் வீட்டு
வேப்பங்காய் கூட
விதையில்லாத திராட்சையாக
இனிக்கிறதென்று
சொல்லிச் சொல்லியே
என்னைக் கொன்றாய்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!